பிடல் காஸ்ட்ரோ நினைவுநாள் இன்று:

காஸ்ட்ரோவை சந்தித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

#அமெரிக்கஅதிபர் #ஐசன்ஹோவர்

1960 ல் உலகத் தலைவர்கள் மாநாடு ஐ.நா சபையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் சபை இருக்கும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்தனர்​.
தலைவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை ஐ.நா ஏற்பாடு செய்திருந்தது.அப்போது க்யூபா அதிபரான 34 வயது பிடல் காஸ்ட்ரோ ஐ.நா நிகழ்வுக்காக நியூயார்க் வருகிறார்.அமெரிக்க அதிபர் #DwightEisenhower க்கு பயந்து கொண்டு காஸ்ட்ரோவுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு இடம்,அளிக்க முடியாது,
என்று ஹோட்டல் நிர்வாகங்கள் கூட்டு முடிவு எடுத்திருந்தன. ஐ.நா.மூத்த நிர்வாகிகளைச் சந்தித்த காஸ்ட்ரோ எனக்குத் தங்க இடம் அளிக்க மறுக்கிறார்கள்,எனவே நான் ஐ.நா. வளாகத்திற்குள் ஒரு டெண்ட் அடித்துத் தங்கப் போகிறேன் என்று அதிரடியாகச் சொல்கிறார். நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர்,
என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. காஸ்ட்ரோவுக்கு ஆதரவு தெரிவித்தால் அமெரிக்க அதிபரின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடுமே என்று தயங்குகின்றனர். அப்போது தெரேசா ஹோட்டல் என்ற சாதாரண ஹோட்டல் உரிமையாளர் காஸ்ட்ரோவுக்கு இடம் அளிக்க முன் வருகிறார்.
அவரின் அன்புக்காக அங்கே தங்க சம்மதிக்கிறார் காஸ்ட்ரோ...

நியூயார்க் நகரம் முழுவதும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள்​ சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. காஸ்ட்ரோ தங்கியிருந்த ஹோட்டல் மட்டும் வெறிச்சோடி இருந்தது. காஸ்ட்ரோவை சந்தித்தால் அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்,
என்று பயந்து கொண்டு மற்ற நாட்டுத் தலைவர்கள் காஸ்ட்ரோவை புறக்கணித்தனர். அப்போது, "காஸ்ட்ரோவை சந்திப்பதால் என்ன நடந்துவிடும், நான் அமெரிக்காவைச் சார்ந்திருக்க மாட்டேன், ரஷ்யாவையும் சாரமாட்டேன்.... எனக்கென்ன பயம் என்று சொல்லி 💪அந்த இளம் தலைவனைச்💪 சந்திக்கக் கிளம்பினார்,
இந்தியப் பிரதமர் நேரு. காஸ்ட்ரோவின் அறைக்குள் நேரு நுழைந்தவுடன் பதற்றமாகிறார் இளம் தலைவர் காஸ்ட்ரோ. தவைவர்கள் சந்திப்பின் போது கடைப்பிடிக்கப்படும் சர்வதேச சம்பிரதாயங்கள் என்னவென்றே அப்போது அந்த இளம் தலைவனுக்குத் தெரியாது....
அந்தச் சந்திப்பைப் பற்றி இதோ காஸ்ட்ரோ சொல்கிறார்.....
"அப்போது​ எனக்கு வயது வெறும் 34 மட்டுமே, என்னைப் பற்றி என் நாட்டு மக்களுக்குத்தான் தெரியுமே தவிர பிற நாட்டினருக்கு அவ்வளவு அறிமுகம் இல்லாத சமயம். அமெரிக்காவின் எதிர்ப்பு வேறு.... அப்படி இருக்கும்போது என்னை யாரும் சந்திக்க முன் வராத சூழ்நிலையில் நேரு போன்ற மாபெரும் தலைவர் ,
என்னை வந்து சந்தித்தது எனக்குள் ஒரு விதப் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதனை உணர்ந்து கொண்ட அவர் என்னைப் பற்றி, நான் அடைந்த இலக்கைப் பற்றி உயர்வாகச் சொல்லி என்னை உற்சாகமூட்டி, பெருமிதத்தில் ஆழ்த்தினார். அதன் பிறகே என் பதற்றம் தணிந்து, அவருடன் உரையாடத் தொடங்கினேன்,
சர்வதேச அளவில் என்னை கௌரவப்படுத்திய தலைவர் நேரு....
அதற்குப் பிறகு காஸ்ட்ரோவை பல்வேறு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தனர்.

