#கிருஷ்ணார்ப்பணம்
என்பதன் அர்த்தம்.

ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில்
அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.

கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் , தொடுப்பான்.
பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.
கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால்…..ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின்

குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம்.
அவனைக் கூப்பிட்டு, "துளசிராமா!!!இதெல்லாம் அதிகப்ரசங்கித்தனம்;
நீ மாலை கட்டவேண்டுமே தவிர, சூட்டக்கூடாது ! ” என்று கண்டித்தார்.

"ஸ்வாமி…! நான் சூட்டவில்லை ; கட்டிய மாலைகள் மொத்தம் 15. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன் ! ” என்ற அவன் சொற்கள் அவர் காதில் விழவேயில்லை.
"நாளையிலிருந்து அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய் ! பூ கட்டவேண்டாம் ! ” கட்டளையாக வந்தது .

இதுவும் இறைவன் செயல் என்று, துளசிராமன் நீரிறைக்கும் போதும், தொட்டிகளில் ஊற்றும்போதும், ” "கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனம் நிறைய சொல்லிக்கொள்வான். மனமும் நிறைந்தது!
இப்போதெல்லாம் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும்முன்பே , அபிஷேகம் நடந்து முடிந்து, கருவறை ஈரமாகி இருக்கும். நனைந்து..நீர் சொட்டச் சொட்ட கிருஷ்ணர் சிலை சிரிக்கும்.

அர்ச்சகருக்கு கடும் கோபம், "துளசிராமா!!
நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா! உன்னோடு பெரிய தொல்லையாகிவிட்டதே ! ” வைய்ய ஆரம்பிக்க.

துளசிராமன் கண்களில் கண்ணீர்." ஸ்வாமி! நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன்; உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்கு தெரியாது! என்றான்.
அவ்வளவுதான் அர்ச்சகர் மறுநாளே மடப்பள்ளிக்கு மாற்றிவிட்டார். பிரஸாதம் தயாரிப்பு பணிகளில் ஒரு சிற்றாளன் ஆனான். இங்கும்…. காய் நறுக்கும்போதும் அவன், " கிருஷ்ணார்ப்பணம் ” என்றே தன்னுடைய செய்கைகளை கடவுளுக்கே காணிக்கையாக்கினான்.
அன்று. அர்ச்சகர் முன்னெச்சரிக்கையாக ……சன்னிதானத்தை பூட்டிச் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார் .

மறுநாள் ..அதிகாலையில் சந்நிதிக் கதவைத் திறக்கும்போதே கண்ணன் வாயில் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம்!!

"
மடப்பள்ளியில் அப்போதுதான் தயாராகி, நெய்விட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தது ! அதற்குள் எப்படி இங்கு வந்தது ? நானும் கதவைப்பூட்டிதானே சென்றேன் ! பூனை , எலி கொண்டு வந்திருக்குமோ ?

துளசிராமனுக்கு எந்த வேலை தந்தாலும்
அந்தப்பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்துவிடுகிறதே ! அவன் என்ன மந்திரவாதியா? "என்று குழம்பினார் அர்ச்சகர்.

இன்று எதுவும் கண்ணடிக்கவில்லை, ” துளசிராமா! நாளை முதல், நீ வாசலில், பக்தர்களின் செருப்பை பாதுக்காக்கும் வேலையைச் செய் ! நீ அதற்குத்தான் சரியானவன்! என்று கூறினார்.
"பூ, நீர்,பிரஸாதம் – எல்லாம் நல்ல பொருட்கள் ; சந்நிதிக்கு வந்துவிட்டன ; இனி என்ன ஆகிறதென்று பார்ப்போம் ; ” – இதுதான், அர்ச்சகரின் எண்ணம்.

இதையும் கடவுள் விருப்பம் என்று ஏற்றுக்கொண்ட துளசிராமன் .அன்றுமுதல் …வாசலில் நின்றிருந்தான்.
அதே, " கிருஷ்ணார்ப்பணம் " என்றே அந்த வேலையையும் செய்துகொண்டு இருந்தான். இன்றும் அர்ச்சகர் பூட்டி, சாவி கொண்டு சென்றார்.

மறுநாள் காலை ; சந்நிதிக்கதவு திறந்ததும், அர்ச்சகர் கண்ட காட்சி

உடலெல்லாம் அவருக்கு நடுங்கத்தொடங்கியது.
இதென்ன கிருஷ்ணா ! உன் பாதங்களில்…
ஒரு ஜோடி செருப்பு!!! பாதகமலங்களின் பாதுகையின் பீடத்தில்
சாதாரண தோல் செருப்பு ! எப்படி வந்தது ?

துளசிராமன் எப்படிப்பட்டவனானாலும், சந்நிதிப் பூட்டைத் திறந்து

இப்படி செருப்பை வைக்க யாருக்குத்தான் மனம் வரும் ?
ஆச்சரியம், அச்சம், அர்ச்சகருக்கு வேர்த்துக் கொட்டியது.

அப்போது. எங்கிருந்தோ ஒரு குரல்,

"அர்ச்சகரே ! பயப்பட வேண்டாம் அந்த துளசிராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும், அவன், " கிருஷ்ணார்ப்பணம்" என்று எனக்குக் காணிக்கையாக்கி விடுகிறான்!
அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்.

நினைவெல்லாம் எங்கோ இருக்க செய்யும் பூஜையை விட, எதை செய்தாலும் எனக்குக் காணிக்கையாக்குபவனின் அன்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

துளசிராமன் ஒரு யோகி !
அவன் அன்பு எனக்குப் பிரியமானது!என்றார் பகவான்.

