#நாத்திக‌மும்_க‌ம்யூனிச‌மும்

நாத்திக‌ர்க‌ள் அனைவ‌ருமே பொதுவுடைமைவாதிக‌ளோ இட‌துசாரிக‌ளோ அல்ல‌ர்; ஆனால் க‌ருத்திய‌ல் ரீதியாக‌, கொள்கை அடிப்ப‌டையில் த‌ன்னை இட‌துசாரி என்று அடையாள‌ப்ப‌டுத்திக்கொள்ளும் ஒவ்வொருவ‌ரும் நாத்திக‌ர்க‌ளாக‌ இருந்தே ஆக‌வேண்டும்.
மேலோட்டமாக பார்க்கையில் இது கொஞ்ச‌ம் குழ‌ப்ப‌மாக‌ தோன்ற‌க்கூடும், இல்லையா..?

அதிலும், எத்த‌னையோ ம‌த‌நம்பிக்கை உள்ள‌வ‌ர்க‌ள் த‌ம்மை க‌ம்யூனிஸ்ட் என்றும் இட‌துசாரி என்றும் சொல்வ‌தையும், அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளே ம‌த‌ ப‌ண்டிகைக‌ளுக்கு வாழ்த்து கூறுவ‌தையும்,
கொண்டாடுவ‌தையும் பார்க்கையில் "அது எப்ப‌டி..? ம‌த‌ ந‌ம்பிக்கை வேறு, அர‌சிய‌ல் க‌ருத்திய‌ல் வேறு அல்ல‌வா" என்று எண்ண‌த்தோன்றும், இல்லையா..?

த‌னிப்ப‌ட்ட‌ முறையில் நான் எத்த‌னையோ த‌னியுடைமை ம‌ற்றும் வ‌ல‌துசாரி க‌ருத்திய‌ல் பேசும் நாத்திக‌ர்க‌ளோடு ப‌ழ‌கியிருக்கிறேன்.
ஏன் கோல்வால்ல‌ர் போன்ற‌ தீவிர‌ வ‌ர‌துசாரி சிந்த‌னையாள‌ர்க‌ள் எல்லாம்கூட‌ நாத்திக‌ர்க‌ளாக‌ இருந்திருக்கிறார்க‌ள்.

ப‌க‌த்சிங்கும் ந‌த்திக‌ர், கோல்வாக்க‌ரும் நாத்திக‌ர். ஆனாலும் இவ்விருவ‌ரின் அரசிய‌ல் பார்வைக‌ள் எவ்வ‌ள‌வு மாறுபாடான‌வை,
எதிரெதிர் துருவ‌ம் சார்ந்த‌வை என்று விளக்க‌த்தேவை இல்லை, இல்லையா..?

சில‌ ம‌த‌ங்க‌ளே த‌ம்மை ப‌குத்த‌றிவு ச‌ம‌ய‌ம் என்று கூறிக்கொள்வ‌தை கேட்கையில் உள்ள‌ப‌டியே ந‌கைச்சுவையாக‌ இருக்கும். ப‌குத்து அறிய‌ ம‌றுத்து சாதிய‌ம், ம‌த‌ம் போன்ற‌ ம‌ட‌மைக்களுக்குள்ளும்
அறிவுக்கு ஒவ்வாத‌ மூட‌ந‌ம்பிக்கைக‌ளுக்குள்ளும் ஒழிந்துகொண்டு வாழும் ஒருவ‌ர் எப்ப‌டி ப‌குத்த‌றிவாள‌ராக‌வோ இட‌துசாரியாக‌வோ இருக்க‌ இய‌லும்..?

