#நாளந்தா_பல்லலைக்கழகம்
நாளாந்தா என்பதற்கு #அறிவை_அளிப்பவர் என்று பொருள். இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள #நாளந்தா என்ற பகுதியில் பொ.யு ஐந்தாம் நூற்றாண்டில் #குப்தப்_பேரரசர் #முதலாம்_குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் இது நிறுவப்பட்டது. பின்வந்த ஹர்ஷவர்தனரும்
இப்பல்கலைகழகத்தை ஆதரித்தார்.
அம்மாபெரும் அறிவு பொக்கிஷம் அழிந்த துயர வரலாற்றை பார்ப்போம்.
முதலையும், மூர்க்கனும் கொண்டது விடாது, விஷப் பாம்பிற்குப் பால் வார்க்காதே போன்ற பழமொழிகளை நாம் படித்திருப்போம். ஆனால் இத்தகைய அரிய தத்துவங்களை நாம் பின்பற்றாமல் கொடிய விஷப் பாம்புக்குப்
பால் வார்ப்பது போன்ற ஒரு செயலை செய்ததால் இப்பேரழிவை சந்தித்துள்ளோம். உலகியே மிகத் தொன்மையானதும் மிகப்பெரியதுமான நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் நூற்றாண்டில் #மகேந்திராதித்யா எனப்படும் முதலாம் குமார குப்தரால் நிறுவப்பட்டது. ஆனால் தொல்லியல் துறை நாளந்தா பல்கலைக்கழகம் பொ.யு 1200லேயே
நிறுவப்பட்டிருக்கலாம் என்கிறது.
நாளந்தா பல்கலைக்கழகம் 30 ஏக்கரில் அமைந்த 8 வளாகத்துடன் கூடிய கட்டமைப்பை கொண்டது!
பல அடுக்குகளைக் கொண்ட மூன்று கட்டடங்களை உடையது. முக்கியமான ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வைத்திருந்த ஒரு கட்டடம் 9 மாடிகளை கொண்டது. பல்கலைக்கழக வளாகத்துள் ஏரி, பூங்காகள்
மற்றும் 6 கோவில்கள் இருந்தன. ஒரே சமயத்தில் 10,000 மாணவர்கள் அங்கு தங்கி படித்தனர். அவர்களுக்கு 2000 ஆரிசியர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் தங்குவதற்கு பல்கலைக்கழக வளாகத்தில் தங்கும் விடுதிகள் இருந்தன. பௌத்த மத கல்வியும் அங்கு பயிற்றுவிக்கப் பட்டதால், பல புத்த பிட்சுக்கள் அங்கு
படித்தனர். அவர்கள் தங்குவதற்குத் தனியான இருப்பிடங்களும், தியான மண்டபங்களும் அங்கு இருந்தன. நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஒன்பது நூலகங்களும், அதில் 90 லட்சம் அபூர்வமான புத்தகங்களும் இருந்தன. தத்துவம், வானவியல், கணிதம், உடற்கூறியல், வேதம், சமஸ்கிருதம், மருத்துவம், சாம்கிய யோகா,
பௌத்தம் மற்றும் பலவகையான துறைகளில் அங்கு கல்வி அளிக்கப் பட்டன. திபெத், சீனா, கிரீஸ், பெர்சியா, கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு கல்வி பயில வந்தனர். யுவான் சுவாங் மற்றும் ஈஜிங் ஆகிய சீனர்கள் இங்கு பயின்றவர்களே. இப்படிப்பட்ட
பெரும் மகிமையுடைய நாளந்தா பல்கலைக்கழகம், ஒரு மதவெறியனுக்குக் கொடுத்த அபூர்வ மருத்துவ கல்வியாலேயே அழிந்தது என்றால் நம்புவீர்களா....?ஆம் அதுவே உண்மை. நாளந்தா பல்கலைக்கழகத்தை எரித்து, நாசமாக்கியவன் மொகமது பக்தியர் கில்ஜி என்ற கொடுமைக்காரனே.
Bakhtiyar Khilji ஆப்கானித்தானில் பிறந்த
துருக்கி இனத்தவர். இவர் டில்லி சுல்தான் குத்புத்தீன் ஐபக்கின் ஒரு பெரும் படையின் தலைவர் ஆவார்.
#மொகமது_பக்தியார்_கில்ஜி என்ற ஓரு கொடுமைக்கார துருக்கி படைத் தளபதி இருந்தான். ஒரு முறை அவன் கடுமையாக நோயுற்றான். அப்போது பல பெரிய மருத்துவர்களாலும் அவனைக் குணப்படுத்த முடியாமல் போகவே,
சிலர் அவனிடம் #ஆச்சார்யா_ராகுல்_ஸ்ரீபத்ரா என்ற மருத்துவ வல்லுநரைப் பற்றி கூறினர். ஆச்சார்யா நாளந்தா பல்கலைக் கழகத்தின் ஆயுர்வேத மருத்துவப் பிரிவின் தலைவர். ஆச்சார்யா ராகுல் ஶ்ரீபத்ரா மருத்துவ மாமேதையாவார். எப்படிப்பட்ட தீராத கொடிய நோயையும் குணப்படுத்தும் வல்லமை உடையவர். ஆனால்