கிருஷ்ண பகவானின் இந்தக் குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடிவந்து
அந்த யோகி துளசிராமனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார், அர்ச்சகர்!
ஆம் நாம் எந்த வேலை செய்தாலும் அதை நம் கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தால் அதை அவர் மனமார ஏற்றுக் கொள்வார்.

கண்ணனின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳

#பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Nov 27
#அழகான_வாழ்க்கை_எது?*

*ஒரு முடிவுக்கு வரும் முன்,*
*யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.*

*ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.* Image
*முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.*

*ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.*

*காவலாளியின் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது.*

*
ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.*

*ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.*

*
Read 22 tweets
Nov 26
எமது முகநூல் சகோவின் மும்பை தாக்குதல் பற்றிய நினைவூட்ட பதிவு

ராமராமராம.

வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

குழந்தைக்குச் சாதம் கொடுத்து முடித்து விட்டு எதேச்சையாக டிவியின் Flash News பார்த்தால் இந்த விஷயம் Scroll ஆகிக் கொண்டிருந்தது.
அடுத்தடுத்துப் பல இடங்களின் தாக்குதல் விவரங்கள்,

தினமும் 10.30 மணிக்கு இவர் வீடு வரும் நேரம் இந்த செய்தி என்றால்

ஒரு ரயில் வராவிட்டாலே கூட்டம் அடுத்த ரயிலுக்கு இரண்டு மடங்காகி விடும்

மும்பை புறநகர் எலக்ட்ரிக் ட்ரெயின் பயங்கரத்தைப் பார்த்தால் தான் புரியும்.
இப்படி ஏதாவது அசம்பாவிதம், விபரீத மழை போன்ற நாட்களில் வெளியே சென்றவர்கள்

வீடு வரும் வரை உத்தரவாதமில்லை, ஃபோன் லைன்களும் ஜாம் ஆகிவிடும்.

அந்த நொடிகளை மறக்க முடியாது. பிறகு தாமதமாக இவர் வந்த ஞாபகம்.
Read 6 tweets
Nov 26
சதாசர்வ காலமும் "#நாராயணா_நாராயணா' என்று கூறிக் கொண்டிருக்கும் நாரதர்,

ஒருநாள் ஸ்ரீமன் நாராயணனை சந்தித்து வணங்கி, "பிரபு! தங்கள் திருநாமமான "நாராயணா' என்பதை எப்போதும் கூறி வருகிறேன்.
அந்த திருநாமத்தின் பெருமையை இப்போது நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

தாங்கள் அதை எனக்குக் கூறியருள வேண்டும்'' என்றார்.

நாரதர் கூறியதைக் கேட்ட பகவான் நாராயணன், "நாரதா! நாராயண மந்திரத்தின் பெருமையையும், மகிமையையும் அறிவதற்கு முன்,
அதோ நெளிந்து வளைந்து மண்ணில் தவழ்ந்து கொண்டிருக்கிறதே ஒரு புழு.

அதனிடம் சென்று "நாராயணா' என்று மூன்று முறை சொல்'' என்றார்.

நாரதரும் உடனே அந்த மண்புழுவிடம் சென்று "நாராயணா' என்று மூன்று முறை கூறினார்.

சில நொடிகளில் அந்தப் புழு துடிதுடித்து இறந்துபோனது.
Read 21 tweets
Nov 26
கும்பகோணம் மகாமக குளம் மண்டபம் ImageImageImageImage
ImageImageImageImage
ImageImageImageImage
Read 4 tweets
Nov 26
#அந்த_தாத்தா_பாட்டி_எங்கே?

தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் எல்லோரையும் மன்னிக்க,
கண்டிக்க
ஏன்...
தண்டிக்கவும் முடியும். வானளாவிய குடும்ப அதிகாரம் படைத்திருந்த தாத்தா இப்போது எங்கே?.

வீட்டிற்கு
யாராவது புதிய ஆள் வந்தாலோ,
ஆண் குரல் கேட்டாலோ
யாரு என சத்தமாக கர்ஜிக்கும் குரலில் எதிராளி சற்று ஆடித் தான் போய் விடுவார்.

தாத்தா வீட்டில் இருந்ததால் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்த்தார்கள்.
லேட்டாக வீட்டிற்கு வந்தால்,
கதவை தட்டியவுடன் முதல் ஆளாய்
கதவை திறந்து
'ஏன்டா லேட்'
என மகனையும், பேரனையும் அதிகாரத்துடன்
கேட்கும் உரிமை தாத்தாவிற்கு மட்டும் தான் இருந்தது.

அந்த உரிமையை பறித்ததால் இன்று வீட்டிற்கு ஒன்றிரண்டு 'குடிமகன்கள்'முளைத்து விட்டனர்.
Read 13 tweets
Nov 25
*சிவ சிவ சிவ சிவ*

வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பன்னீர் மழை பொழியும் அதிசய கோவில் மரம்

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் குறிச்சி என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது அத்ரி மலை.
புலிகள் உட்பட பல வன விலங்குகள் வாழும் இந்த மலையில் வருடாவருடம் ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

அத்ரி என்னும் மஹரிஷி தன் மனைவியோடு இந்த மலையில் வாழ்ந்துள்ளார்.

அதனாலேயே இந்த மலைக்கு அத்ரி மலை என்னும் பெயர் வந்துள்ளது.
அடர்ந்த இந்த மலைக்குள் ஒரு அற்புத சிவன் கோவிலான அருள்மிகு கோரக்கநாதர் ஆலயம்,

ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(