M.SivaRajan Profile picture
Jan 20 13 tweets 4 min read
#செல்வம்_தரும்_வில்வம் :~

#வில்வ_மரம் :~

வில்வ மரத்தைக் கற்பக விருட்சம் என்று சொல்வார்கள்.

வில்வங்களில் மகாவில்வம், கொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் உள்பட 21 முக்கிய வகைகள் உள்ளன.
வில்வ இலைகளை காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே பறித்துவிட வேண்டும்.

{திங்கள் கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி} ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது.

வில்வ இலையைப் பறித்து சிறிது தண்ணீர் தெளித்து பிறகு அதை பூஜைக்காக பயன்படுத்தலாம்.
வில்வம் சிவபெருமானுக்கு உகந்த அட்சரம். அதைவிடச் சிறந்த அட்சரம் ஒன்றும் இல்லை.

"வில்வ இலை இரண்டு
வீசும் கை கண்டு
சிவனே வருவதுண்டு"

என்ற வரிகளே இதன் சிறப்பை உணர்த்துகிறது.
பாற்கடலில் இருந்து லட்சுமிதேவி தோன்றிய போது அவளது கரங்களில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே வில்வ மரத்தை அன்னை மகாலட்சுமியின் வடிவமாக கூறுகிறார்கள்.

இதனால் வில்வ மரத்தை மனதார வழிபட்டால், ஈசன் சிவபெருமானின் கருணை கிடைப்பதோடு,
லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம்.

வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்வது லட்சம் எண்ணிக்கையிலான தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்ததற்குச் சமம்.

மேலும் கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய, 108 சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்த பலன் கிடைக்கும்.
வில்வத்தைச் சிவனுக்கு பக்தி நிறைந்த மனதோடு எந்தவித எதிர்பார்ப்புமின்றி அர்ப்பணித்தாலே மூன்று ஜென்ம பாவங்கள் நம்மை விட்டு நீங்கும் என்கின்றன தர்மசாஸ்திரங்கள்.

வில்வ மரத்தில் மட்டுமின்றி வில்வ இலைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், வில்வ இலைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.
மேலும், காளிகா புராணத்தில் மகாலட்சுமி வில்வமரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.

வில்வ மரத்தடியில் "ரைவத மன்வந்திரத்தில் "மகாலட்சுமி தோன்றியதாக கூறப்படுகிறது.

மகாலட்சுமி தேவிக்கு உகந்த மரம் "வில்வ மரம்" என்று *"ஸ்ரீ சூக்தம்"* கூறுகிறது.
வில்வ மரத்தடியில் செல்வம் தரும் திருமகள் அலைமகள்
(ஸ்ரீ தேவி) வசிக்கிறாள்

வைணவ ஸ்தலமான ஸ்ரீ ரங்கத்தில் மகாலட்சுமியாக கருதப்படும்
ஸ்ரீ ரங்கநாயகி நாச்சியார் தாயாரின் சன்னதிக்கு அருகில் அவருக்காக வில்வ மரம் அமையப் பெற்றுள்ளது.

தாயாரின் தல விருட்சமாக கருதப்படுவது வில்வம் தான்.
சமஸ்கிருதத்தில் வில்வத்திற்கு
'ஸ்ரீ பலம்" என்று பெயர் உண்டு.

அதாவது சகலவிதமான செல்வ வளத்தை குறிப்பதாகும்.

திருமகள் தேவி மகாலட்சுமிக்கு வில்வம் இலை, மலர் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பதே உண்மையாகும்.
இதை உணர்த்தும் விதமாக மார்கழி மாதத்தில் திருப்பதியில் பெருமாளுக்கு வில்வத்தால் அபிஷேக அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஏனென்றால் அங்கு வீற்றிருக்கும் பெருமாளின் உள்ளத்திலே லஷ்மி தேவி வசிப்பதாக கூறப்படுவதாலே ஸ்ரீ தேவிக்குரிய வில்வத்தால் செய்யப்படும் அர்ச்சனையை
பெருமாள் தனக்குரியதாக விரும்பி ஏற்றுக் கொள்வதாகவும் உணரப்படுகிறது.

திருவந்திபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால் தான் அர்ச்சனை.

உண்மையில் செல்வம் என்பது பணம், நகை, நிலம், உணவு மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியமான உடல்நலம், நிறைவான தெளிவான உள்ளம், குற்றமற்ற நெஞ்சம், என்பனவும் அடங்கும்.
ஏழரைச் சனி, அஷ்டமச்சனி சனி தசா, புத்தி நடைமுறையில் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த வழிபாடு *#வில்வபிரயோகம்* தான்.

வீடுகள் மற்றும் தொழில் அமைப்புகளில் உள்ள லஷ்மிதேவியின் உருவத்திற்கு வில்வ இலை சமர்ப்பித்து தீபம் ஏற்றி தினந்தோறும் வழிபடுவதும்
தேவையற்ற விரயங்களை குறைத்து பொருட் சேர்க்கைக்கு வழிவகுக்கும்.

நம்பிக்கையுடன் செயல்பட்டு நல்வாழ்வு பெறுங்கள்...

