M.SivaRajan Profile picture
Dec 8 10 tweets 3 min read
#திருப்பாணாழ்வார்

*கார்த்திகை மாதம் - ரோஹிணி நட்சத்திரம் -

08.12.2022

*திருப்பாணாழ்வார் திருநக்ஷத்திரம்*

கார்த்திகை ரோஹிணி - நீளாதேவி அவதரித்த *உறந்தை* என்னும் *உறையூரில்*,

திருமாலின் *"ஶ்ரீவஸ்தம்*" என்னும் "மறுவின்" அம்சமாய் அவதரித்த

*திருப்பாணாழ்வார்* திருநக்ஷத்ரம்!
*பிறப்பால் பாணராக இருந்தாலும், இவரது பண் மற்றும் பக்தி பெருக்கால் இவரை ஆட்கொண்டான் அரங்கன்!*

தன்னுடைய கால் இந்த புனித ஷேத்ரமண்ணில் படக்கூடாது என்பதில் வைராக்யமாக இருந்த பாணர், தினமும் காவிரிக் கரையினில் நின்று கையில் யாழுடன் அரங்கனை சேவித்து மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தார்!
ஒருநாள், அரங்கனின் திருமஞ்சனத்திற்காக நீர் கொண்டு செல்ல பொற்குடத்துடன் காவிரிக்கு வந்த பட்டர் லோகசாரங்கர், வழியை மறைத்து தன்னிலை மறந்து பாடிக்கொண்டிருந்த பாணரை விலகும்படி சொல்ல, அது அவர் செவியில் ஏறவில்லை.
கோபமுற்ற லோகசாரங்கர் ஒரு கல்லெடுத்து வீச, அது பாணரின் நெற்றியில் பட்டு, குருதி வருகிறது. உடன் உணர்வும் வந்து பதறிய பாணர் அங்கிருந்து அகன்றார்!

நீரை முகந்து கொண்டு சந்நிதிக்கு திரும்பிய லோகசாரங்கர்,

அரங்கனின் நெற்றியில் செந்நீர் பெருகி வருவதைக் கண்டு மனம் பதைத்தார்,
ஏதும் செய்யவியலாமல் விதிர் விதிர்த்தார்.

*"பல காலமாக நம்மைப் பாடி வருகிற பாணன் புறம்பே நிற்கப் பார்த்திருக்கலாமோ?" என்ற பெருமான், "எம் அன்பனை, இழிகுலத்தோன் என எண்ணாது உம் தோளில் ஏற்றி எம்முன் கொணர்க"* என்றான்!
மனம் வருந்திய லோகசாரங்கர் அரங்கனின் ஆக்ஞையை நிறைவேற்றி,

காவிரிக் கரையிலிருந்து சன்னதி அடைந்த பாணன், *வையமளந்தாணை கண்ணாரப் பருகி அவன் திருமுடி முதல் திருவடி வரை ஒவ்வொரு அவயங்களாக கண்டு, குளிர்ந்து, மனமுருகிப் பாடிய பத்து பாசுரங்களே "அமலனாதிபிரான்" என்ற பிரபந்தம்!*
ஒவ்வோர் அவயமாக கண்டு பாடியபோது பரவஸித்து மகிழ்ந்த அரங்கன், பத்தாம் பாசுரத்தைக் கேட்டு திடுக்கிட்டான்!

"நான் பிறவியெடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலையில்லை" என்று தீர்மானமாக சொல்ல, தீர்த்தன் திடுக்கிட்டான்!
*இதற்காகவா லோகசாரங்கரை சுமந்து வரச்சொன்னோம்?
*இனி எனக்கு கண்களே தேவையில்லை என்று சொன்னவனை அந்தகனாய் வெளியே அனுப்பவா? அது எனக்குத் தகுமா?
*பக்கத்தில் இருந்து பாணருக்காய் பரிந்துரைத்த பிராட்டிக்கு என்ன பதில் சொல்வது?
*என்று யோசித்த அரங்கன்,
அவனை தன்னருகே அழைத்து "திருப்பாணாழ்வாராக்கி" கொண்டார்!!*

"கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன்-என்னுள்ளம் கவர்ந்தானை; அண்டர்கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்டகண்கள்,
மற்றொன்றினைக் காணாவே!"

-அமலனாதிபிரான் (10)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 10
#தேங்காய்_உடைக்கும்_காரணம்

தேங்காய் உடைப்பது எதற்காக?

திருமணங்கள் போன்ற சுப காரியங்களிலும் கோயில்களிலும் பூஜைகளிலும் சமர்ப்பிப்பதில் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்குவது தேங்காய்.

புது வீடு, வண்டி போன்றவை வாங்கும் போதும் நாம் உடைப்பது தேங்காயைத் தான். Image
ஹோமங்கள் செய்யும்போது, ஹோமத் திரவியமாக பூர்ணாகுதியில் சேர்ப்பதும் இதைத் தான்.

தெருக்கள்தோறும் வீற்றிருக்கும் விநாயகருக்கு நாம் முதலில் அர்ப்பணம் செய்வதும் தேங்காய் தான்.

அதுவே பின்னர் பிரசாதம் என்று எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
தேங்காய் மூன்று கண்களைக் கொண்டதால், முக்கண் முதல்வனான சிவபெருமானின் நினைவைத் தருகிறது.

