#எம்ஜிஆர்_ரகசியங்கள்
#பகுதி5_சாடிஸ்ட்MGR
25 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர். மிகுந்த கஷ்ட திசையில் இருந்தார்.
அக்காலத்தில் அவருக்கு உதவியவர் ஜூபிடர் பிக்சர்சில் மேனேஜராக இருந்த டி.எஸ். வெங்கடசாமி .
யு. ஆர். ஜீவரத்தினத்தின் கணவர்.
கண்ணதாசன் முதல் பாட்டெழுத சந்தர்ப்பம் கொடுத்தவர்
பாகவதர் நடித்த ‘அசோக் குமாரில்" ஓரு சிறு வேஷத்தில் நடித்திருந்த எம். ஜி. ஆரை ஜூபிடர் பிக்சர்சார் தங்கள் 'ராஜ குமாரி' படத்தில் கதாநாயகனாகப் போட்டார்கள்.
அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணநிதி அவர்கள்தான்.
அவரது வசனம் படத்தில் ஒரு சிறப்பான அம்சம்,
ஜூபிடர் பிக்சர்சில்
மேனேஜர் அறைக்கு நேராக இருந்த நாற்காலிகளில் தோழர்கள் எம்.ஜி.ஆரும், சக்கரபாணியும் உட்கார்ந்திருப்பார்கள்.
எம்.ஜி.ஆரை வெகு நேரம் காக்க வைக்காமல் சீக்கிரம் கூப்பிட்டு பணம் கொடுத்து அனுப்புவார் வெங்கடசாமி. அவர் மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்.
துணை நடிகனைக்கூட அவமானப்படுத்த
மாட்டார்.
எப்போதும் சிரித்த முகத்தோடு கொடிகட்டிப் பறந்த காலம் அது. ஜீவரத்தினத்தைத் திருமணம் செய்த பிறகு அவர் ஜூபிடரில் இருந்து விலகினார்.
திருமணத்திற்குப் பிறகு ஜீவரத்தினம் படங்களில் நடிக்கவில்லை.
சென்னைக்கு வந்த வெங்கடசாமி படங்கள் எடுத்துத் தோல்வி அடைந்து நஷ்டப்பட்டதால் கஷ்டப்பட்டார்.
முன்பு தான் எம். ஜி. ஆருக்கு
உதவியதை மனதில் வைத்துக்கொண்டு எம். ஜி. ஆரின் புகழ் உயர்ந்திருந்த நேரத்தில் அவரை வைத்துப் படம் எடுப்பதற்காக அணுகினார்.
வழக்கம்போல், எம். ஜி. ஆர். செயற்கையாகச் சிரித்து உற்சாகப்படுத்தினார்.
பிரமாதமான நம்பிக்கைகளையெல்லாம் உண்டாக்கினார்.
அதை நம்பி கடன் வாங்கி படத்தை ஆரம்பித்தார் வெங்கடசாமி.
நாலாயிரம் அடி படம் வளர்ந்தது. பிறகு வெங்கடசாமியையும் தெருத் திண்ணையில்
உட்கார விட்டார், எம்.ஜி.ஆர்.
செல்வாக்கோடும் சுயமரியாதையோடும் வாழ்ந்த வெங்கடசாமி, கடன்பட்டு எம். ஜி.ஆர். வீட்டுப் படிக்கட்டில் பிச்சைக்காரனைப்போல் நின்றார்
கஷ்டப்பட்ட வெங்கடசாமியை வேலைக்கு வைத்துக் கொள்வதாகச் சொல்லி சத்தியா ஸ்டுடியோவில் சேர்த்துக்கொண்டார்.
எந்த வெங்கடசாமி முன் அவர் கைகட்டி நின்றாரோ அவரையே தன் முன்னால் கைகட்டி நிற்க வைத்து சுய திருப்தி அடைந்தார் எம்ஜிஆர்
வெங்கடசாமியின் மனநோய் உடல் நோயாக மாறிற்று.
