சதாசர்வ காலமும் "#நாராயணா_நாராயணா' என்று கூறிக் கொண்டிருக்கும் நாரதர்,

ஒருநாள் ஸ்ரீமன் நாராயணனை சந்தித்து வணங்கி, "பிரபு! தங்கள் திருநாமமான "நாராயணா' என்பதை எப்போதும் கூறி வருகிறேன்.
அந்த திருநாமத்தின் பெருமையை இப்போது நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

தாங்கள் அதை எனக்குக் கூறியருள வேண்டும்'' என்றார்.

நாரதர் கூறியதைக் கேட்ட பகவான் நாராயணன், "நாரதா! நாராயண மந்திரத்தின் பெருமையையும், மகிமையையும் அறிவதற்கு முன்,
அதோ நெளிந்து வளைந்து மண்ணில் தவழ்ந்து கொண்டிருக்கிறதே ஒரு புழு.

அதனிடம் சென்று "நாராயணா' என்று மூன்று முறை சொல்'' என்றார்.

நாரதரும் உடனே அந்த மண்புழுவிடம் சென்று "நாராயணா' என்று மூன்று முறை கூறினார்.

சில நொடிகளில் அந்தப் புழு துடிதுடித்து இறந்துபோனது.
இதைக் கண்ட நாரதர் பதறிப்போய் நாராயணனிடம் ஓடி வந்தார்.

"பகவானே! அபச்சாரம் நடந்துவிட்டது'' என்று நடந்ததைக் கூறி வருத்தப்பட்டார்.

"வருத்தப்படாதே நாரதா! அதோ அங்கே பறந்துகொண்டிருக்கும் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சியிடம் சென்று நாராயண மந்திரத்தை மூன்று முறை கூறு'' என்றார் பகவான்.
நாராயணன் கூறியபடியே அந்தப் பட்டாம்பூச்சியிடம் சென்று நாராயண மந்திரத்தை மூன்று முறை கூறினார் நாரதர்.

அவ்வளவுதான்.! அதைக் கேட்ட மாத்திரத்தில் அந்தப் பட்டாம்பூச்சியும் தரையில் வீழ்ந்து இறந்துபோனது.

இதைக்கண்ட நாரதர் மேலும் பதறிப்போனார்.
"பிரபு.! இது என்ன விபரீதம்? இந்த மரணங்களுக்குக் காரணம் என்ன.?

எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது'' என்று மிகுந்த வேதனையுடன் கூறினார்.

"நாரதா! அதற்குள் கலங்கிவிடாதே.! அதோ ஓடி வருகிறதே ஒரு மான்குட்டி

அதனிடம் சென்று "நாராயணா' என்ற மந்திரத்தை மூன்று முறை கூறு'' என்றார் நாராயணன்.
இதைக்கேட்ட நாரதர், தயங்கித் தயங்கி, அந்த மான் குட்டியிடம் சென்று, "நாராயணா' என்று மூன்று முறை கூறியதுதான் தாமதம்.

உடனே அந்த மான்குட்டியும் துடிதுடித்து இறந்துபோனது.

நாரதர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றார். அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
நாரதரை சுய நினைவுக்குக் கொண்டு வந்த பகவான்,

"நாரதா.! சோர்ந்துவிடாதே! அதோ துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் அந்தப் பசுங்கன்றுக்குட்டி இருக்கிறதே...

அதனிடம் போய் இந்த நாமத்தை மூன்று முறை சொல்'' என்று பணித்தார்.
ஸ்ரீமன் நாராயணனின் வார்த்தையை மறுக்க இயலாத நாரதர்,

அந்தப் பசுங்கன்றிடம் சென்று மூன்று முறை "நாராயணா' என்ற மந்திரத்தைக் கூறியவுடன் அதுவும் உடனே இறந்து போனது.

நாரதர் மனம் நொந்து போய், "பிரபு.! இது என்ன லீலை?'' என்று துக்கத்துடன் கேட்டார்.
"நாரதா.! இந்த ஒரு முறை மட்டும் காசிராஜன் அரண்மனைக்கு செல்.

அவனுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாமல் இருந்தது. இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
யாருக்கும் தெரியாமல் அரண்மனைக்கு சென்று அந்தக் குழந்தையின் காதில் "நாராயணா' மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டு வந்துவிடு!'' என்றார் பகவான்.

