வரலாற்று பாடத்தில், ஒரு பேரரசு எப்படி எழுந்தது, வளர்ந்தது, பரந்தது என்று படிக்கும் அதேவேளையில் அதெப்படி வீழ்ந்தது என்பதும் முக்கியமான பகுதி.
அதன்படி, சோழப்பேரரசு, பாண்டியப் பேரரசு, முகலாயப் பேரரசு வீழ்ச்சியைப் பற்றி வாசித்தவேளையில், வீழ்ச்சிக்கான
பொதுவான ஒரு காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா ?
ஆள்பவர்களின் மெத்தனம்.
இராஜராஜ சோழனுக்குப் பின்னும், இராஜேந்திர சோழன் ஆட்சியில், சோழப் பேரரசு வலுவாகவே இருந்தது. எப்படி ?
இராஜராஜனைக் காட்டிலும் அதிகளவு போர்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தவன் இராஜேந்திர சோழன். இராஜேந்திர சோழனை
ஒரு போர்க்கள அடிக்ட் என்றே சொல்ல முடியும். புதுப் புது களங்களாகத் தேடிச் சென்று, நாட்டைப் பிடித்து, கொள்ளையடித்து, தங்கமும், வைரங்களுமாய் செல்வங்களை கொண்டு வந்துக் கொண்டே இருந்தான் !
அதேபோல, முகலாய அரசர்களில் பாபர், அக்பர், ஷாஜகானும் ஓயாமல் போர் புரிந்துக் கொண்டே இருந்தனர்.
போர் புரிவது வருவாய்க்காகவும், பேரரசை விரிவு படுத்தவும், ஆளுமைக்காகவும் தான்.
இது போதுமென எங்கு அது தேங்கி நிற்குமோ ;
அல்லது, இனி நம்மை வெல்ல எவரால் இயலும் என அதீத தன்னம்பிக்கையில், உல்லாச வாழ்வுக்குள் செல்வதுமே, ஒரு பேரரசை வீழ்ச்சியடையச் செய்யும் !
பாபர், அக்பர், ஷாஜகானை
விடவும் அதிக நாட்கள் வாழ்ந்தவர் அவுரங்கசீப். போக, தன்னுடைய 90 + வயதிலும், போர்க்களத்திற்கு யானை மீது வந்தார் என வரலாற்றிஞர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
எனவேதான், அவுரங்கசீப்பின் வீச்சு, இந்துஸ்தானின் பெரும்பாலான இடங்களில் பரவியிருந்தது !
இராஜேந்திர சோழனுக்குப் பின்
வந்தவர்களும் சரி, அவுரங்கசீபிற்கு பின் வந்தவர்களும் சரி, இனிமேலும் நாட்டை விரிவாக்க வேண்டுமா ? இவ்வளவு செல்வங்கள் குவிந்துள்ளனவே, இதைப் பாதுகாத்தால் போதாதா ? நம்மிடம்தான் இவ்வளவு பிரம்மாண்ட படையுள்ளதே, எவன் என்ன செய்துவிட முடியும் ? அவர்கள்தான் போர், போர் என்றிருந்து
விட்டார்கள், நாமாவது வாழ்வை அனுபவித்து, ருசித்து, ரசித்து வாழ்வோம் என வாளாதிருந்து விட ;
சில ஆண்டுகளிலேயே, அவர்களுடைய அரசும், படைகளும் சிதறி, காணாமல் போனார்கள் !
ஈரோடு கிழக்கு என்பது காங்கிரஸ் வென்ற ஒரு தொகுதி. இந்நேரம் ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால், கூட்டணி சமாச்சாரம்
2021 முடிவுகள் வந்தபோதே முடிந்துவிட்டன, எனவே அதிமுக சார்பாக எங்கள் ஆள் நிற்பார் என ஜெயா டிவியில் நியுஸ்ஓடிக் கொண்டிருந்திருக்கும்.
வெற்றிகரமான ஆளுமையாகப் பார்க்க இத்தகையத் தடாலடிகள் அவசியம்தான் என்றாலும், எத்தனை நாள்தான் முதுகில் குத்திக் கொண்டே இருப்பவரை இயற்கைக்கு பிடிக்கும்
ஸ்டாலின் இதில் துளி Game கூட விளையாடவில்லை.
அவர் நினைத்திருந்தால் சில அல்லக்கைகளை பேசவிட்டு, ஈரோட்டில் நாமே நிற்போம் என சொல்லச் செய்திருக்கலாம். வலைத்தளத்தில் கூட அப்படி யாரும் எழுதிவிடாதவாறு கட்டுக்கோப்புடன் கட்சியை வைத்திருந்தார்.
இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் காங்கிரஸ்
அங்கு மீண்டும் போட்டியிடும், அவர்களே வேட்பாளரையும் அறிவிப்பார்கள் என அதிகாரப்பூர்வமாகச் சொன்னார்.
இவையே பேராளுமைக்கான அசல் அடையாளங்கள் !
காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்ததும், பரப்பரை வியூகங்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என ஒதுங்கிக் கொள்ளவில்லை.
இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி
தோற்க வேண்டுமானால் அங்கு எடப்பாடி பழனிச்சாமி போன்ற டம்மி பீஸ்கள் முதலமைச்சராக இருந்தால்தான் உண்டு. 2017 - 2020 ற்குள், அத்தனை தொகுதிகளை இடைத்தேர்தலில் தொலைத்த ஒரே ஆள் அவர்.
இன்றோ, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு மட்டுமல்ல, அண்டை மாநிலங்களில் மட்டுமல்ல, வட இந்திய, வட கிழக்கிந்திய
மாநிலங்களில் மட்டுமல்ல, உலகிலுள்ள தமிழர்கள் அனைவரிடத்திலும் சிறப்பான ஆட்சியாளராக அறியப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கில், காங்கிரஸ் மட்டுமே பரப்புரைகளை மேற்கொண்டிருந்தாலும், திமுகவின் ஆட்சி நிர்வாகத்திற்காக ஈரோடு கிழக்கு தக்க வைக்கப்பட்டிருக்கும் தான்.
ஆனால், ஸ்டாலின் அப்படி
ஒதுங்க விரும்பவில்லை.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான பொது தேர்தலைப் போல இந்த இடைத் தேர்தலைப் பார்த்தார்
திமுக இன்றளவும் வலுவான கூட்டணி பலத்துடன் உள்ளது. மாறாக எதிரணியில் ஏகப்பட்ட குழப்பங்கள். பாமக ஒதுங்கிக் கொண்டது. தேமுதிக ஒண்டவில்லை.
அத தயவுசெஞ்சு கூட்டிட்டு வராதீங்கடா என்று
அண்ணாமலையை நிராகரிக்க, எடப்பாடி ஆட்கள் கதறியதை பலவிடங்களில் பார்க்க முடிந்தது.
எதிரிகள் இவ்வளவு சிதறிக்கிடந்த வேளையிலும், இந்த இடைத்தேர்தலை கடாரம் போராய் பாவித்து, பெருங்கடற்படையுடன் பல கடல்கள் கடந்து சென்று வென்ற இராஜேந்திரச் சோழனைப் போலத் திட்டங்களை வகுத்தார் ஸ்டாலின் !
இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்தே அங்கே முகாமிட்டு பரப்புரை, தேர்தல் வியூகங்கள், மக்கள் ஆதரவு திரட்டல் என்று பம்பரமெனச் சுழன்றார்கள்.
உதயநிதி, கனிமொழி, கமல்ஹாசன் என்று நட்சத்திர ஆளுமைகள் திரண்டிறங்கினார்கள். சென்னை மேயர் கூட அங்கு போய், தன்
பங்கிற்கு ஆதரவைத் திரட்டினார்.
எங்களைப் பார்த்து அவ்ளோவ் பயம் என்று சில்லட்டைகள் புஹாஹாஹா எனச் சிரித்து சுயஇன்பம் கொள்ளலாம்.
ஓர் அரசன் பேரரசனாக, சக்கரவர்த்தியாக, பாஷாவாக உயர வேண்டுமானால், எதையும் எள்ளலாக அணுகாமல், அலட்சியமாக விடாமல், பெரும்போராகவே கருதி, தானே களமிறங்கி,
அதைக் கொள்ள வேண்டும் !
அதனால்தான் பரப்புரைக்கான இறுதிநாளில் ஸ்டாலினே ஈரோடு வந்தார், இதோ வென்றார் !
ஸ்டாலினுடைய இந்தப் போர்க்குணத்தை கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து பார்த்து, பூரித்து வந்தாலும், இந்தக் களத்தில் அவர் காட்டிய வீரம், சூடிய வாகை என்னை பெரிதும் உத்வேகம் கொள்ள
வைத்துள்ளது. மாபெரும் நம்பிக்கையை ஆழ விதைத்துள்ளது !
இனி எத்தனை பார்ப்பனியச் சூதும், புரட்டும், காழ்ப்பும், அவதூறு செய்திடினும், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது !
திமுகவின் மாபெரும் வீரன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கீர்த்தி மேலும் சிறக்கட்டும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#சுட்ட_கதை 1
சின்ன வயசுல கார் பஸ் லாரி டிராக்டர்லாம் பாக்கும் போது நமக்கு ஒண்ணு தோணும்.
என்ன இருந்தாலும் சின்ன உருவம் அதனால கார் தான் கஷ்டப்படாம ஈஸியா ஓடும்.
