M.SivaRajan Profile picture
Jan 27 21 tweets 5 min read
#ரத_சப்தமி_விரதம்

*நீண்ட ஆயுளும் குறைவற்ற செல்வமும் கிடைக்க.

ரத சப்தமி விரதம் 2023..!*

நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளோடு வாழ சூரியனை வழிபடுங்க...

*வரும் சனிக்கிழமை ரத சப்தமி திருநாள்...*

இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி சனிக்கிழமை ரத சப்தமி கொண்டாடப்படுகிறது.*
சூரிய பகவான் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றென்றும் அன்புடன் ஆசிர்வதிப்பார்.

சூரிய தேவன் உலகிற்கு எல்லாம் ஒளி கொடுக்கும் கடவுள்.

சூரிய வழிபாடு காலம் காலமாக கொண்டாடப்படுகிறது.

தை முதல் நாளில் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகின்றனர்.
தை அல்லது மாசி மாதம் வளர்பிறையில் ஏழாம் நாள் சப்தமி திதி ரத சப்தமியாக கொண்டாடுகிறோம்.

இதனை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட ஆயுளும் குறைவற்ற செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும்..
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடவேண்டும்.

ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம்.

காலை 5.00 லிருந்து 7.00 க்குள் ஸ்நானம் பண்ண வேண்டும்.
தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு.
இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும்.

பெண்கள் உயர்நிலையை அடைவர்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள்.

இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது.
சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

முதலில் ரதசப்தமி என்றால் என்ன என்று பார்ப்போம்..?

பூமி சற்றே ( 23.5 *) சாய்ந்த நிலையில் தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
நாம் ரயிலில் பயணிக்கும் போது, நாம் நிலையாக இருப்பது போலவும் வெளியே மரம் மலை முதலானவை ஓடுவது போல மாயத்தோற்றம் ஏற்படுவது போல பூமி சுழன்றாலும் சூரியன் நகர்வது போன்ற மாயத்தோற்றம் உண்டாகிறது.
இப்படியான சூரியனின் பயணம் ஆறுமாதம் வடக்கு நோக்கியும் அடுத்த ஆறுமாதம் தெற்கு நோக்கியும் இருப்பதாக உணர்கிறோம்.

வடக்கு நோக்கிய பயணம் உத்தராயணம் ஆகும்.

அதாவது தெற்கே மகர ரேகையிலிருந்த சூரியன் வடக்கேயுள்ள கடக ரேகை நோக்கி பயணிக்கும் காலம் உத்தராயணம் ஆகும்.
மேல்நாட்டினர் கணக்குப்படி மகர ரேகையில் இத்திருப்பம் நடைபெறுகிறது !!

இந்துக்கள் ஐதீகப்படி தைமாதம் முதல் நாளன்றே உத்தராயணம் துவங்கி விட்டாலும் உண்மையிலேயே சூரியனின் ரதம் தைமாத வளர்பிறை சப்தமி திதியன்று தான் திரும்புகிறது.

இதனால் தான் இந்த சப்தமி திதிக்கு தனிச்சிறப்பு !!
சரி !! அன்றைக்கு ஏன் எருக்கிலை வைத்து குளியல் செய்ய வேண்டும் ?? அதற்கான ஐதீகம் இதோ !!!

மகாபாரதப்போரின் பத்தாம் நாள் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்பட்ட கௌரவ சேனாதிபதி பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் சாய்கிறார்.
அந்நேரம் தட்சணாயனம். தட்சணாயனத்தில் இறந்தால் முக்தி (மோட்சம்) கிட்டாது.

பீஷ்மருக்கு அவர் விரும்பும் நேரத்தில் உயிர்விடும் வரம் உண்டு.

எனவே அவர் உத்தராயணத்தில் உயிரை விட விரும்புகிறார்.

ஆனால் தைமாதம் பிறந்து உத்தராயணம் துவங்கியும் கூட அவர் உயிர் பிரியவில்லை.
பீஷ்மரை உடல் வேதனையுடன் மனோவேதனையும் வாட்டுகிறது.

தன்னைக்காண வந்த வேத வியாசரிடம் தனக்கு ஏனிந்த வேதனை எனக் கேட்கிறார்.

அதற்கு வியாசர் ‘ ஒருவர் தானாக செய்யும் துர்செயல் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் ஒரு துர்செயல் நடக்கும் போது அதை தடுக்க முடிந்தவர் தடுக்காமல் இருப்பதும்’ என்கிறார்.
பீஷ்மருக்கு புரிகிறது.