பகவான் கூறியதைக் கேட்ட நாரதர் அதிர்ந்துபோனார்.
"பகவானே.! இது என்ன விளையாட்டு.?

நடந்தது அனைத்தையும் தாங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்.?

நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாத காசிராஜனுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது.

அந்தக் குழந்தையிடம் போய் நான்.. எப்படி இந்த மந்திரத்தைக் கூறுவேன்?'' என்று தயங்கியபடி கேட்க
"இந்த ஒருமுறை மட்டும் சென்று அந்தக் குழந்தையின் காதில் கூறிவிட்டு வா நாரதா!

போ.! போ.! பயப்படாதே.! நன்றே விளையும்.!'' என்று பகவான் வற்புறுத்தினார்.

பகவான் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துத் தயங்கியபடியே மனமில்லாமல் காசிராஜன் அரண்மனைக்கு மிகுந்த குழப்பத்துடன் சென்றார் நாரதர்.
அந்தப்புரத்தில் தொட்டிலில் படுத்துக்கிடந்த அந்தப் பச்சிளம் குழந்தையைக் கண்டார்.

அதன் பாதத்தைத் தொட்டு வணங்கிவிட்டு, அக்குழந்தையின் காதில் மூன்று முறை "நாராயணா' என்ற மந்திரத்தைக் கூறினார்.
என்ன அதிசயம்.? பிறந்து சில மணி நேரமேயான அக்குழந்தை,
"நாராயணா' என்ற மந்திரத்தைக் கேட்டதும் எழுந்து உட்கார்ந்தது.

நாரதரைப் பார்த்து சிரித்தபடி, "என்ன நாரதா.! இன்னுமா உங்களுக்கு நாராயண மந்திரத்தின் மகிமை புரியவில்லை?'' என்று கேட்டது.
நாரதருக்கு ஒன்றுமே புரியவில்லை. "பிறந்த குழந்தை பேசுகிறதே...!'

வியப்புக்கு மேல் வியப்பாக இருந்தது நாரதருக்கு.

அந்தக் குழந்தை பேசியதைப் பார்த்து திகைத்துப்போய் நின்றார் நாரதர்.

"
என்ன நாரத முனிவரே திகைக்கிறீர்கள்.?

புழுவாக இருந்த நான், அதைவிட உயர்ந்த பிறவியான பட்டாம்பூச்சியாகப் பிறந்தேன். பட்டாம்பூச்சியாகப் பிறந்த நான், அதைவிட உயர்ந்த பிறவியான மான் குட்டியாகப் பிறந்தேன்.
மான் குட்டியாகப் பிறந்த நான் அதைவிட உயர்ந்த பிறவியான பசுங்கன்றாகப் பிறந்தேன்.

பசுங்கன்றாகப் பிறந்த நான், இப்போது கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்து,

காசிராஜனுக்கு மகனாக, யுவராஜனாகப் பிறந்துள்ளேன்.

எல்லாம், தாங்கள் என் காதில் சொன்ன நாராயண மந்திரத்தின் மகிமைதான்.
நாராயண மந்திரத்தைச் சொல்கின்றவர்களுக்கு உயர்ந்த பிறவியும் முக்தியும் கிடைக்கும்.

இப்போதாவது புரிகிறதா?'' என்று கூறிவிட்டு முன்புபோலவே, தொட்டிலில் படுத்துக்கொண்டது அந்த ராஜ குழந்தை.

நாரதர் உடனே பகவான் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதக் கமலங்களில் வீழ்ந்து வணங்கினார்.
அவரது கண்கள் ஆனந்த நீரைப் பொழிந்தன. "மகாபிரபு.! தங்களது லீலைகளை என்னவென்று கூறுவேன்?

அடியேன் அடிக்கடிக் கூறும் நாராயண மந்திரத்திற்கு இத்தனை வலிமையும் மகிமையும் உண்டா...!

அந்த மந்திரத்தைச் சொல்ல அடியேன் என்ன புண்ணியம் செய்திருக்கிறேன்...!
எல்லாம் தங்களது பெருங்கருணையல்லவா?'' என்று உள்ளம் உருகி வணங்கிப் பிரார்த்தித்தார்.

