நான் என் வாழ்வில் பார்த்து பிரமித்த மனிதர் பெரியார் அடுத்து சேகுவேரா
மருத்துவம் படித்தவர் சேகுவேரா மக்களுக்கு சேவை செய்ய என்று ஒரு மோட்டர் வண்டியை எடுத்து கொண்டு தென் அமெரிக்கா முழுவதும் சுற்ற கிளம்பி விடுகிறார் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றி முடித்து விட்டு ஓரிடத்தில் 1/7
அமர்ந்து யோசிக்கிறார் இந்த அடிமை மக்களுக்கு நாம் எதோ மருத்துவ சேவை மட்டும் செய்ய கூடாது வேறு ஒரு சேவை தான் செய்து முன்னேற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து ஆயுத வழி புரட்சியை தேர்ந்தெடுக்கிறார் இந்த பக்கம் பெரியார் ஈரோட்டில் செல்வந்தரின் மகனாக பிறந்து செல்வ செழிப்பை 2/7
மட்டும் நம்பி வாழாமல் இந்த சமூகத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் மத கோட்பாடுகளை சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் கேள்வி கேட்டு அதற்கு எதிராக சொந்த வீட்டில் கலகம் செய்து தந்தையால் அடித்து அவமானபட்டு பின் காசி செல்கிறார் காசியில் பிச்சை எடுத்து உண்டு உறங்கி அங்கிருந்த மத கொடுமைகளை 3/7
கண்டு ஈரோடு திரும்பி மீண்டும் பல வேலைகளை செய்து மண்டி அதிபராக ஈரோடு கோவில் அறங்காவலராக இருந்து காங்கிரஸ் சுயமரியாதை இயக்கம் நீதிகட்சி திராவிடர்கழகம் என்று மக்கள் மக்கள் என்றே பணி புரிந்தார், சேவிடம் துணிவு இருந்தது பெரியாரிடம் அதே துணிவு துளி குறையாமல் இருந்தது சேவிடம் பதவி 4/7
தேடி வந்தது பெரியாருக்கும் பதவி தேடி வந்தது ஆனால் இருவரும் மறுத்தனர் சே கீயூபாவின் விடுதலைக்கு போராடிய அர்ஜெண்டினா நாட்டில் பிறந்தவர் ஆனால் கீயூபர்கள் சே’வை தங்களில் ஒருவனாக மண்ணின் மகனாக தான் நினைக்கிறார்கள் அதே போல தான் பெரியாரும், ஆனால் பெரியாரை பலர் இன்று தெலுங்கன் 5/7
என்கிறார்கள் ஆனால் நாம் பெரியாரை நம்மில் ஒருவராக பார்க்கிறோம் பெரியார் தனி தமிழ்நாடு கேட்டார் சே கீயூபாவை விடுதலை செய்தார் சே கையில் எடுத்தது ஆயுதப்புரட்சி பெரியார் கையில் எடுத்தது அரசியல் புரட்சி மக்கள் புரட்சி அது அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படுகிறது தமிழ்நாடு விடுதலை தான் 6/7
தீர்வு என்பது அவர் இறுதி முடிவு பெரியார் என்ற மணிதனை ஒர் பெட்டிக்குள் சுருக்க முடியாது அதே போல தான் சேகுவேராவும் உலக புரட்சிகளின் புரட்சி நாயகன் சே பெரியார் தமிழகத்தில் இந்த 140 ஆண்டுகளாக மறுக்க முடியாத ஒரு சமூக நாயகன் பெரியார் 🖤

7/7

#பெரியார் #சேகுவேரா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கபிலன்

கபிலன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @_kabilans

Jan 1
நமக்கு பதவி வந்தால் போதாது நம்மில் பலர் இலட்சாதிபதியானால் போதாது நமக்கு இன்றைக்கு தேவை எல்லாம் நமது மானம் மீட்கப்பட்டாக வேண்டும் நமது இழிவை ஒழித்தாக வேண்டும்

இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப் போகிறேன் எத்தனை நாளைக்கு கத்தப்போகிறேன் நாளைக்கே பொசுக் கென்று போய்விடுகிறேன் 1/4
என வைத்து கொள்ளுங்கள் உங்கள் கெதி என்ன என் இடத்தில் உட்கார எவன் வரப்போகிறான் வர விரும்புகிறவன் இருந்தாலும் எவனை இந்த அளவுக்கு மதிக்க போகிறீர்கள்

மக்களிடம் மதிப்பு பெறுவது என்பது சின்ன காரியமா அந்த மதிப்பை பெற எவ்வளவு பட்டாக வேண்டும் ஆகவே தோழர்களே நாளை எனக்கு ஏதாவது என்றால் 2/4
நம் கதி அவமானகரமானதாக போய் விடும் தலை எடுக்க முடியாது எனவே நீங்கள் எல்லாம் நமது இழிவை ஒழிக்கும் காரியத்தில் துணிந்தாக வேண்டும் எனக்காக என் தயவுக்காக நீங்கள் போராட முன்வர வேண்டாம் உங்களுக்காக உங்கள் பிள்ளை குட்டிகளுக்காக உங்கள் சந்ததிக்காக முன் வாருங்கள்

விடுதலை 12.11.1973

3/4
Read 4 tweets
Dec 31, 2022
காங்கிரசை ஒழிப்பேன்‌ என்று‌ சூளுரைத்து காங்கிரஸ்‌ மாநாட்டிலிருந்து வெளியேறிய பெரியார்‌ தான் காங்கிரஸ்‌ கட்சியை சேர்ந்த காமராஜரை இங்கு‌ கண்ணை மூடிக்‌ கொண்டு ஆதரித்தார்‌ அவர் தேர்தல் பரப்புரையில் காமராஜரை ஆதரித்து பச்சை தமிழர்‌ காமராஜருக்கு வாக்கு செலுத்துங்க என்றார் 1/4 Image
இப்போது பலருக்கும் கேள்வி எழும் காமராஜரை ஏன் ஆதரித்தீர்கள் ? ஏன் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தீர்கள் ? என்று ஆகவே அதற்கும் நானே பதில் சொல்கிறேன் என்று கூறி விளக்கம் ஒன்றையும் கூறுகிறார் பெரியார் 2/4
நான்‌ மாறி மாறி முடிவு எடுத்திருக்கலாம்‌ வெவ்வேறு கட்சிகளை கூட ஆதரித்திருக்கலாம் அது எல்லாமே மிகுதியான மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு நன்மை செய்வதற்கு மட்டுமே அது இருந்திருக்குமே யல்லாது என்னுடைய சுய நலத்திற்கல்ல மக்கள் நலத்திற்கு மட்டுமே 3/4
Read 4 tweets
Dec 30, 2022
1978ஆம் ஆண்டு கக்கன் ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகிறார் மருத்துவமனை விண்ணப்பத்தில் அவர் வருமானத்தை பூர்த்தி செய்யும் போது மாதம் ரூ350 என்று குறித்து அவரை Cகிளாசில் விடுகிறார்கள் ஆனால் கக்கன் அதை மறுத்து எனது பென்சன் பணம் ரூ280 மட்டும் தான் அதை மட்டும்

1/4 Image
போட சொல்கிறார் பிரச்னை டீனிடம் செல்கிறது அவர் வந்து அரசு விதிமுறைகளை விளக்குகிறார் எதுவும் எடுபடவில்லை இறுதியில் பொதுவார்டில் ஒரு பகுதியை திரைகளால் மறைத்து அறை உருவாக்கி கொடுக்கிறார்கள்
மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக எம்ஜிஆர் வருகிறார் கக்கன் மருத்துவமனையில் இருப்பதை
அறிந்து

2/4
பார்க்கிறார் தன் செலவில் அவரை சிறப்பு வார்டில் சேர்க்க அனுமதிக்க சொல்கிறார் அதோடு விடவில்லை ஒரு பாவமும் அறியாத அந்த டீனை உடனே இடமாறுதல் செய்தார் ஆர்எம்ஓவை சஸ்பெண்டு செய்தார் இது நேர்மையான கக்கன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கதை, பின் 2 ஆண்டுக்கு பிறகு கோமாவிலே சென்னை

