கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவா நான் அறிந்த நல்ல மனிதர்.
சில நாட்களுக்கு முன்பு அவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது "என்ன அண்ணா இப்பொழுதெல்லாம் உங்கள் கடை விளம்பரங்கள் டி.வி, பத்திரிகைகளில் வருவதில்லையே.....
காரணம் என்னவென்று கேட்டேன்.
அதற்கு அவர்
" இல்லீங்கண்ணா இனிமே அதுக்கு செலவழிக்கிற பணத்தையெல்லாம் பசுக்களை பராமரிக்கிற கோசாலைகளுக்கும்,
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் வயிறாற மூன்று வேளை சாப்பிடவும்
செலவு செய்யப்போகிறேன்"
என்றார்.
கை குலுக்கி விட்டு வந்தேன்.
முதலில் கோசாலை வந்தது.
இன்று
இப்போது பசி தீர்க்கும் பணி.
மானசீகமாய் உங்களை வணங்கி மகிழ்கிறேன் சிவா.
அன்னை அபிராமி அருளால் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று மென் மேலும் சிறக்க பிரார்த்தனை செய்கிறேன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வள்ளியுடைய கையில் பூலோகத்தில் காணப்படும் தாமரை மலரும். தெய்வானை கையில் தேவலோகத்தில் காணப்படும் நீலோத்பல மலரும் இருக்கும்.
முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடது கண்ணை சந்திரனாகவும் சொல்வார்கள். அவனுக்கு தந்தையைப் போன்ற அக்கினிக் கண்ணும் உண்டு.
வலது புறம் இருக்கும் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதே போல, இடது புறம் இருக்கும் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும்,
கார் ஓட்டிக் கொண்டிருந்தேன்.
பயணிகள் யாருமில்லை.
செல்போன் சிணுங்கியது.
யார் என்று திரை பார்த்தேன்.
மனைவியிடமிருந்து அழைப்பு.
காரை ஓரம்கட்டி விட்டு
"என்னப்பா " என்றேன்.
'உங்க மகள் ஏதோ
உங்ககிட்ட பேசணுமாம் " !
"மகளா " என ஆச்சரியப்பட்டு
"கொடு கொடு " என்றேன்.
போனை வாங்கிய மகள்
படபடவெனப் பொரிந்தாள்.
"அப்பா 28 - ம் தேதியோடு
பப்ளிக் எக்ஸாம் முடிகிறது.
அதற்கு முதல் நாள்
எனக்கு ஜனன நாள்.
புதிய உடை வேண்டும் " என்றாள்.
"பிறந்தநாள் வருவதற்கு
இன்னும் பத்துப் பதினைந்து
நாட்கள் இருக்கிறது ,
மேலும்
இப்போது பணமும் இல்லை.
பத்து நாளில் வருகிறேன் " என்றேன்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது
நாளை ஒரு நாள்தான்
எனக்கு பள்ளி விடுமுறை.
நாளை நீங்கள் வந்தே ஆகவேண்டும்
இல்லை என்றால் இனிமேல்
பேசவே மாட்டேன் " என்றபடி
அலைபேசியை அணைக்கிறாள்.