ஸ்ரீமன் நாராயணன் புன்னகை புரிந்தபடி நாரதரை வாழ்த்தியருளினார்..!

#ஓம்_நமோ_நாராயணா..!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳

#பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Nov 27
#அழகான_வாழ்க்கை_எது?*

*ஒரு முடிவுக்கு வரும் முன்,*
*யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.*

*ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.* Image
*முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.*

*ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.*

*காவலாளியின் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது.*

*
ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.*

*ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.*

*
Read 22 tweets
Nov 26
எமது முகநூல் சகோவின் மும்பை தாக்குதல் பற்றிய நினைவூட்ட பதிவு

ராமராமராம.

வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

குழந்தைக்குச் சாதம் கொடுத்து முடித்து விட்டு எதேச்சையாக டிவியின் Flash News பார்த்தால் இந்த விஷயம் Scroll ஆகிக் கொண்டிருந்தது.
அடுத்தடுத்துப் பல இடங்களின் தாக்குதல் விவரங்கள்,

தினமும் 10.30 மணிக்கு இவர் வீடு வரும் நேரம் இந்த செய்தி என்றால்

ஒரு ரயில் வராவிட்டாலே கூட்டம் அடுத்த ரயிலுக்கு இரண்டு மடங்காகி விடும்

மும்பை புறநகர் எலக்ட்ரிக் ட்ரெயின் பயங்கரத்தைப் பார்த்தால் தான் புரியும்.
இப்படி ஏதாவது அசம்பாவிதம், விபரீத மழை போன்ற நாட்களில் வெளியே சென்றவர்கள்

வீடு வரும் வரை உத்தரவாதமில்லை, ஃபோன் லைன்களும் ஜாம் ஆகிவிடும்.

அந்த நொடிகளை மறக்க முடியாது. பிறகு தாமதமாக இவர் வந்த ஞாபகம்.
Read 6 tweets
Nov 26
கும்பகோணம் மகாமக குளம் மண்டபம்
Read 4 tweets
Nov 26
#அந்த_தாத்தா_பாட்டி_எங்கே?

தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் எல்லோரையும் மன்னிக்க,
கண்டிக்க
ஏன்...
தண்டிக்கவும் முடியும். வானளாவிய குடும்ப அதிகாரம் படைத்திருந்த தாத்தா இப்போது எங்கே?.

வீட்டிற்கு
யாராவது புதிய ஆள் வந்தாலோ,
ஆண் குரல் கேட்டாலோ
யாரு என சத்தமாக கர்ஜிக்கும் குரலில் எதிராளி சற்று ஆடித் தான் போய் விடுவார்.

தாத்தா வீட்டில் இருந்ததால் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்த்தார்கள்.
லேட்டாக வீட்டிற்கு வந்தால்,
கதவை தட்டியவுடன் முதல் ஆளாய்
கதவை திறந்து
'ஏன்டா லேட்'
என மகனையும், பேரனையும் அதிகாரத்துடன்
கேட்கும் உரிமை தாத்தாவிற்கு மட்டும் தான் இருந்தது.

அந்த உரிமையை பறித்ததால் இன்று வீட்டிற்கு ஒன்றிரண்டு 'குடிமகன்கள்'முளைத்து விட்டனர்.
Read 13 tweets
Nov 26
#கிருஷ்ணார்ப்பணம்
என்பதன் அர்த்தம்.

ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில்
அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.

கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் , தொடுப்பான்.
பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.
Read 19 tweets
Nov 25
*சிவ சிவ சிவ சிவ*

வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பன்னீர் மழை பொழியும் அதிசய கோவில் மரம்

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் குறிச்சி என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது அத்ரி மலை.
புலிகள் உட்பட பல வன விலங்குகள் வாழும் இந்த மலையில் வருடாவருடம் ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

அத்ரி என்னும் மஹரிஷி தன் மனைவியோடு இந்த மலையில் வாழ்ந்துள்ளார்.

அதனாலேயே இந்த மலைக்கு அத்ரி மலை என்னும் பெயர் வந்துள்ளது.
அடர்ந்த இந்த மலைக்குள் ஒரு அற்புத சிவன் கோவிலான அருள்மிகு கோரக்கநாதர் ஆலயம்,

ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(