M.SivaRajan Profile picture
Feb 14 17 tweets 3 min read
#வரம்

*கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?

பகவானே, உனக்கு கைங்கர்யம் செய்யும் வரத்தை கொடு என்று தான்.*

நமக்கு இந்த அருமையான மனிதப் பிறவியை கொடுத்து,

சிறு வயது முதலே நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மை பல கஷ்டங்களிலிருந்து காப்பாற்றி வரும் Image
அந்த பகவானுக்கு நம்மால் ஆன ஏதோ ஒரு செயலை எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு அர்ப்பணிப்பாக செய்வது தான் கைங்கர்யம்.

இறைவன் நமக்கு செய்த பல உதவிகளுக்கு கைமாறாகவும் அதைக் கொள்ளலாம் அல்லது பகவான் மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவும் அதைச் செய்யலாம்.
திருக்கோயில்களைச் சுத்தம் செய்வது, கோலம் போடுவது, பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பது இப்படி நம்மால் முடிந்த சிறுசிறு கைங்கர்யங்களை செய்வதை சிரமேற் கொள்ள வேண்டும்.

நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர்களாக நாம் இருக்கும் பட்சத்தில்,
கோயில் உற்சவங்களில் பணமோ பொருட்களோ கொடுத்து கலந்து கொள்வது கைங்கர்யமே.

ராமாயணத்தில் ஒரு ரசமான கட்டம் உண்டு.

அது அணில்கள் ராமபிரானுக்கு செய்த கைங்கர்யம் பற்றியது.

ராமபிரான் இலங்கைக்குச் செல்வதற்காக இக்கரையிலிருந்து அக்கரைக்கு சேது பாலம் அமைத்துக்கொண்டிருந்த சமயம் அது.
கடலின் நடுவே பாலம் அமைக்க வானரங்கள் எல்லாம் பெரிய பெரிய பாறைகளையும், மலை களையும் கடலின் நடுவே போட்டு பாலம் கட்ட உதவி புரிந்து கொண்டிருந்ததாம்.

அணில்கள் எல்லாம் இதைப் பார்த்துக்கொண்டே இருந்ததாம்.
ஆஹா, இந்த வானரங்கள் எல்லாம் எவ்வளவு ஜோராக ராமபிரானுக்கு கைங்கர்யம் செய்கிறது,

நாமும் ஏதாவது கைங்கர்யம் செய்ய வேண்டுமே என நினைத்து கூடிக்கூடி பேசி சரி இப்படி செய்வோம் என முடிவெடுத்து,

கூட்டம் கூட்டமாக கடலில் சென்று குளித்து விட்டு மணலில் புரண்டு
அந்த பாறைகளின் நடுவே மணலைச் சிந்திவிட்டு வந்ததாம்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வானரங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

இந்த அணில்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று ஆவல் மேலிட அணில்களை பார்த்து,

“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டதாம்.
அதற்கு அணில்களோ, “நாங்கள் ராமபிரானுக்கு எங்களால் இயன்ற சிறு உதவியை கைங்கர்யமாக செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறியதாம்.

‘‘என்னது கைங்கர்யமா? நீங்களா?” என்று சிரித்தனவாம் வானரங்கள்.
“ஆமாம், ஆமாம். இதோ பாருங்கள் அந்தக் கடலில் சென்று நாங்கள் குளித்து விட்டு வருவதால், கடல் தண்ணீர் வற்றிவிடும்.

இதோ அந்தக் கடலில் குளித்து இந்த மண்ணில் புரண்டு எழுவதால், அந்த மண் எங்கள் முதுகில் ஒட்டிக் கொண்டுவிடும்.
அந்த மண்ணை இதோ இந்த பாறைகளின் இடுக்கில் உதறும்போது அது பாறைகளை பிடித்துக் கொள்ளும் பூச்சு வேலையாகப் போய்விடும்.

மேலும் பாறைகள் கடினமானதாக இருக்கும்.

ராமபிரானின் மென்மையான பாதங்கள் இதில் படும்போது அவரது கால்களுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வரும் அல்லவா?
அப்படி வராமல் இருக்க இதோ நாங்கள் சிந்தும் இந்த மண் உதவுமே” என்று கூறியதாம்.

அணில்கள் பேசுவதை கவனித்த ராமபிரான் அந்த அணில்களை அன்போடு தடவி தந்தாராம்.

அன்று ராமபிரானுக்கு கைங்கர்யம் செய்த அணில்களின் மீது ராமரின் கைகள் பட்டதால்
ஏற்பட்ட அந்த மூன்று கோடுகளைத் தான் இன்றளவும் அணில்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன தன் முதுகில்.

