தமிழ் சொற்களே மிக அரிதாகக் காணப்படும் தற்போதைய தமிழ் திரைப்படப் பாடல்களிலிருந்து பொன்னியின் செல்வன் - 1'இல் இடம் பெற்றுள்ள தேவராளன் ஆட்டம் எவ்வாறு தனித்தோங்கி நின்று இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த பாடலாக உள்ளது என்பதை விரிவாகக் காண்போம்

#PonniyinSelvan1 #ARRahman #ManiRatnam
1/n
வாசகர்களும், திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இப்பாடல் நடக்கும் இடம் - கடம்பூர் சம்புவராயர் மாளிகை, சூழல் - சதி ஆலோசனைக்காகப் பெரிய பழுவேட்டரையர், சோழ சிற்றரசர்கள், அமைச்சர்கள், முதன் மந்திரிகள் அனைவரும் கடம்பூர் மாளிகையில்

2/n

🥁#DevaralanAattam🥁
சுந்தர சோழருக்கு அடுத்த படியாக மதுராந்தகருக்குத்தான் மணிமுடி சூட்டப் பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கக் கூடிய போது ...

3/n

#இளங்கோகிருஷ்ணன் @ilangokrishnan #IlangoKrishnan 🖊️
#thalaivARR @arrahman @MadrasTalkies_ #ManiRatnam #ARRahman @LycaProductions @hasinimani @rparthiepan
🥁 பாடல் தொடங்குகிறது 🥁

டம் டம் டம் டம் டமரே = பறை இசை எழுப்பும் இசை சத்தம்

பாடலின் தொடக்கத்தில் வரும் "செக் செக் செக் செக் செக் செகவென " என்பவை இசை சொற்கள் என்று நாம் எடுத்துக் கொண்டாலும் இவை திருப்புகழில் அமைந்துள்ள அருணகிரிநாதர் இயற்றிய "முத்தைத்தரு பத்தித் திருநகை"

4/n
எனும் பாடலில் இடம் பெரும் "குக்குக்குகு குக்குக் குகுகுகு" என்று கூகை (ஆந்தை) எழுப்பும் சத்தத்திலிருந்து ஈர்க்கப்பட்டு இங்குப் போரின் போது எதிரிகளை வாளால் வெட்டி வீழ்த்தும் போது ஏற்படும் சத்தம் என்றும் பொருள் படும்

5/n

#YogiSekar 🎙️ @RakshitaaSuresh @bagapath
அடுத்து வரும் "பட் பட் பட் பட் படவென" என்பது போரில் எதிரி
சேனைகள் (யானை, குதிரை, காலாட்) எவ்வாறு விரைந்து வந்து நாட்டை கைப்பற்றும் எண்ணத்தோடு எல்லையை சுற்றி எழுப்பும் சத்தமும் அதனைக் கேட்கும் சோழ வீரர்களின் இதயத்துடிப்பையும் அவர்கள் விரைந்து செய்யும் எதிர் வினையை குறிக்கும்

6/n
மட்பற்ற கெட்டவுணரை - இங்கு மட்பற்ற என்பது மண்+பற்ற (நிலம்/எல்லை/ராஜியம்) என்பதைக் குறிக்கும் பற்ற என்பது கைப்பற்றுதல்

கெட்டவுணரை - இங்கு கெட்ட/கெடு என்பது நமக்கு(சோழ) தேசத்திற்கு ஆகாத அந்த செய்தியைக் கேட்டு உணர்ந்த(உணரை) மறு கணமே ... வாட்பெற்று கெட்டழிக்கவே
.(தொடரும்).

7/n
மேலே நாம் பார்த்த திருப்புகழிலிருந்து ஈர்க்கப்பட்ட இசை சொற்கள் போல் "மட்பற்ற கெட்டவுணரை" இதுவும் அதே "முத்தைத் தரு" பாடலிலிருந்து ஈர்க்கப்பட்டவை அங்கே முருகன் அசுரர்களுடன் போர் செய்யும் போது
"நட்பற் றவுணரை" நட்பு பாராட்ட கரம் நீட்டிய முருகனின் எண்ணத்தைத் தவிர்த்த

8/n
விரோத மனப்பான்மையைக் கொண்ட அசுரர்களை கொன்று பலி கொடுத்து அசுரர் குலத்தை தூள் தூளாக்கினார் முருகன் என்றிருக்கும் அதனில் இருந்து ஈர்க்கப்பட்டு இங்கு பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் "மட்பற்ற கெட்டவுணரை" என்று எழுதியிருப்பார்.

