#தன்மானம் 👍👍
தந்தையின் இரண்டாம் இல்லற வாழ்வுக்காக தன் வாழ்நாள் முழுவதும் ப்ரும்மசார்ய விரதம் அனுஷ்டித்தவர் பீஷ்ம பிதாமகர். உத்ராயண புண்ய காலத்தில் முக்தி அடைந்த பொழுது பீஷமாஷ்டமியாக உலகத்தோர் இவருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமுண்டு.
பீஷ்மரை போன்று பல நூறு ப்ரும்மசாரிகள் உள்ளார்கள். ஆனால் தனக்குள் சுருங்கி போனவர்களும் ஏராளமானோர் உண்டு.
விதவை என்ற ஒரு நிலையை அடைந்த பெண்களை மட்டும் சமூகம் ஒதுக்கி வைப்பது இல்லை, திருமணமாகாத ஆண்களையும் இழிவு படுத்தும் மக்களும் உள்ளார்கள்.
ஒரு ஆண் திருமண வயதை கடந்தும்
ஒற்றையாக இருக்க பல குடும்ப பின்னணிகள் இருக்கும். சகோதரிகளின் திருமணம், அதே போல அவர்கள் கணவனை இழந்தோ அல்லது திருமண முறிவு காரணங்களுக்காக பிறந்தகம் வந்து விட்டால் அவர்கள் நலனுக்காக பாடுபடும் ஆண்களும் உள்ளார்கள்.
மேற்கூறிய காரணங்களை அனைவரிடமும் விளக்கமாக சொல்லிக்
கொண்டிருக்க முடியாது. திருமணமாகாத ஆண்கள் கல்யாணம் இன்னும் பல விசேஷங்களுக்கு செல்லும் பொழுது இங்கிதம் தெரியாத பலர் என்னப்பா ஏன் கல்யாணம் இவ்வளவு தாமதமாக இருக்கு, தெய்வ குத்தமா இருக்கும், பித்ரு சாபம் இல்லேன்னா உங்க வம்சத்துல ஏதாவது பெண் சாபமா இருக்கும் இப்படியெல்லாம்
இவர்களுக்கு ஞான த்ருஷ்டியில் தோன்றியது போல இஷ்டத்துக்கு உளறுவார்கள்.
இது போன்ற அபத்தமான கேள்விகளை எதிர் கொள்ள அச்சப்பட்டு பல பிரும்மச்சாரிகள் உறவு / நட்பு விசேஷங்களுக்கு போவதையே தவிர்த்து விடுகிறார்கள். என் அண்ணாவின் நண்பர் ஒருவர் இந்த பிரச்சினைகளால் பொது
விசேஷங்களுக்கு செல்வதேயில்லை.
ஆமை தன்னை ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்வதை போல திருமணமாகாத ஆண்கள் வீட்டுக்குள் அடைபட்டுக் கொள்கிறார்கள். இது நாளடைவில் மனோரீதியாக மனச் சிதைவு ஏற்படும் அபாயம் உண்டாகிறது.
இந்த பீஷ்ம கூட்டத்தில் நான் ஒரு முரட்டு சிங்கிள் என்று சுய தம்பட்டமே
அடித்துக் கொள்வேன். 🤣🤣 யார் எப்படி இடக்கு மடக்காக கேள்வி கேட்டாலும் எதுகை மோனையோடு பதிலடி கொடுப்பேன். 😂😂
ஒருமுறை எங்கள் அப்பா ஸ்ரார்த்தம் நடந்த பொழுது தாயாதி உறவினர் வந்திருந்தார். ஸ்ரார்த்தம் முடிந்ததும் அம்மாவுக்கு நமஸ்காரம் பண்ணி விட்டு அவருக்கும் நமஸ்காரம்
பண்ணினேன், ஆசீர்வாதம் மட்டும் அவர் பண்ணாமல் நாவில் சனியோடு நீங்கள்ளாம் பத்தினி இல்லாம திவசம் பண்றேள் பலனே கிடையாது என்றார்.
அடுத்த நொடியே நான் பலன்னு சொல்லாதப்பா விசேஷம்னு சொல்லு, இரண்டுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. ப்ரும்மசாரிகள் .......contd...
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மதுரையில் கட்சி கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வருகிறார் ஜீவா அவரை அழைத்துச் செல்வதற்கு வரவேண்டிய தோழர்கள் இன்னும் வரவில்லை புகைவண்டி நிலையத்தின் இருக்கையில் படுத்துத் தூங்கிவிடுகிறார் தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள்
தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டுவந்த மூட்டையை எடுத்துக்கொண்டு ஜீவா கிளம்புகிறார் கொடுங்க தோழர் அதை நான்
கொண்டாரேன் என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர் அப்போதுதான் அது நோட்டுகளும் சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டை என்று தோழருக்குத் தெரிகிறது
இது என்னங்க ஜீவா
மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும் பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க
பூலோக வைகுந்தம்
“ரிடயர் ஆன பிறகு எங்கே வாழ்க்கையை ஓட்டப் போறே?” நண்பன் என்னிடம் கேட்டான்.