அணில்களைப் போல ஏதாவது ஒரு சிறிய சீரிய கைங்கர்யத்தையாவது நாமும் செய்வோமே.
திருமலையில் இப்படி எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், கைங்கர்யம் செய்தவர்கள் பலர்.

தம் குருவான ராமானுஜர் சொல்லிவிட்டார் என்பதற்காக, தம் நிறைமாதக் கர்ப்பிணியோடு திருமலைக்கு சென்று வன விலங்குகள் சூழ்ந்து கொண்டிருந்த அந்த இடத்தில்
அழகாக ஒரு நந்தவனம் அமைத்து திருமலையப்பனுக்கு தினமும் பூக்கள் கொண்டு புஷ்ப கைங்கர்யம் செய்த ஆனந்தாழ்வார்.

அதேபோல தம் தள்ளாத வயதிலும் ஆகாச கங்கையிலிருந்து, திருவேங்கடமுடையானின் திருமஞ்சனத்திற்கென்று (அபிஷேகத்திற்காக) தினம் தீர்த்தம் கொண்டு வந்து
அந்த திருமலையப்பனாலேயே ‘‘பிதாமகர்” என்றழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பிகள், பூவிருந்தவல்லியில் தன் அப்பா தனக்கு தந்த நிலத்தில் அழகாய் ஒரு நந்தவனம் அமைத்து, அந்த நந்தவனத்திலிருந்து, பூக்களைப் பறித்து அதைக் காஞ்சிவரதராஜருக்கு எடுத்துச் சென்று
புஷ்ப கைங்கர்யமும், அந்த காஞ்சி வரதருக்கு தினமும் திரு ஆலவட்டம் வீசுவது, அதாவது விசிறி வீசும் கைங்கர்யத்தையும் செய்து வந்தாராம்.

எத்தனை எத்தனையோ வழிகள் இருக்கின்றன, பகவானைச் சென்று அடைய, அவனின் பிரியத்தை சம்பாதித்துக் கொள்ள...
அந்த வழிகளில் எல்லாம் மிகச் சிறந்த எளிமையான வழி என்பது, கைங்கர்ய பக்தி எனும் வழிதான்.

இறைவனிடம், “உனக்கு கைங்கர்யம் செய்யும் வரத்தைத் தா” என்றே வேண்டி பெற்றிடுவோம் வாருங்கள்.

#வரம்

#ஓம்_நமோ_நாராயணாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 16
#மஹா_சிவராத்திரி_சிறப்பு

1) பஞ்ச பூத தலங்கள் :

1.திருஆரூா் - பிருதிவி (நிலம்)

2.திருஆனைக்கா - அப்பு (நீா்)

3.திருஅண்ணாமலை- தேயு (தீ)

4.திருக்காளத்தி - வாயு (வளி)

5.சிதம்பரம் - ஆகாயம் (விண்) Image
2) பஞ்ச சபைகள் :
1.திருவாலங்காடு - இரத்தினசபை

2.சிதம்பரம் - கனகசபை (பொன்னம்பலம்)

3.மதுரை - ரஜத சபை (வெள்ளியல்பலம்)

4.திருநெல்வேலி -தாமிரசபை

5.திருக்குற்றாலம் - சித்திரசபை
3) சோழநாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள் ஒரே நாளில் தாிசிக்க வேண்டியவை :

1.முல்லைவனம் - திருக்கருகாவூா் - (உஷக்காலதாிசனம்)

2. பாதிாிவனம் திருஅவளிவநல்லூா் -
(காலசந்தி தாிசனம்)

3. வன்னிவனம் - திருஅரதைபெரும்பாழி அாித்துவாரமங்கலம் -
(உச்சிகால தாிசனம்)
Read 6 tweets
Feb 16
#திருவாரூர்_தியாகராஜர்

#மஹா_சிவராத்திரி_சிறப்பு

திருவாரூர் திருத்தல வரலாற்றை வடமொழியில் எடுத்துரைக்கும் நூல்கள்.

1) அஜபா ரஹஸ்யம்,

2) ஆடகேச்வர மஹாத்மியம்,

3) கமலாலய மஹாத்மியம்

4) நாகர கண்டம்,

5) தியாகராஜ லீலை

6) சமத்கார புர மஹாத்மியம், Image
7) தியாகராஜ மஹாத்மியம்,

8) தேவயாகபுர மஹாத்மியம்,

9) தேவாச்ரய மஹாத்மியம்,

10) முசுகுந்தபுர மாஹாத்மியம்,

11) ராமகயா மஹாத்மியம்,

12) ஸ்ரீ புர மஹாத்மியம்,

13) ஸ்கந்தபுர மஹாத்மியம்,

14) சேஷத்திரவர மஹாத்மியம் என்பன.