அந்த நேரத்தில் ஒரு தவறும் செய்யாத அவரை "தொழிலாளர்களோடு சேர்ந்து கொண்டார்” என்று குற்றஞ்சாட்டி காலணக்கூடக் கொடுக்காமல் வெளியேற்றினார் எம். ஜி. ஆர்.
நோய் முற்றி, வேங்கடசாமி மாரடைப்பால் இறந்தார்
எம்.ஜி.ஆர்.காய்ந்து கிடந்த போது தண்ணீர் ஊற்றிய உத்தமனைக் காப்பாற்றி இருக்கமுடியும்.
வளைந்து கொடுக்காத ஜீவரத்தினத்தை
பழிவாங்கும் வெறியில் வேங்கடசாமி மரணத்திற்குக் காரண மானார்.
நாடகங்ளில் நடித்து வயது வந்த இரு பெண்களை காப்பாற்றி வந்த ஜீவரத்தினத்திற்கு
கழக மேடைகளில் கழகப் பாடல்கள் பாடச் சொல்லி உதவி செய்து அந்த குடும்பத்தை வாழ வைத்தவர் கலைஞர் கருணாநிதி.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #எம்ஜிஆர்_ரகசியங்கள்

#எம்ஜிஆர்_ரகசியங்கள் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tamilselvam2k3

Dec 31
#எம்ஜிஆர்_ரகசியங்கள்
#பகுதி6_அடியாள்படை
அந்தக் காலத்தில் ஒரு படத்துக்கு 7 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரை செலவாகும். அவ்வளவு பெரும் பணம் யாரிடமும் இருந்ததில்லை.
கடன் பட்டு கஷ்டப்பட்டாவது படத்தை முடித்து ஒன்றிரண்டாவது மிஞ்சதா என்று எதிர்பார்க்கும் பாவப்பட்ட ஜென்மங்கள்தான் Image
பட தயாரிப்பாளர்கள்.
அவர்கள் எம்ஜியாரை வைத்து படம் எடுக்க தொடங்கினால் வந்தது ஆபத்து.

அவர்களுக்குள் எதாவது இலாபம் வருவது போல் தோன்றினால் அவர்களின்
கழுத்தை அறுத்து இரத்தம் குடிக்க எம்ஜியார் தயங்க மாட்டார்.
சாண்டோ சின்னப்பா தேவருக்கு மட்டும்தான் அவர் பயப்படுவார். தாய்க்குப் பின் Image
தாரம் பட மோதலால் எம்ஜியார் எதாவது இடக்கு செய்தால் அவர் தூக்கி எறிந்து விடுவார். அவரை தவிர வேறு எவரையும் பேய் பிடித்து ஆட்டுவது போல் ஆட்டுவார்.

பர்மா இந்தோ சீனா போன்ற நாடுகளில் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று தெரிந்த சிலர் தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு, Image
Read 10 tweets
Dec 28
#எம்ஜிஆர்_ரகசியங்கள்
#பகுதி4_அடிமைகள்
அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். கட்சியில் சேர்ந்தால் அன்று உங்களைக் கட்டித் தழுவி வரவேற்பார். செயற்கை சிரிப்புச் சிரிப்பார்.
பிறகு தெருத்திண்ணையில் உட்காரவைத்துவிடுவார்.
உங்கள் கடந்தகால சேவை, பெருமை, சுயமரி யாதை எதையும் கணக்கில் எடுக்கமாட்டார்
காமராஜரைப் போல கலைஞரை போல அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்தவர் அல்ல. அந்தப் பாரம்பரியம் உள்ளவர்களிடம்தான் பெருந்தன்மை இருக்கும்.
இவர் மேக்-அப் ரூமிலிருந்து மேடைக்கு ஓடிவந்தவர்.
