#சின்னங்களின்_வரலாறு
#கை
1950 ல அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இந்தியா குடியரசு நாடாகியது. அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில்தான் கட்சிகள் குறிப்பிட்ட சின்னங்களில் தேர்தலை சந்திக்கத் தொடங்கின.
முதல் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டை காளைச் சின்னத்தில் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 489 இடங்களில் 479 இடங்களுக்கு போட்டியிட்டு 364 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 37 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, சோசலிஸ்ட் கட்சி 12 இடங்களையும் வென்றன.
1957ல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலில் 371 இடங்களைப்பெற்றது.
361 இடங்களில் வெற்றிபெற்றது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு மறைந்தார். அதைத்தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது.
பாகிஸ்தானை எல்லைதாண்டி இந்திய ராணுவம் விரட்டியது. லாகூரை கைப்பற்றிவிடுமோ என்ற நிலைகூட உருவானது. சர்வதேச நிர்பந்தம் காரணமாக அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. ரஷ்யாவுக்குச் சென்ற லால்பகதூர் சாஸ்திரி 1966 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி மரணமடைந்தார்.
தொடர்ந்து, 1966 ஜனவரியில் இந்திரா காந்தி
பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றபோதும், இந்திரா பொறுப்பேற்ற போதும் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு போட்டியிட்டு தோற்ற மொரார்ஜி தேசாய் கட்சிக்குள் கோஷ்டி மனப்பான்மை உருவாகக் காரணமாக இருந்தார். இந்நிலையில் 1967 ம் ஆண்டு நடைபெற்ற நான்காவது பொதுத்தேர்தலில்
மக்களவையின் மொத்த இடங்கள் 520 ஆன நிலையில் காங்கிரஸ் கட்சி 283 இடங்களை மட்டுமே பெற்றது.
நேருவின் மறைவுக்குப் பிறகு வறுமை, வேலையின்மையும், உணவுப் பஞ்சமும் இந்தியாவை வாட்டியது. காங்கிரஸ் பெருமுதலாளிகளின் கட்சியாகவே மாறிவிட்டது. கிராமப்புற அளவில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் முதன்முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி எழுச்சி பெற்றது. ஏழைகளின் பிரச்சனைகளைப் பேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்கத் தொடங்கினர். காங்கிரஸை விட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விலகத் தொடங்கினர்.
இதையறிந்த இந்திரா, சோசலிஸ கொள்கைகளை அமல்படுத்த விரும்பினார். இந்திய ரூபாயின் மதிப்பை மறுசீரமைத்தார். உணவுப் பஞ்சத்தை போக்க அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தார். இதெல்லாம் காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தனது கொள்கைகளுக்கு ஒப்புதல் பெற குடியரசுத்தலைவர்
தனக்கானவராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக 1969ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் நிறுத்திய சஞ்சீவரெட்டியை எதிர்த்து சுயேச்சையாக வி.வி.கிரியை நிறுத்தினார். மனச்சாட்சிப்படி வாக்களிக்கும்படி இந்திரா கூறினார். அதுமட்டுமின்றி இந்தியாவுடன் இணைந்த மன்னர்களுக்கு
வழங்கப்பட்ட மானியங்களையும் சலுகைகளையும் ரத்து செய்யவும், நாட்டின் 14 பெரிய தனியார் வங்கிகளை தேசியமயமாக்கவும் முடிவு செய்தார். நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாயை கலந்து ஆலோசிக்காமல் இந்திரா இந்த நடவடிக்கை எடுத்ததாக காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா குற்றம் சாட்டினார். ஆனால்,
மொரார்ஜி இதையெல்லாம் ஆதரிக்கவில்லை என்பதே நிஜம். இதையடுத்து, இந்திராவை கட்சியிலிருந்து நீக்குவதாக நிஜலிங்கப்பா அறிவித்தார். ஆனால், மொத்தம் இருந்த காங்கிரஸ் எம்பிக்களில் 65 பேர் மட்டுமே நிஜலிங்கப்பாவை ஆதரித்தனர். அவர்களுக்குப் பதிலாக திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு
இந்திரா ஆட்சியைத் தொடர்ந்தார்.
காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து இரட்டை காளை மாடு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு பசுவும் கன்றும் சின்னமும், நிஜலிங்கப்பா தலைமையிலான காங்கிரஸுக்கு கைராட்டை நூற்கும் பெண் சின்னமும் ஒதுக்கியது.
1971 ஆம் ஆண்டு மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுதந்திர வங்கதேசத்துக்காக நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க மேற்கு பாகிஸ்தான் ராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. உள்நாட்டு குழப்பம் காரணமாக வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் மக்கள்
கூட்டம் அகதிகளாக வந்தனர். இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்திய ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் இந்திரா. 14 நாட்களில் பாகிஸ்தான் பிடியிலிருந்து வங்கதேசத்தை மீட்டு, சுதந்திர வங்கதேசத்தை உருவாக்க உதவினார் இந்திரா.

