உணவும் - சமூகமும் - பண்பாடும்!

#உள் என்ற வேர்ச் சொல்லிலிருந்தே #உண், #ஊண், #உணவு ஆகிய சொற்கள் பிறந்தன.

தாய்ப்பாலாகிய நீர் உணவே மனிதனின் முதல் உணவாக அமைந்தாலும், தண்ணீரை ஓர் உணவாகத் தமிழர் கருதுவதில்லை.

தாய்ப்பாலுக்கு முன்னதாகத் தந்தையின் உடன்பிறந்தாள் குழந்தையின் நாக்கில்..
தொட்டு வைக்கும் இனிப்புத் திரவமே அதன் முதல் உணவாகும். இதற்குத் #சேனை என்று பெயர்.

தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியிலும் தமிழ் மொழி பேசுவோரிடமும் இப்பழக்கம் இன்று வரை உள்ளது.

காய், பழம், கிழங்கு என்று இயற்கை உணவளித்த காரணத்தாலேயே மண்ணைத் #தாய் என மனிதன் கொண்டாடினான்.
காட்டு நெருப்பில் வெந்த இறைச்சியும், தேனுமே மனிதன் முதலில் செயற்கையாகக் கண்ட உணவுப் பொருள்களாகும்.

மனித மிருகம், மனிதனாக மலர்ந்தபொழுது கூட்டு வேட்டையில் வேட்டை இறைச்சியைப் பங்கிட்டுக் கொள்ளும் விதமாகக் "கூட்டு உண்ணலும்" நடந்தேறியுள்ளது.
#எயினர்கள் (வேடர்கள்) இறைச்சியைப் பங்கிட்டு உண்ணுவதைக் #கூட்டூண் என இலக்கியங்கள் பேசுகின்றன.

ஊர் நடுவே அமைந்துள்ள மன்றத்தில் #கூட்டூண் நடந்துள்ளது.

வாழ்க்கை அனுபவங்கள் விரிவடைய விரிவடைய, குழந்தை உணவு, நோயாளி உணவு, கருவுற்ற பெண்ணின் உணவு, காலம் சார்ந்த உணவு...
சடங்கியல் சார்ந்த உணவு, காலமும் பொழுதும் சார்ந்த உணவு என உணவுப் பழக்கவழக்கங்கள் மேலும் மேலும் விரிவடைந்தன.

தொன்மையான தமிழ்ப் பண்பாடு உணவு சார்ந்த எல்லா வகையான அசைவுகளையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.

பால்குடி மறந்த குழந்தைக்குச் #சோறூட்டல் என்பது சில சாதியாரால்...
ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுகிறது.

விழாக்கள் இனிப்புணவோடு தொடர்புடையன. குழந்தையின் காதணி விழாவில் இனிப்புக் கலந்த பச்சரிசி சிறிதளவு விருந்தினருக்கு வழங்கப்படுகிறது.

உழைப்புச் சாதியாரின் குழந்தைகளுக்குத் தானிய உணவையும், புலால் உணவையும் கொடுப்பதற்கு முன்னர்க் கோழியின் ஈரலை...
அவித்து நசுக்கிக் கொடுப்பர். இது இரைப்பையின் செரிமானச் சக்தியை வலுப்படுத்தும் உணவாகும்.

எல்லாப் பழங்குடியினரிடமும் சாக்லெட் என்னும் தின்பண்டத்தின் மூல வடிவம் ஏதேனும் ஒரு வகையில் உள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அது ஏலமும் சுக்கும் கலந்த ‘சில்லுக் கருப்பட்டி’ யாகும்.
இவற்றோடு இலட்டுவத்தையும் எள்ளுருண்டையையும் குழந்தை உணவாகப் #பெரியாழ்வார் பதிவு செய்கிறார் (கன்னலின் இலட்டுவத்தோடு காரெள்ளின் உண்டை). இதுவும் கருப்புக்கட்டி கலந்த இனிப்பு உணவு.

50 ஆண்டுகளுக்கு முன்வரை #கருப்புக்கட்டிக்கூழ் (கூழ்ப் பதநீர்) நெல்லுக்கு மாற்றாகத் தென் மாவட்டங்களில்
விற்கப்பட்டதும் உண்டு. இதுவும் குழந்தை உணவே ஆகும்.

நாவல், இலந்தை முதலிய பழங்கள் குழந்தைகளின் கோடைக்கால உணவாகும்.

