ஆன்லைன் ரம்மி/சூதாட்டம் ஒரு மரணப் பொறி #thilli_info
சமீபத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான இறப்புகள் நிகழ்ந்தன. எல்லா வயதினரும் மொபைல் போன்களைப் பயன்படுத்துகிறார்கள். மொபைல் போன் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை என்ற நிலை உருவாகி விட்டது.
அந்த மொபைல் போனில், மரணப் பொறியாக பல ஆப்கள் உள்ளன. எந்தவொரு செயலியையும் நிறுவும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் சில ஆப்கள் மரணப் பொறிகளாக இருக்கலாம்.எடுத்துக்காட்டாக, ஆன்லைன் சூதாட்ட பயன்பாடுகள் மிகவும் ஆபத்தான பயன்பாடுகள்.
இந்த ஆஃப்ஸ்கள் ஒருவரின் ஆர்வத்தைத் தூண்டுகிறது, பின்னர் அவர்களை அடிமையாக்குகிறது, பின்னர் ஒவ்வொரு கடைசி சேமிப்புப் பணத்தையும் மிரட்டிப் பறிக்கிறது.கடைசியில் அவர்களை தற்கொலைக்குக்கும் கொலைக்கும் தூண்டுகிறது.ஆனால், ஆன்லைன் சூதாட்ட பயன்பாடுகளை தடை செய்வது நல்ல தீர்வாக இருக்காது.
ஆன்லைன் ரம்மி சந்தையில், தென்னிந்தியா 65 சதவீதத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக ஆந்திரா.சராசரியாக ரம்மி பிளேயர் வாரத்திற்கு ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை விளையாட்டில் செலவிடுகிறார். மார்ச் மாத இறுதியில் கோவிட்19 பூட்டுதலின் ஆரம்ப கட்டத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 20 % அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பிரபலங்கள் இந்த வகையான ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரிப்பது மிகவும் கவலைக்குரியது.இவர்களை முன்மாதிரியாக கொண்டு இறக்கும் இளைஞர்களை தவறான பாதைக்கு இழுத்து செல்ல வழி வகுக்கும்.அனால் இந்த பிரபலங்கள் இந்த சூதாட்ட செயலிகளை உபயோபிபங்களா என்பது மிக பெரிய கேள்வி.
இந்த ஆன்லைன் சூதாட்டத்தின் பின்னணியில் உள்ள அல்காரிதம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.Machine Learning(ML) மற்றும் Artificial Intelligence(AI) ஆகியவற்றின் சமீபத்திய முன்னேற்றங்கள் கேமிங் துறையில், குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆன்லைன் சூதாட்டத்தில், AI மற்றும் ML அல்காரிதம்கள் நமது அடுத்த நகர்வுகளைக் கற்று, பின்னர் அதை நமக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன.உதாரணமாக, நீங்கள் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், முதல் 5 ஓவர்கள் Trails மட்டுமே.
நீங்கள் உங்களின் அனைத்து பேட்டிங் திறமைகளையும் வெளிப்படுத்தி, எதிரணியின் பந்துவீச்சுக்கு எதிராக உங்களால் உண்மையிலேயே விளையாட முடியும் என்று நம்ப வைக்கிறீர்கள்.ஆனால் உண்மையில்,உங்களை 5 ஓவர்கள் விளையாட அனுமதிப்பதன் மூலம்,எதிரணி உங்கள் அனைத்து பேட்டிங் திறன்களையும் கற்றுக்கொள்கிறது.
உண்மையான போட்டியை விளையாடும் போது, உங்கள் எதிராளி உங்களை ஆதிக்கம் செலுத்துகிறார், மேலும் உங்களால் ஒரு ரன் கூட எடுக்க முடியாது. ரம்மி கேம் போன்ற ஆன்லைன் சூதாட்டத்தில் இதுதான் நடக்கும்.
ரம்மி போன்ற சூதாட்டப் Apps உங்கள் விளையாடும் திறனைக் கற்றுக்கொள்வதுடன், நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று நம்புவதற்கு சில கேம்களை வெல்ல உங்களை அனுமதிக்கிறது. அந்த தற்காலிக வெற்றி உங்களை இன்னும் பணம் கட்டி ஜெய்க்கலாமா என்ற என்னத்த ஊக்குவிக்கும்.