இந்த வெற்றியின் சூட்டோடு தனது அரசுக்கு
தனிப்பெரும்பான்மைக்கு திட்டமிட்டார். தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையிலேயே மக்களவைக்கு தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். 5ஆவது பொதுத்தேர்தலில் 518 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 352 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தார் இந்திரா. இந்தத் தேர்தலின் போது தனது தொகுதியில்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை இந்திரா மீறியதாக ராஜ்நாராயண் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் இந்திராவின் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளால், முதல்முறையாக இந்தியாவில் நெருக்கடிநிலையை பிரகடனம் செய்தார்.
அது அவருடைய ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்த்து நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஜனதா என்ற கட்சியை உருவாக்கின. இந்தக் கட்சியில் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ், வாஜ்பாய் தலைமையிலான ஜனசங், சோசலிஸ்ட் கட்சி, சரண்சிங்
தலைமையிலான லோக்தளம் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்தன. எனவே, காமராஜர் தலைமையிலான காங்கிரஸின் கைராட்டை நூற்கும் பெண் உள்பட அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் கைவிடப்பட்டு, ஏர் உழவன் சின்னம் பொதுச்சின்னமாகியது. சர்வதேச நிர்பந்தம் காரணமாக நெருக்கடி நிலையை திரும்பப்பெற்றார் இந்திரா.
அதைத்தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது மக்களவைத் தேர்தலில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் மக்களவையின் இடங்கள் 542 ஆகியிருந்தது. இதில் இந்திரா காங்கிரஸ் 153 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. இந்திராவும் தனது தொகுதியில் தோல்வி அடைந்தார்.
இந்தத் தோல்வியின்போது இந்திரா காங்கிரஸின் தலைவராக பிரமானந்த ரெட்டி இருந்தார். அவர் இந்திராவை கட்சியை விட்டு நீக்கினார். இதையடுத்து, மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. ஆனால், இப்போதும் இந்திரா தலைமையிலான பிரிவுக்கே பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இருந்தாலும், காங்கிரஸின்
சின்னமான பசுவும் கன்று சின்னத்தை முடக்கியது. இந்திரா தலைமையிலான காங்கிரஸுக்கு கை சின்னத்தை ஒதுக்கியது. அந்தச் சின்னத்திலேயே கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் தொகுதியில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவரானார் இந்திரா
1977 முதல், இன்றுவரை 40 ஆண்டுகளாக காங்கிரஸின் சின்னமாக கை தொடர்கிறது
ஜனதா கட்சியின் ஏர் உழவன் சின்னம்:

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthana Ram

Keerthana Ram Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Feb 13
#நெஞ்சுக்குநீதி_பாகம்1
8. சுதந்திர போராட்டம்
1939ல் விடுதலை கனல் தகித்து கொண்டு இருந்தது.
காந்தி இர்வின், ஒப்பந்தம், நேதாஜியின் ஆசாத் ஹிந்து ஃபவுஸ், ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை இந்தியாவில் தென் மூலையில் திருவாரூரில் படித்துக் கொண்டிருந்த 15 வயது பையன் கருணாநிதியையும் பாதித்தது Image
இனி கலைஞர் வார்த்தைகளில்:

அப்படிப் பட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர் என்னைச் சந்திக்க விரும்பினார்.
அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார், கருணாநிதி என்றால் கிட்டத்தட்ட அவரைப் போன்ற வயதுடையவன், உருவமுடையவன் என்றெல்லாம்;15 வயது இளைஞனாக மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன். Image
அவர் சந்தேகத்துடன், "நீங்கள்தானா 'மாணவ நேசன்' நடத்துகிற கருணாநிதி" என்று கேட்டார்.