மழை முடிந்த காலங்களில் #புற்றீசல் பிடித்துப் பொரியாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் தமிழ்நாட்டில் உள்ளது.
பூப்படைந்த பெண்ணின் சிறப்பு உணவாக உளுந்தங்களியும் (உளுந்து மிகச்சிறந்த புரோட்டீன் சத்து, பச்சரிசி மாவால் செய்யப்பட்ட) நல்லெண்ணெயும் தரப்படுகின்றன.

நகர்ப்புறம் சார்ந்த சமூகங்களில் உழுந்தங்களிக்கு மாற்றாக உளுந்து வடை தரப்படுகிறது. திருமண விருந்துகளில் பாயசம் ஒரு இன்றியமையாத உணவு.
உளுந்து முதலான தானியங்களைத் திரித்து (அரைத்து அல்ல) இனிப்புடன் கூட்டிச் செய்யப்பட்ட இதனையே,

‘உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. உரையாசிரியர்கள் இதைக் #கும்மாயம் என்பர்.
இன்றளவும் ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று தென் மாவட்டங்களில் #கும்மாணம் என்ற பெயரில் (குறிப்பாக வேளாளர் வீடுகளில்) இப்பண்டம் செய்யப்படுகிறது.

எனவே, திருமண விருந்துகளில் இறுதியாகப் #பாயசம் வழங்கப்படுவது பழைய தமிழர் வழக்கமென்பது தெரிய வருகிறது.
கேரளத்தில் திருமண விருந்துகளில் பாசிப் பருப்பு, அடை (அப்பளம்), பலாப்பழம், பால், சேமியா, சவ்வரிசி என ஐந்திற்கும் மேற்பட்ட பாயசங்கள் பரிமாறப்படுகின்றன.

பழங்குடிகளின் சமூக அடிக் கட்டுமானங்களில் ஒன்று விருந்து என்பதாகும்.
காதல் மணம், உடன்போக்கு ஆகியவை மணமகன் தரும் #விருந்து என்பதாலேயே ஒழுங்குபடுத்தப்பட்டன.

நகர்ப்புற நாகரிகத்தில் இன்றுவரை பாராட்டும் பதவி உயர்வும், விருது பெறுதலும் விருந்தாலேயே அடையாளப்படுத்தப்படுகின்றன என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
புதியது எனும் பொருள்தரும் #விருந்து எனும் சொல்லைப் பல்சுவை உணவு என்ற பொருளில் முதன்முதலில் வள்ளுவரே ஆளுகின்றார்.

இறப்பிற்கான உணவு வகைகள் பெருமளவு நம்பிக்கை சார்ந்தவை. குறிப்பாகக் கீரை வகைகள் தமிழ்ப் பண்பாட்டில் எளிமையின் சின்னமாக அமையாமல், ஏழ்மையின் அடையாளமாகவே கருதப்படுகின்றன.
கீரைவகைகளிலும் #அகத்திக்கீரை இறப்பின் குறியீடாகவும், இறப்பு நிகழ்ந்த வீட்டில் முதல் இரண்டு நாள் உணவாகவும் வைக்கப்படுகிறது.

எனவே, வீட்டின் எல்லைக்குள் #அகத்தி வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

வயதுக்கேற்ற உணவு என்பது சமூகப் பொது வழக்கம்.
கஞ்சி (அ) அவல் கஞ்சி என்பது வயது முதிர்ந்தோருக்குரிய உணவு.

மகப்பேறு கண்ட பெண்ணுக்குரிய உணவு மருத்துவப் பயன் சார்ந்ததாகும்.

குழந்தை பெற்ற பெண்ணுக்குக் குளிர்ந்த நீரோ, பன்னீர் கலந்த உணவோ தரப்படுவதில்லை.

மேல் சாதியினர் தவிர்ந்த பிற சாதியினரில் கருவாட்டுக் குழம்பு (அ) சுறாமீன்
குழம்பு முக்கிய உணவு.

சுறாவுக்குப் #பால்சுறா (அ) #பிள்ளைச்சுறா என்றே பெயர்.

அத்துடன் முள் முருங்கை (கல்யாண முருங்கை) தொடக்கமாக 21 நாட்கள் வெவ்வேறு வகையான இலைகளையும், கீரைகளையும் குழந்தை பெற்ற தாய்க்குச் சமைத்துக் கொடுப்பது வழக்கம்.
அத்துடன் குழந்தை பெற்ற பெண் இந்த 21 நாட்களும் 'வெற்றிலை, பாக்கு மெல்லுதல்' ஒரு கடமையாகும்.

