M.SivaRajan Profile picture
Jan 13 16 tweets 3 min read
#காமம்

காமத்தை கடக்க ஒரு வழி.

காமத்தை கை விடுங்கள் அப்போது தான் அப்போது மட்டும் தான் கடவுள் தரிசனத்தை பெற முடியும் என்று பெரியவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்கள்.

கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் எந்த உணர்வுகளையும் தவறுதலானது என்றோ தேவையற்றது என்றோ யாரும் சொல்ல முடியாது.
அதே நேரம் அந்த உணர்வுகள் அதிகப்படியாக மனிதனை ஆட்டுவிக்கும் போது தான் சிக்கல்களே ஏற்படுகின்றன

மல ஜலம் கழிப்பது கூட ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அதிகப்படியாகப் போனால் அது நோயாகி விடும் காமம் என்பதும் அப்படி தான் வரையறைகளை தாண்டும் போது மனிதனை குப்புற தள்ளிவிடுகிறது.
நம் புலன்களும் மனதும் உடனடியாக நிகழ்காலத்தை விட்டு விட்டு மற்ற காலங்களில் சவாரி செய்ய துவங்கி விடுவதால் தான் காமம் என்பது அளப்பரிய சந்தோசத்தை தரக்கூடியது என்று மீண்டும் மீண்டும் ஒரு விட்டில் பூச்சி போல அதையே நாடி சென்று வீழ்ந்து கிடக்கிறோம்.
காமம் மட்டுமல்ல எந்த செயலை நாம் செய்தாலும் அதில் நமது மனது ஆழ்ந்து விடுமானால் அதுவே நாம் தேடுகின்ற இன்பத்தை தரவல்லது இந்த உண்மை பலருக்கு தெரிவதில்லை அதனால் தான் காம சேற்றில் காலமெல்லாம் மூழ்கிகிடக்கிறார்கள்.
காமத்தில் கிடைகின்ற சுகமானது வெளிப்பொருளால் அல்லது மற்ற பாலின உடலால் உறவால் கிடைப்பது இல்லை அது நமக்குள்ளேயே மறைந்து கிடக்கும் மகிழ்ச்சி தான் என்பதை பலர் அறிந்து கொண்டால் நிறைய பேர் காம விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலை பெறுவார்கள்.
இந்த ரகசியம் பலருக்கு தெரியாமல் தான் காமத்தை அடக்க பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

காம உணர்வை அடக்க முயல்கின்ற எவரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மையாகும்.
மனித குணங்களின் இயற்கை சுபாவம் என்னவென்றால் எந்த உணர்வை அடக்க அழிக்க முயற்சி செய்கிறீர்களோ அந்த உணர்வு பல மடங்கு வேகத்தோடு பதுங்கி இருந்து சீறி பாயும் என்பது தான் உண்மையாகும்.
எனவே காம உணர்வை அடக்க முயன்றால் அது அபாயத்தை தான் ஏற்படுத்தும்.

காமத்தை அடக்க முடியாது என்றால் அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி

காமத்தை அடக்கும் எண்ணத்தையே முற்றிலும் விட்டு விடுங்கள்.

தனிமையில் உட்க்காருங்கள் உங்கள் மனதில் எழும்புகின்ற கட்டுப்பாடற்ற
காம சிந்தனையை அதன் போக்கிலேயே விட்டு விட்டு உங்களுக்குள் நீங்கள் தனித்திருந்து அந்த சிந்தனை எதுவரை போகிறது என்று கண்காணியுங்கள்

எதற்கும் ஒரு எல்லை உண்டு ஒரு முடிவு உண்டு நம் மனதிற்குள் எழும்புகின்ற காம விகாரங்கள் ஒரு நிலையில் செயல் படாமல் நின்று விடும்.
அதாவது சிந்தனை ஓட்டம் அடுத்த கட்டத்தை தொட முடியாமல் ஆடாமல் அசையாமல் நகர முடியாமல் நின்று விடும் அப்போது உங்கள் மனதை பிடியுங்கள்

அடம்பிடிக்காமல் சண்டித்தனம் செய்யாமல் நீங்கள இழுத்த இழுப்புக்கு மனம் கூடவே வரும் அந்த மனதை தரை விரிப்பாகப் போட்டு தியானம் செய்ய பழகுங்கள்.
ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் போகப் போக எல்லாம் சுலபமாகி விடும்.

தியானம் செய்யும் போதே காம எண்ணம் ஆட்டிப்படைக்கிறதே அதை தடுக்காமல் தியானத்தில் எப்படி அமர முடியும் என்று சிலர் கேட்கலாம்.

உங்கள் மனது காமத்தை எண்ணுகிறதா அதை பற்றி கவலை படாதிர்கள்.
ஐயோ இப்படி நான் கீழ் பிறவியாக இருக்கிறேனே என்று வருத்தப்படாதிர்கள்.

ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் கூட ஆரம்ப காலம் இப்படித் தான் இருக்கும் காலம் கனியும் போது தான் எல்லாம் கூடி வரும் எனவே மனதுக்குள் ஓடும் காம வண்டியை ஓடும வரை விட்டு விட்டு
அதை கவனிக்காமல் சட்டை செய்யாமல் தியானம் செய்யுங்கள் ஓடி ஓடி அந்த வண்டி ஒரு நாள் அச்சாணி கழன்று விழுந்து விடும் திரும்பவும் அது ஓடவே ஓடாது.