'மாணவ நேசன்' என்பது நான் நடத்திய கையெழுத்து ஏடு. இப் போது கூட மாணவர்கள் பல இடங்களில் கையெழுத்து ஏடுகள் நடத்து கிறார்கள். கவிஞர் பாரதிதாசன், ஒருமுறை ஒரு மாணவர் தந்த கையெழுத்து ஏட்டைப் படித்து Image
Read 11 tweets
Jan 30
#இந்தியபாசிச_வரலாறு 1

இந்திய பாசிச முகமூடிகளை வெளிப்படுத்த இன்று போல் ஒரு கெட்ட நாள் அமையாது.

தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்துக் கொண்டிருந்தவரை, விதி ஒரு மத வெறி பிடித்த நூலிபானின் குண்டுக்கு பலியாக இந்தியாவிற்கு அழைத்து வந்தது

அவர் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி
காந்திக்கு முன்பே காங்கிரஸ் இயக்கம் ஆலன் ஆக்டோவியன் ஹுமால் ஆரம்பிக்கப்பட்டது

தாங்கள் அந்நியரால் ஆளப்படுகிறோம் என்பதை இந்திய மக்கள் உணராதபடி செய்ய தாதாபாய் நௌரோஜி ஃபிரோஜ் சா மேத்தா போன்ற மேல்தட்டு பார்சி தொழிலதிபர்கள் உள்ளே இழுத்துப் போடப்பட்டார்கள்
கூடவே சில நூலிபான்களும்
சென்னை ஹிந்து பத்திரிக்கை குடும்பம் வடக்கே மதன் மோகன் மாளவியா, மகாராஷ்டிராவில் கோபால கிருஷ்ண கோகலே போன்றோர்.
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நூலிபான்களின் கைக்கு சென்று விட்டது.
தென்னாபிரிக்காவில் அடக்குமுறைக்கு ஆளான காந்தி வழக்கு விஷயமாக இந்தியாவுக்கு வந்திருந்த போது இங்குள்ள நிலைமை
Read 17 tweets
Jan 29
#இந்தியபாசிசத்தின்_எழுச்சி
பாசிசம் என்ற சொல் பொதுவாக அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு குழு அதனை தக்க வைக்க பிற குழுக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரத்தை தன்னிடமே என்றென்றும் வைத்துக்கொள்ள முயல்வதை குறிக்கிறது. இந்தியாவில் நிகழ்வதை குறிக்க வேறு சொல் இல்லாததால் நாமும் பாசிசம் என்றே கூறுவோம்
பாசிசம் என்பது தனி நபர் அல்ல. அது ஒரு அமைப்பு அதன் முகமூடிகள் காலாவதி ஆனவுடன் மாற்றப்படும். சில பல வார்த்தை மாறுதலுக்கு பின் புதிய மொந்தையில் பழைய கள்ளை வழங்கி மாற்றம் நிகழ்ந்து விட்டது இனி எல்லாம் சுகமே என்ற மயக்கத்திலேயே மக்களை நம்பச் செய்து என்றும் அடிமையாக வைத்திருப்பது
சமூக பொருளாதார இன ரீதியாக இச்சொல் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புதிய பெயரில் அவதாரம் எடுக்கிறது. ஜெர்மனியில் நாசிசம் இத்தாலியில் பாசிசம், ஜிங்கோஇசம், ஸ்டாலினிசம், மேற்கு நாடுகளின் கேப்பிட்டலிசம், நேற்று உருவான #தாலிபானிசம்.
இந்தியாவுக்கு என்று ஒரு தனித்த சொல் என்றால் அது #நூலிபானிசம்
Read 8 tweets
Jan 28
ஒவ்வொரு வயதிலும் ஒருவிதமான பிரமிப்பு நமக்கு எழும்.
1947 முதல் 70 ஆண்டு காலம் இந்தியா என்ற கட்டுமானம் சிறிது சிறிதாக நேரு முதல் மன்மோகன் வரை எழுப்பப்பட்டது.
2000 ல் அடிப்படை வரலாற்று அறிவோ,பகுத்தறியும் திறனற்ற சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வை தெரிந்து கொள்ளும் புதிய தலைமுறை உருவானது
முறையாக வரலாற்றை கற்பிக்க தவறிய காங்கிரஸ் அரசு இத்தலைமுறையில் மனப்போக்கை கவனிக்க தவறிவிட்டது.
விளைவு?
மோடி என்ற மூடன் மாபெரும் அவதார புருஷனாக குஜராத் பரிசோதனை சாலையில் கட்டமைக்கப்பட்டது.
அண்ணா ஹசாரே, போபால் என்ற ஓரங்க நாடகம் டெல்லியில் நிகழ்ந்தது.
மன்மோகன் சிங் செய்த
தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப் புற, ஊரக வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்ப புரட்சி உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடம், மாநிலங்களுக்கு இடையான சமூக கூட்டாட்சி எண்ணற்ற சாதனைகளை மறைத்து வினோத்ராய் கண்டுபிடித்த 2ஜி அலைக்கற்ற ஏலம் ஊழல் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது
Read 14 tweets
Jan 27
இடுப்பு பிரச்சனை இருக்கும் @pudugaiabdulla ஊன்றுகோல் உதவியுடன் அரசின் குடியரசு தின விழாவிற்கு வருகிறார்