இத்தலத்துக்குரிய ஆகமம் காமிகம்.
விராட்புருஷனுடைய மூலாதாரமெனவும்,

பூமிதேவியின் இதய கமலமெனவும் பஞ்சபூதத் தலங்களுள் பிருதிவித் தலமெனவும்,

தேவர்கள் கறையான்வடிவு கொண்டியற்றிய புற்றை இடமாகக் கொண்டு இறைவன் சிவலிங்கப் பெருமானாக எழுந்தருளினமையின் வன்மீகபுரமெனவும்,
Read 10 tweets
Feb 16
#பள்ளியறை_பூஜை

#மஹா_சிவராத்திரி_சிறப்பு

*பலவித நன்மைகள் தரும் பள்ளியறை பூஜை*

ஆலயங்களில் நடக்கும் அனைத்து பூஜைகளுமே சிறப்புக்குரியதுதான்.

ஆனால் இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் விசேஷமானது.

அனைத்து ஆலயங்களிலும் பள்ளியறை பூஜை நடைபெறும். Image
அதே நேரம் சிவபெருமானின் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு, பல்வேறு பலன்கள் கிடைக்கப் பெறும்.

கணவன் - மனைவி ஒற்றுமை, உயர் பதவி கிடைக்க, விரைவில் திருமணம் நடந்தேற,
நீண்டநாள் நோய் அகல, கல்வியில் மேம்பட என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த பள்ளியறை பூஜை தீர்வாக அமையக்கூடும்.

கோவில் மூலவருக்கு அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு, சுவாமி தன்னுடைய சன்னிதியில் இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதிக்கு எழுந்தருள்வார்.
Read 15 tweets
Feb 16
#சகஸ்ர_லிங்கம்

சகஸ்ர லிங்க அபிஷேகத்தின் சிறப்பு :

ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டால் ஆயிரம் முறை சிவனை வழிபட்ட பலன் கிட்டும்.

அதேபோல் ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் ஆயிரம் லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட பலன் கிட்டும். Image
எனவே இத்தகைய உத்தமமான பலன்களை நல்கும் சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதற்கு சில விசேஷ அம்சங்களை சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
பால் அபிஷேகம்

சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு பசுவின் பால் அபிஷேகம் சிறப்புடையது.

பால் கறந்து சூட ஆறும் முன் அபிஷேகம் செய்வதால் விசேஷமான பலன்கள் கிட்டும்.

தயிர் அபிஷேகம்

நாம் அபிஷேகம் செய்யப்போகும் மூன்று தினத்திற்கு முன்னரே பசும் பாலை வாங்கிக் காய்ச்சி
Read 5 tweets
Feb 15
#மஹா_சிவராத்திரி_சிறப்பு

மஹா சிவராத்திரி அன்று விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கிய விஷயம்.

இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு என ஒரு சில குறிப்பட்ட விஷேச அபிஷேகம் செய்ய அவர்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம்.
சிவனுக்குரிய மஹாசிவராத்திரி திருநாளில் சிவனை நினைத்து, விரதமிருந்து இரவில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்வது நல்லது.

மகாசிவராத்திரியில் விரத வழிபாடு நம் முன் வினைகள், ஜென்ப பாவங்கள் நீக்கி நல்லருள் கிடைக்கச் செய்யும்.
நாம் சிவனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யலாம், இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் இங்கு குறிப்பிட்டுள்ள அபிஷேகம் செய்வது மேலும் நன்மையை தரும்.
Read 11 tweets
Feb 15
#ராம_நாமம்

ஏழெழு ஜென்ம சாபல்யம் தீர்த்து ஏற்றம் தரும் ஸ்லோகம்...

தினமும் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் சொல்வதற்கு இணையான

"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது,
11 முறை சொல்லுங்கள், Image
உங்கள் வீட்டில் சுபிட்சம் தேடி வரும்.

சகஸ்ரநாமம் என்றால்,
அது விஷ்ணு சகஸ்ரநாமம் தான்.

அதன் பின் மற்ற தெய்வங்களின் சகஸ்ரநாமங்கள் என
நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், விஷ்ணு சகஸ்ரநாமத்தை
தினமும் சொல்வதென்றால், குறைந்தது, அரை மணி நேரம் ஆகும். (நிறுத்தி சொல்ல வேண்டும்)
எனக்கு நேரமில்லை
என, சாக்கு போக்கு சொல்வோம்.

இதை நன்கு உணர்ந்த
பார்வதி தேவி, இது பற்றி சிவபெருமானிடம் கேட்டாள்.

’சுவாமி‘ விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் முழுமையாக சொல்ல முடியாதவர்கள், எளிதாக பாராயணம் செய்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள் ’ என, கேட்டாள் பார்வதி தேவி,
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(