அன்று அஸ்தினாபுரத்து அரசவையில் பாஞ்சாலி இழுத்துவரப்பட்டு துகிலுரியப்பட்ட போது செயலற்று வாளாவிருந்த பாபம் தன்னை சுற்றியுள்ளதை உணர்கிறார்.

இந்த பாபம் அகல ஏதும் பிராயச்சித்தம் உண்டா என வியாசரை கேட்கிறார்.
‘பாபங்களை பொசுக்கும் சக்தி சூர்ய சக்தியே.

சூர்யனுக்கு அர்க்கன் என்று இன்னொரு பெயருமுண்டு.

அர்க்கனுக்கு உகந்தது அர்க்க பத்திரம் என்ற எருக்கிலை.

சூர்யசக்தி முற்றிலும் எருக்கிலையுள் அடங்கியுள்ளது ‘ எனக்கூறிய வியாசர் தான் கையுடன் கொணர்ந்த எருக்கிலைகளால்
பீஷ்மரின் தலை, கண்கள், வாய், கைகள் மற்றும் கால்கள் ஆகிய அங்கங்களை அலங்கரிக்கிறார்.

பீஷ்மரின் பாபங்கள் பொசுக்கப்பட்டு, அவரது உடல்,மன வேதனைகள் அகன்று நிம்மதியாக உயிர்விடுகிறார்.

சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம்.
அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம்.

ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.

சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை.
எளிமையாக, “ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.

சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும்.
அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் ரத சப்தமி நன்னாள்.

சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள்.

வாழ்வில், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம்.

அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்!
முக்கியமாக, நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார்.

இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து நம்மை மேன்மைப்படுத்துவது நிச்சயம்..
இந்த அற்புதமான ரத சப்தமி விரதத்தை நாம் அனைவரும் கடைபிடிக்க முயற்சி செய்வோம்..

உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..

#ரத_சப்தமி

#ரத_சப்தமி_சிறப்பு

#ரத_சப்தமி_மகிமை

#ரத_சப்தமி_பெருமை

#சௌரம்

#சூரிய_வழிபாடு

#ஓம்_சூர்யாய_நமஹா

*#ஓம்_சூர்ய_தேவாய_நமக...!*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jan 28
#பஞ்சமுக_லிங்கம்

பூமிக்குள் இருந்த பஞ்சமுக லிங்கம் :
 
திரு ஆனைக்காவல் வடக்கு வீதி ஸ்ரீ காமகோடி பீடத்தின் சங்கரமடத்தின் பின்புறம் – ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் , 1943 இல் ஸ்ரீ பரமாச்சாரியாள் சில காலம் அங்கு தங்கிய பொழுது ஒரு நாள், Image
தரிசிக்க வந்த பக்தர்களிடம் இங்கு அருகாமையில் எங்கேனும் கிணறு தோண்டும் வேலை நடைபெருகிறதா என்று கேட்டார்.

உடனே ஒரு பக்தர் முன் வந்த வழியில் ஓரிடத்தில் கிணறு தோண்டுவதை கண்டதாக கூறினார்.
உடனே நீ போய் கடப்பாரை மம்மட்டியுடன் ஒரிருவரை அழைத்து வா என்றார்.

சில நிமிடங்களில் 3 பேர் கடப்பாரை சகிதமாக பெரிவாளின் முன் வந்து நமஸ்கரித்தனர்.

பெரியவா அவர்களை ஆசிர்வதித்து தன்னுடன் வருமாறு அழைத்து பின்புறம் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றார்.
Read 13 tweets
Jan 27
#கலிக்கம்ப_நாயனார்_குருபூஜை

அடியார்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்ற பொழுது ஒரு விஷயம் தெரியவரும்.

அவர்கள் சிவநெறி, சிவத்தொண்டு, தவிர வேறு விஷயங்களைப் பெரிதாக நினைப்பதில்லை.
அவர்கள் செய்த சில செயல்கள் சமூகத்துக்கு ஏற்புடையதாக இல்லாததாக நாம் விவாதிக்கலாம்.

ஆனால் அவர்களிடமிருந்த இறை உணர்வும் பக்தியும், இறையடியார்களிடத்திலே கொண்ட அன்பும் நாம் உணர்வுப் பூர்வமாக விளங்கிக்கொண்டால் தான் அவர்கள் செய்யும் காரியங்களை நம்மாலே விளங்கிக்கொள்ள முடியும்.
கலிக்கம்ப நாயனார் திருப்பெண்ணாடகம் (பெண்ணாடம்) என்ற ஊரிலே வாழ்ந்து வந்தவர்.

