M.SivaRajan Profile picture
Jan 31 15 tweets 3 min read
#ரேணுகாதேவி_திருக்கோயில்

தங்கம் தழைக்கச் செய்யும் ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் கோவில் :
 
செம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம்.
செம்பனார் கோவில், கீழையூர், முடிகண்ட நல்லூர், மேலபாதி என நான்கு கிராமங்களின் எல்லையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

எனவே இந்த ஆலயத்தை ‘எல்லையம்மன் கோவில்’ என்றும் அழைக்கின்றனர்.
தல வரலாறு

விதர்ப்ப தேசத்து மன்னனான இறைவத வேந்தன், பிரம்ம தேவனின் அருள்பெற்றவன்.

இவனது மகள் ரேணுகா, காண்பவர் மயங்கும் அழகுப் பதுமையாக இருந்தாள்.

பருவம் வந்ததும் தனக்கு ஏற்ற கணவரை தேர்வு செய்ய, தந்தையின் அனுமதியுடன் குண்டலிபுரம் வனத்திற்கு வந்தாள்.
அங்கே இறைவனின் அருளைப் பெற கடுந்தவம் செய்து கொண்டிருந்த ஜமதக்னி முனிவரைக் கண்டு, அவர் அழகில் மயங்கினாள்.

அவரையே கணவனாக அடைய வேண்டும் என முடிவு செய்தாள்.

ஜமதக்னி முனிவரிடம், தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டவே, அவர்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டனர்.
இந்த தம்பதியருக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.

இவர்களின் மூத்த மகனான பரசுராமர், தவம் புரிவதற்காக மகேந்திர மலைக்குச் சென்றுவிட்டார்.

மற்ற மகன்களுடன் ஜமதக்னி முனிவரும், ரேணுகாவும் வசித்து வந்தனர்.
கற்புக்கரசியான ரேணுகா, ஆற்றங்கரைக்குச் சென்று அங்குள்ள மணலில் ஒரு குடம் செய்து, அதில் நீர் பிடித்து வருவாள்.

அதைக் கொண்டு ஜமதக்னி முனிவர் சிவபூஜை செய்வார்.

ஒரு முறை நீர் எடுக்கச் சென்ற ரேணுகா, நீரில் ஒரு கந்தா்வனைக் கண்டு மனம் மயங்கினாள்.
இதனால் அவள் செய்த மண் குடம் உடைந்தது.

இதை தன் தவ வலிமையால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மூன்று மகன்களிடமும் தாயின் தலையை வெட்டி விடும்படி உத்தரவிட்டார்.

ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.

உடனே பரசுராமரை, தன் தவ சக்தியால் அழைத்து, தாயின் தலையை துண்டிக்கச் சொன்னார்.
மறுபேச்சு பேசாது, தாயின் தலையை துண்டித்தார் பரசுராமர்.

இதனால் மகிழ்ந்த முனிவர், “உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார்.

உடனே பரசுராமன், “தாயை உயிரோடு திருப்பித் தாருங்கள்” என்றார்.

அதன்படியே ரேணுகாவை உயிரோடு கொண்டு வந்தார் ஜமதக்னி முனிவர்.
மேலும் “உன்னை நினைப்பவர்களை நீ காத்து அருள்புரிவாய்” என்ற வரத்தையும், ரேணுகாவுக்கு வழங்கினார்.

இந்த ரேணுகா தேவியின் ஆலயம்தான் முடிகண்டநல்லூரில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் சுமார் 60 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது.
உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம்.

எதிரே நந்தியும், வலதுபுறம் பிள்ளையாரும் இருக்க, அடுத்து மகாமண்டபம் உள்ளது.

மகாமண்டபத்தின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கிறார்கள்.
தனி சன்னிதியில் ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி, பரசுராமர் வீற்றிருக்கின்றனர்.

இதையடுத்து அர்த்த மண்டபமும், தொடர்ந்து கருவறையும் உள்ளது.

கருவறையில் அன்னை ரேணுகாதேவி கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
இங்கு அன்னையின் தலை பகுதி மட்டுமே கருவறை தெய்வமாய் அருள்பாலிக்க அன்னையின் பின்பறம் பல நூற்றாண்டுகளை கடந்த மண்புற்று ஒன்று அன்னையின் சிரசைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.

அன்னைக்கு நடைபெறும் சொர்ணாபிஷேகம், இங்கு வெகு பிரசித்தம்.
புதியதாக நகைகள் வாங்கும் பெண்கள் அதை அன்னைக்கு அணிவித்து, அன்னைக்கு சொர்ணாபிஷேகம் செய்து தங்கள் நகைகளை திரும்ப வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் தங்கள் வீட்டில் தங்கம் மேலும் தழைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
ஆலயத்தின் தலவிருட்சம் வேம்பு.