இறை என்ற‌ ஒன்றின் இருப்பு-இல்லாமை, இர‌ண்டையும் ஒருக‌ண‌ம் ஒதுக்கிவைத்துவிட்டு கொஞ்ச‌ம் ந‌டுநிலையோடு யோசிப்போமே...
இந்த‌ உல‌கில் ம‌கிழ்ச்சி, இன்ப‌ம், நிறைவு ஆகிய‌வை இருப்ப‌தைப் போன்றே ஏழ்மை, வ‌றுமை, துன்ப‌ம், துய‌ர‌ம் எல்லாமும் நிர‌ம்பி இருப்ப‌தை பார்க்கிறோம், இல்லையா...? இந்த‌ உல‌கின் 78% நில‌ம் வெறும் 10% ம‌க்க‌ளிட‌மும்; 81% பொருளாதார‌ம் வெறும் 9% ம‌க்க‌ளிட‌மும் குவிந்துள்ள‌து.
உல‌க‌ம‌க்க‌ள் அனைவ‌ரும் உண்ண‌த் தேவையான‌தைவிட‌ உப‌ரியாக‌வே உண‌வு இங்கிருக்க‌, உல‌க‌ம் முழுவ‌தும் ஒவ்வொரு நாளும் 25,000 பேர் உண்ண‌ உண‌வின்றி ப‌சியால் இற‌க்கிறார்க‌ள். குடிக்க‌ சுத்த‌மான‌ நீரின்றி ம‌ர‌ணிப்ப‌வ‌ர்க‌ள் (Ternimal Dehydration) தின‌ம்தோறும் 12,000 பேர்.
இது ஐநா (UNO) த‌ரும் அதிகார‌பூர்வ‌ புள்ளிவிப‌ர‌ம். இந்த‌ அவ‌ல‌ம் ஏன், எப்ப‌டி, எத‌னால் உருவான‌து என்ற‌ கேள்விக்கு ஒவ்வொரு ஆத்திக‌ரின் ப‌திலும்...

"இது க‌ட‌வுள் உருவாக்கிய‌ க‌ட்ட‌மைப்பு, இது இறைவ‌னின் நாட்ட‌ம், இது தேவ‌னின் ம‌றைவான‌ பெரும் திட்ட‌த்தின் ஒரு ப‌குதி"
அல்ல‌து இதையொத்த‌ ஒரு ப‌திலாகத்தானே இருக்கும். அப்ப‌டி "ந‌ம்முடைய‌ பார்வைக்கும், சிந்த‌னைக்கும், அறிவுக்கு எட்டாத‌ இறைவ‌னின் ம‌றைவான‌ திட்ட‌மே இது" என்று அடிப்ப‌டையில் ந‌ம்புகின்ற‌வ‌ர்க‌ள் அந்த‌ ஏழ்மை வ‌றுமை போன்ற‌வ‌ற்றை நீக்க‌வும் அதே இறைவ‌னிட‌மே கும்பிட்டு.....
கையேந்தி பிரார்த்தித்து நிற்க‌ நேரிடுகிற‌து. கார‌ண‌ம், ஒன்றை ப‌டைத்த‌வ‌னால்தானே அதை மாற்ற‌வும் அழிக்க‌வும் முடியும், இல்லையா..?

இந்த‌ சிந்த‌னை ப‌ல‌ இறை ந‌ம்பிக்கையாள‌ர்க‌ளுக்கு அவ‌ர்க‌ளறியாம‌லேயே அவ‌ர்க‌ளுடைய‌ ஆழ்ம‌ன‌தில் சிறுவ‌ய‌து முத‌லே ப‌திய‌வைக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து.
ஒவ்வொரு ம‌த‌ வ‌ழிபாட்டின், பிரார்த்த‌னையின், வேண்டுத‌லின், தொழுகையின், ஜெப‌த்தின் ஆதிமூல‌மும் இங்கிருந்துதான் துவ‌ங்குகிற‌து.

