மருதமலை...

*7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருத்தல வரலாறு*🌹

மருதமரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது ஆறுபடை வீடுகளை கொண்டு குன்றதோரும் குமரக்கடவுள் எழுந்தருளி இருக்கிறார்.
மூலவர் - சுப்பிரமணிய சுவாமி/தண்டாயுதபாணி/மருதாசலமூர்த்தி (மருதப்பா)

அம்மன்/தாயார் - வள்ளி, தெய்வயானை

தல விருட்சம் - மருதமரம்

தீர்த்தம் - மருத தீர்த்தம்

பழமை சுமார் - 800 ஆண்டுகள்
ஆறுபடை வீடுகளை கொண்டு குன்றதோரும் குமரக்கடவுள் எழுந்தருளி இருக்கிறார். இதில் கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
இந்த கோவில் கோவை நகரில் இருந்து வடமேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில், தரை மட்டத்தில் இருந்து 500 அடி உயரத்தில் மலையில் அமைந்து உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்த மருதமலை கோவிலின் 3 புறங்களிலும் மயில் தோகை போல விரிந்து மலை காட்சி அளிக்கிறது. இதனால் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து அருள்பாலிப்பது போன்ற காட்சி மனக்கண் முன் தோன்றுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
மருதமரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் மருத மால் வரை, மருத வரை, மருத வேற்பு, மருதக் குன்று, மருதலோங்கல், கமற் பிறங்கு, மருதாச்சலம், வேள் வரை, என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது.
மருதமலை ஆண்டவன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் மருத மரங்கள் நிறைந்த மலைக்கு தலைவன் என்பதாகும். மருத மலையான், மருதப்பன், மருதாச்சல மூர்த்தி போன்ற பெயர்களாலும் இந்த மருதமலையில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.
புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம்,
முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.
இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது.
மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன.
மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன.
இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.
மருதமலையில் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் பிரதிஷ்டை செய்த லிங்கம்கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் பழனி அருகே உள்ள இடும்பன் மலையில் அமர்ந்து இடும்பன் சுவாமிகளை வழிபட்டு வருவார்.
இவர், கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் உள்ள இடும்பன் சுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இப்படி வழிபாடு செய்ய வரும் போது தான் மருதமலையில் உள்ள இடும்பன் கோவிலின் பின்புறம், இடும்பனை சுற்றி வரும் பிரகாரத்தில் மருதமரத்தார் மருந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்.
இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நோய்களை தீர்த்து அனைத்து நலங்களையும், வளங்களையும் வழங்குவதற்காக இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக பக்தர்களிடம் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தற்போது மருதமலையில் இவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த லிங்கத்தை பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம். தினமும் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழிபாடு செய்யலாம்.
மருதமலைக்கு வரும் பக்தர்கள் முதலில் அங்குள்ள தான் தோன்றி விநாயகர், இடும்பன் சுவாமிகள், மருந்தீஸ்வரர் லிங்கத்தை தரிசித்து விட்டு தான் முருகப்பெருமான், பாம்பாட்டி சித்தரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இதன் மூலம் மருந்தீஸ்வரர் லிங்கம் பக்தர்களின் மனங்களில் பக்தியை சித்தியாக்கி பரவசம் கொள்ள செய்வதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மருதமரத்தார் மருந்தீஸ்வரர் லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

🙏

வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Feb 7
*நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்.*

தஞ்சாவூர் வடக்கு வீதியிலிருந்து எல்லையம்மன் கோயில் தெருவுக்குச் செல்லும் ராஜகோபால சுவாமி கோயில் தெரு, வடக்கு வீதியுடன் இணையும் இடத்தில் கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் இருக்கிறது ராஜகோபால சுவாமி கோயில்.

1 Image
தற்போது கோயிலின் கருவறையில் ராஜகோபாலன் திருமேனிக்குப் பதிலாக சக்கரத்தாழ்வார் திருமேனியே உள்ளது. இது பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

2
இந்தத் திருக்கோயில் கருவறை அழகிய கற்றளியாகவும், நந்தவனங்களும், பிற்காலத்தில் எடுக்கப்பெற்ற மண்டபங்களும் சூழ்ந்ததாகவும் ஒரே கோபுர வாயிலோடு திகழ்கிறது.

