M.SivaRajan Profile picture
Feb 22 17 tweets 2 min read
*#ஓம்_நமோ_நாராயணாய*

ஹரி பக்தர்களை காக்கும் ஸுதர்சன சக்கரம்

ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தார்.

இவர் ஏகாதசி விரதத்தை ஒரு முறை கூட தவர விட்டதில்லை.

ஸ்ரீமந் நாராயணனிடம் சுயநலமற்ற அபரிமிதமான பக்தி வைத்து இருந்தார். Image
ஸ்ரீமந் நாராயணன் அம்பரீச ராஜாவிற்கு காட்சி தருகிறார்.

என்ன வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு அம்பரீஷ ராஜாவோ தனக்கு தங்கள் தரிசனம் கிடைத்ததே போதும் பிரபு தன்யனானேன் என்றார்.

இவரின் பக்தியை மெச்சி பரந்தாமனே தன்னுடைய சுதர்சன சக்கரத்தை கொடுத்து விட்டார்.
அதை அனுதினமும் பக்தியுடன் பூஜை செய்து வந்தார் அம்பரீஷ மஹாராஜா.

இவர் ஒவ்வொரு முறையும் ஏகாதசியில் விரதமிருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பார்.

இவரது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.

ஆனால் தேவலோகத்தில் அனைவரும் கலக்கமாக இருந்தனர்.

நூறாவது விரதம் முடிந்துவிட்டால் தேவலோக பதவி கூட கிடைத்துவிடும்,
மானுடனுக்கு இப்பதவி கிடைத்துவிட்டால் தேவர்களின் மரியாதை குறைந்து விடும் என பயந்தனர்.

இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் சென்றனர்.

துர்வாசரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துவிட்டு, மன்னனின் விரதத்தை தடுக்க பூமிக்கு வந்தார்.
அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து இருந்தார்.

அவர் ஏகாதசி விரதம் முடித்து துவாதசி நேரம் முடிவதற்குள் அவர் உணவு அருந்தி இருக்கவேண்டும்,

அப்போதுதான் ஏகாதசியின் முழுப்பயனும் அவருக்கு கிடைக்கும்.
துவாதசி நேரம் முடிந்து விட்டால் பயனில்லை துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாராக இருந்தார்.

அதற்குள் துர்வாசர் வந்து விட்டார்.

தன் விரதத்தை தடுக்கத்தான் இவர் வந்துள்ளார் என்பது மன்னனுக்கு தெரியாது.
துர்வாச முனிவரை வரவேற்று மன்னன் தாங்களும் என்னுடன் உணவருந்தினால் எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்றார்.

துர்வாச முனிவரும் சம்மதித்துவிட்டு நதியில் நீராடிவிட்டு வருகிறேன், அதன்பின் உணவருந்தலாம் எனக்கூறிச் சென்றார்.
முனிவரின் திட்டம் என்னவென்றால் தான் நீராடிவிட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்து விடும் மன்னன் நமக்காக காத்திருந்தால் அவனது விரதம் தடை படும் என்பது தான்.

துவாதசி முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது.
கோபக்கார துர்வாசர் வருவதற்குள் சாப்பிட்டு விட்டால் விரதத்தின் பலன் கிடைக்காமல் செய்துவிடுவார்.

இன்னும் சில நிமிடங்களே இருந்தது வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தார் அம்பரீஷ மஹாராஜா.
உடனே தலைமை பண்டிதர் உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசியின் முழுப்பயனும் கிடைத்துவிடும் என்று கூறினார்.

அதேபோல் பெருமாளை நினைத்து உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன் விரதத்தை பூர்த்தி செய்து விட்டு
முனிவருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக காத்திருந்தார்.

இதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்த துர்வாசர், மிகுந்த கோபமடைந்தார்

உடனே துர்வாசர் தனது ஜடா முடியில் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீஷனை கொல்லுமாறு ஆணையிட்டார்.
பக்தனுக்கு ஒரு துன்பம் என்றால் பகவான் சும்மா விடுவாரா

அம்பரீஷ ராஜாவோ தனது பூஜை அறையில் நித்ய பூஜை செய்யும் இடத்தில் பெருமாளை நினைத்து தியானம் செய்தார்.

அவ்வளவு தான் உடனே சுழன்றது சுதர்சன சக்கரம்.
புயலேன அந்த பூதத்தின் தலையை கொய்தது.

அதன் பின்னரும் தொடர்ந்து ஏவிவிட்ட துர்வாசரையும் துரத்தியது.

முதலில் பிரம்ம தேவரிடம் சரணடைந்தார் துர்வாசர் அவரோ சிவபெருமானிடம் தஞ்சமடையுங்கள் என்றார்.

சிவபெருமானோ ஸ்ரீமந் நாராயணரிடம் செல்லுங்கள் என்றார்.
மஹா விஷ்ணுவும் தன்னாலும் எதுவும் செய்ய முடியாது ஒரே உபாயம் அம்பரீஷ மஹாராஜாவிடம் தஞ்சமடையுங்கள் என்றார்.

துர்வாசர் கடைசியாக அம்பரீஷ மஹாராஜாவிடம் தஞ்சமடைந்தார்.

