பிள்ளையார் சுழி...!

#உ என்ற குறியைப் பிள்ளையார் சுழியென்றும், அது பிள்ளையார் வழிபாட்டின் முதற்சின்னம் என்றும் கூறி அதற்குப் பல்வேறு புராணங்களையும் சொல்லி வைத்துள்ளனர்.

பழங்காலத்தில் தமிழர்கள் பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர்.
பனை ஓலைகள் எழுதுகின்ற பக்குவத்தில் இருக்கிறதா என்று கண்டறிய, ஏட்டை எழுத்தாணி முனையால் தீண்டிப் பார்ப்பதுண்டு.

இங்ஙனம் தீண்டிப்பார்க்கின்ற குறிக்குத் தீண்டற் குறியென்று பெயர். இந்தத் தீண்டற் குறியைத்தான் பின்னர் #பிள்ளையார்சுழி என்று கூறும் மரபாக்கிக் கொண்டுள்ளனர்.
இங்ஙனம் ஏடுதீண்டும் குறியானது பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டுக்கு வருமுன்னரே இருந்து வந்துள்ளதென்பது அறிஞர்கள் ஆய்ந்து கண்ட முடிபாகும்.

மேலும், புள்ளியிலாச் சுழி என்பது வெறும் சுழியத்தையே குறிக்கும். ஓலைச்சுவடியில் எழுதும்பொழுது புள்ளி வைப்பதில்லை.
புள்ளி வைத்தால் ஏடு பொத்துக் கிழிந்துவிடும். ஆகவே புள்ளியில்லாமல் வட்டமாகச் சுழியம் போடுவர்.

புள்ளியிலாச் சுழி என்னும் இச்சொல் வழக்கே பிள்ளையார் சுழி என்று மருவியிருக்க வேண்டும் என்பது தமிழறிஞர்கள் கருத்து.

- நன்று

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Jan 30
தமிழர் பண்பாட்டில் மீசை...!

ஆண்களின் முகத்துக்கு அழகு சேர்ப்பதில் மீசைக்கு ஒரு பங்குண்டு.

ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தும் உடற்கூறாகிய முகமயிர், ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்னும் பழமொழிக்கு அடிப்படை ஆயிற்று.

ஆண் - தன்மை - ஆண்மை எனப்படும். Image
ஆண்மை வீரத்தை உள்ளடக்கியதாகும். இதுவே மானம், பெருமை, வீரம், உயர்வு முதலிய உயர் குணங்களோடு மீசையை இணைத்துப் பேசும் வழக்கத்தை ஏற்படுத்தியது.

பொதுவாகத் தமது மேலுதட்டில் வளர்ந்துள்ள முடியை ஒழுங்கு
படுத்தி வளர்த்துக் கொள்வதில் ஆண்கள் ஈடுபாடு கொள்கின்றனர்.
பெண்களிடம் காணமுடியாத பெருமை கருதியே ஆடவர்களுக்கு இதில் ஓர் ஆர்வம் துளிர்த்திருக்கலாம்.

மேலுதட்டில் இருப்பதாலும், (மேனோக்கி வளர்ப்பதாலும்) மேன்மைகளுக்கெல்லாம் அடையாளமாக விளங்குவதாலும், மிசை - மேல் என்னும் சொல்லடியாக 'மீசை' என்னும் சொல்லை இதற்குரியதாக வழங்கியுள்ளனர்.
Read 25 tweets
Jan 29
த‌மிழ‌ர் வாழ்வில் பாட்டுப் பண்பாடு...!

பழங்காலத்திலிருந்தே எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், பாடிக்கொண்டே தொழில் செய்வது தமிழரின் உடலில் ஊறிப்போன வழக்கம்.

ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை என்பார்கள். குன்றக்குறவர் கிளியோட்டுவது முதல் நெய்தல் நிலத்தில் கலஞ்செலுத்தும் கப்பல்...
பாட்டுவரை தமிழர் வாழ்வில் பாட்டில்லாத தொழிலில்லை.

பயிர் நடும்போதும், களை எடுக்கும்போதும், நெல்லிடிக்கும் போதும், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போதும் மனம் உருகிப் பாடுவார்கள்.

மாடுமேய்க்கும் போது ஊதிய புல்லாங்குழல் அனைத்துயிர்களையும் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
விழாக் காலங்களிலும் பாட்டுக்கும் ஆட்டத்திற்கும் குறைவே இல்லை.

போர்க் காலங்களில் கூட எண்ணிலாத பாடல்கள் பாடியிருக்கின்றனர்.

அரசனின் தேரின் முன் பாடப்படுவது #முன்தேர்க்குரவை, தேரின் பின்பாடுவது #பின்தேர்க்குரவை.