அங்கே இருக்கும் சிவன் கோயிலில் (தூங்கனை மாடத் திருக்கோயில்) எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருக்கு பல தொண்டுகளை ஆற்றியவர். மிகப்பெரிய வணிகர்.
Read 13 tweets
Jan 27
#பழனி_கும்பாபிஷேக_சிறப்பு

பழனி திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று.

பழனி ஆண்டவரை பற்றி யாருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்கள்....!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக திகழும் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலின் ஆச்சரியங்கள்..
🌹 தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி) மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது.

மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.
🌹 இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை) வைத்து உடனே அகற்றப்படுகிறது.

அதாவது முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும் தான்.

இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
Read 13 tweets
Jan 26
*நீண்ட ஆயுள் தரும் மார்த்தாண்டேஸ்வரர்*

கருங்குளம் ஸ்ரீ குலசேகர நாயகி ஸமேத மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் :

ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் மார்த்தாண்டேஸ்வரர் என்னும் மன்னன் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து மாலையை சுற்றி அருமையான ஊர் ஒன்றை அமைத்தார்.
ஊருக்காக குளங்களை வெட்டினார்.

மரங்களின் நிழல்கள் பட்ட காரணத்தினால் எப்போதுமே குளங்கள் கருமையான நிறத்தில் காணப்பட்டது.

எனவே இந்த ஊரை கருங்குளம் என அழைத்தனர்.

மார்த்தாண்ட மன்னன் இந்த ஊரை அமைத்த காரணத்தினால் மார்த்தாண்டேஸ்வர கருங்குளம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது.
இதற்கிடையில் குலசேகரப்பட்டினத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்த குலசேகர மன்னன், தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு செல்லும்போது அன்னை இல்லாத மார்த்தாண்டேஸ்வர சிவனை கண்டு வணங்கி அங்கு ஒரு அன்னையை பிரதிஷ்டை செய்தார்.
Read 10 tweets
Jan 25
#பால்_பாயாசம்

ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு பால்பாயாசம் தயாரிக்கும் புதிய பாத்திரம்.......

குருவாயூர் கோவிலுக்கு நிவேத்யபால்பாயசம் தயாரிப்பதற்காக பீமன் வார்ப்பு குழுவினர் வந்தனர்.

திங்கள்கிழமை காலை கோயிலுக்கு 1500 லிட்டர் பால் பாயாசம் தயாரிக்கக்கூடிய பிரமாண்டமான 4 காத்தான்
ஓடு சரக் (வார்ப்) வழங்கப்பட்டது.

தேவஸ்வம் தலைவர் டாக்டர்.வி.கே.விஜயன் தேவஸ்வம் நிர்வாக குழு உறுப்பினர்கள் க்ஷேத்திரம் தந்திரி பிரம்மஸ்ரீ: பி.சி.தினேசன் நம்பூதிரிபாட், சி.மனோஜ், நிர்வாகி கே.பி.வினயன், தேவஸ்வம் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள்
தேவஸ்வம் தலைவர் டாக்டர் வி.கே.விஜயன் முன்னிலையில் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு பிரசாதம் வழங்கினர்.

கிரேன் மூலம் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டது.

மடப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அடுப்பில் 4 கத்தான் பொருட்கள் வைக்கப்பட்டன.
Read 5 tweets
Jan 25
#தர்மம்

அடுத்தவன் பொருளின்மீது ஆசைப்படாதவன் தர்மத்தைக் காப்பாற்றுகிறவன் - மஹா பெரியவா.

கடன் வாங்கியவர் திருப்பித்தர நினைக்கிறார்

கொடுத்தவரின் மகனோ தந்தை சொல்லாததால் பணத்தை வாங்க மறுத்த சம்பவம்.
கட்டுரையாளர் - ரா.வேங்கடசாமி.

புத்தகம் - காஞ்சி மகானின் கருணை உள்ளம்.

தட்டச்சு - வரகூரான் நாராயணன்.

நான் விவரிக்கும் இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. (கட்டுரை-2007 )
மகா பெரியவாள் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், இறக்கும் தருவாயில், தன் மகனை அருகே அழைத்துப் பல விவரங்களைச் சொன்னார்.

கடைசியாகத் தான் ரூ.100/- ஒருவரிடம் கடன் பட்டதாகவும், அதை மகன் தான் திருப்பித்தரவேண்டும் என்று சொல்லிய பின் உயிர் துறக்கிறார்.

அப்போது மகனுக்கு 62 வயது.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(