அதேவேளை, இந்த‌ பிர‌ச்சினைக‌ள் அனைத்துக்கும் சில‌ த‌னிந‌ப‌ர்க‌ளின் அல்ல‌து அமைப்புக‌ளின் பேராசை உருவாக்கிய‌ ப‌துக்க‌லும் சுரண்ட‌லுமே கார‌ண‌ம்....
என்று அறிந்த‌வ‌ர்க‌ள் அதை பொதுவுடைமை க‌ருத்திய‌லால் ம‌ட்டுமே உடைத்தெறிய‌முடியும் என்று அறிந்து எதிர்த்து போராடுவ‌ர். போராட்ட‌த்தின் வ‌டிவ‌ம் கால‌த்துக்குக் கால‌ம், ச‌மூக‌த்துக்கு ச‌மூக‌ம், திணைக்கு திணை மாற‌லாம். ஆனால் போராட்ட‌மென்ன‌வோ வ‌ர‌லாறு நெடுக‌ தொட‌ரவே செய்கிற‌து.
அவ‌ர்க‌ளுக்கு இறைவ‌னின் இருப்பிலோ இல்லாமையிலோ எந்த‌ ஆர்வ‌மும் நாட்ட‌மும் இருக்காது. கார‌ண‌ம் உல‌கில் ந‌டக்கும் எந்த‌ ந‌ல்ல‌துக்கும் தீய‌துக்கும் இறை என்ற‌ ஒன்று கார‌ண‌மோ காரிய‌மோ இல்லை என்பதை இவ‌ர்க‌ள் திட‌மாக‌ அறிந்து வைத்திருப்ப‌ர்.
"தீதும் ந‌ன்றும் பிற‌ர்த‌ர‌ வாரா" என்ப‌துதானே ந‌ம் முன்னோரான‌ பூங்குன்ற‌னாரின் வாக்கும்.

ந‌ம் ந‌ம்பிக்கை ம‌ற்றும் ந‌ம்பிக்கையின்மை க‌ட‌ந்து, த‌ன்முய‌ற்சியால் ம‌ட்டுமே ந‌ம் வாழ்வில் மாற்ற‌ங்க‌ளை உருவாக்க‌முடியும் என்ப‌தைத்தானே வ‌ள்ளுவ‌ரும்.....
"தெய்வ‌த்தால் ஆகாதெனினும் முய‌ற்சி த‌ன் மெய்வ‌ருத்த‌க்கூலி த‌ரும்" என்கிறார்.

ம‌க்க‌ளின் அற‌ச்சீற்ற‌த்தையும் போர்க்குண‌த்தையும் ம‌ழுங்க‌டிக்க‌ச்செய்து, அவ‌ர்க‌ளை மூட‌ர்க‌ளாக்கி, இல்லாத‌ ஒன்றிட‌ம் அழுத‌ப‌டி கையேந்தி நிற்க‌ச்செய்யும் அதிப‌ய‌ங்க‌ர‌ ஆயுத‌ம்தான்....
இந்த‌ "இறை/ம‌த‌ ந‌ம்பிக்கை" என்ற‌ ச‌மூக‌ உள‌விய‌ல். இது ஒருவித‌ உள‌வில் அட‌க்குமுறை. அடிமைத்த‌ன‌த்தை திட்ட‌மிட்டு உருவாக்கும் ஏகாதிப‌த்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்.

கொள்ளைய‌டிப்ப‌வ‌னும் ஊழ‌ல்செய்ப‌வ‌னும் அதிகார‌ உச்ச‌த்தில் அம‌ர்ந்து அடாவ‌டித்த‌ன‌ம் செய்யும்போதுகூட‌,
இர‌த்த‌ம் சூடேறி எதிர்த்து போராடாம‌ல், "என்ன‌ங்க‌ செய்ற‌து, எல்லாம் ந‌ம்ம‌ த‌லைவிதி..!" என்று ஏற்றுக்கொண்டு ஆட்டும‌ந்தைக‌ளாய் ம‌க்க‌ளை மூளைச்ச‌ல‌வை செய்து வாழ‌ ப‌ழ‌க்கிவைத்திருப்ப‌து இந்த‌ மூட‌ந‌ம்பிக்கையே. அதிகார‌ வ‌ர்க்க‌த்துக்கு இது பெரிதும் உத‌வுவ‌தால்தான்....
உல‌கெங்கும் பெரும்பாலான‌ வ‌ல‌துசாரி அர‌சுக‌ளும் இய‌க்க‌ங்க‌ளும் ம‌த‌த்தை த‌லையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுகிற‌து.