ஆணவம் பிடித்த மொகமது பக்தியார் கில்ஜி தன் நாட்டு மருத்துவர்களை விட வேற்று நாட்டு மருத்துவர் ஒருவர் சிறந்தவராக இருக்க முடியாது என்று உறுமினான். ராகுல் ஶ்ரீபத்ரா ஆச்சார்யாவிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் பிடிவாதமாக மறுத்தான். இருப்பினும் நாளுக்கு நாள் அவனுடைய உடல் மோசமானதால்
வேறு வழியில்லாமல் ஶ்ரீபத்ரா ஆச்சார்யா வரவழைக்கப்பட்டார்.
ஆனால் ஆணவம் கொண்ட மொகமது பக்தியார் கில்ஜி, ஶ்ரீபத்ரா ஆச்சார்யாவிடம் "நீ தரும் மருந்தை நான் சாப்பிட மாட்டேன். மருந்து கொடுக்காமலேயே என்னைக் குணப்படுத்த உன்னால் முடியுமா?" என்று கொக்கரித்தான். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டு
மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு சென்றார். மறுநாள் ஒரு குரான் புத்தகத்தை ராகுல் ஶ்ரீபத்ராஆச்சார்யா கொண்டு வந்தார். அதை மொகமது பர்தியர் கில்ஜியிடம் கொடுத்து அதில் குறிப்பிட்ட சில பக்கங்களை தினமும் படிக்கச் சொன்னார். அவ்வாறே பர்தியர்கில்ஜியும் தினமும் படித்து வந்தான். அவன் குணமடைய
ஆரம்பித்தான். இதனால் ஆச்சார்யமடைந்த மொகமது பக்தியார் கில்ஜி இது எப்படி சாத்தியமானது? என்று ஶ்ரீபத்ராஆச்சார்யாவிடம் வினவ, அந்த புத்தகத்தின் பக்கங்களில் நான் சக்தி மிக்க மருந்து பூச்சு செய்து இருந்ததாகவும், அதை நீங்கள் படிக்கும் போது தொடர்ந்து அவன் அந்த மருந்தை சுவாசித்ததால்
உடல் நலம் பெற்றதாகவும் கூறினார். அதைக் கேட்ட மொகமது பக்தியார் கில்ஜிக்குப் பொறாமையும், வஞ்சகமும், ஆத்திர வெறியும் தலைக்கேறியது. ஆச்சார்யாவுக்கு இவ்வளவு அறிவும் திறமையும் எப்படி வந்தது என்று உடனிருந்தவர்களிடம் வினவினான். அவர்கள் அனைவரும் சுட்டிக் காட்டியது நாளந்தா பல்கலைக்கழகத்தை.
உலகிலேயே பெரியதான மிகச்சிறந்த அறிவு பொக்கிஷம் நாளந்தா பல்கலைக்கழகம். உலகெங்கும் இருந்து நிறைய பேர்கள் அங்கு கல்வி கற்று மாமேதைகளாகத் திகழ்கின்றனர் என்றனர். நாளந்தா பல்கலைக்கழகமும், அங்கே குவிந்திருக்கும் 90 லட்சம் புத்தகங்களுமே, அங்கு படிப்பவர்களுக்கு அறிவாற்றலை அள்ளி
வழங்குகிறது. பாரதத்தின் அதி உன்னத அறிவு மேன்மைக்கு இந்த நாளந்தா பல்கலைக்கழகம் முக்கிய காரணம் என்றனர். அதைக் கேட்டதும் கில்ஜிக்குப் பொறாமை, சினம் தலைக்கேறியது. பாலையே வார்த்தாலும் விஷத்தையே கக்கும் கொடிய விஷப் பாம்பைப் போல கில்ஜி, ராகுல் ஶ்ரீபத்ராச்சார்யா அவனது உயிரை மீட்டுக்
கொடுத்ததை மறந்தான். மகத நாட்டின் மீது படையெடுத்துச் சென்று நாளந்தா பல்கலைக்கழகத்தை இடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கினான். அங்கு பயின்ற 10,000 மாணவர்கள் மற்றும் 2000 ஆசிரியர் மற்றும் புத்த பிட்சுகளை கொன்று குவித்தான் மொகமது பக்தியார் கில்ஜி. இந்து மதம் புத்த பிட்சுகளை ஆதரித்தது.
ஆனால் மூர்க்கனான கில்ஜியோ அப்பாவிகளைக் கொன்று குவித்தான்.
அங்கிருந்த ஒன்பது அரிய நூலகங்களையும், அதில் இருந்த 90 இலட்சம் அரிய நூல்களையும் தீக்கிரையாக்கினான். அங்ககிருந்த தொண்ணூறு இலட்சம் நூல்களையும் எரிக்க அவனுக்கு மூன்று மாதங்கள் ஆனதாம். ஆனால் ஒரு நூல் கூட தப்பித்து விடக்
கூடாது என்பதில் அவன் வெறியுடன் இருந்தான். கொடிய விஷப் பாம்பிற்கு இரக்கப்பட்டு பால் வார்த்த ஒரே காரணத்திற்காக அது அத்தனை அப்பாவி உயிர்களையும் கொன்று, பாரதத்தின் அறிவு பொக்கிஷமான நாளந்தா பல்கலைக்கழகத்தை தீக்கிரையாக்கி, அத்தனை நூல்களையும் எரித்து சாம்பலாக்கி, பாரதத்தின் அறிவு
