M.SivaRajan Profile picture
Dec 18 14 tweets 2 min read
#கனவு

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்

1 .கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும்.

2.   கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வருமேயானால்,

சில பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள் என்று அர்த்தம். Image
3.   ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் சாத்தப்பட்டது போல் கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

4.  கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற போகிறீர்கள் என்று அர்த்தம்.
5.  கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு வந்தால் நல்ல வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

6.   எந்த கடவுளை கனவில் கண்டாலும் பிரச்சனைகள் விலகும்.

எல்லோரையும் வெற்றி கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
7.   ஒரு கோவில் கோபுரத்தை கனவில் கண்டால், 
வாழ்க்கையில் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம்.

மேலும் உங்களின் பாவங்கள் நீங்கி விட்டது என்றும் பொருள்.

8.  கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது போல் கனவு வந்தால் சிலரால் மனகவலைகள் ஏற்படும் என்று பொருள்.
9.  கோவில் தெப்பத்தை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறு ம்.

10.  கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும் நல்லது, இது விரைவில் நன்மை பெற போவதன் அறிகுறியாகும்.

11.  விஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.
12.  விஷ்ணு கருடன் மீது வருவது போல கனவு கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.

13.  ஏசுவை கனவில் கண்டால் மனதில் அமைதி ஏற்படும்.

14.   ஏசுவை சிலுவையில் அறைவது போல கனவு வந்தால் துன்பம் வரும். ஆனால் அது விரைவில் மாறிவிடும்.
15.  காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

16.  கடவுள் விக்கிரகத்தை கனவில் கண்டால் அந்த கடவுளை தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.

17.   கோவில் மணியை கனவில் கண்டால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.
18.   கோவில் மணி அடிப்பது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டு.

19.   கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால் செய்யும் காரியங்கள் இடையூறுகள் ஏற்படும்.

20.   ஐய்யனார் தெய்வத்தை கனவில் கண்டால் சகல சௌகரியமும் கிட்டும்.
21.   நவகிரகங்களை கனவில் கண்டால் அருகில் உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இல்லையேல் தீமை ஏற்படும்.

22.   விநாயகரை கனவில் கண்டால் உங்களின் எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டது என்று பொருள்.
23.   யானை உங்களை துரத்துவது போல கனவு வந்தால் நீங்கள் விநாயகருக்கு நேர்த்தி கடன் வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

24.   யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் உங்களின் அனைத்து காரியமும் வெற்றியுடன் முடியும் என்று பொருள்.
25.    முருகனை கனவில் கண்டால் உங்களின் எல்லா விதமான தோஷமும் நீங்கிவிட்டது என்று பொருள். உங்களுக்கு நடப்பது எல்லாமே நன்மையாகவே நடக்கும்.

26.   அம்பாள்/அம்மனை கனவில் கண்டால் அவளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.
27.   அம்பாள்/அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது போல கனவு வந்தால் எந்த தீமையும் நம்மை அண்டாது என்று அர்த்தம்.

28.   திருநீறு பூசுவது போல கனவு கண்டால் நல்ல ஞானம் பிறக்கும்.
 
29. கோவிலை கனவில் கண்டால் நன்மையான பலன்கள் ஏற்படபோகிறது  என்று அர்த்தம்.
30. பாழடைந்த கோவிலை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.

31. கோவிலில் இறைவனை வழிபடுவதுபோல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் முதலில் சில இடர்பாடுகள் தோன்றும். ஆனால் தெய்வ அருளால் முடிவில் நன்மையாகவே  முடியும்.
32. கனவில், ஆலய மணியோசையை கேட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைச் பாக்கியம் உண்டாகும். பொருள் வரவும் பெருகும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 20
#வன_துர்க்கை

தினமும் காசிக்குப் போகும் கதிராமங்கலம் வன துர்க்கை!

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு.

இங்கு தான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள்,

ஸ்ரீ வன துர்கா பரமேஸ்வரி. Image
இந்த அம்பிகை அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம்.

அதற்குக் காரணம் ஒரு முனிவர்!