3/4
Read 4 tweets
Dec 24, 2022
1940 காலம் ஒருமுறை பெரம்பலூர் அருகில் உள்ள ஒரு சிற்றூருக்கு பெரியார் கி.ஆ.பெ விசுவ நாதமும் ஒரு கூட்டத்திற்காக சென்றார் ஊரின் எல்லையில் மக்கள் எல்லோரும் கூடி  நின்றனர் வரவேற்பதற்காக என்று கருதிவிட வேண்டாம் கைகளில் கம்பு, தடியோடு அவர்கள் நின்றனர் பார்த்தவுடனேயே 1/7
பெரியாருக்கு புரிந்து விட்டது
எங்கள் ஊருக்கு உள்ளே நுழையக்கூடாது அன்று அவர்கள் சத்தமிட்டனர் சரி, திரும்பி விடலாம் என்றார் கி.ஆ.பெ. ஆனால் பெரியார் கேட்கவில்லை காரை வீட்டுக் கீழே இறங்கினார் அந்த மக்களின் குரல் மேலும் பெரிதாயிற்று அவர்களை  பார்த்து பெரியார் 2/7
உங்களை மீறி உங்கள் விருப்பத்திற்கு எதிராக உங்கள் ஊருக்குள் நாங்கள் ஒருநாளும் வரமாட்டோம்" என்றார் சத்தம் கொஞ்சம் தணிந்தது ஆனாலும் ஏன் எங்களை உள்ளே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டு போகிறோம் என்றார் 3/7
Read 7 tweets
Dec 9, 2022
பெரியாருக்கு எப்படி பெரியார் என்று பெயர் கொடுக்கலாம் ?? என்று குமுறுகிறார்கள் பாவம்

என்னை நீங்கள் தோழர்.இராமசாமி என்று சொன்னால் போதும் என்று கூறியவர் அவர்

அவருக்கு பெண்கள் மாநாட்டில் கொடுத்த பெயர்தான் பெரியார் அதை உன்னால் சகிக்க முடியவில்லை ? அதன் பெயர் தான் வெறுப்பு 1/6
காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்க வேண்டும் என்று பெண்கள் முடிவு செய்கிறார்கள் 1938, நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, சென்னை, ஒற்றைவாடை நாடக கொட்டகையில் 2/6
தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு ஒன்றைக் கூட்டி, “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரை 3/6
Read 6 tweets
Dec 9, 2022
வீட்டில் நீ ஆங்கிலத்தில் பேசு வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசு என சொன்ன பெரியார் துரோகியா?

“மும்மொழி திட்டம் மூளையை குழப்பும் தன்மனம் விரும்பின் தனித்தனி பயில்க தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தென கற்க ஆர்வம் பெறுகவே”

பெருஞ்சித்திரனார் கோடாரி காம்புகள் கவிதைகள் 1/5
சரி விடுங்க இவர்கள் கொண்டாடும் ம.பொ.சி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்

தமிழ் நாட்டில் பிற மொழியாளர்கள் நூலில் நாம் பிராமணர்கள் போல் ஆங்கிலம் கற்கவேண்டும்

அதாவது பிராமணர்களை போல தமிழர்கள் அனைவரும் அனைத்து பொறுப்புகளிலும் வர வேண்டும்

ம.பொ.சியும் ஆங்கிலம் கற்க சொல்கிறார்

2/5
இதை தானே பெரியார் சொன்னார் வீட்டில் நீ ஆங்கிலத்தில் பேசு உன் வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசு “பார்ப்பான் போல நாமளும் ஆங்கிலத்தால் உயரனும்” என்று ஆக ம.பொ.சி க்கு முன்பே அதை உணர்ந்து கூறிய பெரியார் தமிழர் விரோதி ம.பொ.சி நல்லவர் என்னடா உங்க நேர்மை இப்படி இருக்கிறது

அடுத்து

3/5
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(