M.SivaRajan Profile picture
Jan 18 18 tweets 4 min read
#உயிரைக்_காத்த_துளசி

ஏழை ஒருவன், தினமும் அதிகாலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று,

கீரை வகைகளைப் பறித்து,

அதைச் சந்தையில் விற்று,

அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். Image
அவன் தினமும் கீரைகளைப் பறிக்க காட்டுக்கு போகும் வழியில்,

ஒரு குடிலில் முனிவர் ஒருவர்,

சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து, துளசி இலையால் பூஜைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டே போவான்.

ஒரு நாள் அதே போல் முனிவர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதைப்
பார்த்துக் கொண்டே வயற்காட்டுக்குச் சென்றான்.

கீரைகளைப் பறிக்கும் போது,

அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான்.

அப்போது அவனுக்கு,

அந்த முனிவர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகத்துக்கு வந்தது.
உடனே

"நாமும்,

அந்த முனிவரைப் போன்று ஒரு மனிதப் பிறவிதானே!

இதுவரை என்றாவது பெருமாளுக்கு ஒரு சிறு பூஜை செய்திருக்கிறோமா?

சரி நம்மால் தான் பெருமாள் விக்கிரகத்துக்கு பூஜை செய்ய முடியவில்லை.
இன்று முதல்,

இந்த துளசியையாவது பறித்துச் சென்று அந்த முனிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாகக் கொடுப்போமே!' என்று எண்ணியபடி செடியில் இருந்து துளசியையும் சேர்த்துப் பறித்து,

கீரைக் கட்டோடு ஒன்றாகப் போட்டு,

தலை மீது வைத்துக் கொண்டு முனிவரின் இல்லம் நோக்கி நடந்தான்.
ஆனால்,

அவன் பறித்துப் போட்ட கீரைக் கட்டில்,

ஒரு சிறு கருநாகமும் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.

முனிவரின் இல்லத்து முன் வந்து நின்றான் ஏழை விவசாயி.

முனிவர் ஏழையைப் பார்த்தார்.

அதேசமயம்,

அவன் பின்னே,

அருவமாய் யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டார்.
தன் கண்ணை மூடி,

ஞான திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று பார்த்ததில்,

அந்த ஏழையின் பின்னே நிழல் போல் நிற்பது கிரகங்களில் நாகத்தின் அம்சத்தில் ஒருவரான ராகு பகவான் என்பது தெரிந்தது.

முனிவர் உடனே ஏழையிடம்,

அப்பா உன் தலையில் உள்ள கீரைக் கட்டை அப்படியே வைத்திரு,
ஒரு ஐந்து நிமிஷம் அதைக் கீழே இறக்க வேண்டாம்.

இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு,

குடிலின் பின் பின்னே நின்றிருந்த ராகு பகவானை அழைத்தார்.

ராகு பகவானும் ஆச்சரியத்துடன் முனிவர் முன்னே வந்து நின்று வணங்கி,

"சுவாமி என்னைத் தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன?'' என்று கேட்டார்.
முனிவரும் ராகுவை வணங்கி,

""ராகுவே எதற்காக இந்த ஏழையைப் பின்தொடர்ந்து வருகிறாய்?

என்ன காரணம் என்று நான் அறியலாமா?'' என்று கேட்டார்.

அதற்கு ராகு

"சுவாமி இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கரு நாக உருவெடுத்து தீண்ட வேண்டும் என்பது,

இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி.
ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக,

இன்று பகவானின் பிரியமான துளசியை இவன் தலையில் சுமந்து வருவதால்,

இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன்.

இவன் தலையில் சுமந்திருக்கும் துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே,
அவனைத் தீண்டி விட்டு என் கடமையை முடித்துக் கொண்டு நான் கிளம்பிச் சென்று விடுவேன்!'' என்றார்.

முனிவருக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது.

எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளசியைப் பறித்துக் கொண்டு வந்துள்ளான்;
அவனைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணினார்.

""ராகுவே! அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா?'' என்றார்.

ராகுவோ

""சுவாமி! இத்தனைக் காலம் தேவரீர் பகவத் ஆராதனம் செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தால்,
அவனது சர்ப்பதோஷம் நீங்கப் பெறுவான்.

அதனால்,

நான் அவனைத் தீண்டாமல் சென்று விடுவேன்!'' என்றார்.

(அவர்கள் இருவரின் உரையாடல்கள் அந்த ஏழை அறியாத வண்ணம் நடந்து கொண்டிருந்தது).
முனிவரும் அகமகிழ்ந்து

"அவ்வளவுதானே!

இதோ...

இப்பொழுதே நான் இதுவரை பெருமாளுக்கு ஆராதனை செய்ததற்காகப் பலன் என ஏதும் இருந்தால்,

அது முழுவதையும் அந்த ஏழைக்குத் தாரை வார்த்துத் தருகிறேன்!'' என்று கூறி,

ஏழைக்குத் தன் ஆராதனை பலனை தாரை வார்த்துக் கொடுக்க,
ராகு பகவானும் முனிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து,

மறைந்து போனார்.

அப்பொழுது கீரைக் கட்டில் இருந்த கரு நாகமும் மறைந்தது.

முனிவர் அந்த ஏழையிடம் வந்து,

""அப்பா!

இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வர வேண்டும்,

சரியா?'' என்றார்.
ஏழைக்கு,

மிகுந்த மகிழ்ச்சி!

"நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும்,

முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே!' என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே தன் குடிசையை நோக்கிச் சென்றான்.
வைகுந்த வாசன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஆழ்ந்த பக்தியே!