தெய்வ வழிபாட்டின்போது குரவையாடிப் பாடுவது மரபாக இருந்தது.
Read 14 tweets
Nov 30, 2022
சங்ககால சிறார்களால் அணியப்பெற்ற அணிகலன்கள்!

தொடி, ஒருவட, இருவட, மூன்றுவட ஆரங்கள், வளை, மகரக்குழை (காதணி), காற்சரி எனப்படும் பாதசரம், கிண்கிணி, சிலம்பு ஆகிய அணிகலன்கள் சங்ககால சிறார்களால் அணியப்பெற்று அழகிற்கு அழகு ஊட்டின என்பதை சங்கப்பாடலடிகள்வழி நாம் அறியலாம்.
கீழ்க்காணும் #கலித்தொகை பாடல், தாய் தன் செல்வ மகனுக்கு அணிவித்து அழகு பார்த்த அணிகலன்களைப் படம் பிடித்துக்காட்டும்.

பொடிவைத்து இணைக்கப்பட்டமை அறியா வண்ணம், மீளவும் நெருப்பிலிட்டு ஒளிபெறச் செய்யப்பட்ட பொன்னாலான, இரு வடங்களில் அமைந்த #காற்சரி எனப்படும் #பாதசரம்.
'பொடி அழற்புறம் தந்த' என்ற தொடரால் அணிகலன்களின் பகுதிகள் பொடிவைத்து ஊதி ஊதி இணைக்கப்பட்டன என்பதும்,

அப்படிச் செய்தமை புலப்படா வண்ணம் மீண்டும் செந்தழலில் இடப்பட்டு ஒளியூட்டப்பட்டன என்றதுமான அன்றைய சிறந்த தொழில்நுட்பம் அறியப்படுகிறது.
Read 9 tweets
Jul 31, 2022
ஆகோள் பூசல்!

சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.

ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.

தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்..
வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.

'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
சங்க இலக்கியங்களில் #மழவர்கள் நிரை கவர்பவர்களாகவும், #மறவர்கள் நிரை மீட்பவர்களாகவும் காட்டப் பெறுகின்றனர்.

புகழ்மிக்க அம்பு #மழவர் கையில் உள்ளது. அது எய்யப் பெறும்போது வீல் என்ற ஒலியுடன் பாய்ந்து செல்லும். பகலிலே நிரையைக் கவர அம்பெய்துகின்றனர்.
Read 5 tweets
Jul 29, 2022
மந்திரச் சடங்குகள்....!

மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.

இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது.
தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.

வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
இதனால் பழங்காலத்தில் வேட்டையில் நல்ல மிருகங்கள் கிடைக்கவும், பயிர் உற்பத்திப் பெருகவும் தொல்குடி மக்கள் நம்பிக்கையின் பேரில் மந்திரச் சடங்குகளைச் செய்தனர்.

மந்திரச்சடங்குகளைத் தொத்து மந்திரம், ஒத்த மந்திரம் என வகைப்படுத்துவர். இருப்பினும் இவ்விரண்டுமே ஒத்துணர்வு மந்திரம் எனலாம்
Read 19 tweets
Jul 28, 2022
நீத்தார் வழிபாடு...!

பண்டைய நாளில் இறந்து போனவர்களது ஆவி பற்றியும், அதனுடைய சக்தியைப் பற்றியும், உலகம் முழுவதிலும் உள்ள இனக்குழு மக்களிடையே சில நம்பிக்கைகள் இருந்தன.

இறந்து போனவர்களுடைய ஆவிக்கு ஆற்றல் அதிகம். அது ஆக்கச் சக்தியாகவும், அழிவுச் சக்தியாகவும் வெளிப்படலாம்.
அந்த ஆவி அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும்.

அவற்றைச் சடங்குகள், வழிபாடுகள், சாந்திகள் போன்றவற்றால் மகிழ்வித்தால், அந்த ஆவி அக்குழுவிற்கு ஆற்றலளிக்கும் என்று நம்பினர்.

போரில் வெற்றி பெற்றுத் தரும். கால்நடைச் செல்வங்களைப் பாதுகாக்கும்.
வயல்களில் விளைச்சலை அதிகப்படுத்தும் என்று நம்பினர். இதற்காக முன்னோர்களுக்கு சடங்குகள் செய்து வழிபட வேண்டும் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது.

ஆப்பிரக்க மக்கள் இந்த ஆவிக்கு உருவம் கொடுத்தனர். கென்யா, கோல்ட் கொஸ்ட், நைஜீரியா போன்ற மக்களிடையே இத்தகைய வழக்கம் இருந்தது.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(