“வேறே எங்கே, ஸ்ரீரங்கத்தில்தான்!” இது நான்.அப்போதுநான் வேலை பார்த்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரத்தில்.
“ஸ்ரீரங்க ரொம்ப செலவு பிடிக்குமேய்யா?”
“இருந்துட்டு போகட்டுமே, யாருக்குச் சொத்து சேர்க்கப் போறோம்?”
“அது சரி,உனக்கு பிடுங்கல்னு யாரும் இல்லை"
“அதனாலே இல்லையா, கடைசி காலத்துலேயாவது அந்த ரங்கன் கால்லே விழுவோமே.
“ எங்கும் சுத்தி ரங்கனச் சேர்” அப்பிடின்னு சொல்வாங்களே , அதனால ஸ்ரீரங்கத்திலே போய்
செட்டில் ஆகலாம்னு இருக்கேன்"
மற்றொரு வீட்டில்,
“எங்க இப்பிடி பிடிவாதம் பிடிக்கிறீங்க? நமக்குத் தான் மேலூர் ரோட்லே வீடு இருக்கிறபோது அத வித்துட்டு சித்திரை வீதிலே போய் வீடு வாங்கனுன்னு சொல்றிங்க”
===================
நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனை ஆழ்வார்களை ஈர்த்துள்ளது?
அநேக நமஸ்காரம்/ஆசிர்வாதம்
சமீபத்தில் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் பிராமணர் சங்க மாநாட்டில் பேசிய பேச்சு தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மத்தியில்
பேசும் பொருளாகியுள்ளது மிகவும் அருமையாகவும் உணர்வுபூர்வமாகவும் பிராமணர்களுக்கு அவர்
அவர்கள் யார் என்பதை நினைவூட்டு விதமாகவும் அமைந்திருந்தது.
எல்லா பிராமணர் சங்கங்களும் திரு ரங்கராஜ் பாண்டேவை அவர்களுடைய சங்க கூட்டங்களில்
சுமார் நாலைந்து கூட்டங்களில் பேச வைத்தால் கூட போதும், பிராமணர்கள் அனைவரும் நிச்சயமாக ஒன்று சேர்வர். தற்பொழுது
பிராமணர் சங்கத்தில் சேர்வதை அலட்சியமாக நினைத்து வீட்டில் பஜ்ஜி போண்டா சாப்பிட்டுக் கொண்டே பிராமணர் ஒற்றுமை குறித்து கிண்டலாக பேசிக் கொண்டிருக்கும் நம் இளைஞர்கள் பாண்டேவின் பேச்சைக் கேட்டால் பிராமணர் சங்கத்தில் உறுப்பினர்கள் ஆவதோடு மட்டுமில்லாமல் நம்மை கிண்டலாக
சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார்.
கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு
வாழ்ந்தார்கள்.
ஒரு சமயம் போகர் திருவாவடுதுறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.
“கருவூராரே! உன் குல தெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு, அவள் உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறி
வழிபாட்டு நெறிகளை கருவூராருக்கு உபதேசித்தார். போகர் உபதேசப்படி, கருவூரார், உள்ளம் உருகி அம்மனை வழிபட ஆரம்பித்தார். போகரின் வாக்கு பலித்தது. கருவூரார் சித்துக்கள் புரியும் ஞானவானாக உயர்ந்தார்.
கருவூரார், சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார்.
# பெற்ற கடன் #
எனது தூரத்து உறவினர் கோவையிலிருந்து வந்திருந்தார்...பென்ஷண் வாங்குபவர் ..ஆசிரியையாக இருந்து ரிட்டயர்ட் ஆன பெண்மணி..
ஒரே பையன்...மருமகளும் ஐ.டி.யில் வேலை..பையன் பெங்களூரில் வசிக்கிறான். திடீரென்று அவர் மட்டும் வந்திருந்தார்.
ரங்கநாதரை தரிசித்து விட்டு
உடன் கோவை செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.அதோடு (கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ) சிந்தலாவாடி நரசிம்மரையும் தரிசிக்க வேண்டும் எனக் கூறிக் கொண்டிருந்தார்.
" ஏன்மா பையன்தான் பெங்களூரில் இருக்கானே...அவனோடயே இருந்துட வேண்டியதுதானே?"
ஏன் தனியாகக் கோவையில்?"
"இல்லப்பா...மாட்டுப் பொண்ணு சரியில்ல...ஒண்ணும் சொல்றதுக்கில்ல....ஈ.எம்.ஐ. கடன் லோன் அது, இது ன்னு வாங்கி ,வர்ற சம்பளத்துல முக்காவாசி வீட்டு லோனுக்கும் பொண்ணு படிப்புக்கும் போய்டறது"
என் பென்ஷண்லயும் ஒரு பகுதி தந்தேன்...எப்போ பாத்தாலும் கொற சொல்லிண்டு சண்ட..."