9/n #thalaivARR @arrahman #ARRahman #ManiRatnam 🛐
வாட்பெற்று கெட்டழிக்கவே - இங்கு வாட்பெற்று என்பது வாள் + பெற்று -> வாளினை எடுத்து
எதிரிகள் சோழ தேசத்தின் எல்லையை அடைந்தனர் என்ற செய்தி கேட்ட மறுகணமே "கெட்டழிக்கவே" - அழித்து விட வேண்டும் என்பதே பொருள்.

10/n

@ilangokrishnan 🛐
#IlangoKrishnan 🖊️
சூழானது யுத்தம் - எட்டுத்திக்கும் யுத்தம்(போர்/எதிரிகள்) சூழ்ந்து விட்டனர்

சூடானது ரத்தம் - அதைக் கேட்டு வீரர்களின் ரத்தம் சூடேற துவங்கிவிட்டது

போராடுதல் சித்தம் - போர் செய்வது மட்டுமே இனி நம் தலையாய கடமை என்று அத்துணை வீரர்களும் ஒரு மனதோடு எண்ணம் கொண்டு விட்டனர்

11/n
தீராதினி சத்தம் (ரத்தம்) - எதிரிகளைக் கொன்று வீழ்த்தும் வரை போரினால் ஏற்படும் துவம்சம்/சர்வநாசச் சத்தம் இனி தீராது அதே போல் ரத்தமும் தீராமல் குருதி ஆறாய் ஓடப்போகிறது.

12/n
'முத்தை தரு' திருப்புகழிலிருந்து அடுத்து ஈர்க்கப்பட்ட மற்றொரு வரி "கொத்துப்பறை கொட்டு" இதே போல் ஒரு வரி "கொத்துப்பறை கொட்டக் களமிசை" அங்கும் இடம் பெற்றிருக்கும் இரண்டிற்கும் ஒரே பொருள் அதாவது போர்க்களத்தில் கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கப் படுகின்றன.

13/n
ரத்தச்செரு வெட்டு - இங்கு செரு என்பது போர்க்களத்தையும் குறிக்கும், மேலும் ரத்தம் என்னும் சொல்லை முன்வைத்து வருவதால் "ரத்தம் பாயும் எதிரிகளின் உடல்" என்றும் அந்த உடல்களை வெட்டு என்றும் பொருள் படும்.

14/n

#YogiSekar 🎙️ @ilangokrishnan 🖊️
கொட்டப்பகை வெட்டு - கொட்டம் + பகை - ஒரு நாட்டிற்கு பகை என்பதே தீங்கானது அதிலும் "கொட்டப்"பகை - ஆணவம்/செருக்கு/அகந்தை/அகம்பாவம் உடைய பகைவர்களை வெட்டு என்று பொருள்.

துட்டச்செயல் கட்டு - துட்டம் - தீமை, தன் மக்களுக்கு தீங்கு செய்யும் எதிரிகளை "கட்டு" - தடை செய்

15/n
செருவேட்டலை பேசிடுதே - முன்பு கூறியவாறே செரு என்பதற்கு உடல்/போர்க்களம் என்று இரு பொருளையும் இங்கு எடுத்துக்கொள்ளலாம்

வேட்டலை - யாகம்/வேள்வி செய்தல், அதாவது எந்த ஒரு போர் தொடங்கும் முன்பு தங்கள் தேசத்து வீரர்களுக்கும் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் எந்த ஒரு தீங்கும்

16/n
நேரிடக் கூடாது என்பதற்காக ஒரு யாகம் போர்க்களத்தில் நிகழ்த்தப்படும், அந்த வேள்வியின் போது கூறப்படும் மந்திரம் போர்க்களம் எங்கும் ஒலிக்கிறது.