அவரால் அதிக நேரம் அமர்ந்து இருக்க முடியாத உடல்நலன் சார்ந்த பிரச்சனை

மரியாதைக்கு சிறிது நேரம் இருந்து விட்டு, தன் நிலையை விழா அமைப்பாளர்களிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
ஒரு முன்னணி ஊடக நிருபர் அவர் காரில் ஏறுவதை பார்க்கிறார்!

போட்டோ எடுக்கிறார்!

எம்பியிடம் சென்று ஏன் விரைவாக கிளம்புகிறீர்கள் என கேட்கும் சூழல் இருந்தும் கேட்கவில்லை.

அந்த காரில் ஏறும் போட்டோவை ஊடகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புகிறார்,

”சரியான இருக்கை இல்லாதால்
கோபித்திக்கொண்டு சென்ற எம்பி” என்ற குறிப்பையும் சேர்த்து

ஊடகத்தின் எடிட்டரும் இந்த விசயம் குறித்து எம்பியிடம் கேட்கவில்லை. எம்பியின் பெயர் மட்டும் தெரிய வருகிறது..

உடனடியாக ஃபிளாஸ் நியூசில்

“குடியரசு நாள் விழா: புறக்கணித்த எம்பி” என அவர் காரில் ஏறும் புகைப்படத்துடன்.
Read 7 tweets
Jan 26
பி.பி. சி விஷயத்தை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை.
பாசிஸ்டுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் வீணடிக்க கூடாது

உலகின் மிக முக்கியமான ஊடகம் குசராத் படுகொலையில் மோடிக்கு இருக்கும்
#ButcherofGujarat Image
தொடர்பை அம்பலப்படுத்தி இருக்கிறது, பயந்த பாரதிய ஜனதா இந்தியாவில் அதை தடை செய்திருக்கிறது
இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் எதிர்க்கட்சிகள் இதை கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை, கம்யூனிஸ்டுகள் மட்டுமே இந்த விஷயத்தை பேசுகிறார்கள் அவர்கள் பலம் பெற்று இருக்கக்கூடிய
#ButcherofGujarat Image
கேரளாவில் மட்டுமே இந்த தடைக்கு எதிரான நிகழ்ச்சி நடக்குது

பாசிச எதிர்ப்பில் காங்கிரஸ் தொடங்கி பிற எல்லா மாநில கட்சிகளின் எல்லை என்ன என்பதை இந்த விஷயத்தில் இஸ்லாமிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், எவ்வளவு முரண்கள் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தவிர்க்க
#ButcherofGujarat Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(