M.SivaRajan Profile picture
Dec 7 12 tweets 3 min read
*கார்த்திகையில் - கார்த்திகை 07.12.2022*
*திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்திரம்!*

ஆழ்வார்களில் இளையவரான திருமங்கை ஆழ்வார், திருவாலி திருநகரியின் அருகிலுள்ள திருக்குறையலூரில் திருமாலின் *சார்ங்கம்* என்னும் *வேலின்* அம்சமாக கார்த்திகை மாதம், கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்!
நான்கு யுகங்களில் அவதரித்தவரும், அதிக அளவில் மங்களாசாசனமும், அதிக அளவில் பாசுரங்களும் அருளியவர் இவர் ஒருவரே!..
*86 திவ்யதேசங்கள்*
*06 பிரபந்தங்கள்* -
பெரிய திருமொழி. 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருஎழுகூற்றிருக்கை 1
பெரிய திருமடல் 78
சிறிய திருமடல். 40
*மொத்த பாசுரங்கள் 1253*

திருவாலி நாட்டை ஆண்டபோது, சோழப் பேரரசுக்குக் கட்டவேண்டிய கப்பத்தொகையை கட்டாமல், அதை பகவத்-பாகவத கைங்கர்யங்களுக்கு செலவிட்டார்.
அதனால் அரசன் இவரை சிறையில் அடைக்க, அப்போது தேவப்பெருமாள் திருமங்கை மன்னன் கனவில் தோன்றி, காஞ்சி வேகவதிக் கரையில் செல்வம் இருப்பதாகவும், அதை எடுத்து கப்பத்தொகையை கட்டுமாறும் உரைத்தார்!
அரசனின் படை வீரர்களை தம்முடன் அழைத்து சென்ற பரகாலன், வேகவதிக் கரையில் ஆற்று மணலை அளந்து கொடுத்தார்.

முதலில் கோபித்த வீரர்கள் அளந்து கொடுத்த மண், பொன்னானது கண்டு வியந்தார்கள்!

விஷயம் கேள்விப்பட்ட அரசன், ஆழ்வாரிடம் தெண்டன் சமர்ப்பித்து,
அவருக்கு மேலும் பல தனங்களை கொடுத்ததோடு, தானும் பல தான-தர்மங்களை செய்து உய்வடைந்தான்!

ஶ்ரீமந் நாராயணன்- பிராட்டியுடன், திருமங்கை ஆழ்வாருக்கு பிரத்யட்சமாகி, அவருக்கு அருளிய திருநாமம் *நாராயணா* என்பதாகும்!
ஆழ்வார் தான் கண்டு கொண்ட நாராயணா எனும் திருமந்திரத்தின் அற்புத சக்தியை, இவ்வுலகம் உய்ய தனது *பெரியதிருமொழி* பிரபந்தம், முதல் பத்து பாசுரங்களில் "நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்" என்று ஒவ்வொரு பாசுரத்தின் முடிவிலும் உரைக்கிறார்..
"குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்;
நிலம் தரம் செய்யும் நீள்விசும்பருளும்,
அருளொடு பெருநிலம் அளிக்கும்;
வலம்தரும் மற்றும் தந்திடும்* பெற்ற
தாயினும் ஆயின செய்யும்;
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
*நாராயணா* என்னும் நாமம்!"
-பெரியதிருமொழி
*குலம் தரும்*
நாராயணா என்னும் திருநாமம் தன்னை ஓதியவர்களுக்கு தொண்டக்குலம் ஆகிய உயர்ந்த குலத்தை தரும்;
*செல்வம் தந்திடும்*
அனைத்து ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும்;
*அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும்*
பாப பலன்களால் அனுபவிக்கும் துன்பங்களை அழிக்கும்;
*நீள்விசும்பருளும்*
முடிவான பரமபதத்தை அருளும்;
*அருளொடு பெருநிலம் அளிக்கும்*
அருளொடு கூடிய கைங்கர்யமாகிய பெருநிலையை தரும்;
*வலம் தரும்*
பரமபதத்தில் ஶ்ரீமந் நாராயணனுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் நித்யசூரிகளுக்கு சமமான அறிவையும் ஆற்றலையும் தரும்;
*மற்றும் தந்திடும்*
நமக்கு தெரியாத நமக்கு வேண்டியதனைத்தும் தரும்;
*பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நம்மை பெற்ற தாயைவிட நமக்கு நன்மைகள் செய்யும்;
*நலம் தரும் சொல்லை*
இப்படி எல்லா நன்மைகளையும் தருகின்ற திருநாமத்தை;
*நான் கண்டு கொண்டேன்*
திருமங்கை ஆழ்வாராகிய நான் நேரில்கண்டு கொண்டேன்;
*நாராயணா என்னும் நாமம்*
அது நாராயணா என்னும் திருநாமமே!!!