பொக்கிஷத்தை அழித்துவிட்டேன் என கொக்கரித்தது. ஆனால் யார் நினைத்தாலும் அழிக்க முடியாத மாபெரும் #இறைசக்தி இம்மண்ணில் உள்ளது என்பதை அந்த கொடூர பாபி அப்பொழுது உணரவில்லை. இம்மண்ணில் நம் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளையும், அழிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களையும், கொள்ளை அடிக்கப்பட்ட
பொக்கிஷங்களையும் பற்றி அறிய சற்றேனும் நாம் மனது வைப்போம். அப்பொழுதுதான் மீண்டும் அத்தகைய கொடுமைகள், இம்மண்ணில் நிகழாதவாறு, நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும்.
வந்தாரை வாழ வைப்போம் என்றும், நம்பியவர்களைக் காப்போம் என்றும் தர்ம சிந்தனையுடன் செயல்பட்டு, துரோகிகளையும் காப்பாற்றி
சீரழிந்தது இம்மண்ணின் தர்மங்களும், நியாயங்களும். சநாதன தர்மமும், அதன் கல்விச் சாலைகளும் நம்பக் கூடாதவர்களை நம்பியே சீரழிந்தது. உலகிலேயே மிகப் புனிதமான பூமியாம் இப்பாரதம். இனியாவது நாம் முந்தைய வரலாற்றை நினைவு கூர்ந்து விழிப்போடு இருப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 26
#FoodForThought
Many times we fail to be ourselves or are ashamed to be ourselves. That is wrong. We should always be ourselves. Gold is expensive and tin is cheap but what we can make out of tin we cannot make out of gold. Neither is gold great nor tin inferior. Each has its Image
use and purpose. Ganga water is sacred but doesn’t mean well water is useless. When one is thirsty it wouldn’t matter if it is Ganga water or well water that quenches one’s thirst. Crow is not beautiful like a peacock but we offer food to crow in the place of our ancestors.
Cotton is not like silk but for the hot summer that is preferred! Today is different from yesterday and tomorrow will be again different. But everyday is beautiful and a miracle. Let us be happy with who we are. Let us work towards being the best we can be. There is nothing to be
Read 4 tweets
Feb 26
#சிருங்கேரி_சங்கராச்சாரியார்_அருளுரை
தெய்வத்திடம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? எதை கேட்க வேண்டும்? ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.
பொதுவாக, நாம் பக்தியோடு எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார். கேட்பதில் உயர்ந்த விஷயங்கள், மிக சாதாரண விஷயங்கள் உண்டு. பிரார்த்தனை Image
செய்தேன், நோய் சரியாகி விட்டது பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது, வேலை கிடைத்தது
என சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல. ஆதி சங்கரர் 'இதையெல்லாம் பகவானிடம் கேட்காதே'என்று சொல்லி, நீ கேட்க வேண்டியது சில உள்ளது, “உன் முயற்சியால்
கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என சொல்லிக் கொடுக்கிறார்.
நம் புராதன வேதம்—“நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்” என்று சொல்கிறது. ஆதி சங்கரர் விளக்குகிறார்.
1. கர்வம்
தெய்வத்திடம் முதலில் கேட்க வேண்டியது, பகவானே, முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்
Read 17 tweets
Feb 25
#விஷ்ணுசஹரநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சில நாமங்கள் குறிப்பிட்ட சில பிணிகளை நீக்க வல்லன. அவற்றை மட்டும் நாம் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்ய அந்நோய்/அத்துன்பம் விலகும்.
படிப்பில் வல்லவனாக:
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி

வயிற்று வலி நீங்க:
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ

உற்சாகம் ஏற்பட:
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல

ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:
மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி

கண்பார்வை தெளிவுபெற:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

பெருமதிப்பு ஏற்பட:
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநர
எண்ணிய காரியம் நிறைவேற:
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன

கல்யாணம் நடக்க:
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு

உயர்ந்த பதவி ஏற்பட:
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ

மரண பயம் நீங்க:
வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது:
Read 5 tweets
Feb 25
#நாகலாபுரம்_ஸ்ரீவேதநாராயண_பெருமாள்
முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ
மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே. கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான். அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம்
செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது. நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் ஆகும்.
மூலவர் வேதநாராயணப் பெருமாள்,
Read 10 tweets
Feb 25
#GlimpsesFromBhagavadGita Being a great teacher, Krishna looks out for facial reactions and body language of his student. He finds that Arjuna is having difficulties in understanding what has been taught so far. So, the Lord says, “Arjuna, even if you are unable to understand the
subtle spiritual approach discussed so far, do not worry. I will explain to you from the practical angle. You know that everyone of us who is born must die. Also, one who dies will have to be born. This is an inevitable situation and no one can have a choice here. This means,
Bhishma, Dhrona and others will have to perish when their time is up. You are helpless before these factors which function as per Nature’s prescriptions. So, why worry?
Please understand that before birth, all living beings are unmanifest to our sense organs and after death
Read 13 tweets
Feb 24
#Samithu Samithu are the wooden sticks used while performing homam. These sticks are collected from various holy trees. Samithu sticks are one of the integral parts of any rituals. They are twigs used in oblations, sacrifices to deities during homa agni karya or invocation of
deity in the fire. The sticks of Erukku, Purasu, Karungali, Arasu, Athi, Vanni that fall down themselves and get dried are collected and bundled for offering to God by invoking fire. Also, the dried grasses like Nayuruvi, Arugan, etc. also forms part of Samithu. Samithu sticks
are dipped in the ghee and offered for the homam. It gives a good positive energy. The smoke from the homam by burning the samithu sticks increases the aura of the place. The Samithu that are special to various Gods:
Vilva/Bilva - Shiva and Mahalakshmi
Thulasi/Besil- Sri Narayana
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(