M.SivaRajan Profile picture
Nov 23 26 tweets 4 min read
#பித்ருக்களுக்கு_முக்தி_தரும்_ஸ்தலம்

*பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலம் கயா மட்டுமல்ல, இந்தத் தலமும் தான்*

அகிலத்தில் அனந்தகோடி க்ஷேத்திரங்கள் இருக்க, ‘பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலம்’ என்று கயாவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு மகத்துவம் எப்படி வந்தது?
கயாவுக்கு மட்டுமே இது பொருந்துமா?

அல்லது, வேறு ஏதாவது க்ஷேத்திரங்கள் உள்ளனவா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பீட்டாபுரம் குக்குடேஸ்வரர் ஆலயம்.
மகாவிஷ்ணு சக்ராயுதத்தை தாட்சாயினியின் உடலை துண்டு துண்டாக வெட்டிவீழ்த்த, அந்த பாகங்கள் பூமியில் எங்கெங்கு வீழ்ந்தனவோ அவை யாவும் சக்தி பீடங்களாயின என்பது பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான்.

அவ்வாறு, அன்னையின் பிருஷ்ட பாகம் வீழ்ந்த இடமே பீட்டாபுரம்.
ஒருகாலத்தில், இந்த நகரை தலைநகராகக் கொண்டு அகிலத்தையே ஆட்சிசெய்து வந்த கயாசுரன், சிறந்த விஷ்ணு பக்தனாகத் திகழ்ந்தான்.

தனக்குப் புனிதமான தேகம் அமைய வேண்டும் என்று பெருமாளிடம் வரம் பெற்றவன் இவன்.

இதனால், கயாசுரனின் தேகத்தைத் தீண்டிய தென்றல் லேசாக தங்கள் மீது பட்டாலே,
கொடும் பாவம் செய்தவர்களும் பாபவிமோசனம் பெற்றனர்.

பற்பல தானங்களையும், எண்ணிலடங்கா அசுவமேத யாகங்களையும் ஆற்றி வந்த பவித்ரமான கயாசுரனுக்கு பூலோகம் மட்டுமல்லாது, இந்திரலோகத்தை ஆளும் வாய்ப்பும் கிட்டியது.

இதனால் பதறிப்போன இந்திரன், மும்மூர்த்தியரை நோக்கித் தவமிருந்தான்.
‘நானே மீண்டும் மூவுலகுக்கும் அதிபதியாக வேண்டும். தேவரும் முனிவரும் தங்கள் கடமைகளைத் தங்கு தடையின்றி ஆற்றிட அருள வேண்டும்’ என்று யாசித்தான்.

இந்திரனின் கோரிக்கையை ஏற்ற மும்மூர்த்திகளும் அந்தணர்களாக உருவெடுத்து, கயாசுரனைச் சந்தித்தனர்.
அவர்களைச் சிறப்பாக வரவேற்று உபசரித்தவனிடம், ”கயாசுரா, மண்ணுலகில் மழைவளம் குன்றிவிட்டது.

எனவே, பவித்ரமான பிரதேசத்தில் அக்னி வளர்த்து யாகம் நிகழ்த்த வேண்டும்.

இந்த மூவுலகிலும் பவித்ரமான பிரதேசம் எதுவென்று கேட்டால், அது உன் தேகம் தான்.
எனவே, ஏழு நாட்களுக்கு உன் தேகத்தின் மீதே யாகம் நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

அதற்கு, கயாசுரனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான்.

ஆனால், அந்தணர்களோ அடுத்த நிபந்தனையை விதித்தனர்.
”அசுரர்கோனே! ஏழு நாட்களும் யாகம் முடியும் வரை நீ அப்படி இப்படி இம்மியளவும் அசையக்கூடாது,

அப்படி அசைந்தால், யாகத்தைக் குலைத்த காரணத்தால் நாங்களே உன்னை வதம் செய்ய வேண்டியிருக்கும்” என்றனர்.

கயாசுரன் சற்றும் தயங்காமல் அதற்கும் ஒப்புதல் அளித்தான்.
ஏழு தினங்களின் எண்ணிக்கைக்கு, ஞாலத்தில் ஞாயிறு முகிழ்க்கும் பொழுதில் சேவல் கூவுவதைக் கணக்காக வைத்துக்கொள்ளலாம் என அந்தணரும், அசுரர் கோனும் இணைந்து முடிவெடுத்தனர்.