தீர்த்தம் வடக்கே உள்ள குளம்.

தவிர ஆலயத்தின் பின்புறம் காவிரி நதி தெற்கு வடக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

தேவக்கோட்டத்தில் தெற்கில் ஐந்து தலை நாகத்தின் சிற்பமும், மேற்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க,
வடக்கில் நாகம் சிவனை பூஜை செய்யும் அற்புத சிற்பம் காணப்படுகிறது.

அமைவிடம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை- திருக்கடையூர் சாலையில் உள்ளது செம்பனார் கோவில்.

இதன் அருகே உள்ளது முடிகண்டநல்லூர் ஜமதக்னி ரேணுகாதேவி ஆலயம்.

#ரேணுகாதேவி_ஆலயம்

#ஜமதக்னி_ரேணுகாதேவி_கோவில்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 2
#தைப்பூசம் பற்றிய 40 அரிய தகவல்கள்

(தைப்பூசம் 5.2.2023 )

1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார். Image
3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.
5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான்.

அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.
Read 35 tweets
Feb 2
#வீணா_தட்சிணாமூர்த்தி

*யோகமும் ஞானமும் தரும் வீணா தட்சிணாமூர்த்தி*

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது துடையூர். Image
இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் விஷமங்களேஸ்வரர்.

சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஆலயத்திற்குள் நுழையும் போதே இடது புறம் ஸ்ரீ தேவி - பூ தேவி சமேதராக அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன்,பின் வலக்கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன்
திருமால் காட்சி தருகிறார்.

பொதுவாக சிவாலயங்களில் கருவறையை நோக்கி இருபுறங்களில் சூரிய சந்திரர்கள் காட்சி தருவர்.

இங்கு சூரியன் இருக்க வேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தேவியரோடு காட்சி தருவது அரிது என்கிறார்கள் பக்தர்கள்.
Read 11 tweets
Feb 1
#கண்ணப்ப_நாயனார்_குருபூஜை

வேடர் குலத்தில் பிறந்த திண்ணன், வேட்டை ஆடுவதில் சிறந்தவர்.

ஒருமுறை வேட்டையாடச் சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார்.

சிவன் மீது அன்பு பெருகியது. Image
அவரைத் தன் குணத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வணங்க ஆரம்பித்தார்.

தினசரி வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தார்.

மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, வேட்டையாடிய பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார்.
இதைக் கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவாசரியார் மனம் வருந்தினார்.

இறைவனிடம் முறையிட்டார்.

கண்ணப்பரின் அன்பினை சிவாசரியாருக்கு உணர்த்த ஒரு நாடகம் நடத்தினார் ஈசன்.

திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தின் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான்.
Read 8 tweets
Feb 1
ஸ்ரீ விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம் :

*திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும். Image
ஓம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம்
Read 9 tweets
Feb 1
#ஸ்ரீ_கணபதி_சஹஸ்ரநாம_ஸ்லோகங்களும்_பலன்களும் :

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது.

அதைத் தினமும் கூற முடியாதவர்கள்,

சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.

இது அனுபவத்தில் கண்டது. Image
1.காரிய தடை நீங்க:-

மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

இதை தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும்.

ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.
2.எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க :

வஜ்ராத்யஸ்த்ர பரீவார:
கனசண்ட ஸமாஸ்ரய :
ஜயோஜய பரீவார :
விஜயோ விஜயாவஹ :||

இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள் ,எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.
Read 10 tweets
Feb 1
#வாமணபுரிஷ்வரர்

*கருவறையில் பள்ளியறை கொண்டிருக்கும் ஸ்ரீ வாமணபுரிஷ்வரர்*

கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி கிராமத்தில் எழுந்தருளி இருப்பது ஸ்ரீ அம்புஜக்ஷி ஸமேத ஸ்ரீ வாமணபுரிஷ்வரர் கோயில். Image
இத்தலமானது மகாவிஷ்ணுவிற்குப் பாவ விமோசனம் அளித்த ஸ்தலம் என்றும்,

18 சித்தர்களில் ஒருவரான அகத்திய முனிவர் இதனால் வரை இங்குக் காட்சி தருவதாகவும் கூறப்படுகின்றது.

சுயம்பு மூர்த்தியாக மூலவர் ஸ்ரீ வாமணபுரிஷ்வரர் காணப்படுகின்றார்.
இத்தலத்தில் தனியாகப் பள்ளியறை சன்னதி கிடையாது மூலக்கருவரையில் பள்ளியறையாகக் காணப்படுவதால் எம்பெருமானை எம்பெருமானை சதாக்காலமும் தரிசிக்க முடியாது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(