ஸ்டுடியோவிலோ, ஆபீசிலோ பார்க்கப் போகிறவர்கள் வாயும் வயிறும் காய வெளித் திண்ணையிலேயே காத்துக் கிடந்தார்கள்
பி.டி.சரஸ்வதி ஒருவர்தான் நினைத்த நேரமெல்லாம் அவரைப் பார்க்க முடிந்தது
யாராவது புடவையை கட்டிக் கொண்டு போனால் உடனே பார்க்கலாம்
சரியான நேரத்தில் அவருக்குக் கைகொடுத்த மதியழகனையே தெருவில் விட்டார்.
டிரைவரை அனுப்பி,
'என் எதிரில் மதியழகன் சிகரெட் பிடிக்கக்கூடாது என சொல்லு' என்றவர்
Read 10 tweets
Dec 27
#எம்ஜிஆர்_ரகசியங்கள்
#பகுதி3
சுபாவத்திலேயே எம். ஜி. ஆருக்கு ஆணவம் உண்டு. அவரது ஒரு படம் வெற்றிகரமாக ஓடிவிட்டால் மற்ற தயாரிப்பாளர்களைச் சித்ரவதை செய்துவிடுவார்.
யாரையும் அலட்சியமாகவே பார்ப்பார்.
அதே நேரத்தில்
தான் ஒரு திறமையான நடிகன் அல்ல என்பதை அவரே உணர்ந்திருக்கிறார்.
மற்ற நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது கொட்டகைக்கு ஆள் ஆனுப்பி கேலி செய்வது,போஸ்டர்கள் மீது சாணி வீசச்செய்வது
தன் படங்களுக்கு டிக்கெட் வாங்கித் தந்து ரசிகர்களைக் கை தட்டச் செய்வார். உருக்கமான 'சீன்' எழுதினால் தன்னால் நடிக்க முடியாது என்று கதாசிரியர்களைக் கேளாமலேயே மாற்றிவிடுவார்.
நீங்கள் எழுதியிருப்பதை ஜனங்கள் விரும்பமாட்டார்கள்” என்பார். படத்தில் தன்னைப் புகழ்ந்து பாடல்கள் எழுத வேண்டும் என்பார்
அத்தகைய பாடல்களுக்குத் தான் முதலிடம் தருவார்.
ஜனங்களை எதிலே மயங்க வைப்பது, எப்படி நீண்டநாள் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பது என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.
Read 7 tweets
Dec 26
#எம்ஜிஆர்_ரகசியங்கள்
பகுதி 2
இரண்டொரு வெற்றிகளை குரூட்டுத்தனமாகப் பெற்றதிலிருந்து எம். ஜி. ஆரின் ஆணவம் அளவு மீறிப் போய் விட்டது.
தமிழ்ப் பெண்கள் கேலி செய்தார்.
கலைஞர் காலம் முடிந்துவிட்டது என்றார்.
பிற மொழிகளில் இவரை ஒரு துணை நடிகராகக்கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள். Image
இந்த நாட்டில் தமிழர்கள் மட்டுமே அப்பாவிகளாக இருப்பதால் எம். ஜி ஆரின் ஆணவம் எல்லை மீறிப்போய் விட்டது.
மாபெரும் தலைவர்களின் அந்தரங்க சுத்தியைக்கூட அறியாதவர்கள், அவர்களை ஒதுக்கிவிட்டு எம். ஜி. ஆரை ஆதரிப்பதால் வந்த வினை, பெரும் தமிழ்த் தலைவர்களுக்கு அவமானகரமாக முடிந்திருக்கிறது. Image
எம்ஜிஆர். கணக்கில் வாங்குவதுபோல் ஆறு மடங்கு பணம் கறுப்பில் வாங்கினார்.
கறுப்புப் பணங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரே மேடையில் பேசினார்.
'மாமன்களும் 'மாப்பிள்ளை' களும் கேரளாவில் இருந்து வந்த 'ஆயுதமும்'தங்களது கறுப்புப் பணங்களை அவரிடம் கொடுத்து, விளையாடச் சொல்லியிருக்கின்றனர் Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(