The Thread: #SabareesanScam
திமுக அரசு மீண்டும் கைது நடவடிக்கை எடுக்கும் என்றால் அதற்கு காரணமான இந்த ஆதாரங்களை மக்கள் முன் வைக்கிறேன்.

ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்கள் UKவில் முதலீடு செய்துள்ள இரு நிறுவனங்கள் விவரம், அதை சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கான விவரங்கள் (1/17)
இரண்டு நிறுவனங்களுமே telecommunication activities மற்றும் financial intermediation சேவை வழங்குபவை. பொதுவாக இணையச் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதி நிர்வாகம் சார்ந்து இடைத்தரகர்களாக வேலை செய்கின்றன. அதற்கான ஆதாரம்(2/17)
இந்த நிறுவனங்களில் சபரீசன் நிர்வாகக் குழுவில் இணைந்த appointed தேதி 18-10-2022 எனத் தெரிவிக்கின்றன. UK அரசு ஆவணம் 25 ஆம் தேதி என்று அதனை உறுதிப்படுத்திய ஆவணம்.. (3/17)
குறிப்பிட்ட இரண்டு நிறுவனமும் பெரிய கட்டமைப்பு கொண்டவை அல்ல. உற்பத்தி நிறுவனங்களும் அல்ல. ஒரு இடைத்தரகர்களாகச் செயல்படும் அளவிற்கே பின்புலம் உள்ளவை. 5 கோடி கூட வருமானம் ஈட்டாத இந்த நிறுவனங்களில் அவசரமாக சபரீசன் முதலீடு செய்யக் காரணம்? அடுத்து (4/17)
இரண்டு நிறுவனத்தின் significant control வைத்திருப்பவர் ஒரு நபரே அவர் ஶ்ரீனிவாச வெங்கடேஷ். இவர் ஒரு chartered accountant. இவர் இந்த இரண்டு நிறுவனம் தவிர St Georges Bank என்ற முதலீட்டு ஆலோசனை கொடுக்கும் நிறுவனத்தில் Consultant and Director இருக்கிறார் என்பது முக்கிய விசயம். (5/17)
இந்த St Georges Bank நிறுவனத்தில் Parent நிறுவனம் Westpac Banking என்ற முக்கிய வங்கி. இந்த Westpac Bank மீது இருக்கும் முக்கிய குற்றச்சாட்டுச் சர்வதேச அளவில் money laundering வேலையைச் செய்தது. கணக்கில் காட்ட முடியாத பணத்தை முதலீடுகளாக தன் துணை நிறுவனங்கள் மூலம் மாற்றியது. (6/17)
இதை அப்படியே வைத்து விட்டு இப்போது தமிழகத்தில் நடக்கும் வேலையைப் பார்த்தோம் என்றால் தொடர்புப்படுத்தி நடப்பது என்ன என்பதை யூகிக்க இயலும்.
சென்னையில் சபரீசன் சார்ந்தோர் நிறுவனமாக அறியப்படும் wired entertainment என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு நிறுவனத்தின் Website (7/17)
இந்த நிறுவனம் Fibernet மூலம் கேபிள் டீவி , Internet என சேவையை வழங்கத் தயார் ஆகிவருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் கேபிள் ஆப்ரேட்டர்கள் அழைத்துப் பேசி முடித்துள்ளது திமுக தலைமை குடும்பம். இது கருணாநிதி குடும்பத்திலிருந்து வந்துள்ள இன்னொரு SCV எனப் பேசப்படுகிறது. (8/17)
கேபிள் ஆப்ரேட்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி 8 மாதங்கள் மேல் தாமதமான நிலையில் தான் சபரீசன் UKவில் இருக்கும் நிறுவனங்களோடு கைகோர்க்கிறார். ஒன்று Fibernet தொழில் தொடங்க தேவையான சாதனங்கள், இரண்டு money laundering இரண்டும் இவர்களை ஒரு புள்ளியில் இணைக்கும்.(9/17)
இதை நாங்கள் வெளியிட்டது தேதி 29.11.22. அதில் சபரீசன் சார்ந்தோர் நிறுவனமாகக் கருதப்படும் wired entertainment சிங்கப்பூர் முகவரியும் வெளியிட்டு இருந்தோம். அடுத்த நாளே அந்த முகவரியை நீக்கி update செய்துள்ளது அந்த தரப்பு. அதற்கான ஆதாரம் (web archive மூலம் பழைய பக்கம் காணவும்) 10/17
வீடியோ வெளியிட்ட அடுத்த நாள் 30.11.2022 காலை 08.48am அளவில் இந்த முகவரி நீக்கும் வேலையைச் செய்துள்ளனர். அதற்கான XML sitemap ஆதாரம்.. (11/17)
கேபிள் ஆப்ரேடர்களுக்கு 2 முதல் 5 லட்சம் வரை வைப்பு நிதி கொடுக்க கூறியுள்ளது சபரீசன் தொடர்புடைய நிறுவனம். ஆனால் பணியைத் தொடங்காததற்கு காரணம் Intellectual Property India வில் இந்த நிறுவனத்தின் Brand Trade Mark பதிவு ஏற்கப்படவில்லை. (12/17)
முதலில் இந்த நிறுவனம் wired entertainment எனப் பதிவு செய்ய முயற்சி நடந்தது ஆனால் அது ஏற்கப்படாத நிலையில் அதனை We Connect என மாற்றிப் பதிவு செய்ய முயற்சி நடக்கிறது. ஆக இரண்டும் வேறு நிறுவனம் அல்ல. அதற்கான ஆதாரம் இந்த கடிதம்.. (13/17)
அந்த We Connect நிறுவன பதிவும் தற்போதைய நிலை Objected.. எனவே தான் தாமதமாகிறது ஆப்ரேட்டகளுடன் பணியைத் தொடங்க. ஆனால் பூர்வாங்க வேலைகளான Fibernet தேவையான wire இழுக்கும் பணியைச் சென்னை முழுவதும் செய்து வருகிறது இந்த நிறுவனம். (14/17)
இந்த நிலையில் எப்படி சென்னை மாநகராட்சி அனுமதி அளித்தது wire கொண்டு செல்ல? கூட்டுக் கொள்ளையில் சென்னை மாநகராட்சியும் மேயரும் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் விசாரணை வட்டத்தில் கொண்டுவருவது அவசியம். (15/17)
ஒரு குடும்பம் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை கொள்ளை அடித்து அந்த பணத்தை கொண்டு நிறுவனக்களை அழித்து SCV Suntv போல் மீண்டும் Fibernet துறையில் ஒரே பெரும் நிறுவனமாக நிலை நிறுத்த முயற்சி செய்யும் என்றால் இனியும் இந்த குடும்பத்தை அனுமதிக்க முடியாது. (16/17)
திமுக தலைமை குடும்பம் அதிகார வெறி கொண்டு அடக்குமுறைகளை ஆரம்பிக்கலாம் என்பதால் இதனை மொத்தமாக மக்கள் முன் வைக்கிறேன்.
இன்னும் சுமார் 30% டாக்குமெண்ட் வெளியிடப்படாமல் உள்ளது. விரைவில் அதுவும் வெளியிடப்படும். இது 1970கள் அல்ல 2022. திமுக அடக்குமுறைக்கு அஞ்சோம். (17/17)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Maridhas🇮🇳