வருகேட்டினை ஓதிடுதே - இங்கு கேட்டு என்பதற்கு தீங்கு என்று பொருள், வரு கேட்டினை என்றால் இங்கு வரு என்பதற்கு இரு வகையில் பொருள் படும்

17/n
1 . வரு - அம்பு(போரின் போது வில்லில் இருந்து பாயும் அம்பு) அம்பினால் ஏற்படும் கேடு என்றால் அம்பினால் நிகழப்போகும் மரணங்கள் என்றும்

2 . போர் முடிந்து ஏற்பட்டிருக்கும் நாசங்கள் என்றும் பொருள் வரும், ஏறத்தாழ இரண்டும் கடைசியில் போரினால் நிகழப்போகும் தீமையை மட்டுமே குறிக்கிறது

18/n
ஒரு காட்டிடை தீயுளதே - காட்டிடை என்றால் சுடுகாடு, போரில் மாய்ந்த வீரர்களின் பிணங்கள் சுடுகாடு எங்கும் கொழுந்து விட்டு எரிகிறது, அப்பிணங்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழி எங்கும் ரத்த ஆறு போல் காட்சியளிக்கிறது.

19/n
அதை ஆற்றிட வா பெயலே - அந்த சுடுகாட்டில் கொழுந்துவிட்டு எறியும் பிணங்களையும் , வழி எங்கும் ஓடும் ரத்த ஆறு இவ்விரண்டினையும் அணைக்க வா "பெயலே" - என்றால் வா மா "மழையே"

20/n
பின்வரும் சில வரிகள் முருகனைப் போற்றி பாடி தேவராளன் மீது இறங்கிய முருகனிடம் குறி கேட்கும் படலம் போல் அமையப்பெற்றிருக்கும்

செங்குருதி சேயோனே, செங்குருதி என்றால் சிவப்பு ரத்தம் என்றும் சேயோன் என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில் "குறிஞ்சிக்கு" கடவுள் - முருகன் என்ற அர்த்தம்

21/n
அது மட்டுமின்றி தலைமுறையாக வரும் படிநிலைகளில்(hierarchy) இரண்டாவதாக வருபவரைச் சேயோன் என்றும் முதல் படிநிலையில் இருப்பவரை பரன் என்று அழைப்பர் இங்கு சிவனை பரன் என்று எடுத்துக்கொண்டால் அவரின் மகன் முருகன் சிவனின் இரண்டாவது படிநிலையில் இருப்பதனால் அவரை சேயோன் என்று அழைப்பர்

22/n
வங்கொடிய வேலோனே - வன் + கொடிய - வன்முறை, கொடுஞ்செயல் செய்யக்கூடிய அரக்கர்களை அழிக்கும் வேலினை உடையவனே

செவ்வரளி/செவ்வலரி தோளோனே - செவ்வரளி/செவ்வலரி என்பது ஒரு வகையான பூ ஆங்கிலத்தில் Nerium Oleander என்று அழைக்கப்படும், அதனைத் தோளில் அணிந்திருக்கக்கூடிய முருகனே.

23/n
என்குடிய காப்போனே - என் மக்களை (குடி) காப்பவனே

கடம்பா - இங்கு கடம்பா என்னும் பெயர் சிவ பூதகணங்களில் ஒருவனான கடம்பனை தன் உதவியாளனாகச் சேர்த்துக் கொண்டதால் இந்த பெயர்க் காரணம்

இடும்பா - என்பவன் ஒரு அசுரன், வில் வித்தையில் சிறந்தவன். சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற..