தலைமைப் பண்பு என்பது அமெரிக்காவின் அதிகாரத்திற்கு அடி பணியாதது....
....எப்போதும் பாதிக்கப் பட்டவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே....
நாமாக முன் வந்து உதவி செய்வது வேறு, மிரட்டலுக்கு அடிபணிவது வேறு...

போராடி, தியாகம் செய்து, மதச் சார்பில்லாமல் வாழ்ந்த நேருவால்தான் அடக்குமுறைக்கு அடி பணியாமல் இருக்க முடிந்தது.
மன்னிப்புக் கேட்டே பழகி, மதவாதத்தால் பிழைப்பு நடத்தியவர்கள் வழியில் வந்த மோடியால் அப்படி எல்லாம் பயப்படாமல் இருக்க முடியாது.

👉காஸ்ட்ரோவுக்கு தங்க இடம் கொடுத்த தெரேசா ஹோட்டல் உரிமையாளருக்கு இருந்த துணிவும் மனோதிடமும்
👉RSS காரர்களுக்கு எப்போதும் இருக்காது.

ஷீ நக்கிகள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Nov 26
கேள்வி : திருப்பதியில் இருப்பது ஒரு பெண் தெய்வத்தின் சிலையா?

திருப்பதியில் இருப்பது காளி கோயில் என்று சிலர் கூறுகிறார்கள் அதனடிப்படையிலேயே நீங்கள் இந்த கேள்வியை கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சிலர் அதை புத்தர் கோயில் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் நிச்சயம் அது பெருமாள் கோயில் அல்ல. ராமானுஜர் காலத்தில் தான் அது பெருமாள் ஆக மாற்றப்பட்டது.

உண்மையில் அது முருகர் கோயில் தான்.அதற்கான காரணங்களை சொல்கிறேன்.

முருகர் கோயிலில் தான் மொட்டை போடும் பழக்கம் இருக்கிறது. திருப்பதி கோயிலிலும் மொட்டை போடுகிறோம்.
பெருமாளுக்கு ஈசன் ,ஈஸ்வரன் என்ற பெயர் வராது. வெங்கடேசன், வெங்கடேஸ்வரன் போன்ற பெயர்கள் எப்படி பெருமாளை குறிக்கும்.

வேல் + கடம் = வேங்கடம் , கடம் என்றால் மலையை குறிக்கும்.

வேங்கடம் + ஈசன் = வெங்கடேசன்

வேங்கடம் + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்

கோ + வேந்தன் = கோவிந்தன்.
Read 7 tweets
Nov 24
"ஆரியமாயை" எனும் நூல்..
நான் ஒரு புத்தகம் எழுதினேன். அதற்காக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன்,
அந்த புத்தகத்தின் பெயர் “ஆரியமாயை” அது எழுதப்பட்டது,
1942 ல் அதற்காக வழக்குத் தொடரப்பட்டது,
1950ல் புத்தகம் எழுதி ஒன்பது ஆண்டுகள் ஆனபிறகு ஆறு பதிப்பிலே ஒவ்வொரு பதிப்புக்கும்,
சுமார் 3000 வீதம் மொத்தம் 18000 புத்தகங்கள் வெளிவந்த பிறகு,
அதை சுமார் லட்சத்திற்கு மேல் மக்கள் படித்து அந்த லட்சம் மக்களிலும் குறைந்தது 2000 பேர்கள் பக்கத்துக்கு பக்கம் பாராமல் ஒப்புவிக்கும் சக்திபெற்ற பிறகு,
அதாவது குதிரை கோவில்பட்டியில் பறிபோகி,
அது வேலூருக்கு வந்தான பிறகு கொட்டிலை இழுத்துப் பூட்டுவது போல்,
நான் எழுதிய புத்தகத்திற்கு தடை போடுகிறார்கள்,
1942ல் எழுதிய புத்தகத்திற்கு 1950ல் குற்றம்காண்கிறார்கள்,
9 வருட காலமாக உண்டாக்காத வகுப்பு துவேஷத்தை இப்பொழுது மாத்திரம் அது எப்படி உண்டாக்கும் என்பது தெரியவில்லை,
Read 10 tweets
Nov 16
தீட்சிதர்களும் தீட்சிதர்களின் கொள்ளையும்: பாகம் - 2