Maridhas🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MaridhasAnswers

Oct 30
கோவை தீவிரவாத தாக்குதலில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு முக்கிய புள்ளிகள் காப்பாற்ற முயற்சி நடக்கிறதா?
ஏன் இந்த கேள்வி எழுகிறது! காரணங்கள் இதோ ஒவ்வொன்றாக
1)PETN Powder என்பது கள்ள மார்க்கெடில் எளிதில் கிடைக்காத தீவிரவாத குழுக்களால் அதிகம் தேடப்படும் முக்கிய ரசாயனம். (1/12)
PETN வைத்து 2001 முதல் 2010 வரை அல்கொய்தா விமானங்கள் கார்கோ விமானங்கள் மீது தாக்குதல்களைத் தொடர்ச்சியாகத் தொடுத்தது. பின் ISISவரை இது பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2011ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணம் எனக் கருதப்படுவதும் இதுவே. (2/12)
PETN அரிதாக சர்வதேச மார்க்கெடில் கிடைத்தாலும் அவ்வளவு எளிதில் நாட்டிற்குள் நகர்த்த முடியாது. PETN இன்று கோவை கார் வெடிப்பில் இறந்துள்ள ஜமேசா முபின் வீட்டிலிருந்து கிடைத்துள்ளது.
கேள்வி இது முதல் நாளே கிடைத்த பின் ஏன் திமுக அரசு NIAக்கு வழக்கை உடனடியாக மாற்றவில்லை? அடுத்து (3/12)
Read 13 tweets
Oct 28
கேஸ் சிலிண்டர் வெடிக்க
1.அதிகமாக Heat செய்து Steel உருக்கச் செய்வது
2.cylinderயை பலமாகச் சேதப்படுத்துவது.
ஆனால் இது இரண்டும் அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. கோவையில் தீவிரவாதிகள் HomeMade Bombஆக கேஸ் சிலிண்டரை பயன்படுத்த முடியும் என்றால் இது பெரும் ஆபத்துக்கான தொடக்கம் ஆக (1/10)
ஆக முதல் கேள்வி அந்த சிலிண்டர் வெடித்தது எப்படி? அடுத்து செய்தி நிறுவனங்களுக்கு ஏன் திமுக அரசின் காவல்துறை அவசரமாக கேஸ் சிலிண்டர் கார் வெடிப்பு என்று செய்தி கொடுத்து தீவிரவாத செயலை சாதாரண விபத்து போல் திசை திருப்ப ஆர்வம் காட்டியது ஏன்? ஏன் தீவிரவாத சம்பவத்தின் முன்னோட்டம்? (2/10)
சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் தமிழக காவல் ஆணையர் உட்பட முக்கிய உச்ச அதிகாரம் படைத்தவர்கள் கோவை விரைந்ததிலிருந்து நடந்திருப்பது விபத்து அல்லது அதையும் தாண்டி ஏதோ சதித் திட்டத்தின் முக்கிய பகுதி என அறியமுடிகிறது. ஆனால் செய்தி என்ன சதி! (3/10)
Read 10 tweets
Jan 23
லாவாண்யா விவகாரம் எழுப்பியுள்ள முக்கிய கேள்விகள் இவை... (இந்த கேள்விகள் நியாயமான கேள்வி என்று மக்கள் நீங்கள் கருதினால், இதை நீங்களும் எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்)
Read 11 tweets
Nov 23, 2021
ஜெய் பீம் படத்தில் வரும் காலண்டர் கட்சிகள் சில.

