#நவ_சக்திகள்

நவ சக்திகள் என்பவர்கள் யார் யார்?

சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும்.

சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரினங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே.

பராசக்தியின் வடிவங்கள் பலப்பல. Image
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாகப் பராசக்தி விளங்குகிறாள்.

அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.

சக்தியை வழிபடும் சாக்த மதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் முதன்மையானது
ஒன்பது இரவுகள் உபவாசம் இருந்து அழிபடும் நவராத்திரி விரதமாகும்.

நவசக்திகளின் பெயர்கள்:

மனோன்மணி:

பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டுப் பக்குவமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன் சேர்க்கும் வல்லமை கொண்டவள்.
சர்வபூதமணி:

உலக உயிர்களில் கலந்து நின்று உயிர்களின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள்.

பலப்பிரதமணி:

சூரியனிடம் கலந்து நின்று தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து ஆக்கம் தரும் வல்லமை கொண்டவள்.
பலவிகரணி:

சந்திரனில் கலந்து நின்றுஅமுதத்தைப்பொழிந்து தாவரக்கூட்டங்கள் உயிர் பெற்றுத் தழைத்தோங்கத் துணை நிற்கும் ஆற்றல் கொண்டவள்.

காளி:

காற்றில் கலந்து நின்றுஉயிர்களுக்குப்பிராண வாயுவை அளித்து உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.
ரவுத்திரி:

நெருப்பில் கலந்து நின்று நெருப்பிற்கு வெம்மையை வழங்கி யாவற்றையும் அழிக்கும் வல்லமை கொண்டவள்.

சேட்டை:

நீரினில் கலந்துஅதற்குத்திரவ நிலையையும், சுவையையும் வழங்கி உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.
வாமை:

மண்ணில் கலந்து நின்று ஐம்பூதங்களின் செயல்களையும் ஒருங்கே செய்து அருள் பாலிக்கும் வல்லமை கொண்டவள்.

#நவ_சக்திகள்

#சாக்தம்

#அம்பாள்வழிபாடு

#ஓம்ஐம்க்லீம்சௌம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jan 1
சைவ உலகில் இரு பேரரசா்கள் :

சைவ உலகில் இரண்டு இராஜாக்கள் உள்ளனா்.

ஒருவா் நடராஜா, மற்றொருவா் தியாகராஜா.

நடராஜாவே ஊன நடனம் ஞான நடனம் என்னும் இரு நடனமும் செய்தபோதிலும்,

ஞான நடனத்தைப் புலப்படுத்தவே தியாகராஜாவாகத் திருவாரூாில் எழுந்தருளினாா். ImageImage
அவா் அமரா் நாட்டிலிருந்த ஐஸ்வா்யங்களை எல்லாம் உதறி ஆரூா் நுண் மணலையே இடமாகக் கொண்டு தியாகராஜாவாகத் திருவாரூாில் வீற்றிருக்கிறாா்.

நடராஜப்பெருமான் செய்யும் நடனம் ஆனந்த நடனம்.

தியாகராஜா செய்யும் நடனம் அசபா நடனம்.

இது மூச்சுக் காற்றால் நிகழ்வது.
நடராஜா் நின்று ஆடுகிறாா்.
இவா் இருந்து ஆடுகிறாா்.

நடராஜா் நடனம் போக நடனம் போகம் என்பது இன்ப துன்ப அனுபவம்.

தியாகராஜா் நடனம் யோக நடனம்.

யோகம் என்பது துன்பக் கலப்பில்லா இன்ப அனுபவம்.

அவா் நடனம் பிறவியை தொடுவது.

இவா் நடனம் பிறவியை விடுவது.
Read 9 tweets
Jan 1
#வைகுண்ட_ஏகாதசி

சகல சௌபாக்கியங்களையும் தரும் வைகுண்ட ஏகாதசி...

விரதம் இருப்பது எப்படி?

வைகுண்ட ஏகாதசி
விரத முறை...!!

மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி.

மார்கழி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசிக்கு முக்தி ஏகாதசி,
முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு.

வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி (திங்கட்க்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி வருகிறது.
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பது எப்படி?

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
Read 10 tweets
Dec 31, 2022
#திருத்தணி_படி_பூஜை_திருவிழா

இன்று திருத்தணி படி பூஜை திருவிழா :

ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலம், அப்போது ஒவ்வோர் ஆண்டின் தொடக்க நாளிலும் ஆங்கிலேய அதிகாரிகளைச் சென்று பார்த்து வணங்குவது  ஊழியர்களின் வழக்கமாக இருந்தது. Image
புத்தாண்டில் ஒரு வெள்ளைக்கார துரையைப் பார்த்து வணங்குவதா என்று மனம் வருந்திய  வள்ளிமலை ஸ்வாமிகளால்  தொடங்கப்பட்ட வழிபாடுதான் திருத்தணிகை திருப்படி உற்சவ விழா.

ஆங்கிலப்புத்தாண்டில் துரைகளுக்கெல்லாம் துரையான முருகப் பெருமானை வேண்டி
அங்கு அமைந்திருக்கும் 365 படிகளுக்கும் பூஜை செய்து ஒவ்வொரு படியிலும் திருப்புகழை பாராயணம் செய்து புது விழாவினை 1917-ம் ஆண்டு முதல் தொடங்கினார்கள்.

இதனால் திருத்தணி முருகப்பெருமானுக்கு 'தணிகை துரை' என்ற பெயரும் உருவானது.
Read 11 tweets
Dec 31, 2022
#திருநாம_விளக்கம்

*பகவான் திருநாமங்களின் பொருள்*

வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை.

*அத்திவ்ய நாமங்களும்* *அவற்றின்* *விளக்கங்களும்* : Image
1. *கேசவ* – துன்பத்தைத் தீர்ப்பவன்

2. *நாராயண*– உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்

3. *மாதவ* – திருமகள் மணாளனாக இருப்பவன்

4. *கோவிந்த* – பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்

5. *விஷ்ணு*– அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6. *மதுசூதனன்* – புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) *மது* என்னும் *அரக்கனை* *வென்றவன்*

7. *த்ரிவிக்ரம்*– மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்

8. *வாமன* – குள்ளமான உருவம் உடையவன்

9. *ஸ்ரீதர* – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்

10. *ஹ்ருஷிகேச* – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
Read 4 tweets
Dec 30, 2022
#அத்ரிமலை

*சித்தர்கள் போற்றும் அத்ரிமலை திருக்கோயில்*

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிபாரத்தில் அமைந்துள்ளது அத்திரி தபோவனம். இத்தலத்திற்கு சென்று வந்தால் கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகின்றது. Image
வடக்கே உள்ள கேதார்நாத் திருத்தலம் போன்று தெற்கே மகிமை பெற்று திகழ்கின்றது அத்ரிநாத் எனப்படும் அத்ரிமலை கோயில்.

அகத்தியர் பொதிகை மலைக்கு வருவதற்கு முன்பே இந்த பகுதியில் அத்ரி மகரிஷி வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.
இந்த மலைக்கு வந்து வழிபட்டால் அத்ரி, அகத்தியர், கோரக்கர் போன்ற தவசீலர்களின் திருவருளை பெறுவதுடன் சிவனாரின் அனுகிரகத்தையும் பரிபூரணமாக பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Read 7 tweets
Dec 26, 2022
#சிவ_பூஜை

*சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள் !*

1. சிவலிங்கத்தை பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும் .

சித்த ரிஷிகளாகவே மாறுகிறான்

2. சிவலிங்க பூஜை செய்பவன் முடிவில் சிவமாகவே ஆகிவிடுகிறான்.
3. சிவலிங்கத்தின் பிம்ப தரிசனம் கொலை செய்தவனின் பாபத்தையும் கூட போக்கும்.

4. சிவலிங்கத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள் கழன்று ஓடும் .
5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு.

6.சிவபூஜை செய்பவனுக்கு
எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் , வேள்விகள் செய்து இப்பூஜையினை செய்பவர்கள்
சிவலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(