அனால், உங்களால ஒரு போட்டியில் ஜெயிக்காமால் நீங்கள் சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்து மனநிம்மதி இழந்து கடையிசையில் உயிரை 🥹🥹🥹. Bayesian networks, Neural networks மற்றும் Genetic algorithms போன்ற பல சக்திவாய்ந்த அலோகிர்தம்கள் இந்தப் பயன்பாடுகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன
எனவே நீங்கள் மற்றொரு மனிதனுக்கு (அல்லது நண்பருக்கு) எதிராக விளையாடுகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் உண்மையில், நீங்கள் தோற்கடிக்க முடியாத ஒரு சக்திவாய்ந்த கணினிக்கு எதிராக விளையாடுகிறீர்கள். குறிப்பாக 16-40 வயதுடையவர்கள், இந்த ஆப்ஸால் எளிதில் ஏமாறுறார்காள்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வினீத் என்ற 29 வயது இளைஞர் ஆன்லைன் ரம்மியில் 21 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டார். வஞ்சியூர் கருவூலத்தில் கணக்காளராக பணிபுரியும் பிஜூலால், சூதாட்டத்திற்கு அடிமையானதால் Office-il இருந்து 2.7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
சூதாட்டச் சட்டத்தின்படி, 'Game of Chance' கீழ் வரும் விளையாட்டுகள் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் "Game of skills" தண்டிக்க முடியாது. Horse-racing, Bridge and Rummy போன்ற விளையாட்டுகள் "Game of skills" category கீழ வருகின்றன.
இணைய அடிமைத்தனத்தின் சாத்தியமான விளைவுகளை ஒழிக்க கூட்டு முயற்சிகள் இருக்க வேண்டும். ஆன்லைன் கேம் தயாரிப்பாளர்கள், வீரர்கள் செலவழித்த நேரத்தை உணரும் அம்சங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.இணையத்தின் நன்மை தீமைகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.
பெற்றோரின்அனுமதிஇல்லாமல்ஆன்லைனில்தனிப்பட்ட தகவல்களைப் பகிரக்கூடாதுஅல்லதுகேம்களை விளையாடும்போது அல்லது நிறுவும்போதுஉங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு தகவல்களைப்பகிரக்கூடாது போன்றஅடிப்படைபாதுகாப்புநடைமுறைகள் கற்பிக்கப்படவேண்டும். இந்த onlineசூதாட்டத்துக்கு சீக்ரம் நல்லதீர்வு வர வேண்டும
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மதிப்பிற்குரிய முதல்வர் @mkstalin ஐயா அவர்களே,
சமீபகாலமாக தெருநாய்கள் பிரச்சனை குறித்து பல awareness-threads எழுதி வருகிறேன்.சமீபத்தில் நீங்களும் இந்த தெருநாய் பிரச்சனையின் தீவிரத்தை அறிந்து நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.ஆனால் அவைஅனைத்தும் longterm solutions
என்னதான் தடுப்பூசி போட்டு,sterilize பண்ணாலும் கூட அந்த நாய்களை எந்த தெருவில் இருந்து எடுத்துச் சென்றார்களோ, மறுபடியும் அதே தெருவில் விடுவது தான் ABC சட்டம்.எனவே,அந்த நாய்கள் குழந்தைகளை மீண்டும் தாக்குவது உறுதி.சமீப காலமாக ராபீஸ் வந்து இறந்து போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
Rabies விட மோசமான ஒரு நோயை இந்த உலகம் பார்த்திருக்காது🙏. பிற நோய்கள் மனிதனை மனிதாய் வைத்து சாகடிக்கும் ஆனால் Rabies மனிதனை மிருகமாக்கி துடிக்கத் துடிக்க சாகடிக்கும் 🥹. தற்போது, இந்த நோயால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் தான்.
எல்லா விலங்கு கடிகளும் ரேபிஸ் நோய் தாக்கக்கூடியது-எலி போன்ற Rodents தவிர சில காட்டு எலிகள் கடித்தாலும் ரேபிஸ்தடுப்பூசி போடுவது அவசியம்.நாய்க்கடி 3 கேடகரியில் இருக்கும்.எந்த கேடகிரியில் இருக்கு என்பது பொறுத்து வைத்தியம் இருக்கும்.