வாக்களித்தபடியே கயாசுரன் தனது தேகத்தைப் பெரிதாக்கி,

தலைப்பகுதியை பீகாரில் கயா க்ஷேத்திரத்திலும்,
வயிற்றுப் பகுதியை ஒரிசாவில் ஜிஜாப்பூரிலும், கால் பகுதியை கிழக்கு கோதாவரியில் ஆந்திர பீட்டாபுரம் பகுதியிலும் இருக்குமாறு படுத்தான்.

அசுரனின் சிரப்புறத்தில் விஷ்ணுவும்,

பாதப்புரத்தில் மகேஸ்வரனும்,

நாபிப்புரத்தில் பிரம்மாவும்

யாகத்தைத் தொடங்கினர்.
யோக வலிமையால் கயாசுரன் தனது தேகம் அசையாமல் நிலைநிறுத்தினான்.

சேவலின் கூவலைக் கணக்காகக் கொண்டு, ஆறு நாட்கள் யாகம் சிறப்பாக நடைபெற்றது.

மீதமுள்ள ஒரு நாளும் யாகம் குந்தகமின்றி நிறைவேறினால் மும்மூர்த்திகள் தனக்கு அளித்த வரம் வாய்க்காது போய் விடுமே
என்று தேவேந்திரன் நினைவுபடுத்தினான்.

எனவே, ஏழாம் நாள் இடையிலேயே ஈஸ்வரன் சேவல் வடிவெடுத்து, ‘கொக்கரக்கோ’ என்று கூவ, கயாசுரனோ ஏழு நாள் யாகமும் இனிதே பூர்த்தியானதாக எண்ணி எழுந்தான்.

அதன் விளைவாக யாகம் தடைப்பட்டது.
அந்தண வேடத்தில் இருந்த மும்மூர்த்திகளும் ரௌத்ர மூர்த்திகளாக மாறி, ‘யாகம் குலைத்த உன்னை சம்ஹாரம் செய்தே ஆகவேண்டும்’ என்றனர்.

நடந்த உண்மைகள் அனைத்தும் அசுரர் கோனுக்கு

அக்கணமே தெரியவந்தன. அவன் மனமகிழ்ந்தான்.
இயல்பான மரணம் எய்துவதைவிட திரிமூர்த்திகளின் திருக்கரங்களால் மரணம்  நிகழ்வதைப் பெரும்பேறாகக் கருதினான்.

கூடவே, தான் கிடந்திருந்த மூன்று கயா பாகங்களிலும், மக்கள் தங்களைப் பெற்றவர்களுக்கும், பெரியோர்களுக்கும் பிண்டம் படைத்து வேண்டினால்,
அவர்தம் பித்ருக்களுக்கு முக்தி அருளவேண்டும் என்றும் இறைஞ்சினான்.

மும்மூர்த்திகளும் அவ்வாறே வரம் அளித்து, அவனை வதம் செய்து, தங்களோடே இணைத்துக் கொண்டனர்.

அவனுக்கு அளிக்கப்பட்ட வரத்தின்படி கயாசுரனின் சிரம் இருந்த கயா மாங்கல்ய கௌரி திகழும் சக்தி பீடமாகவும்,
நாபி இருந்த ஜிஜாப்பூர் கிரிஜாதேவி சக்தி பீடமாகவும், பாதம் இருந்த பீட்டாபுரம் ப்ருஹூதிகா சக்தி பீடமாகவும் விளங்கத் தொடங்கின.

உலகின் உன்னதத் தலங்களாக அறியப்படும் இந்த மூன்று தலங்களிலும், பெரியோர்களுக்குப் பிண்டம் படைத்தால் அவர்கள் முக்தி அடைவது திண்ணம்.
ஆலய வளாகத்தின் உள்ளே நுழைந்ததும், பிரமாண்டமான தீர்த்தக் குளம் வரவேற்கிறது.

இந்தக் குளம்தான் கயா சுரனின் பாதம் இருந்த இடம். இதன் வடக்குக்கரையில் சிவபெருமானின் சுதைச் சிற்பம்.

கிழக்குக் கரையில், ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குக்குடேஸ்வரரைத் தரிசிக்கும் நிலையில் அமைக்கப்பட்ட
ஒரு சுதை நந்தி. தென்கரையில் மயானம். குளத்தின் மேற்குக் கரையில் ஐந்து நிலை ராஜகோபுரம்.

