ஒரு மரத்தடி பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான். எதிரில் ஒரு தட்டு. அதில் சில நாணயங்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள். அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். இருவரும் நண்பர்கள்.
ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான். அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான். பாட்டு அரசனை கவர்ந்தது.
நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்!; என்றான் அரசன்.
மகிழ்ந்து போனான் பார்வையற்றவன்.
அரசே! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா? என்று கேட்டான்.
இதென்ன பிரமாதம். நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன். மதியம் உணவுடன் சந்திக்கிறேன்;, என்று சொல்லிவிட்டு அரசன் நகர்ந்தான்.
மதிய உணவை அரசன் கொண்டுவருவான். அதைச் திருப்தியாக சாப்பிட வேண்டும். அதற்கு வசதியாக, காலையிலிருந்தே எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. அதிக பசியோடு இருந்தால் அதிகமாக சாப்பிடலாம், என்று அவன் மனம் கணக்குப் போட்டது.
அடுத்த நாள் விடிந்தது. அரசனின் வருகைக்காக காத்திருந்தான். வழக்கம் போல் பலர் அவனுக்கு உணவு கொடுக்க முன் வந்தார்கள். அரசன் கொண்டுவரும் உணவு பற்றிய சிந்தனையால் மற்றவர்கள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டான். மதியம் மணி இரண்டானது, மூன்றானது அரசன் வரவேயில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
இரவு எட்டு மணியானது. ஆள் நடமாட்டமே இல்லாமல் அந்த இடமே ஓய்ந்து போனது. கோபத்தோடும் பசியோடும் உட்கார்ந்திருந்தான் பார்வையற்றவன். அந்த நேரத்தில் அரசன் அங்கு வந்தான்.
தம்பி! எப்படி இருக்கிறாய்? அரண்மனை சாப்பாடு நன்றாக இருந்ததா? எங்கே பொற்காசு மூட்டை, எங்கே குதிரை?; என்று கேட்டான் அரசன்.
சாப்பாட்டுக் கூடையோடு கிளம்பினேன். திடீரென்று தலை சுற்றியது. வைத்தியர்கள் என்னை சோதித்துவிட்டு ஓய்வெடுக்குமாறு சொன்னார்கள்.
அதனால், என்னுடைய பாதுகாவலன் மூலமாக உணவை கொடுத்து அனுப்பினேன். அதை நீ சாப்பிடவில்லையா?; என்றவாறு பக்கத்தில் இருந்த பாதுகாவலனை விசாரித்தான்.
அரசே! இவரிடம் உணவை கொடுத்தேன். ஆனால், இவர் வாங்க மறுத்துவிட்டார். அதனால், அதை திரும்ப எடுத்துச் செல்வதைவிட யாரிடமாவது கொடுத்தால் உபயோகமாக இருக்குமே என்று நினைத்து பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் கொடுத்துவிட்டு அரண்மனை திரும்பினேன்.
தலையில் கைவைத்தபடி அமர்ந்தான் அரசன். அப்போது அங்கிருந்த சாது பேசினார்.
தம்பி! நடந்த விவரங்களை என்னால் யூகிக்க முடிகிறது. அரசன் சாப்பிடும் உணவை கேட்டாய். தானே நேரில் வந்து கொடுக்கிறேன், என்று சொன்னது அரசனின் பெருந்தன்மை.
ஆனால், அரசன் வந்து நேரில் கொடுத்தால் மட்டுமே அது அரச உணவு என்று நீ நினைத்தாய். அதுதான் இவ்வளவு குழப்பங்களுக்கு காரணம். இதுவரை நடந்தது மட்டுமே உனக்குத் தெரியும். இதற்கு மேலும் பல விஷயங்கள் நடந்துள்ளது;, என்று சொல்லிவிட்டு அமைதியானார் சாது.
அந்த இடமே அமைதியானது. சாது மீண்டும் பேசத்தொடங்கினார்.
உணவை கொடுத்து அனுப்பிய அரசன் இரண்டாவது பாதுகாவலனை அழைத்தான். ஆயிரம் பொற்காசுகளை ஒரு மூட்டையாக கட்டி, மரத்தடியில் அரச உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பவனிடம் இந்த மூட்டையை ஒப்படைத்துவிட்டு வா;, என்று அனுப்பினார்.
இரண்டாவது காவலன் சாப்பிட்டுக் கொண்டிருந்த உனது நண்பனிடம் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்துவிட்டு நகர்ந்தான். அந்த பொற்காசு உனக்காக கொடுக்கப்பட்டது. குழப்பம் இதோடு தீரவில்லை.
அரசன் மூன்றாவதாக ஒரு காவலனை அழைத்தான். அவனிடம் ஒரு குதிரையை கொடுத்து, மரத்தடியில் பொற்காசு மூட்டையுடன் இருப்பவனிடம் குதிரையை கொடுக்கும் படி அனுப்பினான். பொற்காசு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த உன் நண்பன் குதிரையை பெற்றுக் கொண்டு நாட்டைவிட்டே போய்விட்டான்.
