பெருமழை நேரங்களில் வெள்ள பாதிப்புகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் விடிய விடிய சாலையில் நின்று சரிசெய்யும் படங்களை காணும் போது,
எண்ணிய வேலைகளை எந்த நேரத்திலும், எத்தகைய உடையிலும் சாலையில் நின்று செயலாற்றும் இப்படிப்பட்ட வேலைச்சுதந்திரம் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் பெண்களுக்கு வாய்க்குமா என நான் பல நேரங்களில் எண்ணுவது உண்டு...
மனமிருந்தால் இங்கு அனைத்தும் சாத்தியமே என்று பதவியேற்ற நாள் தொட்டு #சென்னை_மேயர்#பிரியா_ராஜன் ஒவ்வொரு பெருமழையின் போதும் இரவு முழுவதும் சாலையில் நின்று நிவாரணப்பணிகளை
மேற்கொண்டு வருவது புதிய நம்பிக்கை கீற்றுகளை நெஞ்சத்தில் வார்த்தது.
மேயரை மேற்கோள் காட்டி அன்மையில் நிறைய பெண் கவுன்சிலர்கள் களத்திற்கு வந்திருப்பதும் மகிழ்வை தந்தது ...
இதன் அடுத்தக் கட்டமாக, உனக்கான தலைமுறையையே உருவாக்கித்தர முடிந்த எம்மால் ,
துரித நேரங்களில் மோட்டார் காரில்
நிற்க வேண்டுமளவுக்கு இடமிருக்கும் படியில் நின்று பயணிக்க முடியதா என்று ,
முதலமைச்சரின் காருக்கு முந்தைய காரில் ஆணுக்கு இணையென நின்று பயணித்திருக்கிறார் ...
இது குறித்த ஒப்பாரிக் கதறல்கள் நேற்றிலிருந்து ஊடகமனைத்திலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது ...
பிரதமர்களும் ,
முதல்வர்களும் பூனைப்படைகளும் , அரசு அதிகாரிகளும், மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும் பயணித்த படியில் பெண்ணொருவர் ஏன் பயணிக்கக் கூடாது?
பெண் என்பது தான் இங்கு பிரச்சனை எனில், உரக்கச் சொல்லுகிறேன் தயாராக இருங்கள் திராவிட மாடல் ஆட்சியில் பொறுப்பிலிருக்கும் பெண்கள் இன்னும் இன்னும்
இன்னும் நிறைய தளங்களில் தங்களை நிலைநிறுத்த வரக் காத்திருக்கிறார்கள் .
சுக்குத்தண்ணீர் குடித்து தாயாராங்குகள் கதறிட மேலும் கதறிட ...
தோழர்....
அனிச்சம் கனிமொழி.🙏🏼💐💐
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எனை மாற்றிய நிகழ்வு..
மணிகண்டனுக்கு 27 வயது..அவன் தாய் மாமன் மகள் சந்தியாவுடன் 5 ஆண்டு கால காதல்.. தைப்பூசம் அன்று முருகனுக்கு வேண்டுதல் நிறைவேற்ற மொட்டை போட்டிருந்தான். குழி விழுந்த கண்களுடன் சிங்கப்பூரின் "தேக்கா"வில் வீராசாமி ரோட்டில் உள்ள மினிமார்ட் கடையின் முன் நின்று
பத்திரிகை யை நீட்டினான்.!
அண்ணா அடுத்த வாரம் ஊருக்கு (கன்னியாகுமரி மாவட்டம்.
ராஜாக்கமங்கலம்)
போறேன்.இன்னும் 10 நாட்களில் வீடு கிரகப்பிரவேசமும் அன்றே என்னுடைய நிச்சயதார்த்தமும் என்றான்.ஒரு மாதம் கழித்து திருமணம் என்றான்
யார் இவன்?
என்ன தொழில் செய்கிறான் என்றால்? சிங்கப்பூரில் ஒரு
பெயின்ட் கம்பெனியில் டிரைவர் மற்றும் மேற்பார்வையாளர்.
ஆனால் மாலை 5 மணி யுடன் வேலை முடிந்துவிடும் அதன் பிறகுHDB(HOUSING BOARD) வீடுகளில் இரவு நேரங்களில் பெயின்ட் கான்ட்ராக்டர் எடுத்திருந்தான்.அதனால் மாலை வேலை முடிந்தவுடன் தன் வேலையாட்களை அழைத்து சென்று இரவு முழுவதும் பெயின்ட்
கேரளாவில் சமீபத்தில் துவங்கி நடந்து வரும் பன்னாட்டு திரைப்பட விழாவில் ஈரானை சேர்ந்த இயக்குனர் மஹ்னாஸ் முகம்மதி அவர்களுக்கு Spirit of Cinema எனும் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த விருதை அவர் சார்பாக கிரேக்க இயக்குனர் அதினா ரேச்சல் சங்காரி பெற்றுக் கொண்டிருக்கிறார்.