அதைக் கடந்து உள்ளே நுழைந்தால், முதலில் ப்ருஹூதிகா அன்னையின் தரிசனம்.

தனிக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இந்த அன்னைதான் இந்தத் தலத்தில் முதலில் எழுந்தருளியவள்.
சக்தி பீட நாயகி. இவளின் இடது மேல்கரத்தில் அமிர்த கலசம், வலது மேல் கரத்தில் ஜபமாலை, வலது கீழ்க் கரம் அபயஹஸ்தமாக விளங்க, இடது கீழ்க் கரம் வரதான நிலையில் தொடையில் பதிந்து, அழகு தரிசனம் அளிக்கிறது.

அவளை அடுத்து, அன்னை துர்கைக்கு ஒரு சந்நிதி. அடுத்து மூலவர் கருவறை.
கயாசுரனின் வேண்டுகோளுக்கிணங்க ஈசன் சுயம்பு மூர்த்தியாக குக்கூட்ட லிங்கம் என்ற பெயரில் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.

கர்ப்பக்கிரகத்துக்கு நேர் எதிரே தனி மண்டபத்தில் நந்தி பகவான் வீற்றிருக்கிறார்.

மேனி முழுவதும் மணிப் பட்டைகள் அலங்காரமாய் செதுக்கப்பட்டுள்ள இந்த நந்தி,
எந்தப்பொழுதிலும் எழுந்துகொள்ளும் தயார் நிலையில் அமர்ந்திருக்கிறார்.

இந்த நந்தி பகவானின் அருகில் நின்று, எதிரில் தரிசனம் அளிக்கும் குக்குடேஸ்வரர் மீது கவனத்தைப் பதித்தால், சில விநாடிகளில் உடலில் அதிர்வுகள் ஏற்படுவதை அனுபவபூர்வமாக உணர முடிகிறது.
கருவறையின் பின்புறச் சுவரில் லிங்கமும், சேவலும் கற்சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.

சீதாராமர், சங்கராச் சாரியார், காசி விசுவநாதர், அன்னபூரணி, சுப்ரமணியர் ஆகியோரின் ஒற்றை தளக் கோயில்கள், ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளன.
கர்ப்பக்கிரகத்துக்கு வலப் பக்கத்தில் ஒற்றை தளக் கோயிலில்,

சிறியதொரு மூஞ்சூறை வாகனமாகக் கொண்டு, திகம்பர விநாயகர் எழுந்தருளியிருக்கிறார்.

அவரை அடுத்து, தத்ராத்ரேயர் சந்நிதி.

பாரதத்தின் பிற தத்ராத்ரேய க்ஷேத்திரங்களான கரஞ்சை, குருபுரம், நரசோபவாடி, கங்காபூர் மற்றும் உடும்பரா
ஆகிய அனைத்துக்கும் முதன்மையானது இந்த பீட்டாபுரம் தத்ராத்ரேயர் க்ஷேத்திரம்.

இதுவே மூல க்ஷேத்திரமும் கூட! தத்ராத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் பிறவி எடுத்ததும் பீட்டாபுரத்தில்தான் என்பதால்,
மூலவரை தரிசிக்க வருகிறார்களோ இல்லையோ, தத்ராத்யேயரைத் தரிசிக்காமல் யாரும் செல்வதில்லை.

#பித்ரு_முக்தி_ஸ்தலம்

#பீட்டாபுரம்_சிவன்_ஆலயம்

#பீட்டாபுரம்_தத்தாத்ரேயர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 24
ஒரு நாட்டிலே ஒரு துறவி ஒருவர் இருந்தார்.

அந்த நாட்டு அரசன் அவரிடம் அடிக்கடி சென்று அவரை சந்தித்து சில ஆலோசனைகளை பெறுவான்.

அப்படி இருக்கையில் ஒரு நாள் " சுவாமி நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைத்துப்போக வந்திருக்கிறேன்" எனக் கூறினான். Image
துறவி வரமாட்டார் நான் எளிமையானவன் எனக்கு அரண்மனை வாசம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்று நினைத்து அவன் அவ்வாறு அவரை அழைத்தான்.

ஆனால் அவரும் சரி போகலாம் போய் ரதத்தை கொண்டு வா!

