சென்னை அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ளது #ஸ்ரீகச்சாரீஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகச்சபேஸ்வரர் கோவிலைப் போலவே இக்கோயிலும் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மத்தாக மந்த்ர மலை இருக்க, அது கடலில் அழுந்தவே, ஸ்ரீ மகாவிஷ்ணு ஆமை
உருவெடுத்து இறைவனைப் பூஜித்ததால் இறைவனின் நாமம் கச்சபேஸ்வரர் ஆயிற்று. இந்த வரலாறு கோவிலுள் பல ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
1700ம் ஆண்டில் சென்னையில் வாழ்ந்து வந்த தளவாய் செட்டியார் சிறந்த சிவ பக்தர். கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த அவர், தினமும் காஞ்சி சென்று
கச்சபேசுவரரை தரிசித்து வருவதை தனது வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் காஞ்சிக்குச் சென்றபோது வெள்ளப் பெருக்கால் இறைவனையும் வழிபட முடியாது, சரியான நேரத்திற்குப் பணிக்கும் செல்லமுடியாது போனது. மிகவும் மனம் வருந்திய அவர் கனவில் இறைவன் தோன்றி சென்னையிலேயே ஆலயம் அமைத்து வழிபடப்
பணித்தார். ஆங்கிலேயே அதிகாரிகள் உதவியுடன் கணபதி சிலையும், சிறு குட்டையும் இருந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து 1720ல் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தார். தளவாய் செட்டியார் மற்றும் அவரது மனைவியின் திருவுருவங்களை இன்றும் ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் காணலாம். இறைவனின் திருநாமம்
கச்சாரீஸ்வரர். இறைவி, சௌந்தர நாயகி. கோயிலுள் நுழைந்ததும் வலப்பக்கத்தில் அரசும் வேலும் பின்னிப் பிணைந்து நிற்கும் காட்சியையும், அதன் கீழ் மகாகணபதி, நாக விக்ரகங்களையும் காணலாம். பிரம்மாண்ட கொடிமரம், பலிபீடத்தைக் கடந்து நந்தி தேவரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் ஸ்ரீ கச்சபேஸ்வரர், இரு
பக்கமும் சித்தி, புத்தியுடன் பஞ்சமுக கணபதியையும், ஆறுமுகப் பெருமானையும் தரிசிக்கலாம். எந்தத் திருக்கோயிலிலும் காணக் கிடைக்காத காட்சியாக மூலவர் சிவபெருமான் (கச்சபேசன்) ஐந்து ஆசனங்களில் கூர்மாசனம், அஷ்ட நாகாசனம், சிம்மாசனம், யுகாசனம், கமல விலாசனம் (தாமரை ஆசனம்) ஆகிய ஆசனங்களில்
ஆனந்தக் காட்சி தருகிறார். இந்தச் சிவபெருமானின் மேற்கூரையாகப் பனிரெண்டு சூரியத் தூண்கள் மேல் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சிகரங்களாக அமைந்துள்ளது சிறப்பு. சிவபெருமான் பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் லிங்க ரூபமாகவே இருப்பார். இவ்வாலயத்தில் மூல லிங்கத்தின் பின்புறம் 5 முகங்களுடன்
காட்சி தருகிறார். கோயிலின் உட்பிராகாரச் சுவர்களில் சிவபெருமானின் மகிமையைக் கூறும் வண்ண ஓவியங்கள், தேவாரப் பாடல்கள் தீட்டப்பட்டு உள்ளன. மிகப் பிரம்மாண்டமான உற்சவ மூர்த்தியாக, சோமாஸ்கந்தராக கச்சபேசர், சௌந்தரநாயகியைத் தரிசிக்கிறோம். இந்த மூர்த்தி மிகமிக கனமானவர் என்பதால்
வருடத்திற்கு இருமுறை மட்டுமே இப்பெருமானின் வீதியுலா நடைபெறுகிறது. விநாயகர், முருகன், துர்கை, நால்வர், அறுபத்து மூவர், சேக்கிழார் சன்னதிகள் காண அழகானவை. ஸ்ரீ நடராஜர் சன்னதியில் அம்பிகை சிவகாமியுடன் பன்னிரு திருமுறைகளும், சிதம்பர ரகசியமும் இடம் பெற்றுள்ளது. வலப்பக்கம் நின்ற