மகப்பேற்று மருத்துவத்தில் (Post-natal treatment) குழந்தைக்கான ‘பால் சாரமே' முதலிடம் பெறுகிறது.

குழந்தை பெற்ற பெண்ணின் சீரண முறையை ஒழுங்குபடுத்தச் #சட்டிக்காயம் எனப்படும்...
பெருமளவு காயங்கலந்த குழம்பு (லேகியம்) இன்றுவரை தரப்படுகிறது.

குழந்தையின் நலம் கருதி இளநீர், நுங்கு போன்ற உணவு வகைகளைத் தாய்க்குக் கொடுப்பதில்லை என,

குழந்தைக்காகத் தாய் மருந்துண்பதை கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல் பதிவு செய்கிறது. Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Feb 8
புலம்பெயர்ந்தோர் சமையல்...!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையினின்று குடிபெயர்ந்த இவர்களின் வாழ்விடம் இலங்கையில் #மலையகம் மட்டுமின்றி,

இலங்கையின் மையப்பகுதியாக இருந்தாலும் தற்போது எல்லோரும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இருநூறு குடும்பங்களாக இலங்கையினின்று இடம்பெயர்ந்த இவர்கள், தாயகம் திரும்பியவர்களே அன்றி இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லர்.

ஆயினும் இடப்பெயர்ச்சியை ஏற்றுக் கொண்ட இவர்கள், இன்றளவும் தங்கள் குடியிருப்பிற்கு "ஏதிலிகள் குடியிருப்பு" எனப் பெயரிட்டுள்ளதே...
இவர்கள் தம் வருத்தங்களின் வார்த்தைக் கோர்வைகள்தாம்.

தங்களுடைய பண்பாட்டு அடையாளங்களை இழந்து பரிதவிக்கும் இவர்கள் ஏனோ பழங்கதை பேச மறப்பதில்லை.

பண்பாட்டுப் பழங்கதைகளில் இவர்கள் பத்திரமாக வைத்திருக்கும் பழம் பொக்கிஷங்களில், உணவுக்கு ஓர் உன்னத இடமளித்துள்ளனர்.
Read 27 tweets
Jan 30
தமிழர் பண்பாட்டில் மீசை...!

ஆண்களின் முகத்துக்கு அழகு சேர்ப்பதில் மீசைக்கு ஒரு பங்குண்டு.

ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தும் உடற்கூறாகிய முகமயிர், ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்னும் பழமொழிக்கு அடிப்படை ஆயிற்று.

ஆண் - தன்மை - ஆண்மை எனப்படும்.
ஆண்மை வீரத்தை உள்ளடக்கியதாகும். இதுவே மானம், பெருமை, வீரம், உயர்வு முதலிய உயர் குணங்களோடு மீசையை இணைத்துப் பேசும் வழக்கத்தை ஏற்படுத்தியது.

பொதுவாகத் தமது மேலுதட்டில் வளர்ந்துள்ள முடியை ஒழுங்கு
படுத்தி வளர்த்துக் கொள்வதில் ஆண்கள் ஈடுபாடு கொள்கின்றனர்.
பெண்களிடம் காணமுடியாத பெருமை கருதியே ஆடவர்களுக்கு இதில் ஓர் ஆர்வம் துளிர்த்திருக்கலாம்.

மேலுதட்டில் இருப்பதாலும், (மேனோக்கி வளர்ப்பதாலும்) மேன்மைகளுக்கெல்லாம் அடையாளமாக விளங்குவதாலும், மிசை - மேல் என்னும் சொல்லடியாக 'மீசை' என்னும் சொல்லை இதற்குரியதாக வழங்கியுள்ளனர்.
Read 27 tweets
Jan 29
பிள்ளையார் சுழி...!

#உ என்ற குறியைப் பிள்ளையார் சுழியென்றும், அது பிள்ளையார் வழிபாட்டின் முதற்சின்னம் என்றும் கூறி அதற்குப் பல்வேறு புராணங்களையும் சொல்லி வைத்துள்ளனர்.

பழங்காலத்தில் தமிழர்கள் பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர்.
பனை ஓலைகள் எழுதுகின்ற பக்குவத்தில் இருக்கிறதா என்று கண்டறிய, ஏட்டை எழுத்தாணி முனையால் தீண்டிப் பார்ப்பதுண்டு.