34.15 நிமிடத்தில் இந்த நீதிமன்ற காட்சியில் வரும் காலெண்டர் "Bar Council Of Tamil Nadu And Puducherry" எனத் தெளிவாக உள்ளது. நீதிமன்ற வளாகம் எனவே Bar Council காலெண்டர் வைத்துள்ளனர். சரி. அடுத்து
1.05 நிமிடத்தில் வரும் இந்த காட்சியில் ஒரு மெடிக்கல் (மருந்தகம்) வருகிறது. இதில் woodwards gripe water calendar வருகிறது. மெடிக்கல் என்பதால் woodwards gripe water 1995களில் பிரபலம் என்பதாலும் இந்த காட்சியில் இந்த காலண்டர் வைத்துள்ளனர். இதுவும் சரி! அடுத்து
1.24 நிமிடத்தில் மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் காட்சி வைத்துள்ளனர். அதில் நீதிமன்ற சிம்பல் உடன் கூடிய காலண்டர் வைத்துள்ளனர். படக்குழுவினருக்கு எங்கே எப்படியான காலண்டர் 1995களில் வைத்திருப்பர் என்று திட்டமிடல் இருந்துள்ளது. அடுத்து
Read 8 tweets
Sep 16, 2019
திமுக MP ஜெகத்ரஜ்சகன் அவர்கள் ₹26,000 கோடி முதலீட்டை முதலில் நமது நாட்டில் முதலீடு செய்ய முயலாமல் ஏன் இலங்கைக்கு Hambantota Refinery-ல் முதலீடு செய்யத் துடிக்கிறார்? இந்தியாவில் Make in India திட்டத்தில் முதலீடு செய்ய ஏன் முயற்சி செய்ய விரும்பவில்லை? 1/8
சரி ₹26,000 கோடி முதலீடு செய்வது உங்கள் விருப்பம். கேள்வி இந்த அளவிற்குப் பணம் உங்களுக்கு எப்படி வருகிறது அதுவும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முன் அனுபவம் இல்லாத உங்களுக்கு எப்படி? 2/8
இந்த ₹26,000 கோடி பணத்தை மொரிசியஸ் நாட்டிலிருந்து, சிங்கப்பூர் கம்பெனி Silver Park International வழியாக இலங்கையில் முதலீடு செய்ய உள்ளார்கள் திமுக தலைமை என்ற செய்தி உண்மையா? 3/8
Read 8 tweets
Mar 14, 2019
ஊழல்?அதைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கு.
மின்சார உற்பத்தி?நமது ஆட்சியில் தானே 8மணி நேரம் மின்தடை.
சட்ட ஒழுங்கு? நம் மேலே இல்லாத நில அபகரிப்பு வழக்கா!

பின் எப்படி தான் தேர்தலைச் சந்திப்பது? எவன் குடும்பம் நாசம் ஆனாலும் பிரச்சனை இல்லை எதாவது செய்யவேண்டும் என ஒருகட்சி.
தேர்தல் வெற்றிக்குக் கூட இருப்பவர்களையே கொலை செய்யத் தயங்காத அளவிற்கு இந்த கூட்டம் கொடூரமானது. ஆட்சி அதிகாரம் இல்லாமல் கொலை பசியில் அலைகிறது இந்த மிருக கூட்டம். எதாவது என்னாவது செய்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று. மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவும்.
கட்சிக் கொள்கை என்று எதுவும் பேச முடியாத நிலையில் மக்கள் உணர்வைத் தூண்டி வெறுப்பு அரசியல் மட்டுமே இவர்களால் வாக்கு வாங்க முடியும். அதற்கு எதுவும் செய்யலாம் என்று முழு வீச்சில் இறங்கிவிட்டார்கள்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(