24/n
.. அசுரர்களின் சேனைகளுக்கு வில் வித்தையைக் கற்பித்த குரு. முருகனின் வேலினால் அசுரர் அனைவரும் மாண்டு போக, இடம்பன் அவன் மனைவி இடும்பியுடன் சிவபெருமானுக்கு வனசஞ்சாரம் (காட்டில் தவமிருந்து) முருகனுக்கு சேவை செய்து வாழும் அருள் பெறுகிறான், எனவே முருகனை இடும்பன் என்றும் அழைப்பர்

25/n
கதிர்வேல் குமரா மருகா - கதிர்வேல் என்பதற்கு புராணத்தின் படி வள்ளியை மணக்கும் போது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீக்கதிராகப் பிறந்தவர் என்பதனால் கதிர்வேல் என்ற பெயரால் அறியப்படுகிறார்

குமரா என்பதர்க்கு சிவனின் பிள்ளை / சிவ குமாரன் - "முருகன்"

26/n

#YogiSekar 🎙️
"மருகா" என்றால் வழித்தோன்றல்/வாரிசு அதாவது சிவனுக்கு அடுத்து வழி வந்தவன் என்று முருகனைப் அழைக்கிறார்

துடிவேலரசர்க்கரசே - துடி என்றால் உடுக்கை, வேலில் உடுக்கையை உடையவன் சிவன் அவருக்கே பாடம் கற்பித்தவன் (அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா) என்பதால் இப்பெயர்க் காரணம்.

27/n
வடிவேல் அருள்வாய் மலர்வாய் - வடிவேலா உன் திருவாய் (மலர்ந்தது) திறந்து எங்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயத்திற்க்கெல்லாம் (சந்தேகம், பயம்) அனைத்திற்கும் நல்ல (அருள்) விடை கொடப்பா என்று முருகனை வேண்டுகின்றனர்.

28/n
மாமழை பெய்திடுமா - இந்த நாடு செல்வச் செழிப்போடு இருக்க மழையானது மிகவும் அத்தியாவசியமானது, எனவே அப்பேர்பட்ட மழை தக்க தறுவாயில் பெய்திடுமா என்று முருகனிடம் கேள்வி வைக்கின்றனர்

மாநிலம் ஓங்கிடுமா - இந்த சோழ மா(பெரிய) நிலம் ஆனது அதில் வசிக்கும் குடிகள் அனைவருக்கும் ...

29/n
... அனைவருக்கும் எந்த ஒரு துன்பமும் நேராமல் சோழ மாநிலம் தழைத்தோங்கி நிற்குமா ? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

கோப்புகழ் தங்கிடுமா - கோ என்றால் அரசன், இங்கு நடக்கும் சதி ஆலோசனையே வானில் ஒரு வால் விண்மீன் தோன்றியதால் அரச குடும்பத்தில் ஏதோ ஒரு உயிர் பலி ஏற்படப்போகிறது ...

30/n
... என்று ஜோதிடர்கள் கணித்த பின் அடுத்து யாருக்குப் பட்டம் சூட்டப்பட வேண்டும் என்று முடிவெடுப்பதற்காக நடக்கிறது, அவ்வாறிருக்க அந்த வால் விண்மீனால் எங்கள் அரசன் (கோ) அவனுடைய புகழ் (இங்கு "உயிர்" என்று பொருள்) நிலைத்து நிற்குமா என்ற கேள்வியும் முருகனிடம் வைக்கப்படுகிறது.

31/n
இப்போது முருகன் மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொருட்டு கீழ் உள்ள வரிகள் அமையப்பெற்றிருக்கும்

படடா - பொறு/இளைப்பாறு, கொடடா - எனக்கு கொடு, அதனைத் தொடர்ந்து எதைக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது அதற்கான பதிலே அடுத்த வரியில் தொடர்கிறது ...

32/n
எடடா - வாளினை எடு, வருவாய் - வாளினை எடுத்து வா, தருவாய் உடனே - வாளினை எடுத்து வந்து உடனே, செக செக செக செக செகவென செந்நிற குருதியைக் கொட்டு என்ற கூறி

செக செகவென செந்நிற குருதியை கொட்டு - சிவக்கச் சிவக்க ரத்தம் உள்ள குருதியை எனக்காகக் கொட்டு.