Cat 1- skin intact
Cat 2- minor scratches without bleeding
Cat 3- scratches/bites with bleeding
ஒரு சின்ன ஸ்கரேட்ச் + லைட்டா ஒரு பொட்டு ரத்தம் வந்தாலும் அது cat 3 சேரும்.
முதலில் கடிபட்ட இடத்தை அட்லீஸ்ட் 15mins ஓடும் தண்ணீர்/டேப் வாட்டரில் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
Cat 3 கடிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி கூட சேர்ந்து ரேபிஸ் Immunoglobulin அல்லது monoclonal antibodies சேர்ந்து குடுப்பது அவசியம்.
ரேபிஸ் தடுப்பூசி antibody ரெஸ்பான்ஸ் உண்டுபண்ண 10-14 நாட்கள் தேவைப்படும். இடைப்பட்ட காலத்துல இந்த ரேபிஸ் இம்முனோக்ளோபின் தான் ரேபிஸ் வராம உடனே தடுக்கும்
பல வைரஸ்கள் மனிதனை தாக்கினாலும், அவற்றில் ஒரு சில வைரஸ்கள் நம் உயிரை பறிக்கும் ஆற்றல் உள்ளது. அப்படி பட்ட ஒரு மிக மோசமான வைரஸ்தான் இந்த RABIES. இந்த VIRUS பற்றி 1000 வருடங்களுக்கு முன்னரே பல சரித்திர ஏடுகளில் எழுதி வைக்க பட்டுள்ளது. பக்கத்து வீட்டு நாய் கடிச்சத பெற்றோரிடம் மறைத்த குழந்தை, RABIES நோயினால் பாதிக்கபட்டு, அந்த அப்பாவின் மடியில் துடித்து இறந்தான். Sensitive and disturbing video.
இந்த RABIES virus பெரும்பாலும், பாதிக்க பட்ட மிருகங்களிடமிருந்து(வௌவால்கள், நாயிகள், பூனைகள், நரிகள், etc.,) மனிதர்களுக்கு வருகிறது. இந்தியாவில் வருடத்திற்கு 20,000 இறப்புகள் இந்த RABIES virusஆல் நிகழ்கிறது. அதிலும் குழந்தைகள்தான் மிக அதிகம். இந்த virus பாதிக்க பட்ட நாய் ஒருத்தரை கடிக்கும் பட்ச்சத்தில், அந்த virus நம் திசுக்களில் புகுந்து பெருகி, பின்பு நம் மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) மூலமாக, மூளையே சென்று அடைகிறது.
அப்படி பரவும் பட்சத்தில் அந்த நபர் மனித இயல்பை மீறி, நாயின் குணாதிசயங்கள் பெற்று கிட்ட தட்ட நாயாக மாறி துடிச்சு துடிச்சு மடிந்து போவார்.Hydrophobia - ஒருவர் தண்ணீரை கண்டாலே அதிர்ந்து போகுவார்.தன் எச்சில் கூட அவரால் விழுங்க முடியாமல், வாய் முழுக்க நுரை தள்ளி பரிதாபமாக இறப்பார். அவ்வாரு இறந்த நபரின் சடலத்தை சட்டப்படி hospitalலிருந்து தகனம் செய்யபடும். ஏனனில், பாதிக்க பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களுக்கும் அது 100% பரவும். Hydrophobia symptoms வெளி படும் பட்ச்சத்தில், அந்த நபரை யாராலும் காப்பாற்ற முடியாது. Rabies நோயினால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் ஒரு glass தண்ணீர் குடிக்க எவ்வளவு துடிக்கிறான் பாருங்க. Unfortunately, he is no more.sensitive and disturbing video.
#thilli_info
காலையில் இருந்து #covidshield குறித்து பல செய்திகள் நம் TL சுற்றுவதை நாம் பார்க்க முடிகிறது. தடுப்பூசியால் வெகு சிலருக்கு (லட்சத்தில் எவரேனும் ஒருவருக்கு) பாதிப்பு வரலாம், அதுவும் ஊசி போடபட்ட 5-30 நாட்களுக்குள் வரலாம். அப்படி வந்தவர்களுக்கும் முறையாக சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளது. 2-3 மூன்று வருடங்களுக்கு முன் போடபட்ட ஊசியால், இவ்வளோ வருடம் கழித்து இரத்தம் கட்டாது. ஒரு சில ஊடகங்கள், அரைவேக்காடுதனமா தலைப்பு போட்டு, மக்களுக்குள் பயத்தை விதைக்கிரார்கள். அறிவியிலிலும், மருத்துவத்தில் அரசியல், மதம், இனம் கலக்க கூடாது. health.gov.au/our-work/covid…
உடல் நல குறைவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். Self- medication முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஊடகங்கள் பொறுப்போடு தலைப்பு செய்திகளை பகிர வேண்டும்.