அதன் மூலம், நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.

மரத்திலிருந்து பறிக்கப்படும் தேங்காயை உரித்து, கொஞ்சம் மேல்புறத்தில் நார் வைத்து (குடுமியுடன்), உள்ளிருக்கும் ஓட்டுடன் வைத்தால்
Read 6 tweets
Dec 10
#நரசிம்மர்_வழிபாடு

நரசிம்மர் - 40 தகவல்கள்.

1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். Image
3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று.

இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள்
அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
Read 23 tweets
Dec 10
#பேச்சு_குறைபாடு_நிவர்த்தி

*சரியாகப் பேச முடியாத குறையை நிவர்த்தி செய்யும் ஈசன் கோவில்*

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ திருபுவனேஸ்வரர் திருக்கோயில். Image
இது தெய்வீகத்துடன் தமிழர்தம் தீரத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டிடும் வகையில் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது.

தந்தைக்கு உபதேசித்த தகப்பன் சுவாமி அமைந்திருக்கும் சுவாமிமலையில் இருந்து மேற்கில் ஏழு கிலோ மீட்டரில் இத்தலம் அமைந்திருக்கிறது.
இத்தலத்தின் அருகாமையில் புள்ளபூதங்குடி, திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களும் அமைந்திருக்கின்றன.

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் மூன்றாம் ராஜராஜசோழனின் காலத்தைச் சேர்ந்த ஆலயம் இது.

இங்குள்ள கல்வெட்டுக்களில் இந்த ஆலயத்திலுள்ள சிவனுக்கு
Read 11 tweets
Dec 9
#தம்பதியர்_ஒற்றுமை

கணவன் மனைவி உறவு மேம்பட வழிபாடு

பலருக்கும் தங்கள் கணவன்மார்கள் தங்களை மதிப்பதில்லை,

தங்களிடம் உரிய அன்பைச் செலுத்துவதில்லை என்று நினைப்பதுண்டு.

சொல்லப்போனால் இந்த குறைபாடு தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தோன்றாத தம்பதிகளே இல்லை எனலாம். Image
நேத்ராபதி என்றால் தன் மனைவியை கண் மணிபோல் வைத்துக் காப்பாற்றும் இமை போன்ற கணவனையும் குறிப்பதால் இத்தகையோர் வெள்ளிக் கிழமைகளில் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுதல் நலம்.

செம்பியன்களரி திருத்தலத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் இருகரங்களிலும் இரு தாமரை மலர்களை ஏந்திய படி காட்சி அளிக்கிறாள்.
இது கணவனும் மனைவியும் இரு கண்களாய் இணைந்து ஒன்றுக்கொன்று இணையாய் மலர வேண்டியவர்களே என்ற ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்வதாகும்.

காமாக்ஷி என்றால் கணவனைத் தவிர வேறு ஒருவரையும் மனதினாலும் தீண்டாத நேத்ரங்களை உடையவள் என்ற பொருளையும் குறிப்பவளே காமாட்சி அம்மன்.
Read 5 tweets
Dec 9
#வேல்_அர்ச்சனை

வேலுக்கு அர்ச்சனை!
ஈரோடு மாவட்டம்,

வெள்ளக்கோவில் என்ற ஊரில் வீரகுமாரசுவாமி திருக்கோயில் உள்ளது.

இங்கு முருகப் பெருமான் வீரத் தோற்றத்தில் கன்னி குமரனாகக் காட்சி தருகிறார். Image
ஆகவே, பெண்கள் கோயிலுக்குள் செல்லும் வழக்கம் இல்லை.

மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்த கன்னியரையும், வீர குமாரரையும் வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது. Image
சூரபதுமன் மனம் திருந்தி மயில் வடிவ மலையாக அமர்ந்து தவம் செய்து அருள்பெற்ற தலம் மயிலம்; திண்டிவனம் அருகிலுள்ளது.

இங்கு கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்ட வேலும் மயிலும் இருக்கின்றன. Image
Read 4 tweets
Dec 9
#ஸ்ரீ_மங்களேஸ்வரர்

*மங்களேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்*

அருள்மிகு மங்களேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்

ஒருமுறை கைலாயத்தில் பார்வதி தேவி விளையாட்டாக சிவனின் கண்களைப் பொத்தினாள்.

அண்டசராசரம் அனைத்தும் இருளில் மூழ்கியது. Image
கோபம் கொண்ட சிவன்,   பார்வதி  நீ பூலோகத்தில் பிறப்பாயாக, என சாபமிட்டார்.

பார்வதி தேவி தன் தவறுக்கு வருந்தி இறைவனாகிய தங்களை அடைவது எப்படி என்று கேட்டாள்.

நீ தவம் மேற்கொண்டு மீண்டும் கயிலையை வந்தடைவாய்! என்று சிவன் அருள்புரிந்தார்.
பார்வதியும், பூலோகத்தில் காஞ்சிபுரம் கம்பா நதிக்கரைக்கு வந்தாள்.

மணலால் லிங்கம் அமைத்து பூஜை செய்தாள்.

ஒருநாள் ஆற்றில் வெள்ளம் வரவே சிவலிங்கத்தைக் காப்பாற்ற எண்ணி,  தன் இருகைகளாலும் அணைத்தாள்.

வெள்ளத்தில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்ற அன்புள்ளம் கொண்ட
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(