இங்ஙனம் தீண்டிப்பார்க்கின்ற குறிக்குத் தீண்டற் குறியென்று பெயர். இந்தத் தீண்டற் குறியைத்தான் பின்னர் #பிள்ளையார்சுழி என்று கூறும் மரபாக்கிக் கொண்டுள்ளனர்.
இங்ஙனம் ஏடுதீண்டும் குறியானது பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டுக்கு வருமுன்னரே இருந்து வந்துள்ளதென்பது அறிஞர்கள் ஆய்ந்து கண்ட முடிபாகும்.

மேலும், புள்ளியிலாச் சுழி என்பது வெறும் சுழியத்தையே குறிக்கும். ஓலைச்சுவடியில் எழுதும்பொழுது புள்ளி வைப்பதில்லை.
Read 4 tweets
Jan 29
த‌மிழ‌ர் வாழ்வில் பாட்டுப் பண்பாடு...!

பழங்காலத்திலிருந்தே எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், பாடிக்கொண்டே தொழில் செய்வது தமிழரின் உடலில் ஊறிப்போன வழக்கம்.

ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை என்பார்கள். குன்றக்குறவர் கிளியோட்டுவது முதல் நெய்தல் நிலத்தில் கலஞ்செலுத்தும் கப்பல்...
பாட்டுவரை தமிழர் வாழ்வில் பாட்டில்லாத தொழிலில்லை.

பயிர் நடும்போதும், களை எடுக்கும்போதும், நெல்லிடிக்கும் போதும், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போதும் மனம் உருகிப் பாடுவார்கள்.

மாடுமேய்க்கும் போது ஊதிய புல்லாங்குழல் அனைத்துயிர்களையும் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
விழாக் காலங்களிலும் பாட்டுக்கும் ஆட்டத்திற்கும் குறைவே இல்லை.

போர்க் காலங்களில் கூட எண்ணிலாத பாடல்கள் பாடியிருக்கின்றனர்.

அரசனின் தேரின் முன் பாடப்படுவது #முன்தேர்க்குரவை, தேரின் பின்பாடுவது #பின்தேர்க்குரவை.

தெய்வ வழிபாட்டின்போது குரவையாடிப் பாடுவது மரபாக இருந்தது.
Read 14 tweets
Nov 30, 2022
சங்ககால சிறார்களால் அணியப்பெற்ற அணிகலன்கள்!

தொடி, ஒருவட, இருவட, மூன்றுவட ஆரங்கள், வளை, மகரக்குழை (காதணி), காற்சரி எனப்படும் பாதசரம், கிண்கிணி, சிலம்பு ஆகிய அணிகலன்கள் சங்ககால சிறார்களால் அணியப்பெற்று அழகிற்கு அழகு ஊட்டின என்பதை சங்கப்பாடலடிகள்வழி நாம் அறியலாம்.
கீழ்க்காணும் #கலித்தொகை பாடல், தாய் தன் செல்வ மகனுக்கு அணிவித்து அழகு பார்த்த அணிகலன்களைப் படம் பிடித்துக்காட்டும்.

பொடிவைத்து இணைக்கப்பட்டமை அறியா வண்ணம், மீளவும் நெருப்பிலிட்டு ஒளிபெறச் செய்யப்பட்ட பொன்னாலான, இரு வடங்களில் அமைந்த #காற்சரி எனப்படும் #பாதசரம்.
'பொடி அழற்புறம் தந்த' என்ற தொடரால் அணிகலன்களின் பகுதிகள் பொடிவைத்து ஊதி ஊதி இணைக்கப்பட்டன என்பதும்,

அப்படிச் செய்தமை புலப்படா வண்ணம் மீண்டும் செந்தழலில் இடப்பட்டு ஒளியூட்டப்பட்டன என்றதுமான அன்றைய சிறந்த தொழில்நுட்பம் அறியப்படுகிறது.
Read 9 tweets
Jul 31, 2022
ஆகோள் பூசல்!

சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.

ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.

தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்..
வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.

'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
சங்க இலக்கியங்களில் #மழவர்கள் நிரை கவர்பவர்களாகவும், #மறவர்கள் நிரை மீட்பவர்களாகவும் காட்டப் பெறுகின்றனர்.

புகழ்மிக்க அம்பு #மழவர் கையில் உள்ளது. அது எய்யப் பெறும்போது வீல் என்ற ஒலியுடன் பாய்ந்து செல்லும். பகலிலே நிரையைக் கவர அம்பெய்துகின்றனர்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(