M.SivaRajan Profile picture
Dec 4 18 tweets 3 min read
#ஜெய்_ஸ்ரீ_கிருஷ்ணா

பாரதப் போர் முடிந்த மறுநாள் 19 -ஆம் நாள்!

அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை - மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும். Image
போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.

தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள்.

மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும்,

தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான்.
அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.

குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.
தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன.

மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின.

தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.

பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன்.
மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான்.

வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன.

அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.

'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது.

பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்’ என்று எண்ணி,
ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன்.

ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை.

அர்ஜுனன் திகைத்தான்.

'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்’
என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன்.

அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார்.

"அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதி விலக்கு.
முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார்.

கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான்.

அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே’ என ஒரு கணம் ஏங்கினான்.
"கர்மயோகம்’ என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்?

இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை?
நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக் கொண்டதால் தானே,

எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?'

என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீ கண்ணன்.
அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார்.

அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார்.

கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது.

எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர்.
யாருக்கும் எதுவும் புரியவில்லை.

''அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன.

அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி,
யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன்.

நான் சாரதியாக அமர்ந்து கொண்டிருந்ததால் தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன.

படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு.
இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன்.

நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும்.

அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன்.
இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய்.

இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதி விலக்காக்கி,

உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்!

தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி,
நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய்.

என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம் - காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன்.

இருந்தாலும்,

உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது.
அது தவறு.

இதோ...

உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்'' என்று,
நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீ கண்ணன்.

அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை.

காரணம்

அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்து கிடந்தான்.
வாழ்க்கை எனும் ரதத்தினில்,
கடவுளை சரணடைந்தால்,
இறுதி வரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவிப்பிணியினை கடந்தேற,
சாரதி போல் நம்மை நடத்தி செல்வார்.

எனவே அவனை கேள்வியேயில்லாமல் சரணடைவோம்.

#ஜெய்_ஸ்ரீ_கிருஷ்ணா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 6
#லிங்கோத்பவர்

*இவர எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கா?*

*சிவாலயத்தில் நீங்கள் கண்டுகொள்ளாமல் நகரும்*

*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*

*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*. Image
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*

*இவர் தான் லிங்கோத்பவர்.*

*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*

*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,

தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*
Read 11 tweets
Dec 6
#திருவண்ணாமலை_சிறப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது.

பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம்.

நால்வராலும் பாடப்பட்ட தலம். Image
எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.

இத்தலத்தில் தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது.
பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம்.

கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்.

ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.

இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
Read 41 tweets
Dec 6
#கார்த்திகை_தீபம்

*கார்த்திகை தீபம் அன்று சொல்ல வேண்டிய மந்திரம் !*

அண்ணாமலைக்கு போகாமலே தீபம் தரிசித்த பலன்.

கார்த்திகை தீபங்களை வைக்கும்போது சொல்லும் படி விதிக்கப்பட்டிருக்கும்.
*மந்திரம்:*

கீடா பதங்கா மசகாச்ச வருக்ஷா

ஜலே ஸ்தலேயே நிவஸந்தி ஜீவா:!

தருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

ஸுகின பவந்து சவபசா ஹி விப்ரா:!!

*உரு 21*

மாலையில் விளக்கேற்றும் போதும், கோயில்களில் விளக்கு வழிபாடு செய்யும் போதும் இந்த ஸ்லோகத்தை அவசியம் வாசிக்கவும்.
விளக்கேற்றி இந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்கிய பின், அண்ணாமலையாருக்கு அரோஹரா'' என்று மூன்று முறை சொல்லி திருவண்ணாமலை தீபத்தை மனதார நினைத்து வணங்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் அண்ணாமலை மகாதீபத்தை நேரில் தரிசித்த பலன் உண்டாகும்.
Read 17 tweets
Dec 5
#பரணி_தீப_வழிபாடு

பாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு*

இதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மனதால் கூட பாவம் செய்யக்கூடாது.

பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். Image
ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகமாக,
இந்த *கலியுகம்* இருக்கிறது.

அப்படி நாம் அறியாமல் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக, தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் மக்கள் அடியெடுத்து வைக்கின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
Read 5 tweets
Dec 5
#சிவ_தீட்சை

*சிவோபதேச ஞான சிவ தீட்சை விழா. சென்னையில்.*

சென்னை *திருவான்மியூர் ஸ்ரீ நடராஜர் அறக்கட்டளை சார்பில்* பொன்னேரி அருகில் உள்ள *திருப்பாலைவனம் சிவாலயத்தில் சிவ தீட்சை விழா* நடைபெற உள்ளது. Image
*நிகழும், பெருமானுக்கே உரிய தனுர் மார்கழி மாதம் 4ம் தேதி ஆங்கில மாதம் டிசம்பர் 19ம் 2022 வருகிறது. (19-12-2022 திங்கட்கிழமை)*

சென்னையில் உள்ள *அடியார்கள் அன்பர்கள் மற்றும் அனைத்து மன்றங்களும் இந்த பொன்னான வாய்ப்பை* பயன்படுத்திக் கொள்ளலாம்.
சமயம் விஷேடம் சிவபூஜை நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்பும் அடியார்கள் அன்பர்கள், முன்பதிவு செய்து சந்நிதானங்களின் உத்தரவு பெற்று தீட்சை பெற்றுக் கொள்ளலாம்.

*சிவ தீட்சை பெற, 12-12-2022 திங்கட்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும்.*
Read 4 tweets
Dec 5
#பிரதோஷ_சிறப்பு

#சிவ_அஷ்டோத்ரம்

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(