#திருமங்கையாழ்வார்

#திருமங்கையாழ்வார்_திருநட்சத்திரம்

#திருமங்கையாழ்வார்_சிறப்புகள்

#திருமங்கையாழ்வார்_மகிமைகள்

திருமங்கையாழ்வார் திருவடிகள் போற்றி ! போற்றி !!போற்றி !!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 7
#தீப_தீட்சை

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று.

நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம்.

அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். Image
அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது.

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும்.

எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.

பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.
நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும்.

அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பார்ப்போம்.

1.மனக் கவலை தூள் படும்

2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்

3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்

4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
Read 4 tweets
Dec 7
சென்னை  பாரிமுனை 
கச்சாலீஸ்வரர் ஆலயம்

1720 ஆம் ஆண்டு சென்னை தம்புச் செட்டி சாலைக்கு அருகில் உள்ள ஆர்மனியன் தெருவில் அமைந்துள்ளது  இந்த ஆலயம். 

சமிஸ்கிரதம் மற்றும் இந்தியில் கச்சா என்றால் ஆமை என்று பொருள். Image
இந்த ஆலயத்தில் ஒரு காலத்தில்  விஷ்ணுவானவர் கூர்மாவதாரம் எடுத்தபோது ஆமை வடிவம் எடுத்து  வந்து  சிவபெருமானை வணங்கினாராம்.

ஒரு அடியாரினால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லையே மனம் வருந்தினார்.
ஈசனைப்  பார்க்காமல் எப்படி இருப்பது?  தூக்கம்  வராமல்  தவித்தவர்  கனவில்  சிவபெருமான்   தோன்றி  ‘என்னை    நீ   இங்கேயே  பார்க்கும்  வகையில்  ஆலயம் கட்டி   வழிபடு’  எனக்  கூற  அந்த ஆலயத்தை  அந்த அடியார் நிறுவினார் .
Read 5 tweets
Dec 7
#நரம்பு_தளர்ச்சி_நிவர்த்தி

நரம்பு தளர்ச்சி குணமாகும்
திருவரங்குள ஶ்ரீ சக்கர வழிபாடு :

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம்!

குலோத்துங்க சோழீச்சரம் என அழைக்கப்பட்ட இந்தத் தலத்தின் நாயகனாம் சிவனாரின் திருநாமம்...
சார்ந்தாரைக் காத்த ஈஸ்வரன்.

தன்னை நாடி வரும் அன்பர்களைக் காத்தருளும் மூர்த்தி இவர்.

ஸ்ரீ சாந்தநாத ஸ்வாமி என அழைக்கின்றனர் பக்தர்கள்!

திரு அரங்குள நாதர் என்கிற திருநாமமும் உண்டு.

சுயம்பு மூர்த்தமாக வெளிப்பட்டவர் ஸ்ரீஅரங்குளநாதர்.
சிறிய மூர்த்தம்தான் என்றாலும் மிகப்பெரிய சாந்நித்தியம் கொண்டவர் சிவனார் என்கின்றனர் அடியார்கள்!

ஏழு தீர்த்தங்கள் கொண்ட அற்புதமான இந்தத் தலம் மிகச் சிறந்த பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.

சிவ- பார்வதியை தரிசித்து விளக்கேற்றி வணங்கினால், நல்ல வரன் அமையும் என்கின்றனர் பக்தர்கள்.
Read 8 tweets
Dec 7
#தேனீஸ்வரர்

*தேனீஸ்வரர் திருக்கோயில் வெள்ளலூர்*

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்.

தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது.

கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில்.
வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம்.

இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும்.

ரோமான்யர் காலத்து காசுகள், மோதிரங்கள் இரண்டு மணிகள், தங்க தாம்பாளம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ரோமான்யர்கள் இங்கு வந்து வாணிபம் செய்தது புலனாகிறது.
காஞ்சி மாநதி எனும் நொய்யல் நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

இவ்வூர் அன்னதான புரி, சிவபுரி, வேளிர் ஊர், சர்க்கார் அக்ரஹாரம், சதுர்வேத மங்கலம் வெள்ளலூர் என பலபெயர்களால் வழங்கப்பட்டதாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள வெள்ளலூர் எனும் பெயரே நிலைத்து விட்டது.
Read 18 tweets
Dec 6
#லிங்கோத்பவர்

*இவர எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கா?*

*சிவாலயத்தில் நீங்கள் கண்டுகொள்ளாமல் நகரும்*

*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*

*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*.
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*

*இவர் தான் லிங்கோத்பவர்.*

*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*

*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,

தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*
Read 11 tweets
Dec 6
#திருவண்ணாமலை_சிறப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது.

பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம்.

நால்வராலும் பாடப்பட்ட தலம்.
எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.

இத்தலத்தில் தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது.
பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம்.

கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்.

ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.

இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
Read 41 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(