இப்போது உன்னுடைய நண்பன் செல்வந்தன். உன்னுடைய புரிதலில் ஏற்பட்ட சிறிய தவறால் நீ இன்று பசியோடு இருக்கிறாய். இதை விதி என்பதா? அல்லது வாய்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல் கோட்டைவிட்டாய் என்று சொல்வதா?
ஒன்று மட்டும் நிச்சயம், உன்னுடைய வரம் உனக்கு சாபமாகவும், உன் நண்பனுக்கு வரமாகவும் மாறிவிட்டது;, என்று சொல்லி முடித்தார் சாது.
அமைதியாக இருந்த அரசன் பேசினான்.
கவலைப்படாதே! நாளை உனக்கு உணவு, பொற்காசு, குதிரை ஆகிய எல்லாவற்றையும் மீண்டும் அனுப்பிவைக்கிறேன்;, என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அரசன்.
அடுத்த நாள், அரசனின் வருகைக்காக காத்திருந்தான் பார்வையற்றவன். அரசன் வரவேயில்லை. முந்தய இரவே உடல் நிலை சரியில்லாத அரசன் இறந்து போன செய்தி இன்னமும் அவனுக்கு எட்டவில்லை.
வாய்ப்பு என்பது எல்லோரிடமும் சொல்லிவிட்டு வந்து கதவை தட்டுவதில்லை. அப்படியே சொல்லிவிட்டு வந்தாலும் அதை மிகச் சரியாக உபயோகப்படுத்திக்கொள்ளும் புத்திசாலித்தனமும் அதிர்ஷ்டமும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை.
வாய்ப்பு; கதவைத் தட்டும் போது காதை பொத்திக்கொண்டால், பலன்கள் எப்படி கிடைக்கும். அந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொள்ளுங்கள் இல்லையேல் மற்றொருவனிடம் சென்று தஞ்சமடையும்.
மேலே உள்ள கதையில் வருவதைப் போல கடவுளே நேரில் வந்து வாய்ப்பு தருவார் என்று நினைக்காமல் வாய்ப்பு யார் மூலம் வந்தாலும் கடவுள் கொடுத்து அனுப்பிய அட்சயபாத்திரம் என்று நினைத்து உடனே இணைந்து செயல் படுங்கள்.
உங்கள் வாழ்க்கையும் மாறும் பிறர்க்கு நீங்க கொடுத்தால் மற்றவர்கள் வாழ்க்கையையும் சிறப்பாக்கலாம்.
🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இனிப்பே சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில
மருத்துவர்கள் அறிவாளிகள்
இனிப்பு - மண்ணீரல் - உதடு - கவலை - இரைப்பை - மண்.
❝மாவுச்சத்துக்கு யார் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.செரிமான கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனைக்கு யார் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை❞
இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள் அல்ல.
வீட்டு திண்ணையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள் அல்ல.
தனது தேவி சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றதால் கோபித்த ராமபிரான், வானர சேனைகளுடன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று ராவணனை வென்றார். அவனையும் அவனது கூட்டத்தாரையும் அழித்தார். ராவணனின் தம்பியான விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார்.
1
ராவணன் வேதவிற்பன்னன், பிரம்மாவின் வழிவந்த வேதியன். அதனால், அவனைக் கொன்ற பாவம் ராமபிரானை பிரம்மஹத்தியாக வந்து வாட்டியது. அது தீர அவர் கிழக்கு வங்கக் கடற்கரையில் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். அதனால், அவரது பெரும்பாவம் ஒழிந்தது என்றாலும், சிறுசிறு இடையூறுகள் உண்டாயின.
2
அவற்றை நீக்கும் பொருட்டு, அவர் காவிரிக்கரைக்கு வந்து கும்பகோணத்திற்கு அருகில் குடில் அமைத்துத் தங்கினார். அங்கே அவர் 108 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டார்.
சிவ வழிபாட்டின் பயனால் அவரைத் தொடர்ந்து வந்த பாவங்கள் நாசமாயின. அதையொட்டி அந்தத் தலம் பாவநாசம் எனப்பட்டது.
*காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில்* (அனந்த பத்மநாபேசம்) என விளங்கும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவில் குறிப்புகள், *காஞ்சிப் புராணத்தில்* தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.
*தல வரலாறு*
கயிலாயத்தில் இறைவனும் இறைவியும் ஏதேனும் ஓர் விளையாட்டை விளையாடலாம் என்றெண்ணி ஓர் விளையாட்டை விளையாடினர். அப்போது அங்கிருந்த திருமாலை அவ்விளையாட்டிற்குரிய நடுவராக நியமித்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தனர்.
விளையாட்டின் இறுதியில் அம்பிகையே வெற்றி பெற்றாள். ஆனால் தான் தான் வெற்றி பெற்றதாக இறைவன் கூறினார். நடுவராக இருந்த திருமாலோ இருவருடைய மாறுபாடான நிலைமையைக் கண்டு, தன் நடுநிலைமை மாறி இறைவனே வெற்றி பெற்றதாக கூறினார்.
அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். செய்யாறின் தென் கரையில் அம்பாள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்த 7 இடங்களில் அமைந்த ஆலயங்கள் ‘சப்த கயிலாய தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
1
அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மண்டகொளத்தூர்
சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மண்டகொளத்தூர். இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
2
இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.
சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.
அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.