2,500 ஆண்டுகள் பழமையான #சுக்ரீஸ்வரர்_கோவில்
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிமீ தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு
சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது இந்திய தொல்லியல் துறையின்
கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பொ.யு. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு தான் இங்கு காணப்படுகிறது. பிரமிக்க வைக்கும் வகையில்
கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார். சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத
சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன.
சிவனுக்கு பிடித்த வில்வ
மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. இக்கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதா யுகத்தில் சுக்ரீவனாலும்,
8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன. வழக்கமாக, சிவன்
கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை. தொல்லியில்
துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு
கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப் பாடுகளுடன், சக்தி
வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன்
கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன. #கல்வெட்டு
இக்கோயிலில் சுமார் 11 கல்வெட்டுகள் உள்ளன, அவற்றில் ஒன்று கொங்கு சோழருக்கும், 9 கொங்கு பாண்டியர்களுக்கும், ஒன்று மைசூர் உமாத்தூர் மன்னர் வீரநஞ்சராயருக்கும் சொந்தமானது.
கல்வெட்டுகளின்படி இத்தலம் வீரசோழவளநாட்டைச் சேர்ந்த
முகுந்தனூர் என்றும், சிவபெருமான் குறக்குதலி ஆளுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
வீரராஜேந்திரன் காலத்து (பொ.யு 1220) கல்வெட்டு, விழா, பூஜை, அபிஷேகம் போன்றவற்றில் பங்கேற்க, கடனை எதிர்பார்க்காமல் 30 கழஞ்சு பொன் சிவபிராமணன் தானமாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
சுந்தர பாண்டியர்
காலத்தில் (பொ.யு1289) சித்தாக்குறிச்சி கிராமத்தில் தானமாக /தேவதானா நிலத்தில் விவசாயம் செய்து தண்ணீர் தேவைக்காக கிணறுகள், குளம் / ஏரி, வாய்க்கால்களை தோண்டி 50% மகசூல் தர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
15 ஆம் நூற்றாண்டின் மைசூர் உடையார் மன்னர் நஞ்சராய
உடையார் (பொ.யு1499) 4 தங்கத்திற்கு வாங்கிய நிலத்தில் 200 தென்னைப் பண்ணையை உருவாக்கினார். தென்னை மரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த கோவிலின் பூஜைக்கு பயன்படுத்தப் பட்டது.
சுந்தர பாண்டியரின் (பொ.யு1289) காலக் கல்வெட்டு ஒன்று, நொய்யல் ஆற்றின் நீரை முறைப்படுத்தி, சூரலூர் கிராம
சாகுபடிக்காக நொய்யல் அணை ஆகியவற்றின் மூலம், பேரூர் நாட்டு வெற்றலூர் செம்படவன் பிள்ளையானை அங்கீகரித்து இக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதாகக் குறிப்பிடுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சுக்ரீஸ்வரர் கோவிலின் வைகாசி (தமிழ் மாதம்) திருவிழா செலவுகளைச் சமாளிக்க, 64 வணிகர் சங்கங்கள்
(மற்றும் சில பழமையான தமிழ் எழுத்துகளில் ஒன்றான வத்தெழுத்தில் கையெழுத்திட்டனர்) பொருட்களுக்கு வரி செலுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. தாதுப்பொருட்கள், பருத்தி ஆடைகள், மரம் (செருப்பு), யானை, ஆடு, குதிரை போன்றவை இந்த கிராமத்தின் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த
கொங்கு சோழ சுந்தர பாண்டியரின் (பொ.யு1289) கல்வெட்டு 24 வரிகள் மற்றும் ஒவ்வொரு வரியும் 130 முதல் 140 எழுத்துக்கள் கொண்ட மிகப் பெரிய மற்றும் முக்கியமான ஒன்றாகும். வணிகர் சங்கங்கள் பண்டைய தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவை. இதிலிருந்து சர்க்கார் பெரியபாளையம்
கொங்கு நாடு வழியாகச் செல்லும் 20
வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாக இருந்ததாக நாம் முடிவு செய்யலாம்.
#இரண்டு_நந்தி
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி
இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு,
வணங்கியுள்ளார். பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து,
உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும், மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்திகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
கோவில் நேரங்கள்:
07.00-11.00 மணி
5.00 - 8.00 மணி வரை
சுழற்சி முறையில் பூஜை செய்து வரும் குருக்கள் நாகராஜ ஐயர் 9442373455 மற்றும் மூர்த்தி ஐயர் 9489551237
ஊத்துக்குளி வழியாக ஈரோடு திருப்பூர் செல்லும் வழியில் உள்ளது சர்க்கார் பெரியபாளையம். திருப்பூருக்கு முன் சுமார் 6 கி.மீ.
அருகிலுள்ள ரயில் நிலையம் திருப்பூர்
#கோடகநல்லூர்_சௌந்தர்யநாயகி_சமேத_ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர்_ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம்
அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர்!
கோடகநல்லூர் திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லையில் இருந்து 10 கி.மீ தொலைவில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி முக்கூடல் செல்லும் சாலையில்
நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே 1 கி.மீ சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம். இந்த ஊர் பழங்காலத்தில் கார்கோடக ஷேத்திரம் என்றும், கோடகனூர் என்றும் அழைக்கப் பட்டுள்ளது. இங்கு இரண்டு சிவன் கோவில்களும், ஒரு பெருமாள் கோவிலும் மேலும் நங்கையார் அம்மன் என்னும் காவல் தெய்வமும்
உள்ளது. இதில் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஆலயம். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவாலயம். வயல் வெளிகள் சூழ்ந்த தாமிரபரணி நதிக்கரையோரம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள திருக்கோயிலாகும். இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம்
#ஐந்து_பவித்திரமான_வஸ்துக்கள்
உச்சிஷ்டம் சிவ நிர்மால்யம் வமனம் ஸவகர்படம் காகவிஷ்டாதே பஞ்சைதே பவித்ராதி மனோஹரா 1. எச்சில் 2. சிவ நிர்மால்யம் 3. வாந்தி 4. சவத்தின் மேல் விரிக்கும் போர்வை 5. காக்கையின் மலத்தினாலே விளைந்த ஒன்று
மஹாபாரதத்தில் வேதவியாசர் இவை ஐந்தையும் பவித்திரமான
வஸ்துக்களாகச் சொல்லியிருக்கிறார். நிஷித்தமான இந்த பொருட்களை வேதவியாசர் எப்படி பவித்திரமான பொருட்கள் என்று சொல்லியிருப்பார்? வேதவியாசர் சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம்.
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே.
வேதங்களில் இருக்கும் சப்தங்களுக்கு குறைந்த பட்சம் 3 அர்த்தங்கள்
உள்ளன. மஹாபாரதத்தில் உள்ள ஸ்லோகத்திற்கு குறைந்தது 10 அர்த்தங்கள் உண்டு. அந்த மஹாபாரதத்தில் அங்கம் வகிக்கின்ற விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமத்திற்கும் குறைந்தபட்சம் நூறு அர்த்தம் உண்டு. ஆனந்த தீர்த்த பகவத் பாதாச்சாரியார் விஸ்வ என்ற நாமத்திற்கு 100 அர்த்தங்களை காண்பித்து
#கதலி_ஸ்ரீலட்சுமிநரசிம்மப்_பெருமாள்
சுயம்புவாகத் தாம் எழுந்தருளியுள்ளதை மக்களுக்கு உணர்த்த, வாழை பழங்களை மறைத்து திருவிளையாடல் புரிந்த திருத்தலம் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி திருத்தல செங்கமல வள்ளி தாயார் சமேத உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் கோயிலாகும். ஆயிரம் வருடங்கள் பழைமையான
இத்தலம், அக்காலத்தில் மலைவாழ் மக்களின் வியாபார ஸ்தலமாக விளங்கியது. இந்த ஊரில் பக்தர்கள் தங்களின் விளை பொருட்களான காய், கனிகள் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். அவர்களில் லட்சுமி என்ற பெண்மணி கொண்டு வரும் வாழைப் பழங்கள் தொடர்ந்து காணாமல் போக, அப்பெண்
அந்த ஊர்த் தலைவரிடம் இதை முறையிட்டார். அதைக்கேட்டு தலைவர் அது குறித்து விசாரிக்கிறார். ஆனால், 3 நாட்களாகியும் உண்மையான காரணத்தை அறிய முடியாமல் தொடர்ந்து பழங்களும் காணாமல் போகவே, பெருமாளிடம் முறையிட்டு வேண்டுகிறார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘காணாமல் போன வாழை
#Siruvachur_MaduraKaliaman_Temple
Siruvachur located 50 kms from Trichy and 8 kms from Perambalur. The temple dates back to 1000 years. Large number of devotees throng this temple on Mondays and Fridays to worship the powerful deity and seek her divine blessings. According to
tradition Chelliamman was the local deity of Siruvachur. An evil magician through his intense devotion to the deity won her favour. Pleased with his devotion, Chelliamman granted him any boon he wished. The cruel sorcerer wished that the deity should be his servant and do his
bidding at all times. Bound by the power of her own boon Chelliamman had no other option but to obey all his evil commands. At this time Kannagi the embodiment of virtue and chastity happened to visit Siruvachur. Kannagi was the devoted wife of Kovalan, a merchant. The happy
#நற்சிந்தனை
குருக்ஷேத்ர யுத்தம் முடிந்த பிறகு தருமர் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு ஆட்சியில் அமர்ந்தார். அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர், சூரியன் வடதிசை நோக்கி பயணிக்கும் உத்ராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்து தம் உயிரை விடுவதற்காகக் காத்திருந்தார். ஒரு நாள் தருமர் தனது
தம்பிகளுடனும் திரௌபதியோடும் பீஷ்மரைக் காண குருக்ஷேத்ரத்துக்குப் புறப்பட்டார். அனைவரும் பீஷ்மரைக் கண்டு வணங்கி அமர்ந்தனர். பீஷ்மர் தனது உரையாடலில் வர்ணம், ஆசிரமம், மக்களின் கடமை, அரசரின் கடமை போன்ற பல விஷயங்களைப் பற்றிக் கூறினார். இந்த உரையாடலின் இடையில் திடீரென்று திரௌபதியின்
சிரிப்பு ஒலி கேட்டது. சிரிப்பு சத்தத்தைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, பீஷ்மர் தன்னுடைய தர்மோபதேசத்தை நிறுத்தி, திரௌபதியை நோக்கி, "மகளே, ஏனம்மா சிரித்தாய்?" என்று கேட்டார். திரௌபதிக்கோ நாணமாகப் போய்விட்டது. "என்னை மன்னித்து விடுங்கள் பிதாமகரே ஏதோ அறியாமல் சிரித்து
#ஸ்ரீநரசிம்மர்
மஹாவிஷ்ணு அநீதியை அழிக்க தர்மத்தை நிலைநாட்ட பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் மிகவும் சக்திவாய்ந்தது நரசிம்மர் அவதாரம். அசைக்க முடியாத நம்பிக்கையுடன், உண்மையான பக்தியோடு அழைத்ததால், தூணிலிருந்தும் வெளிப்பட்டு பக்தனை காப்பாற்றுவான் என்று உலகிற்கு உணர்த்திய அவதாரம்
நரசிம்ம அவதாரம். நரசிம்ம அவதாரம் என்றாலே மனித உடலும் சிங்க முகமும் கொண்ட உக்கிரமான தோற்றம் தான் அனைவரின் நினைவிற்கு வரும். ஆனால் உண்மையில் நரசிம்மர் கருணையின் வடிவம் அவர். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள் புரிபவர். நரசிம்மர் 74 க்கும் அதிகமான ரூபங்களில் அருளக்
கூடியவர். இதில் மிக முக்கியமானது 9 ரூபங்கள் ஆகும். உக்கிர நரசிம்மர், க்ரோதா நரசிம்மர், வீர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், கோப நரசிம்மர், யோக நரசிம்மர், அகோரநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்பன நரசிம்மரின் 9 முக்கிய வடிவங்களாகும். இவற்றில் யோக நரசிம்மர் யோக