33/n
நீ மேலே கேட்ட கேள்விகள் அனைத்தும் நிறைவேறும் ஆனால் அதற்காக நீ ஒரு உயிர் பலி கொடுக்க வேண்டும் என்று முருகன் பதில் அழித்தது போல் எழுதப்பட்டுள்ளது

கொத்துப்பறை கொட்டெழுந்திட - போர்க்களத்தில் பறை இசை கொட்டி எழுப்பி போரானது துவங்கிவிட்டால் ...

34/n
சுத்தப்பகை கெட்டழிந்திட - சோழ தேசத்தைச் சூழ்ந்துள்ள பகை அழிய வேண்டும் என்றால்
கொற்றக்குடி பட்டத்தொருவனின் - கொற்றம் என்றால் அரசாட்சி என்றும், அரசு குடும்பத்தில் அடுத்ததாக மணிமகுடத்திற்குரிய பட்டத்து இளவரசன் ஆதித்திய கரிகாலனின் ரத்தத்தினை பலி கொடு என்று பதில் வருகிறது.

35/n
சுத்தப்பலி கேட்டால் சங்கரி, வேந்தன் முடி கேட்டால் சூதனி, இளையோன் தலை கேட்டால் பைரவி

சங்கரி, சூதனி (எ) நிசம்பசூதனி, பைரவி - இம்மூன்று பெயர்களுமே காளி(கொற்றவை)'யின் அம்சங்கள் / அல்லது வேறு பெயர்கள்.

இங்கு நிசம்பசூதனி என்பவள் சோழர்களின் குலதெய்வம் ...

36/n
அவள் கேட்பது வேந்தன் முடி அதாவது அரசனின் தலையைக் கேட்கிறாள்

மேலும் நிசம்பசூதனி ஏன் சோழர்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள் என்பதை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வளைப்பக்கத்தை பார்க்கவும்
mrpuyal.com/spiritual-aanm…

37/n
சுத்தப்பலி கேட்டால் சங்கரி - சங்கரி கேட்பது சுத்த பலி, சுத்த பலி என்றால் உடல் இல்லாத ஒருவன் இங்கு மறைமுகமாக அவள் அரச ரத்தத்தின் தலையை பலியாகக் கேட்கிறாள்

பைரவி கேட்பது இளையோன் தலை - இளையோன் என்றால் அரசனின் கடைசி புதல்வன் இங்கு அவள் அருள் மொழி வர்மனின் தலையை வேண்டுகிறாள்

38/n
இவ்வனைத்திர்க்கும் ரத்தத்தினை கொட்டி பலி இடுங்கள் என்ற தேவராளன் பதில் அழிப்பது போன்று இப்பாடல் பாடப்படுகிறது

இந்த வரிகள் பாட்டில் வரும் போது இதற்குப் பின்னல் கூட்டாக(chorus) மூன்று வரிகள் பாடப்பட்டிருக்கும்

1. புத்தேருது நாகம்
2. புலியேருது காகம்
3. புதிரானது ஞாலம்

39/n
1. புத்தேறுது நாகம் - இங்கு நாகம் என்பது நந்தினியைக் குறிக்கின்றது, புத்து என்பது சோழ சாம்ராஜ்யத்தைக் குறிக்கின்றது அதாவது கொடிய விஷம் உள்ள நாகம்(நந்தினி) ராஜியத்திற்குள் புகுந்துவிட்டால்

2. புலியேறுது காகம் - காகம் சனி பகவானின் வாகனம், புலி சோழர்களின் சின்னம்...

40/n
... இங்கு "புலியேறுது காகம்" என்றால் சோழ தேசத்தின் மீது சனி பார்வை விழுந்து விட்டது, இனி நடக்க இருப்பவை அனைத்தும் நந்தினியின் சதிச்செயலால் சோழ குலத்திற்கு விளையப்போகும் தீமையை குறிக்கின்றது.

3. புதிரானது ஞாலம் - பொதுவாக ஞாலம் என்பது உலகத்தைக் குறிக்கும் ...

41/n
ஆனால் இங்கு சோழ அரசகுலத்தை குறித்து, சுந்தர சோழருக்கு அடுத்து யாருக்கு முடி சூட்டப்படும் ? வானில் தோன்றிய வால் விண்மீனால் யார் தலை உருளப்போகிறது ? அரச குலத்திற்கு எதிராக ஏன் சதிச்செயல் நடக்கிறது ? போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு விடை புதிராகவே இருக்கப்போகிறது என்றும் ...

