டீ Profile picture
Jan 31 3 tweets 1 min read
இளைஞர்களே!!! தங்கைக்கு மணம் முடித்து விட்டு திருமணம் செய்யலாம், வீடு கட்டி விட்டு, செட்டில் ஆகி விட்டு திருமணம் செய்யலாம் என திருமணத்தை தள்ளிப் போடாதீர்கள். இப்போது உள்ள இளம் பெண்கள் இரண்டு வயதுக்கு மேல் வித்தியாசம் என்றாலே யோசிக்கிறார்கள். 32 தாண்டி விட்டாலே முந்தைய தலைமுறை
என தயங்குகிறார்கள். முன்னர் பெண்ணுக்கு 30 தாண்டி விட்டாலே மணமகன் கிடைப்பது கடினம் என்பார்கள். இப்போது 35 வயது வரை பெண்ணிற்கு டிமாண்ட் உள்ளது. நீ உன் வீட்டு கஷ்டத்தை தீர்த்து வந்ததற்கு நான் பலியாடா என்கிறார்கள். நிச்சயமான உண்மை. இன்னொருவர் வீட்டு கஷ்டத்திற்கு அடுத்த வீட்டு பெண்
ஏன் சிலுவை சுமக்க வேண்டும்? தற்போது எல்லோரும் தன்னிறைவாக இருக்கும் பொழுது அடுத்தடுத்த வாய்ப்புகளும் வரிசை கட்டி நிற்கும் பொழுது நல்வாய்ப்பை தேடுவது தானே சரி. இதைத்தானே சென்ற தலைமுறையில் மணமகன் வீட்டார் செய்தார்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with டீ

டீ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @teakkadai1

Jan 9
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் திறந்து செயல்பட ஒன்றிய அரசு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி உலக தர வரிசையில் 500 இடங்களுக்குள் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள்
இந்திய இறையாண்மைக்கு எதிரான படிப்புகளை நடத்தக்கூடாது. நேரடி வகுப்புகள் தான் நடத்த வேண்டும். வெளிநாட்டு பேராசிரியர்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் இந்திய பேராசிரியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதுபோல இந்திய மாணவர்கள் தவிர வெளிநாட்டு மாணவர்களும் இங்கு வந்து கல்வி பயிலலாம்.
அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாட்டில் என்ன அட்மிஷன் கிரிட்டீரியா கடைப்பிடிக்கப்படுகிறதோ அதுவே இங்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். போலவே இந்திய ஒன்றியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அந்த கேம்பஸ்கள் இயங்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஆண்ட்டி ராக்கி விதிமுறைகள் போன்றவை.
Read 7 tweets
Dec 17, 2022
நாகர்கோவில் மாடல் அப்படிங்கறது வந்து ஒரு வாழ்வியல் வழி. பெரிய பேக்டரிஸ் எதுவும் நாகர்கோவில் பக்கம் இல்லை தொழில் அப்படின்னு பார்த்தா மீன்பிடித் தொழில் மட்டும்தான் ஆனா இந்த நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகள் அடைந்திருக்கிற வளர்ச்சி அருமையா இருக்கு
ஒரு காரணம் உடனே தெரிகிறது அங்கு இருக்கிற கல்வி வளர்ச்சி, 1960 களிலேயே 10 கல்லூரிகள் அங்க இருந்திருக்கு 2006 டைமில் நாகர்கோவில் பகுதியில் 40 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இருந்தது. ஆரம்பத்திலிருந்து அங்கு இரு பாலரையும் படிக்க வைத்து வந்திருக்கிறார்கள்
பெண் கல்விக்கு நல்ல முக்கியத்துவம் நாகர்கோவில் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது நிறைய வீடுகள்ல பார்த்தோம்னா அப்பா அம்மா ரெண்டு பேருமே டீச்சர் இருக்காங்க. நிறைய கல்லூரி பேராசிரியர் இருக்காங்க அதுக்கு அடுத்து இன்னொரு விஷயம் ஆரம்பத்துல இருந்து அவங்க வெளிநாடுகளுக்கு
Read 7 tweets
Nov 2, 2022
EWS கேட்டகிரியில் வரும் பிராமணர்கள் உள்ளிட்ட சில ஜாதியினர் தற்போது திமுகவிற்கு எதிராக வெறி கொண்டு களமாடத்துவங்கியுள்ளார்கள். காரணம் என்ன வெனில் திமுக இல்லாவிட்டால் ஒன்றிய அரசு பணிகளைப் போல தமிழ் நாட்டிலும் 10% இட ஒதுக்கீட்டைப் பெற்றுவிடலாம் என. தமிழ்நாட்டில் அவர்களின் பங்கு 3%
தான். ஆனால் இட ஒதுக்கீடு 10%/கிடைக்கும். விண்ணப்பித்த எல்லோருக்கும் அவர்களுக்கு அரசுப்பணி கிடைக்கும். மற்ற BC/MBC/ SC/ST வெகுவாக பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் இவர்கள் open competition 31% ல் வலுவாக போட்டியிட்டு வென்று வருகிறார்கள். எங்கே இவர்கள் போகும் வேகத்தால் நம்மை
முந்திச் சென்று எல்லாத்துறைகளிலும் நம்மை பதிலீடு செய்து விடுவார்களோ என அச்சம் அவர்களுக்கு. அவர்களுக்கு கோவில்களில், மக்களின் பூஜை, புனஸ்காரங்களில் 100% இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆடிட்டிங் துறையிலும் அவர்களின் ஆதிக்கம் தான். அது தவிர்த்து மற்றவற்றில் அவர்களை பிராமணர் அல்லாதோர்
Read 5 tweets
Oct 12, 2022
டாக்டர் புருனோ வழக்கு பற்றி தெரியாத மக்களுக்காக.