பக்தியோடு சிறு துளசி இலையைக் கொடுத்தாலும்,

அதைப் பரவசமாய் அவன் ஏற்பான்.

எனவே,

பகவத் ஆராதனம் தினமும் செய்யுங்கள்;

மிகுந்த நன்மை அடையுங்கள்....

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jan 19
*திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்*

*#சக்தி_தட்சிணாமூர்த்தி*

சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில். Image
இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள்.

இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர்.

இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.

இக்கோவிலில் சிவபெருமான், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார்.
இவர் இடது கைகளில் ஏடு மற்றும், அமுதக் கலசத்தை ஏந்தியபடியும், அம்பாளை அணைத்தபடியும் காட்சி தருகிறார்.

அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்.

பிருகு முனிவர் சிவனையே மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர்.
Read 9 tweets
Jan 19
#கங்காஜடாதீஸ்வரர்

தொழில் முன்னேற்றம் தரும் கங்காஜடாதீஸ்வரர்!

கோவிந்தபுத்தூர் கங்காஜடாதீஸ்வரர் கோயில்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கோவிந்தபுத்தூர் கிராமத்தில் காவிரி நீர்ப்பாயும் கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் விவசாய நிலங்களின் நடுவே அழகுற ஓர் சிவாலயம் அமைந்துள்ளது. Image
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 47வது தலமாக கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது.

சோழர்களின் பல கல்வெட்டுகள் இத்தலமே தேவார திருத்தலம் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. ஆலயத்தின் எதிரே அர்ஜுனன் தீர்த்த குலம் உள்ளது.
ஆலயத்தின் முகப்பில் பரமனுக்குப் பசு பால் சொறிந்து வழிபடும் கதை வடிவம் காணப்படுகிறது.

ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே செல்லும்போது வாசற்படிக்கட்டு நமக்குத் தென்படும்.

இந்தப் படிக்கட்டானது முற்றிலும் கடல்பாசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
Read 7 tweets
Jan 19
_*இன்று சுபிட்சம் தரும் குருவார பிரதோஷம்.*_

*#பிரதோஷ_வழிபாடு:*

சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் பிரதோஷ வழிபாடு செய்து வழிபடுதல்.

குருவாரத்தில், அதாவது வியாழக்கிழமையில் பிரதோஷ பூஜையை கண்ணாரத் தரிசியுங்கள். Image
குடும்பத்தில் எல்லா நல்லவிஷயங்களும் நடந்தேறும்.

தடைப்பட்ட அனைத்து காரியங்களும் அமோகமாக நடைபெறும்.

இனிமையாகவும் குதூகலத்துடனும் வாழ்வீர்கள்.

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம்.

எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில்,

சிவ பூஜை செய்வதும்

விரதமிருந்து ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும்

ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும்.
Read 15 tweets
Jan 19
*: துன்பங்களைப் போக்கும் திருவைந்தெழுத்து மந்திரம் :*

சைவ சமயத்தின் மூல மந்திரம் ” #நமசிவாய” எனும் திருவைந்தெழுத்து ஆகும்.

இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும்.

சிவாயநம எனவும் இதனைக் கொள்வர்.
வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது.

அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது.

வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத் தான் ஓத வேண்டும் என்பது விதி.
ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாக திருவைந்தெழுத்துக் கூறப்படுகிறது.

திருவைந்தெழுத்தான் நமசிவாய இதிலுள்ள ஒவ்வொரு அட்சரமும் தத்துவம் பொருளுடையவை.
Read 9 tweets
Jan 18
*திருவெள்ளரை புண்டரீகாக்ஷப் பெருமாள் ஆலயம்*

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த பரந்தாமன்,

“இங்கிருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் பாக்கியத்தைத் தந்த உனக்கு வரம் தர விரும்புகிறேன். வேண்டும் வரத்தைக் கேள்” எனக் கூறவே, Image
மகாலட்சுமி,

“எங்கு நான் இருந்தால் மக்களின் கஷ்டங்கள் நீங்குமோ அந்த இடத்தை காண்பிக்க வேண்டும்” என வேண்டினாள்.

கேட்ட வரத்தை மகாவிஷ்ணுவும் அளித்தார். 

பூலோகத்தில் மாரீசன் மற்றும் இராவணன் போன்ற அரக்கர்கள் அழித்து,

மக்களைக் காப்பாற்றி பிறப்பற்ற நிலையை அடைய,
நீலி வனம் என்னும் காட்டில் சிபிச் சக்கரவர்த்தி தங்கிருந்தபோது,

வெள்ளைப் பன்றி ஒன்று தோன்றி, யார் கையிலும் பிடிபடாமல் சுவேத்கிரி என்ற மலையின் மீது ஏறி, ஒரு புற்றில் நுழைந்து மறைந்து விட்டது.

அங்கிருந்த மார்க்கண்டேய முனிவரிடம் மன்னன் இது பற்றிக் கேட்க,
Read 9 tweets
Jan 18
#ஏகாதசி_வழிபாடு

ஏகாதசி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள் !!

தை மாத தேய்பிறை ஏகாதசி ச‌பலா ஏகாதசி எனப்படும்.

இது பாவநிவர்த்தி கொடுக்கும்.

இன்றைய தினத்தில் பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும்.
இல்லறம் இனிக்கும்.

தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவதால் சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம்.

மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும்.
அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல்,

துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல்,
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(