அதாவது காம எண்ணத்தை அடக்க முயல வேண்டாம் அதில் மனிதர்களால் வெற்றி பெற இயலாது காமத்தை கடக்க முயலுங்கள்.
அதுவே அதை சுலபமாக வாகை சூடும் வழியாகும் என்று சொல்கிறேன்

ஒரு குழந்தையை தொட்டால் உங்களுக்கு என்ன உணர்வு வருகிறதோ அதே உணர்வு ஒரு குமரியை தொட்டாலும் வர வேண்டுமென்றால் காமத்தை கடக்க முயற்சித்தால் தான் நடக்கும்.
காமத்தை கடக்க முயல்வது கடினமான ஒன்றல்ல செய்ய வேண்டுமென்ற மன உறுதி இருப்பவர்கள் நிச்சயம் செய்து முடித்து விடலாம்.

காமத்தை கடக்க ஒரே வழி அதை அலட்சியம் செய்ய வேண்டும் அதாவது மனதை நிகழ்காலத்தில் வைக்க பழகுங்கள் குளிக்கும் போது அலுவலக சிந்தனையோ பூஜை அறையில் வேறு சிந்தனையோ வேண்டாம்.
அந்த அந்த நேரத்தில் அந்த அந்த செயலில் மட்டுமே சிந்தனையை வைக்க பழகுங்கள்

காமம் தன்னை கண்டு பயப்படுகின்றவனை துரத்திக் கொண்டே ஓடும் அதை ஓட விட்டுவிட்டு ஓரமாக நில்லுங்கள் காம சிந்தனை மாறி கடவுள் சிந்தனையில் ஐக்கியமாவீர்கள்.

#காமம்

#காமத்தை_கடக்க

#காமத்தை_கடக்கும்_வழி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jan 14
#சாகம்பரி

அம்பாளின் சாகம்பரி அலங்காரம் !

ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார்.

அங்கிருந்த சாஸ்திரியிடம், “பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள்.

இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். Image
புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும்.

அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்” என்றார்.

“இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!” என்று நினைத்த சாஸ்திரி,
அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!” என்றார் பணிவுடன்.

பெரியவர் அவரிடம்,

“அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன்.
அவள் பாத்துக்குவா,”

என்று சொல்லி விட்டார்.

அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் (கோயம்பேடு) இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது.
Read 7 tweets
Jan 14
#பொங்கலோ_பொங்கல்

பொங்கல் வைக்கும் முறைகள் :*

கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு,

பொங்கல் திருநாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம்.

பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். Image
வீட்டு வாசலில் திருவிளக்கை ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள்.

பூ சூட்டுங்கள்.

வெளியே காற்றடிக்கலாம் என்பதால் ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை.

நிறைவிளக்காக வைத்தால் போதும்.

விளக்கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்தில் சாணப் பிள்ளையாரையும்,
செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள்.

இலையில் பச்சரிசி பரப்புங்கள்.

பிறகு, கிழங்கு, காய்கறி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும்.
Read 11 tweets
Jan 14
#காயத்திரி_மந்திரம்

விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும்.

பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். Image
அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.

காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள்.

5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள்.

இந்த மந்திரத்தை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும்.
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம்.

இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும்.

சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும்.

காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.

இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்.
Read 16 tweets
Jan 13
#தீபம்

வீட்டில் தீபம் ஏற்றுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அதிஷ்டம் நிச்சயம்

நமது வீடுகளில் பொதுவாக காலையில் எழுந்து தீபம் ஏற்றி இறைவனை வணங்குவது வழக்கம்.

அதே போல மாலையிலும் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம்.
நாம் காலையில் தீபம் ஏற்றுகையில் கீழே உள்ள மந்திரம் அதை கூறினான் அது நம்முடைய வழிபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.

இதன் மூலம் நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றி கிடைக்க வழிபிறக்கும், அதிஷ்டம் உண்டாகும்.
தீப மந்திரம் :

ஸோயம் பாஸ்கர வித்யஸ்த

கிரணோத்கர பாஸ்வா

தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்

சுப்ரபாதம் குருஷ்வமே.

பொருள் :

இவ்வுலக மக்களை காத்து அவர்களுக்கு நல்லறிவை வழங்க கூடிய கதிர்களை இவ்வுலகம் முழுக்க பரப்பும் தீபமே.

என்னுடைய இந்த நாள் சிறப்பாக இருக்கு உங்களது அருளை வேண்டுகிறேன்.
Read 5 tweets
Jan 13
#கொல்லூர்_மூகாம்பிகை

மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள்.

கவிஞர்கள்,

எழுத்தாளர்கள்,

இசைக்கலைஞர்கள்,

பாடகர்கள்,

திரைத்துறையினர்,

நாட்டியமணிகள்,

சிற்பிகள்,

ஓவியர்கள்

போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள்
தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.

அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது

காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும்,

உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும்
இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.

அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஷ்வகர்மாக்களிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார்.
Read 5 tweets
Jan 13
#லலிதா_சகஸ்ரநாமம்

*லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?*

லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.

சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.

தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.

இவை ரகசியங்களுள் ரகசியமானது.
இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும்.

பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(