10. கோயில் சொத்துக்களை பங்கு போடுதலில் தீட்சதர்களுக்கிடையே 10 ஆண்டுகளுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. கோயில் நகைகளை தீட்சதப் பார்ப்பனர்கள் திருடிக் கொண்டு போனதாக அவர்களே ஒருவரை ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை விட்டனர்.
கோயிலுக்குள் தீட்சதப் பார்ப்பனர்கள் அடிதடியில் இறங்கினார்கள். அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தது. அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டார்; தீட்சதப் பார்ப்பனர்கள் நீதிமன்றம் போய், முடக்கி விட்டனர்.
11. இந்தக் கோயிலின் வருமானம் சுமார் ஒரு கோடி ரூபாய் கோயில் நிலத்திலிருந்து கிடைக்கும் குத்தகை, கடை, ஏலம், அபிஷேகக் கட்டணம், கடை ஏலம் மூலம் வரும் வருமானம் எல்லாம் தீட்சதர்களிடமே போய் சேருகிறது. இவைகளுக்கு எல்லாம் ரசீதோ, முறையான கணக்கோ கிடையாது.
Read 13 tweets
Nov 16
தீட்சிதர்களும் - தீட்சதர்களின் கொள்ளையும்
பாகம்-1

பார்ப்பன ஆதிக்கம் நாட்டில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு, தில்லை நடராசன் கோயில் ஒரு சான்றாகத் திகழுகிறது. இந்தக் கோயில் தங்களுக்கே சொந்தம் என்றும், தாங்கள், ‘இறைவனால்’ நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்றும்,
தீட்சதப் பார்ப்பனர்கள் கூறிக் கொண்டு, நீதிமன்றங்களின் படிக்கட்டுகளிலே ஏறிக் கொண்டிருக்கிறார்கள். ‘நந்தனை’ தீயில் குளிக்க வைத்த அதே தில்லை நடராசன் கோயிலில் தமிழும் தீக்குளிக்க வேண்டும் என்று தீட்சதப் பார்ப்பனர்கள் கூறுகிறார்களா? தில்லை நடராசன் கோயிலுக்கும், '
தீட்சதப் பார்ப்பனர்களுக்கும் உள்ள உறவு என்ன? இந்தக் கோயிலைக் கட்டியவர்கள் யார்? வரலாறுகள் என்ன கூறுகின்றன! இதோ சில தகவல்கள்:

1. சிதம்பரம் கோயிலின் தல புராணப்படியே - இக்கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானது அல்ல. கவுட தேசத்து மன்னனாக முடிசூட்ட வேண்டிய சிம்மவர்மன் என்பவன்,
Read 25 tweets
Nov 15
மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70 வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்?
பாகம் - 2

பெரியார் மேடை மேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப்,
பெரியார் எதிரில் இரண்டு வண்டி வண்டியாய் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.ஒரே
ஒரே ஒரு மாலையை எந்துணைவியார்க்குப் போடுங்கள் என்று,
அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி _ அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை." -
(‘குயில்’ இதழ், 10.04.1960)
Read 8 tweets
Nov 15
மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70 வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்?

பாகம்-1

மகளாய்த் தத்தெடுக்காமல் ஏன் திருமணம்?

முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும்.
இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. இது அம்பத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956-ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.

பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர்.
பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது. அப்போது பெரியாருக்கு வயது 70;
(பிறப்பு:17.09.1879)
மணியம்மையின் வயது 32
(பிறப்பு :10.03.1917)
இத்திருமணம் மணியம்மையாரின் சொந்த விருப்பத்தின் பேரில் சுயமாய்ச் சிந்தித்து, விரும்பி எடுக்கப்பட்ட முடிவே.
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(