அம்பரீஷ மஹாராஜாவும் மனமார மன்னித்து சுதர்சன சக்கரத்தை சாந்த படுத்தினார்.
துர்வாசரிடம் தனக்கு எந்த பதவியிலும் நாட்டமில்லை ஸ்ரீமந் நாராயணனின் திருவருளும் அவருடைய பாதத்தில் ஒரு சிறு இடம் இருந்தால் அதுவே என் பாக்கியம் என்றார்.

துர்வாசரும் ஆஹா என்ன ஒரு அற்புதமான ராஜா நீ என்று வாழ்த்தி விடை பெற்றார்.
ஸ்ரீ சுதர்சன சக்கரம் நம்மையும் இமை போல் காக்க ஸ்ரீமந் நாராயணனை சரணடைவோம்.

ஸ்ரீ சுதர்சன காயத்ரி :

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்

ஜெய் ஸ்ரீராம்.

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 24
#ஸ்ரீ_மீனாட்சி_அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் தனி சிறப்புகள்!

1. மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

2. அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. Image
3. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.
4. அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை.
Read 11 tweets
Feb 24
#ஸ்ரீ_ராம_நாம_மகிமை

சதுர் யுகங்களில்”-

கிருத யுகம் - தவம்;

திரேதா யுகம் - யாகம்;

துவாபர யுகம் - பாத சேவை;

கலி யுகம் - நாம சங்கீர்த்தனம்.

“ஸ்ரீ ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும். Image
நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம் -

நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.

கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.

கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.

பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.
பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே.

நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.

நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து.
Read 13 tweets
Feb 24
#ஆறு_விரல்_மஹாலக்ஷ்மி

கோரிக்கை எது என்றாலும் உடனே நிறைவேற்றித்தர தயாராக ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருளும் அரசர் கோயில்

தலவரலாறு

பிரம்மா பாப விமோசனம் தேடிக் கொண்டிருந்த சமயம்,பல தவச் சீலர்களை கலந்தாலோசிக்கிறார். Image
மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் மாதவனும் சேர்ந்து எங்கு காட்சி தருகிறார்களோ அந்தத் திருத்தலத்தில் அவர்களின் தரிசனம் கிடைத்தால் தான்  "பாப விமோசனம்"  என்று முனிவர்கள் சொல்கிறார்கள். !
பூலோகத்துக்கு வரும் நாராயணன், பாலாற்றங்கரையில் வாசம் செய்கிறார். 

அந்த சமயம் ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார். 

ஆண்டவரும் அரசரும் அங்கே சந்திக்கிறார்கள்.

இதைக் கேள்விப்பட்ட பிரம்மா விரைந்து வந்த இருவரையும் தரிசனம் செய்கிறார்.
Read 17 tweets
Feb 23
*சிவலிங்கத்துக்கு சேலை உடுத்தும் அதிசய கோயில்*

’ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற பிரபலமான சொல் வழக்கு உண்டு.

மயிலாடுதுறை என்றாலே ஶ்ரீமாயூரநாத சுவாமிதான் நினைவில் வருவார்.

ஆயினும், புராதனச் சிறப்புடைய வேறு சில சிவாலயங்களும் இங்குள்ளன. Image
அவ்வகையில் அமைந்துள்ள அற்பதமான திருத்தலங்களில் ஒன்று திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அருள்பாலிக்கும் ஶ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸமேத ஶ்ரீ ஐயாறப்ப சுவாமி கோயிலாகும்.
துலா மாதமாகிய ஐப்பசியில் அறுபத்தாறு கோடி நதிகளும், கங்கை நதியும் தன்மீது படிந்த பாவங்களைப் போக்க மயிலாடுதுறை காவிரியில் நீராடுவதாக ஐதிகம்.

பல தலைமுறைகளாகச் செய்து வந்த பாவம், இங்கு காவிரி துலா கட்டத்தில் கடைமுழுக்கு நாளில் நீராடுவதால் கரைந்து போகும் என்பது அனைவரின் நம்பிக்கை.
Read 18 tweets
Feb 23
#கருடபுராணம் சொல்லும் நன்மைகள்*

*1. அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.*

*2. கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்*

*3. பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு* Image
*4. குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்*

*5. தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்*

*6. வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்*
*7. இரத்தம்,; கண்,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்*

*8. ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்*

*9. குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு*
*14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்*
Read 13 tweets
Feb 22
#காலில்_சங்கிலியுடன்_அனுமன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அமைந்துள்ளது மேல்முடியனூர்.

இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி உள்ளது. Image
இந்த ஆஞ்சநேயரின் கால், கல்லால் செதுக்கப்பட்ட சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது.

ராம அவதாரம் முடிந்து, ராமபிரான் வைகுண்டம் புறப்படத் தயாரானார்.

அப்போது தன்னுடன் அனுமனையும் வரும்படி அழைத்தார்.
ஆனால் அனுமனோ, “பூலோகத்தில் எங்கெல்லாம் ராமகீர்த்தனம் கேட்கிறதோ.. அங்கேயே இருக்க விரும்புகிறேன்” என்று கூறிவிட்டார்.

ராமர் மீண்டும் அழைத்தால், அவர் மேல் உள்ள பக்தியில் மனம் மாறி சென்று விடக் கூடாதே என்பதற்காக,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(