கோலத்தில் கோவிந்தராஜப் பெருமாளும், இடப்பக்கம் தத்தாத்ரேயரும் உள்ளனர். கஜலட்சுமி, சரஸ்வதியை அடுத்து தனிச்சன்னதியில் அழகுற அன்னை சௌந்தரநாயகி காட்சி தருகிறாள். அன்னையின் இருமருங்கிலும் வீரபத்ரர், காலபைரவர் காட்சி தருகின்றனர். வெளிப் பிராகாரத்தில் முருகன் 'செங்கல்வராயன்' ஆகக் காட்சி
தருகிறார். பாம்பன் சுவாமிகள் இத்தல முருகனைச் #செங்கல்வராயா எனப் புகழ்ந்து பாடியுள்ளார். இங்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனமாக இடம்பெற்றுள்ளது மற்றொரு சிறப்பு. ஆதிசங்கரர், ஆஞ்சநேயர், ஐயப்பன், முந்திகேஸ்வரர், பூரணா, புஷ்கலா சமேத சாஸ்தா சன்னதிகள் தனிச் சன்னதிகளாக அமைந்துள்ளன. சென்னை
மாநகரிலேயே முதன் முதலில் ஐயப்பன் சன்னதி அமைக்கப்பட்டது இவ்வாலயத்தில்தான் என்பது இதன் மற்றொரு சிறப்பு. ஆலயத்தில் என்னொரு அபூர்வ காட்சி என்ன எனில் தத்தாத்திரேயர் அனுசூயாவுடன் உள்ள காட்சி உள்ளது. திருவிழாகளும், வழிபாடுகளும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. வரலாறுகளை விளக்கும் பழங்கால
ஓவியங்கள் நம் கண்ணைக் கவர்கின்றன. சென்னையின் தொன்மையான, சிறப்பான ஆலயங்களுள் ஶ்ரீ
கச்சாரீஸ்வரர் ஆலயமும் ஒன்று.
திருச்சிற்றம்பலம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ரிஷிகள்_மாகாத்மியம்
ரிஷிகள் மனிதர்கள் அல்ல, தேவர்களும் அல்ல. தேவர்களுக்கும் மேலானவர்கள். ரிஷிகள் தேவர்களையும், அசுரர்களையும், ராட்சஷர்களையும், மனிதர்களையும் படைத்தவர்கள். பரப்ரம்மான வாசுதேவனே ரிஷி தான். அவரே மும்மூர்த்திகளாக வ்யூஹ அவதாரம் செய்தார். மும்மூர்த்திகளும் ரிஷிகள்
தான். பரவாசுதேவன் மனித அவதாரம் செய்த போது கூட, தன்னை ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள பெருமைப்பட்டார். ஸ்ரீ ராமர் வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை). சீதை அவதரித்தது கௌதம கோத்திரம், ஸ்ரீ ராமரை மணம் செய்து கொண்ட பின், வசிஷ்ட கோத்திரம்.
ஸ்ரீ கிருஷ்ணர் கர்க கோத்திரம்.
தர்மபுத்திரர் வியாக்ரபாதர் கோத்திரம்.
கௌதம கோத்திரம் கௌதம ரிஷியால் உருவானது.
ஜாபாலி என்ற சிறுவன் தன் கோத்திரம்/பரம்பரை தெரியாமல் இருந்தான். கௌதம ரிஷி அவனை ஏற்றுக் கொண்டு, தனது கோத்திரத்தை கொடுத்து, உபநயனம் செய்து, ஸத்யகாம ஜாபாலி என்று பெயர் கொடுத்தார். கௌதம ரிஷியின் ஆசியால்,
#வடநாகேஸ்வரம்_நாகேஸ்வரர்_கோயில்
குன்றத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம்.
பாம்பு என்றாலே தீய சக்தி விலங்காக கருதும் பல மதங்களுக்கு முன்பே பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நம் சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு – கேது பாம்பின் அம்சமாக
கருதப்படுகின்றன. ராகு – கேது கிரகங்களின் தோஷங்களை போக்கும் வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது.
மூலவர் நாகேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
தாயார் காமாட்சி அம்மன்
தீர்த்தம்: சகல பாவங்களையும் போக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம்.
தல விருட்சம் செண்பக மரம்.
கோயில் வரலாற்றின் படி இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த அனபாயன் என்கிற சோழ மன்னன் அரசவையில் இப்பகுதியை சார்ந்த அருண்மொழி ராமதேவர் என்பவர் பணியாற்றினார். இவர் தான் பிறந்த குலத்தின் பெயரால் #சேக்கிழார் என அழைக்கப்பட்டார். இவர் தான் புகழ் பெற்ற தமிழ் இலக்கியங்கள் ஆன #பெரியபுராணம்
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது.
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை