2,500 ஆண்டுகள் பழமையான #சுக்ரீஸ்வரர்_கோவில்
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிமீ தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு
சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது இந்திய தொல்லியல் துறையின்
கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பொ.யு. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு தான் இங்கு காணப்படுகிறது. பிரமிக்க வைக்கும் வகையில்
கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார். சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத
சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன.
சிவனுக்கு பிடித்த வில்வ
மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. இக்கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதா யுகத்தில் சுக்ரீவனாலும்,
8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன. வழக்கமாக, சிவன்
கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை. தொல்லியில்
துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு
கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப் பாடுகளுடன், சக்தி
வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன்
கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன. #கல்வெட்டு
இக்கோயிலில் சுமார் 11 கல்வெட்டுகள் உள்ளன, அவற்றில் ஒன்று கொங்கு சோழருக்கும், 9 கொங்கு பாண்டியர்களுக்கும், ஒன்று மைசூர் உமாத்தூர் மன்னர் வீரநஞ்சராயருக்கும் சொந்தமானது.
கல்வெட்டுகளின்படி இத்தலம் வீரசோழவளநாட்டைச் சேர்ந்த
முகுந்தனூர் என்றும், சிவபெருமான் குறக்குதலி ஆளுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
வீரராஜேந்திரன் காலத்து (பொ.யு 1220) கல்வெட்டு, விழா, பூஜை, அபிஷேகம் போன்றவற்றில் பங்கேற்க, கடனை எதிர்பார்க்காமல் 30 கழஞ்சு பொன் சிவபிராமணன் தானமாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
சுந்தர பாண்டியர்
காலத்தில் (பொ.யு1289) சித்தாக்குறிச்சி கிராமத்தில் தானமாக /தேவதானா நிலத்தில் விவசாயம் செய்து தண்ணீர் தேவைக்காக கிணறுகள், குளம் / ஏரி, வாய்க்கால்களை தோண்டி 50% மகசூல் தர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
15 ஆம் நூற்றாண்டின் மைசூர் உடையார் மன்னர் நஞ்சராய
உடையார் (பொ.யு1499) 4 தங்கத்திற்கு வாங்கிய நிலத்தில் 200 தென்னைப் பண்ணையை உருவாக்கினார். தென்னை மரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த கோவிலின் பூஜைக்கு பயன்படுத்தப் பட்டது.
சுந்தர பாண்டியரின் (பொ.யு1289) காலக் கல்வெட்டு ஒன்று, நொய்யல் ஆற்றின் நீரை முறைப்படுத்தி, சூரலூர் கிராம
சாகுபடிக்காக நொய்யல் அணை ஆகியவற்றின் மூலம், பேரூர் நாட்டு வெற்றலூர் செம்படவன் பிள்ளையானை அங்கீகரித்து இக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதாகக் குறிப்பிடுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சுக்ரீஸ்வரர் கோவிலின் வைகாசி (தமிழ் மாதம்) திருவிழா செலவுகளைச் சமாளிக்க, 64 வணிகர் சங்கங்கள்
(மற்றும் சில பழமையான தமிழ் எழுத்துகளில் ஒன்றான வத்தெழுத்தில் கையெழுத்திட்டனர்) பொருட்களுக்கு வரி செலுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. தாதுப்பொருட்கள், பருத்தி ஆடைகள், மரம் (செருப்பு), யானை, ஆடு, குதிரை போன்றவை இந்த கிராமத்தின் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த
கொங்கு சோழ சுந்தர பாண்டியரின் (பொ.யு1289) கல்வெட்டு 24 வரிகள் மற்றும் ஒவ்வொரு வரியும் 130 முதல் 140 எழுத்துக்கள் கொண்ட மிகப் பெரிய மற்றும் முக்கியமான ஒன்றாகும். வணிகர் சங்கங்கள் பண்டைய தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவை. இதிலிருந்து சர்க்கார் பெரியபாளையம்
கொங்கு நாடு வழியாகச் செல்லும் 20
வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாக இருந்ததாக நாம் முடிவு செய்யலாம்.
#இரண்டு_நந்தி
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி
இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு,
வணங்கியுள்ளார். பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து,
உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும், மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்திகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
கோவில் நேரங்கள்:
07.00-11.00 மணி
5.00 - 8.00 மணி வரை
சுழற்சி முறையில் பூஜை செய்து வரும் குருக்கள் நாகராஜ ஐயர் 9442373455 மற்றும் மூர்த்தி ஐயர் 9489551237
ஊத்துக்குளி வழியாக ஈரோடு திருப்பூர் செல்லும் வழியில் உள்ளது சர்க்கார் பெரியபாளையம். திருப்பூருக்கு முன் சுமார் 6 கி.மீ.
அருகிலுள்ள ரயில் நிலையம் திருப்பூர்
#ராமாயண_ரகசியங்கள்
கேள்வி:-
கைகேயியைப் போல சுமித்ரைக்கும் தனது பிள்ளைகளே நாடாளவேண்டும் என்னும் ஆசை வராமல் போனது ஏன்?
பதில்:-
சுமித்ரையானவள் வேதக்ஞானம் நிரம்பப் பெற்றவள். ஒரு ஜீவாத்மானின் 5 லக்ஷணங்கள் தெரிந்தவள். அவை க்ருஷ்ணயஜுர்வேதம் தைத்திரீய உபநிஷதத்தில் பின்வருமாறு
1. தஸ்ய ஶ்ரத்தைவ ஶிர: –
பொருள்: ஜீவாத்மாவுக்கு திருமால்/அடியார் மீதான காதல்/அன்பு/பக்தியே தலைப்பகுதி ஆகும். 2. ருதம் தக்ஷிண பக்ஷ: -
பொருள்: ஜீவாத்மாவுக்கு (ருதம்)- அழியும்/அஸ்திரமான/அல்பமான வஸ்துக்கள் (ப்ரக்ருதி) பற்றிய ஞானமே வலது பக்கமாகும்.
3.) ஸத்யம் உத்தர பக்ஷ: -
பொருள்:- ஜீவாத்மாவுக்கு (ஸத்யம்)-அழியாத/ஸ்திரமான/விபுவான திருமால் பற்றிய ஞானமே இடது பக்கமாகும். 4. யோக ஆத்மா –
பொருள்: ஜீவாத்மாவுக்கு (யோகம்) திருமால்/அடியாருடன் கூடிய இருப்பே அல்லது தொண்டே மார்புப்பகுதி ஆகும். (Visceral organs-Heart, Lungs, Liver, Intestine, Spleen, etc)
#காகபுஜண்டர்
மதுரைக்கு மேற்கே உள்ளது நாகமலை. கிழக்கே யானைமலை. இரண்டும் அவற்றின் தோற்றத்தால் அந்தப் பெயர்களைப் பெற்றன. அதே போல மதுரைக்கு அருகே இருக்கும் மற்றுமொரு மலை, பெருமாள் மலை. நரசிம்மப் பெருமாளின் திருமுகமான சிங்கம் போன்ற தோற்றத்தோடு கம்பீரமாக விளங்குகிறது என்பதால்,
பெருமாள் மலை எனப்பட்டது. மதுரை ஆனைமலை அருகே உள்ள நரசிங்கப்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில் காக புஜண்டர் தவம் செய்து ஈசன் காட்சி கொடுத்த இடம் ஆண்டி ஆயி படிக்கோயில். பெருமாள் மலை மீது காக புஜண்டர் ஒரு குலையில் தங்கியுள்ளார். மதுரையில் இருந்து 19 கி.மீ தொலைவில் மேலூர் செல்லும் 4
வழிச்சாலையில் வடக்கில் அமைந்துள்ளது நரசிங்கப்பட்டி என்னும் சிற்றூர். இங்குதான் இந்தப் பெருமாள் மலை உள்ளது. இதன் அடிவாரத்தில் உள்ள சேங்கை குளத்தின் அருகில் படிக்கோயிலாக அமைந்துள்ளது மலைச்சாமி கோயில். சிவனையும் பார்வதியையும் காண வேண்டும் என்று நினைத்த காகபுஜண்டர், சேங்கை குளத்தில்
#தமிழ்நாட்டின்_வித்தியாசமான_கோவில்_மூர்த்திகள்
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மனும் ஞானமுத்தீஸ்வரனும் ஒரே பீடத்தில் வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ளனர். வேறு எந்த காளி கோயில்களிலும் இப்படி காண இயலாது.
சுருட்டப்பள்ளி தலத்தில் ஈசனின் கருவறைக்குப் பின் உள்ள திருமால், வலக்கையில்
கபாலம் ஏந்தியிருக்கிறார்.
பொதுவாக 5 தலை ஆதிசேஷனின் மீது அனந்தசயனம் செய்யும் கோலம்தான் திருமாலுக்கு. ஆனால் சிதம்பரம் திருக்கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் 7 தலை ஆதிசேஷனின் மேல் சயனித்திருக்கிறார்.
திருப்பதிக்கு அருகே உள்ள ரேணிகுண்டாவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சமூர்த்தி
விநாயகர் ஆலயத்தில் ஒரே பீடத்தில் 5 விநாயகப் பெருமான்கள் திகழ்கிறார்கள்.
திருப்பூவனத்தில் பொன்னையாள் எனும் பக்தை சிவலிங்கத்தின் அழகில் மயங்கி அதைக் கிள்ளிய வடுவுடன் ஈசனை தரிசிக்கலாம்.
தர்மபுரி கோட்டைக் கோயிலில் முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் மயில் மீது, ஐயப்பனைப் போல குத்திட்டு
#கண்ணனும்_பாண்டவர்களும்
பாரதப் போர் முடிவுற்ற தருவாயில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முனைந்தான். யுத்த தருமம் மீறித் தன் தந்தையைக் கொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன்
திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான். அங்கே உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் மகன்களான உப-பாண்டவர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என நினைத்து கொன்றான். வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் கூடாரம் வந்தபோது நிகழ்ந்தவை கேள்விப்பட்டு அசுவத்தாமன் பின்னே வியாசரின் ஆசிரமம் சென்றனர்.
பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் தான் கொன்றது உபபாண்டவர்களைத் தான் என்றும் பாண்டவர்களை அல்ல என்றும் உணர்ந்து பாண்டவர்களை அழிக்க ஒரு புல்லை உருவி மந்திரம் ஜெபித்து அதை பிரம்மாஸ்திரமாகப் பயன் படுத்தினான். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ஜூனனும் பிரம்மாஸ்திரம் ஏவினான். இருவரின் அஸ்திரப்
#ருத்ராட்ஷ_மகிமை
ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒரு போதும் யமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து
ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது. அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக 5 முக ருத்ராட்ஷமாவது
அணியவேண்டும்.
அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
ஆம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்து இருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும் போதும், தூங்கும்போதும் எல்லாக் காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவ
#நற்சிந்தனை
ராமன் காட்டிற்குப் போக உத்தரவு. சீதை லக்ஷ்மணன் அவன் கூட செல்கிறார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்ல வேண்டும். அப்போது தான் முதன் முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த
ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை. "என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?" என பக்தியோடு கேட்கிறான். "கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா." அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு புறப்படத் தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி ''கேவத் உன்
படகை இங்கே கொண்டுவா" என்றான். "கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா அயோத்தி மஹாராஜா ராமர், அது சீதாதேவி ராணி, அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன். இவர்களை அக்கரை கொண்டு சேர்"
கேவத் ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும் போதும் இரவில்