வேலையின்மை, வ‌றுமை, ப‌சியைக்கூட‌ இந்த‌ ம‌த‌வியாபாரிக‌ளின் வாய்ச்ச‌வ‌டால்க‌ள் ம‌ற‌க்க‌டிக்க‌செய்து விடுகிற‌து.
"ப‌ட்டினிசாவுக்குப்பின் சுவ‌ர்க்க‌ச் ச‌த்துண‌வு காத்திருக்கிற‌து" என்ற ம‌த‌ங்க‌ளின் வாக்குறுதிக‌ளில் ம‌ய‌ங்கிக்கிட‌க்கிற‌து ப‌ல‌ ம‌னித‌ ம‌ன‌ங்க‌ள்.

ம‌னித‌ர்க‌ளைக் காப்ப‌து க‌ட‌வுளின் க‌ட‌மை என்றிருந்த‌ நிலை மாறி த‌ன் க‌டவுளை காக்க‌ ம‌னித‌ர்க‌ள் வாளும், வேலும், துப்பாக்கியும்,
வெடிகுண்டும் ஏந்தி ச‌க‌ ம‌னித‌ர்க‌ளை வெட்டிக்கொல்வ‌து இன்று ச‌ர்வ‌சாதார‌ண‌ நிக‌ழ்வாகிவிட்ட‌து. கொல்ப‌வ‌னும் க‌ட‌வுளுக்காக‌ கொல்கிறான். இற‌ப்ப‌வ‌னும் க‌ட‌வுளுக்காக‌ இற‌க்கிறான்.

ம‌த‌வெறி ஊட்ட‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ள் வெட்டுண்டு சாக‌, ம‌த‌வியாபாரிக‌ள்.....
ம‌ண்ணில் வ‌ழியும் உதிர‌ம் குடித்து வ‌ள‌ர்ந்து கொழுக்கிறார்க‌ள். பெரும்பாலான‌ ம‌னித‌ர்க‌ள் இதை புரிந்துகொள்ளும் அறிவும் தெளிவும் இல்லாம‌ல் த‌த்த‌ளிக்கிறார்க‌ள்.

பாம‌ர‌ர்க‌ளை போதையூட்டி க‌ட்டுக்குக்குள் வைத்திருக்க ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாய் தொட‌ர்ந்து ப‌ய‌ன்ப‌டும் ம‌த‌த்தை,
ச‌மீப‌ கால‌ங்க‌ளில் அர‌சிய‌லும் த‌ன் கையில் எடுத்திருக்கிற‌து. சென்ற‌ சுமார் 25 ஆண்டுக‌ளாக‌ ம‌த‌ம் க‌ல‌க்காம‌ல் அர‌சிய‌ல் பேசுவ‌துகூட‌ சிர‌ம‌மாக‌ இருக்கிற‌து.

தேர்த‌ல் அர‌சிய‌லில் ப‌ய‌ணிக்கும் இட‌துசாரி தோழ‌மைக‌ள் ப‌ல‌ரும்கூட‌ தெரிந்தோ தெரியாம‌லோ,
இந்த‌ வ‌லைக்குள் மாட்டியிருப்ப‌துதான் வேத‌னையின் உச்ச‌ம்.

த‌லையில் குல்லா அணிந்த‌ப‌டி ஜ‌ம்மாத் நிர்வாகிக‌ளாக‌வும், தேவால‌ய‌த்தில் நிர்வாக‌ பொறுப்புக‌ளிலும் இருக்கும் இட‌திசாரி (?) க‌ருத்திய‌ல்வாதிக‌ளை என‌க்கு தெரியும்.
ஒவ்வோராண்டும் இருமுடி த‌ரித்து ந‌ட‌ந்தே ச‌ப‌ரிம‌லை செல்லும் கம்யூனிஸ்ட் க‌ட்சிக்கார‌ர்க‌ளையும் நான் அறிவேன். அடிப்ப‌டை சித்தாந்த‌ புரித‌ல் இல்லாமையே இத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம்.