வேதங்களே விருட்சங்களாக வளர்ந்து நின்று இறைவழிபாடு செய்த புண்ணியம்பதியாம் வேதாரண்யம் திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார் அந்த முனிவர்.
அவர் செல்லும் வழியில், அசுரன் ஒருவன் மலை உருவில் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்று அவரை வழிமறித்தான்.

அவனை அழிக்கும் சக்தி வேண்டும் என்று துர்கா தேவியைப் பிரார்த்தித்து தவம் செய்தார் முனிவர்.

அவருடைய தவத்தால் மகிழ்ந்த துர்கை, முனிவருக்குக் காட்சி தந்தாள்.
Read 28 tweets
Dec 20
#வேல்_பந்தனம்

முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு.

இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.

மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க என்று சொன்னால் மனம் லேசாகி விடும். Image
வேலை வணங்குவதால் காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.

கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.

வியாபாரத்தில் லாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மேற்கண்ட கவிதை வடிவம் முருகப்பெருமானுக்குரிய வேல் பந்தனம் எனும் வகையாகும்.

இதில் கண்ட எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.

“வால வேல விகாரவா, வார காமனை நாடி வா, வாடி நாடிடுமோ சிவா, வாசி மோகன வேலவா’’

இந்த வேல் பந்தன மந்திரத்தை ஜபித்தால் எதிர்ப்புகள் நீங்கி,
Read 5 tweets
Dec 19
ராமானுஜருக்கு உகந்த திருப்பாவைப் பாடல்

திருப்பாவைப் பாசுரங்கள் ராமானுஜருக்கு மிகவும் உகந்தவை.

ஆண்டாள் தமது பாடலில் கூறிய 100 தடா அக்காரவடிசலை பெருமாளுக்குப் படைத்தவர் ராமானுஜர். Image
ராமானுஜர் பிச்சைக்குச் செல்லும் போது பாசுரங்களைப் பாடியவாறு செல்வாராம்.

இவ்வாறு  செல்லுகையில் ஒருநாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியவாறு சென்றிருக்கிறார்.

அப்போது அவர் பெரியநம்பி அவர்களது வீட்டு வாசலில் பிச்சை கேட்கிறார்.
பெரியநம்பியின் மகள் அத்துழாய், பிச்சை இடுவதற்காக தமது இல்லத்தின் வாசலுக்கு வருகிறார்.

அத்துழாயின் வருகையைக் கண்ட ராமானுஜர் அவள் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.
Read 9 tweets
Dec 19
#கோத்திரம்_தெரியாதவர்கள்

கோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்? காஞ்சி மகான்

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவர்.

மகா சுவாமிகளிடம் அபார பக்தி.

அவர் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறை, குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். Image
மின்னல் வேக தரிசனம் இல்லை.

ஓரிரு நாள்கள் தங்கி, அவரின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து விட்டுத்தான் போவார்.

”இந்தப் பையனுக்கு ஒன்பது வயசாயிடுத்து.

உபநயனம் நடத்தணும்” என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை.

”செய்யேன்…”
”பையனின் கோத்திரம் – சூத்திரம் தெரியல்லே…”

பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்.

”உன்னோட பையன்தானே?”

“இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார்.

இரண்டு மாதக் குழந்தையை விட்டுவிட்டுத் தாயாரும் போய்ச் சேர்ந்து விட்டாள்.
Read 7 tweets
Dec 19
#மார்கழி_மாதம்

அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி.

பீடு - பெருமை.

பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம்.

பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம். Image
மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது.

விடியற்காலையில் எழுகின்றனர்.

குளிரிலும் மன உறுதியுடன் நீராடுகின்றனர்.

பனி தலையில் படிய வீட்டையும், முற்றத்தையும் பெருக்கி தூய்மைப் படுத்துகின்றனர்.

சாணத்தால் முற்றத்தை மெழுகுகின்றனர்.
தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர்.

கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து.

அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர்.

விளக்கேற்றுகின்றனர்.

எல்லா முற்றங்களும், வீடுகளும் லட்சுமிகரமாகப் பொலிகின்றன.
Read 6 tweets
Dec 19
#சோளிங்கர்_நரசிம்மர் :*

1. 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது.

2. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். Image
3. இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.

4. பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர்.
ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி அளிக்கிறார்.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(