புருனோ அவர்களது மனைவி மருத்துவர் அமலி அவர்கள் திருமணத்திற்கு முன் இருந்தே மன அழுத்தப் பிரச்சினை கொண்டவர். திருமணத்திற்குப் பின் அதற்குரிய சிகிச்சையும் பெற்றுக் கொண்டவர். தன் மருத்துவ மேற்படிப்பையும் சைக்ரியாட்ரி துறையிலேயே
தேர்ந்தெடுத்தவர். இதற்கிடையே அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மன நல சிகிச்சைகளும் பெற்று வந்தார். மருத்துவர் ஷாலினி அவர்களிடமும் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இரண்டாம் குழந்தையை கருவுற்றிருந்த போது மன அழுத்தம் தாங்காமல் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு 2 நாட்கள் முன்பு கூட புருனோ அவர்கள் அவரை மன நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தார். போஸ்ட் மார்ட்டம் முடிந்து தற்கொலை என மருத்துவர்கள் சான்றழித்தனர். அதன் பின் 3 வாரங்கள் கழித்து மருத்துவர் புருனோ, தன் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அமலி வீட்டார் புகார் அளித்தனர்.
Read 13 tweets
Oct 7, 2022
சுகாதார விழிப்புணர்வு, பெண் உரிமை கொடுத்தலில் தமிழ்நாடு எல்லா மாநிலங்களையும் விட முண்ணனியில் உள்ளது. கிட்டத்தட்ட 90% பெண்கள் (15-24 வயது) சானிடரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் 30% பெண்களும் (இதே வயதுக்குழுவில்), பீகாரில் 33%, மத்திய பிரதேசத்தில் 35%,
குஜராத்தில் 49% பேர் தான் சானிடரி நாப்கின் உபயோகிக்கிறார்கள். ஏன் வளர்ந்த மாநிலங்களான கர்நாடகாவில் 55%, கேரளாவில் 60%, ஆந்திராவில் 67% 15-24 வயது பெண்கள் தான் உபயோகிக்கிறார்கள். இலவச நாப்கின் கொடுத்ததற்கு நாக்கின் மேல் பல்லைப் போட்டு பேசியவர்களே, மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்த
விழிப்புணர்வு கொடுக்காததால் தான் அந்த மாநிலப் பெண்களுக்கு இந்த அவல நிலை. 2006-11 திமுக ஆட்சியில் இந்த திட்டம் செயல்பட துவங்கியது. பள்ளி மாணவிகள் தயக்கம் இன்றி பெற ஏற்பாடு செய்யப்பட்டது. என் சிறுவயதில் ஆற்றங்கரை செல்லும் வழியில், காலியிடங்களில் என பெண்கள் மாதவிலக்கிற்கு
Read 4 tweets
Sep 12, 2022
உடன் பணியாற்றும் நண்பருக்கு நேற்று ஹார்ட் அட்டாக். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே 45-50 வயது bandல் இருப்பவர்களில் (உறவு/நட்பு) ஏழெட்டு பேருக்கு வந்து விட்டது. சிகிச்சைக்குப் பின் அவர்களிடம் நலம் விசாரித்து இயல்பாக்ச் பேசும் போது அவர்கள் சொன்னது இரண்டு காரணங்கள் தான்.
முதல் காரணம், இருக்கும் வேலையைக் காப்பாற்ற ஓடுவது, ஸ்ட்ரெஸ் ஆவது. இரண்டாவது வீட்டுப் பிரச்சினை. 50 வயது என்பது ஒரு ஆணின் பங்கு குடும்பத்திற்கு மிகத்தேவையான ஒன்று. பிள்ளைகளின் உயர் கல்விக்கு அலைய, வேலை கிடைக்கும் வரை சப்போர்ட் செய்ய, திருமணத்திற்கு என. அத்தகைய resource ஆக
இருக்கும் ஆண், ஏன் குடும்பத்திற்கு அஞ்ச வேண்டும்? இவ்வளோ நாள் பார்த்திட்டேன். முடிஞ்ச அளவு இன்னும் வேலை பார்ப்பேன். குடும்பத்திற்கு சப்போர்ட் பண்ணுவேன். தேவையில்லாம மத்தவங்களோட கம்பேர் பண்ணி என்ன கரிச்சுக் கொட்டாத, அத உனக்குத்தான் நஷ்டம்னு புரிய வச்சுடனும். வேலை, படிப்பு
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(