42/n
அவ்வனைத்து கேள்விகளுக்கும் விடை ஒரு அரச உயிர் பலியின் முடிவில் மட்டுமே கிடைக்கும் என்றும் பாடல் முற்றுப் பெறுகிறது.

பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு

பலிகொடு பலிகொடு…

43/n
அது மட்டுமின்றி புத்தகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள குரவைக்கூத்திலும், திரைப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ள தேவராளன் ஆட்டம் பாடலிலும் கூத்து கட்டும் தேவராளன் பாண்டிய ஆபத்துதவிகளுள் ஒருவன், அவனுடன் சேர்ந்தது கூத்து கட்டும் பெண்மணி தேவராட்டியும் பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருத்தி

44/n
இதன் மூலம் ஆசிரியர் அமரர் கல்கி அவர்கள் கூறும் கூற்றானது அவ்விருவரும்(தேவராளன்,தேவராட்டி) சோழ தேசத்து மக்களோடு மக்களாக இருந்து சுற்றித் திரிந்து கடம்பூர் மாளிகையில் கூத்து நடைபெறப்போகிறது என்ற செய்தியை முன்னரே அறிந்து சோழ தேசத்து மக்களிடத்தும்,

45/n
அரச முக்கியஸ்தர்களிடத்தும் ஒரு பயம் சார்ந்த உணர்வை ஏற்படுத்தவே இவ்வாறான ஒரு கோர ரத்த பலி ஆட்டத்தை நிகழ்த்தியிருப்பார்கள். மேலும் அதனை உறுதி படுத்தும் வகையில் புத்தகத்திலும் திரைப்படத்திலும் பாண்டிய ஆபத்துதவிகள் அனைவரும் கூடி நின்று கொற்றவை(காளி)யை வேண்டி வீரபாண்டியனைக்...

46/n
...கொன்ற சோழ இளவரசனைப் பலி கொடுப்போம் என்று சபதம் ஏற்கும் ஒரு காட்சியும் இடம் பெற்றிருக்கும்.

இந்தக் காட்சி திரைப்படத்தில் வரும் போது, தேவராளன் ஆட்டம் பாடலில் உள்ள ஒரு சிறு துண்டு காட்சியின் பின்னால் ஒலிக்கும்.

47/n
கல்கி எவ்வாறு "குரவைக் கூத்து" என்ற பெயரில் இந்த முழு காட்சி வரிசையினை சித்தரித்திருந்தாரோ அந்த அழகியல் ஒரு துளியும் குறையாமல் கவிஞர் "இளங்கோ கிருஷ்ணன்" அவர்கள் அந்த மொத்தத்தையும் ஒரு பாடலில் உள்ளடக்கி இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த பாடலை இவ்வுலகிற்குப் பரிசளித்துள்ளார்.

48/n
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு எத்தனை ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு இம்மூவேந்தர்கள் @ilangokrishnan, @arrahman, #ManiRatnam காட்டிய கடின உழைப்பும் ...

@MadrasTalkies_ @bagapath
#YogiSekar 🎙️ @RakshitaaSuresh @LycaProductions @rparthiepan
#IlangoKumaravel
49/n
... குறிப்பாகப் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அவரின் வரிகள் மூலம் அவரது முதல் திரைப்பயணத்தின் போதே இப்பேர்ப்பட்ட ஒரு ஆகச்சிறந்த மணியினை இயக்குனர் மணிரத்னத்தின் மகுடத்தின் உச்சியில் தலையாய மணியாக இடம் பெறச்செய்துள்ளார்.

n/n

🙏 - சுபம் - 🙏

- நிர்மல் குமார் 🖊️

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ℕ𝕚𝕣𝕞𝕒𝕝 // Thamizh Stan ✨

ℕ𝕚𝕣𝕞𝕒𝕝 // Thamizh Stan ✨ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(