மஹ்னாஸ் இங்கே இல்லை. காரணம், கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக அங்கே நடந்து வரும் போராட்டங்களில் மஹ்னாசும் கலந்து கொண்டு ஆதரவு அளித்து வருகிறார் என்பதால் இந்தியா வருவதை ஈரானிய அரசு அனுமதிக்கவில்லை. அவர் வேறு இங்கே வந்து விழாவில் அது பற்றி ஏதாவது பேசி தங்களுக்கு சங்கடம் வேண்டாம் என்று
யோசித்திருக்கிறார்கள் போல.
ஆனால் மஹ்னாஸ் வேற லெவல். தன்னால் பயணிக்க முடியாது என்றால் என்ன? 'இந்த மயிருதானேடா உங்களுக்கு பிரச்சினை!' என்று தனது கூந்தலின் சிறிய பகுதியை வெட்டி அதை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த கிரேக்க இயக்குனர் அவர் சார்பாக விருதைப் பெறுகையில்
ஒரு மாநிலத்தில் மட்டும் கிடைத்த வெற்றி, எப்படி பிற தோல்விகளுக்கெல்லாம் ஈடாகுமெனப் புரியவில்லை. இன்று நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.கவுக்குக் கிடைத்த தோல்வியைப் பற்றி யாரும் பேசுவதில்லை. எந்த ஊடகமும் விவாதிப்பதில்லை.குறிப்பாக உத்தர பிரதேசத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க.
தோல்வியடைந்திருக்கிறது. இது பேசுபொருளாகவே இல்லை" குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களோடு சேர்ந்து பல மாநிலங்களில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. பிஹாரின் குர்ஹனி, சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர், ஒடிசாவின் பாதாம்பூர்,
ராஜஸ்தானின் சர்தார்ஷஹர், உத்தர பிரதேசத்தின் கடௌலி, ராம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் குர்ஹினியிலும் ராம்பூரிலும் மட்டுமே பா.ஜ.கவால் வெற்றிபெற முடிந்தது.உத்திரபிரதேசத்தின் மைன்புரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்
புதுதில்லி, டிச.6- ஜி 20 நாடுகளின் தலைமைப்பொறுப்பு இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு வந்திருப்பதையொட்டி அது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத் திற்கு, ஒன்றிய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத் தில்
கலந்துகொண்டு, மார்க்சிஸ்ட் யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதா வது: இந்தக் கூட்டமானது, ஜி.20 நாடுகளின் தலை மைப்பொறுப்பை இந்தியா ஏற்பது தொடர்பாகவும், இது தொடர்பான கூட்டங்களை 200 இடங்களில் நடத்த இருப்பது தொடர்பாகவும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை
கூறுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு என்பது சுழற்சி முறையில் ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் வந்துகொண்டிருக்கிறது. ஜி.20இல் அங்கம் பெற்றுள்ள அனைத்து நாடுகளுக்கும் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு கிடைத்திடும்.
1999இல் தெற்கு ஆசிய நாடுகளில்
மீனவர்களுக்கு எப்போதுமே எம்.ஜி.ஆர் என்றால் உயிர். அதிலும் படகோட்டி, மீனவ நண்பன் போன்ற திரைப்படங்களுக்கு பின் அவர் மீனவர்களுக்கு தங்களுள் ஒருவராகிப் போனார். கடற்புரத்தில் அவருக்குப் பெயர் "பப்பா". பப்பா என்றால் தாத்தா.
"ஏக்கி! பப்பா படம் போட்டிருக்கான்" என்றுதான் பெண்களும்
பேசுவார்கள். இன்று வரை மீனவர்களிடம் பெரும் ஓட்டு வங்கி அதிமுகவுக்கு உண்டு.
அவர் மீனவர்களுக்கு கொடுத்த முதல் அடி 1982 ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரத்தின் போது. ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். அரசு தரப்பில் இரண்டு, மூன்று என கணக்கு சொல்லப்பட்டது. மீனவ
கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப் பட்டு அவர்களுக்கான உணவு பொருட்கள் கிடைக்காமல் செய்யப் பட்டது. குடிநீர்க் கிணறுகளில் டீசலும், மனிதக் கழிவுகளும் கொட்டப் பட்டன. இவை அனைத்தும் காவல் துறை உதவியுடன் நடந்தது.