இன்றைய‌ அவ‌சிய‌த்தேவை அர‌சிய‌ல் வ‌குப்புக‌ளும் நிறைய‌ வாசிப்பும்.

தோழ‌மையுட‌ன்,
Fazil Freeman Ali Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Feb 15
அரிமளம் போனேன் செட்டியார் ஊருக்கு. சாப்பாட்டுக்கு பிராமணாள் இருக்காளா என்று கேட்டுட்டு தான் போவேன்.

கவுண்டர் வீட்டில் தங்கி இருக்கிறேன் . அவா வீட்டில் சாப்பிட மாட்டேன் .
பிராமணா வீட்டிலிருந்துதான் சாப்பாடு வரும்.
ஒரு ஊருக்கு போறதுக்கு முன்ன அங்கு சாப்பாட்டுக்கு பிராமணர் இருக்காளா என்று கேட்டுட்டு தான் போவேன்

இல்லேன்னா நானே சமைச்சிடுவேன் இல்லனா ஆத்துக்காரி கூட வருவா அவள் சமைச்சு கொடுப்பா

இப்படி எல்லாம் பேசும் பார்ப்பான்தான் திக காரன் எல்லாம் இந்து மதத்தை மட்டுமே திட்டுறான் என்கிறான்
ஏன்டா 🐕யே செட்டியாரும் கவுண்டரும் இந்துதானே
🤔🤔

அவர்கள் வீட்டில் நீ ஏன் சாப்பிட மறுக்கிறாய்? உன் ஆரிய பூணூல்
கொழுப்பு தானே!

ஒரு கிறிஸ்தவன் வீட்டில் இன்னொரு கிறிஸ்தவன் சாப்பிட மறுப்பானா?

ஒரு இஸ்லாமியன் வீட்டில் இஸ்லாமியன் சாப்பிட மறுப்பானா?

சொல்லு டா தண்டச்சோறு
👶
Read 4 tweets
Feb 11
கலைஞரைப் பற்றி நல்லகண்ணு!

கருணாநிதி நல்ல தோழர் எனக்கு
இந்தியா முழுமையும் ஊராகவும் சேரியாகவும் ஒவ்வொரு கிராமமும் இரண்டாகப் பிரிந்து கிடக்க, எல்லாச் சாதியினரையும் சேர்த்துக் குடியமர்த்தும் வகையில் அவர் கொண்டுவந்த 💪'சமத்துவபுரம்' திட்டம்💪எனக்கு ரொம்பவும் பிடித்தமானது,
*அவரது மனதில் ஆழப் பதிந்திருக்கும் சமத்துவ எண்ணத்தினுடைய வெளிப்பாடே இந்தத் திட்டம்*

👉கை ரிக்ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கும் திட்டத்தையும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னரே👈 அவர் சிந்தித்தவர்.
வீடற்ற அல்லது குடிசைகளில் வசித்த ஏழைகளுக்குக்
👉குடியிருப்பு வழங்கும் திட்டம்அப்புறம் சமூக நீதி விஷயத்தில் எப்போதும் அவர் உறுதியாக இருந்தார்.

பின்பு அவருடைய அரசியல் பண்பாடு மிகவும் ஈர்க்குமொன்று,
👉கூட்டணியோ எதிரணியோ எங்கிருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு பாராட்டுவார்.
Read 7 tweets
Feb 10
இயற்கை வாழ்வியலை கற்றறிந்த பக்குவப்பட்ட பேச்சாளர் ஒருவர்
ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் இடையே எழுந்து நிற்கச் சொன்னார்.

"நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இளம் அழகான பெண் முன்னால் இருந்து வருகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?"
அந்த இளைஞன் பதிலளித்தான் -"அவள் பார்க்கப்படுவாள், அவளுடைய ஆளுமையை நான் பார்த்து பாராட்டத் தொடங்குவேன்".