3
Read 44 tweets
Feb 6
*விண்ணிழி விமானங்கள் கொண்ட கோயில்கள் நம் தமிழ்நாட்டில் இருப்பது பற்றிய பதிவு. சிலருக்கு இந்த விண்ணிழி விமானம் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். உங்களுக்கான பயனுள்ள சற்றே நீண்ட பதிவு. Image
மதுரை சொக்கநாத பெருமான் கோவில் மூலஸ்தான கோபுரத்தில் மறைந்துள்ள ஒரு அபூர்வ ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

"விண்ணிழி விமானம்" என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

தெரியுமா?தெரியுமா?ன்னு கேட்டா எப்படி தெரியும் என நீங்கள் நினைப்பது புரிகிறது.
மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமானால் கீழ்கண்ட பதிவை படிப்பதுடன்,பதிவில் கூறப்பட்டுள்ள விசயங்களை உறுதிபடுத்தி கொள்ள எனது அய்யன் சொக்கநாத பெருமான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Read 27 tweets
Feb 6
*செரப்பணஞ்சேரி அருள்மிகு வீமீஸ்வரர் ஆலயம்..*

*மூலவர் : வீமீஸ்வரர்*

*அம்மன்/தாயார் : ஸ்வர்ணாம்பிகை*

*பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்*

*செரப்பணஞ்சேரி*
காஞ்சிபுரம்*

*திருவிழா*

*மாதப் பிரதோஷம், மகா சிவராத்திரி, கிருத்திகை, சோமவாரம், தமிழ்ப்புத்தாண்டு, சாரதா நவராத்திரி*

1 Image
*தல சிறப்பு*

*மாசியில் காலை 7 மணிக்கு சூரிய ஒளி சிவனைச் சுற்றி விழுவது தலத்தின் சிறப்பு.*

*ஆலயத்தைச் சுற்றி வரும் போது கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, யோக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகன், ராஜதுர்காம்பிகை அமைந்துள்ளன.*

2
*பிரார்த்தனை*

*பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.*

*நேர்த்திக்கடன்*

*27 நட்சத்திரங்களும் வழிபட்ட வீமீஸ்வரரை திங்கள், ஞாயிறு கிழமைகளில் தீபம் ஏற்றி வில்வதளத்தால் அர்ச்சித்து வழிபட மங்களங்கள் உண்டாகும்.*

3
Read 17 tweets
Feb 5
*திருப்பதி ஏழுமலையானுக்கு
படைக்கப்படும்
நைவேத்தியங்கள்*

*திருப்பதிஏழுமலையானுக்கு பலவிதமான நைவேத்யங்கள் ஒவ்வொரு வேளைக்கும் படைக்கப்படுகிறது*.!
*லட்டு, வடை, தயிர் சாதம் மட்டுமே அவருக்கு படைக்கப்படுவதாக பெரும் பாலானவர்கள் கருதுகின்றனர்*.

*ஒரு சில நேரங்களில் மிளகு அன்னம், தோசை, பாதாம் பருப்புடன் கூடிய பால் ஆகியவையும் படைக்கப்படுகிறதாம்*.
*திருமலை திருப்பதி தேவஸ்தான பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் எழுதிய *‘The Sacred Foods of God’* *என்ற ஆங்கில புத்தகத்தில் தான் இந்த அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன*.
Read 19 tweets
Feb 5
*தைப்பூசம் பற்றிய சிறப்பு தகவல்கள்:*

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.
1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.
Read 42 tweets
Feb 5
*தொட்டது துலங்கும் தைப்பூசத் திருநாள்*

பழனியில் தைப்பூசம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். பாலகனின் கோபம் காரணமாக உருப்பெற்ற இத்தலத்தின் மகிமை சொல்லில் அடங்காதது. அந்தத் தலவரலாறு பொதுவாக அனைவரும் அறிந்ததே.

1
தனக்குப் பழம் கிடைக்காத கோபத்தில் முருகன் கயிலையைவிட்டு வந்தமர்ந்த தலமல்லவா பழநி! சான்றோர் பலரும் அவரின் சினம் நீக்க முயன்றும் முடியாதுபோகவே, பெற்றோரே இத்தலத்தில் பிரசன்னமாகி ‘‘முருகா, நீயே ஒரு ஞானப்பழம்தானே! பழம் நீயே’’ என்று அன்பொழுக கேட்க, முருகனின் மனம் உருகியது.

2
பழம்நீ என்ற ஒற்றைச் சொல்லில் முருகனின் சினந்தணிந்த இத்தலமே பின்பு பழநி என்று மருவியது.

சினம் கொண்ட முருகன் மயிலுடன் வந்து இறங்கிய இடம் திருஆவினன்குடி. முந்தைய காலங்களில் பழநி, திருஆவினன்குடி என்றே அழைக்கப்பட்டது.

3
Read 58 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(