பஸ் லாரி ட்ரக்கெல்லாம் இவ்ளோ பெரிய பாடியை ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இழுத்தாகணும்
வளர்ந்த பிறகு இழுத்து செல்லும் வண்டியின்
சைஸ் எடைக்கேற்ப தான் அதற்கான என்ஜினையும்
பொறுத்துவார்கள் என்பதை மூளை ஏற்றுக்கொண்டு விட்டது.
ஆனால் இப்போதும் குட்டி குட்டியாய் கார்களை பார்க்கும்போது இவை தான் வேகமாக செல்லும்.
பஸ் லாரியெல்லாம் இவைகளோடு போட்டியிட முடியாது என்ற எண்ணம் அவ்வப்போது என்னையுமறியாமல் தலை தூக்குகிறது.
சிந்திக்கும் நமக்கே இப்படி எனில் சங்கிகளை சொல்வானேன்?
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என்று தவிர்க்க முடியாத இக்கட்டில் சிக்கி இருந்த இந்தியாவை நம் விஷ்வ குரு டிமோ தான்
தாங்கி பிடித்து உலக அரங்கில் ஜொலிக்க வைத்து கொண்டிருக்கிறார் என்று சங்கிகள் நம்புவதிலும் நரம்பு
ஒரு ஊரில் இருந்த ஒரே குடி தண்ணீர் குளத்தில் யாரோ விசம் கலந்து விட்டார்கள். அதைக் குடித்தவர்களுக்குப் பயங்கரம்ன பாதிப்புகள் ஏற்பட்டன; சிலர் இறக்கும் தருவாய்க்குச் சென்றார்கள்; பலருக்கு வாழ்வாதாரமே பாழானது.
கோயிலுக்கு அடுத்த வீட்டில் வாழும் பூசாரி, பிறர் தீட்டுப் படாமல், கோயிலின்
நல்ல தண்ணீர் கிணத்திலிருந்தே குடிப்பதால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
ஊர் பஞ்சாயத்தில் இருந்த பொதுப் பணத்தைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதிப்பைப் பொறுத்து நிவாரணம் கொடுப்பது என்று முடிவானது.
தனக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கா விட்டாலும் பூசாரிக்கு மூன்றில் ஒரு
பங்கு கொடுத்துவிட்டு மீதியை ஊருக்குப் பங்கு வைப்பதே, தன் பாட்டனார் பாடி விட்டுச் சென்ற சாமிப் பாடலின் படி சரியாக இருக்கும்; இல்லை என்றால் பெரிய சாமிக் குத்தம் ஆகி விடும் என்றார் பூசாரி. இதைக் கேட்ட, விசத்தால் பாதிக்கப்பட்டவர், படாதவர் எல்லோரும்,பொங்கி எழுந்து, மிகத் தீவிரமாக
மோடி,டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் மூவரும் ஒரு உச்சி மாநாட்டிற்கு சூப்பர் சோனிக் ஜெட் விமானத்தில் கிளம்பினர்.
அப்பொழுது, விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பாதி வழியில் விமானி பாராசூட் மூலம் தப்பித்து விட்டான். K
பெருசு மூன்றும் தங்கள் அரைகுறை அறிவை வைத்து கட்டுப் பாட்டு
அறையுடன் தொடர்பு கொள்ள முயன்றனர். பலனில்லை. பின் மோடி தனது ரேடார் அறிவு மூலம் விமானத்தை இயக்கி அதிர்ஷ்ட வசமாக நரகத்தில் தரை இறக்கினார். ட்ரம்புக்கும் புதினுக்கும் மோடியின் சாதுரியம் புரிந்து அவரை விஷ்வ குருவாக ஏற்றனர்.
திடீரென அங்கே எமன் வருகை தந்தார். மூவரின் ஆயுள் இன்னும்
இருப்பதை அறிந்து அவர்கள் தத்தம் நாட்டிற்கு செல்ல ஒரு வாய்ப்பை வழங்கினார். அதன்படி
அங்கு உள்ள பொதுத் தொலைபேசியிலிருந்து நாடுகளுடன் தொடர்பு கொள்ளலாம் என எமதர்மன் உதவி செய்கிறான்.
அதிபர் புதின் அரை மணி நேரம் மாஸ்கோவிற்கு பேசினார். 1000 டாலர் பில் வந்தது. அதற்கான காசோலையை
இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த நரேந்திர மோடி
"உங்கள் அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு யோசணை சொல்ல முடியுமா?" என்றார்.
ராணி,"அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்
மோடி குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?"
ராணி, "மிக எளிது; நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லி,
இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.
டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார்.
ராணி சிரித்துக் கொண்டே, "டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"
ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார்.