பேச்சாளர் கேட்டார் - "அந்தப் பெண் முன்னேறிய பிறகு,நீங்களும் திரும்பிப் பார்ப்பீர்களா?"

அந்த இளைஞன் சொன்னான் -ஆம்,என் மனைவி என்னுடன் இல்லை என்றால். (கூட்டத்தில் சிரிப்பலை)
பேச்சாளர் மீண்டும் கேட்டார் - "அந்த அழகான முகத்தை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள்?"

அந்த இளைஞன்,- "இன்னொரு அழகான முகம் தோன்றும் வரை 5-10 நிமிடங்கள் இருக்கலாம்" என்று பதிலளித்தார். மற்றும் புன்னகைத்தார்.
Read 11 tweets
Feb 9
பிப்-14 பசுவைக் கட்டிப்பிடியுங்கள் எனச் சொல்வதற்குக் காரணமாகச் சொன்னது தான் முக்கியமானது.
"வேதகால பழக்க வழக்கங்கள் அழிகிறது" எனவே பசுவைக் கட்டிப்பிடியுங்கள் என்கிறார்கள்.

வேதகாலத்தில் பசுவைக் கட்டிபிடித்தது தான் வழக்கமாக இருந்ததா?
வேதங்கள் என்ன சொல்கிறது?
"ஆரிய பிராமணன் பசுமாட்டை வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு கூர்மையான வாள், கோடரி பயன்படுத்தினார்கள் என்று ரிக்வேதம் [10/ 72/ 6] சுலோகம் சொல்கிறது.
ரிக்வேதகால ஆரிய பார்ப்பனர்கள் உணவுக்காகப் பசுக்களை கொன்றார்கள் என்பதையும், அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உணடார்கள் என்பதனை ரிக்வேதம் [10/ 86/14] தெளிவுப்படுத்துகிறது.
Read 9 tweets
Feb 8
1962ஆம் ஆண்டு விவேகானந்தரின் நூற்றாண்டை கொண்டாட அவருக்கு ஒரு நினைவு மண்டபத்தை கட்டலாம் என சிலர் முடிவு செய்து இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரியில் பாறை ஒன்றை தேர்வு செய்தனர். ராமகிருஷ்ணா மடமும் இந்த திட்டத்தோடு களத்தில் இறங்கியது.
கன்னியாகுமரியில் பெரும்பான்மையாக இருந்த கத்தோலிக்க மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒரு மத கலவரமாக மாறும் சூழல் உருவாக, பாறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நினைவு மண்டபம் கட்ட விரும்பியவர்கள் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்க, அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலம் மண்டபம் கட்ட அனுமதி மறுத்து, ஒரு கல்வெட்டு மட்டுமே வைக்க ஒப்புக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சரை மீறி நினைவு மண்டபம் கட்ட பெரிய அளவில் லாபி செய்ய வேண்டும் என முடிவு செய்த,
Read 17 tweets
Feb 7
*கோவிலுக்குப் போனால் பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும் என்று கூறும் ஆன்மீக விஞ்ஞான மேதைகளே..*

அரை மணி நேரம் கோவிலுக்கு போய் வருபவர்களுக்கே பாஸிடிவ் வைப்ரேஷன் கிடைக்குமென்றால் கோவிலிலேயே வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டு,
மந்திர சக்தி உருவேற்றப்பட்ட மூலவர் திருமேனியையை முப்பொழுதும் தொட்டுப் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வாழும் மகான்களாக, பாசிடிவ் மின் முனைகளாக, நல்ல எண்ணங்களின் ஊற்றாக அல்லவா இருக்க வேண்டும்?

ஆனால் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்களா?
காஞ்சிபுரம் கோவிலில் காம லீலைகள் புரிந்த தேவநாதனுக்கு ஏன் கர்ப்பகிரகத்திற்குள் காமம் கொப்பளித்தது?

சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோவில் கருவறையில் பத்ரி நாராயணன் என்ற பட்டாச்சாரியார் லீலை பல புரிந்து சிக்கியிருக்கிறார்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(