#வில்வம்

#வில்வ_இலை

#வில்வ_அர்ச்சனை

#வில்வ_இலை_சிறப்பு

#வில்வ_இலை_மகிமை

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jan 20
#ஜபம்

ஜபம் செய்யும் திசையும் பலனும்.....!

கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்.

தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்

தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை

தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வருமை Image
மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு

வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்

வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்

வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்
ஜபம் செய்யும் இடமும் பலனும் :-

வீடு- பத்து மடங்கு பலன்

கோவில் அல்லது வனம் - நூறு மடங்கு பலன்

குளம்- ஆயிரம் மடங்கு பலன்

ஆற்றங்கரை - லட்சம் மடங்கு பலன்
Read 4 tweets
Jan 20
#தை_அமாவாசை_சிறப்பு

#பித்ரு_வழிபாடு:

1. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு எது?

பித்ரு வழிபாடு

2. பித்ரு வழிபாடு என்றால் என்ன?

இறந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்வதே பித்ரு வழிபாடு ஆகும்.
3. பித்ரு வழிபாடு செய்வதன் முக்கியத்துவம் என்ன?

எல்லா வழிபாடுகளுக்கும் முதன்மையானது பித்ரு வழிபாடு ஆகும்.

பித்ரு வழிபாடு முடிந்த பின்னரே மற்ற வழிபாடுகள் நடைபெற வேண்டும்.
4. பித்ரு வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும்?

நம் நலனில் அக்கறை கொண்ட பித்ருக்கள் பசியில்லாமல் ஒளியுலகில் இன்புற்றிருக்க பித்ரு வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.
Read 12 tweets
Jan 20
*கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் அரசன் கழனி*

ஸ்ரீ பெரியநாயகி ஸமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், அரசன் கழனி.

செங்கல்பட்டு மாவட்டம், சோழங்கநல்லூர் வட்டம், ஒட்டியம்பாக்கம் பஞ்சாயத்தில் அடங்கிய “அரசன் கழனி’ மிகவும் பழமையான கிராமம்.
இவ்வூரில் உள்ள  குளத்தின் நடுவில் அமைந்த நிலப்பரப்பில் “சிவலிங்க திருமேனி ” மற்றும் “நந்தி தேவர்” சிதிலமடைந்து, கோயில் கட்டிடமின்றி, வழிபாடும் இன்றி பல ஆண்டு  காலங்கள் இருந்தது.

இக்குளக்கரையின் மேல் மிகவும் பாழடைந்த நிலையில் ஆதி கால தூண்கள் உள்ளன.
மேலும் மிகப் பெரிய ஆதிகால மாவு ஆட்டும் கல்
சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

இதன் அருகில் மூலிகை நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஔதட மலை உள்ளது.

இம் மலையில் அரசன் கழனி ஊர் மக்கள் பிரதி  மாதம் கார்த்திகை திருநாளில் மாலை 6:00 மணி அளவில்,
Read 8 tweets
Jan 19
*திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்*

*#சக்தி_தட்சிணாமூர்த்தி*

சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில்.
இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள்.

இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர்.

இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.

இக்கோவிலில் சிவபெருமான், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார்.
இவர் இடது கைகளில் ஏடு மற்றும், அமுதக் கலசத்தை ஏந்தியபடியும், அம்பாளை அணைத்தபடியும் காட்சி தருகிறார்.

அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்.

பிருகு முனிவர் சிவனையே மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர்.
Read 9 tweets
Jan 19
#கங்காஜடாதீஸ்வரர்

தொழில் முன்னேற்றம் தரும் கங்காஜடாதீஸ்வரர்!

கோவிந்தபுத்தூர் கங்காஜடாதீஸ்வரர் கோயில்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கோவிந்தபுத்தூர் கிராமத்தில் காவிரி நீர்ப்பாயும் கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் விவசாய நிலங்களின் நடுவே அழகுற ஓர் சிவாலயம் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 47வது தலமாக கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது.

சோழர்களின் பல கல்வெட்டுகள் இத்தலமே தேவார திருத்தலம் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. ஆலயத்தின் எதிரே அர்ஜுனன் தீர்த்த குலம் உள்ளது.
ஆலயத்தின் முகப்பில் பரமனுக்குப் பசு பால் சொறிந்து வழிபடும் கதை வடிவம் காணப்படுகிறது.

ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே செல்லும்போது வாசற்படிக்கட்டு நமக்குத் தென்படும்.

இந்தப் படிக்கட்டானது முற்றிலும் கடல்பாசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
Read 7 tweets
Jan 19
_*இன்று சுபிட்சம் தரும் குருவார பிரதோஷம்.*_

*#பிரதோஷ_வழிபாடு:*

சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் பிரதோஷ வழிபாடு செய்து வழிபடுதல்.

குருவாரத்தில், அதாவது வியாழக்கிழமையில் பிரதோஷ பூஜையை கண்ணாரத் தரிசியுங்கள்.
குடும்பத்தில் எல்லா நல்லவிஷயங்களும் நடந்தேறும்.

தடைப்பட்ட அனைத்து காரியங்களும் அமோகமாக நடைபெறும்.

இனிமையாகவும் குதூகலத்துடனும் வாழ்வீர்கள்.

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம்.

எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில்,

சிவ பூஜை செய்வதும்

விரதமிருந்து ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும்

ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும்.
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(