எப்பொருள்யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ncbi.nlm.nih.gov/pmc/articles/P…
Liquid Nitrogen foods - உயிர் கொல்லி ?? #thilli_info
Recent-ah ஒரு videoவில், ஒரு சிறுவன் liquid nitrogen உறையவைக்க பட்ட "Smoke Biscuit" சாப்பிட்டு, மூக்கிலும், வாயிலும் குளிர் புகையை வெளி விட்டு , பரிதாபமாக இறந்துளான். இந்த Liquid Nitrogen திரவ நிலையில் உள்ள ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவைற்ற ஒரு வாயு ஆகும். இதன் வெப்ப நிலை − 196°C.
இது எந்த பொருளையும் உடனடியாக உறைய வைக்கும். பெரும்பாலும் இதை Industries, Research labsல பயன்படுத்துவார்கள். பல்வேறு நாடுகளில் இதை பயன்படுத்தி உறைந்த உணவு பொருள்களுக்கு (Biscuit chocolate, ஐஸ்-cream,etc.,) மருத்துவர்கள் கடும் கண்டனமும் மற்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். உதாரணமாக, இட்லி இந்த Liquid
Nitrogenலில் உறைய வைத்தால், ஒரு சுத்தி கொண்டு அதை உடைக்க முடியும். இந்த வீடியோவில் தெளிவாக காம்பித்து இருப்பார்கள்:
இந்த Liquid Nitrogen நாம் உண்ணும் பொருளில் மீதம் இருந்தால், அதை நாம் உட்கொள்ளும்போது நமது உடல் உறுப்புக்கள் கடுமையான குளிர் ( − 196°C) எதிர் கொள்ளும் சூழல் உண்டாகும். இதனால் உறுப்புக்கள் செயல் இழந்து, மூச்சு திணறல் ஏற்பட்டு மரணிக்க கூடும். Delhi pub Cocktailயில் Liquid Nitrogen கலந்து குடிச்ச ஒருவரை பல மணி நேரம் போராடிம், மருத்துவர்கள் அவரின் பாதி வயிற்றை அகற்றி மட்டுமே காப்பாத்தினர்.
நீர் இன்றி அமையாது உலகு. அதைபோல், நல்ல தூக்கம் இன்றி அமையாது நம் அரோக்கியம். நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல ஊட்டச்சத்து உணவு, உடற்பயிற்ச்சி மற்றும் நல்ல தூக்கம் முக்கியம். ஒரு மனிதன் தினமும் சராசரியாக 6-8 மணி நேரம் தூங்க வேண்டும். அப்படி தூங்கும் போது, என்ன நடக்கிறது என்பதை பாப்போம். இதில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன, அதை கீழ கொடுக்கபட்டுள புகை படத்தில் அறியலாம்.
சமீப காலங்களில், Busy schedules, kids, anxiety and technology என அனைத்தும் நல்ல இரவு உறக்கத்திற்குத் தடையாக இருக்கிறது. நாம் தூங்குவதற்கு Melatonin என்கின்ற hormone மிக முக்கியம். இது இருட்டில் சுரக்கும். ஆகவே, நம் படுக்கையறைல் மொபைல்ஸ்.
Laptop, tablets போன்ற கருவிகள் உபயோகிப்பதை வேண்டும். ஏனனில், அதில் இருந்து வரும் வெளிச்ச்ம், Melatonin சுரப்பதை பாதிக்கும், பாதிக்கும் பட்சத்தில் நம் தூக்கம் கண்டிப்பாக முழுமையாக இருக்காது. இது, நாளடைவில் INSOMIA தள்ளும். இது தவிர்த்து,INSOMIA பிற காரணங்களும் கீழ உள்ள புகைப்படத்தில் காணலாம்