அரண்மனைக்குச் செல்வதற்கு எனக்கு ஆடம்பரமான ஆடைகளை கொண்டு வா என கேட்டார்.
மன்னனுக்கு தூக்கி வாரிப்போட்டது உண்மையிலேயே இவர் துறவிதானா?

என்ற சந்தேகம் ஏற்பட்டது ரதத்தைக் கொண்டு வந்தான்.

துறவி ஏறி உட்கார்ந்தார். அருகிலே அரசன்.

துறவி மிகவும் உற்சாகமாக இருந்தார்.

இவனோ சோர்ந்து போயிருந்தான்.
Read 13 tweets
Nov 24
#சம்பக_சஷ்டி

இன்று முதல் பைரவருக்கான சம்பக சஷ்டி :

தோன்றிய வரலாறு

ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் பெரிய சிவபக்தன் இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிகிறான். Image
தாருகாவன அழிவிற்குப் பிறகு சிவபெருமான் யோக நிஷ்டையில் இருக்கையில் பார்வதி தேவி விளையாட்டாக சிவனின் கண்களை மூடி விடுகிறாள். 

ஈஸ்வரன் கண்களை திறந்தவுடன் ஹிரண்யாரட்சகனைப் பார்கிறார்.

ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.
அதில் ஒன்று குருடாக இருந்ததால் அந்தகாசுரன் என்றும், இரண்டாவது குழந்தை சம்பகாசுரன் என்றும் அழைக்கப் பட்டனர்.  

இவர்கள் இருவரும் அதிபராக்கிரமம் படைத்தவர்களாக இருந்தனர்.  

அவர்களும் பெரிய சிவபக்தர்கள்.  

தேவர்களைப் பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.
Read 12 tweets
Nov 24
#அகோரிகள்

*அகோரிகள் யார்?

அவர்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்*

அகோரிகள் என்றாலே நம்மில் பலருக்கு பலவகையான கருத்து உண்டு.

புத்தகங்கள், ஊடகங்கள், இணையம் ,செவிவழி செய்தி என பலவாறாக அவர்களை பற்றி அறிந்திருப்போம். Image
சில நேரங்களில் அவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளும் வருவதுண்டு.

உண்மையில் அகோரிகள் என்பவர் யார் ?

அவர்களை பற்றி ஒரு சில தகவல்.

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன் முகத்திலும மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.
தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது.

இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது.

சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள்.

தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள்.
Read 24 tweets
Nov 24
#காசி

காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.

இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.*

நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
Read 17 tweets
Nov 23
*#பீஷ்ம_பஞ்சகம்*

தாமோதர மாதத்தின் கடைசி ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சகம் அல்லது விஷ்ணு பஞ்சகம் என்று அழைக்கப்படும்.

பிதாமகர் பீஷ்மர் கார்த்திகை மாதத்தில் கடைசி ஐந்து நாட்கள் தூய கிருஷ்ண உணர்வில் மிகவும் கடுமையான இந்த விரதத்தை மேற்கொண்டு Image
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தி தொண்டில் ஈடுபட , தனது முழு கவனத்தை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரில் மூழ்க செய்தார்.

பீஷ்ம பஞ்சகம், சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள்  அதாவது உத்தான ஏகாதசி முதல் பௌர்ணமி வரை அனுஷ்டிக்க படுகிறது.
இந்த நாட்களில் விரதம்  இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில்  ஆன்மிக பலன்களடைவார்கள்.

அது மட்டுமின்றி ஆன்மிக சேவைகளில் வரும் தடைகள் நீங்கி விரைவில் முன்னேற இந்த விரதம் உதவும்.
Read 14 tweets
Nov 23
#ஸ்ரீதர_ஐயாவாள்_மடம்

கார்த்திகை_அமாவாசை
கங்கை நீராடல்.

மங்களகரமான சுபகிருது ஆண்டு கார்த்திகை 7தி (23.11.2022 - புதன்கிழமை)

ஆண்டு தோறும் திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் இல்லக் கிணற்றில் இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.
கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள்.

இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள
திருவிசநல்லூரில் குடியமர்ந்து விட்டார்.

தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார்.
அர்த்தஜாம பூஜையும் காண்பார்.

சிவன் மேல் அபார பக்தி கொண்டவர்.

இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும்.

அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார் செய்ய ஏற்பாடு செய்து விட்டு காவிரியில் நீராட சென்றார்.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(