🙏🙏 #ஹரே_கிருஷ்ணா 🙏🙏

🙏🙏 #ராதே_கிருஷ்ணா 🙏🙏

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.

அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம்.
அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்.

ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.

“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன்.
தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்.

“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்.

நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.
அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான்.

இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்.

“அது என்ன?! ” என்று கேட்டான் அர்ஜுனன்.
“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்.

பல ஆண்டுகள் கழிந்தன.

மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்.

அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்.
அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்.

கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான்.
வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்.

அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன்.

ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை.
பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள்.

தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்.
அதுவும் வெறும் சாதாரணத் திருடர்களிடம் வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்.

அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது.
இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்.

கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது.
இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன்.

ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.
அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது.

கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான்.

அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய்.
இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்.

மேலும், “சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்.
ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும்
இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்.

இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது.
இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”

(பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்.

இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல’ என்று அழைக்கப்படுகிறார்.

🙏ஓம் நமோ நாராயணாய 🙏

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Mar 26
திரிபுரா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்ற வரலாறே இல்லை.
டெபாசிட் இழப்பு சர்வசாதாரண நிகழ்வு.

2013 சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியிட்டு 49 இடங்களில் டெபாசிட்டும் இழந்தது... கிடைத்த வாக்கு 1.54%. ImageImage
மகாராஷ்டிரா மாநில சங்கி (RSS Pracharak), சுனீல் தியோதர் (48 வயது) 2014 ஆம் ஆண்டு திரிபுரா மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அயராத உழைப்பால் 3.5 ஆண்டுகளில் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். ImageImage
25 ஆண்டு கம்யூனிச கோட்டையை தகர்த்து 60 இல் 36 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது..

இப்போதுமீண்டும் 2023 ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளோம். ImageImage
Read 11 tweets
Mar 24
" ஸ்வாமி ''

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் !

எதிரே ஒரு வயதான தம்பதி !
அருகே ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் !, Image
மெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;..

'' ..ஸ்வாமி ...நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிண்டு வரோம் !.நாளை ராமேஸ்வரம் போகணும் !.. Image
இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் !.

தயவுசெய்து ஒத்தாசை பண்ணணும் !''
கம்மிய குரலில் ,
பேசினார் அவர்;
வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , Image
Read 13 tweets
Mar 24
ராமசாமி வழக்கம் போல் Bar ரில் தனியாக உட்கார்ந்து மூன்று 🍸🍸🍺கிளாஸ்களில் தனித் தனியாக மது ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார்.

அடித்த சரக்கு பத்தாமல் மீண்டும் பிராந்தி ஒன்று வாங்கி, மூன்று கிளாஸ்களில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார்.🍺
வெயிட்டர் சிறிது நேரம் பார்த்துவிட்டு, "சார், நீங்க தப்பா நினைக்கலன்னா ஒன்னு கேட்கலாமா?"

கேளுப்பா.......

நீங்க மூணு கிளாஸ்ல தனித்தனியா வாங்கி குடிக்கிறீங்களே...
ஏன்னு எனக்கு புரியல!

"இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூணு பேரு. ஒரு அண்ணன் பரமக்குடியில் இருக்கான்,
மற்றொரு தம்பி காரைக்குடியில் இருக்கான், நான் இங்க தூத்துக்குடியில் இருக்கேன். நாங்க மூணு பேரும் எப்பவுமே ஒன்னாதான் சரக்கடிப்போம்.

நாங்க மூணு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூணு கிளாஸ்ல வாங்கி,
Read 7 tweets
Mar 23
#பிட்ச்சை

ஏதாவது குடுப்பா ....
என முதியவர் ஒருவர் கேட்க
,
,
அவசியம் தரணுமா ?
என கொஞ்சம் நக்கலாக கேட்டேன்
.
.
யார் யாருக்கோ தர்ற ....
எனக்கு தந்தால் என்ன ?....
என அவர் சொன்ன போது சற்று திகைத்து போனேன் .....
.
.
அப்படி நான் யாருக்கு தருகிறேன் நீங்க சொல்லுங்க ?
.
.
டாக்டருக்கு தர்ற ....
மருந்து கடைகாரனுக்கு தர்ற ...
ஹோட்டலில் சர்வருக்கு டிப்ஸூ தர்ற
கோவிலுக்கு போனா .....
பார்கிங் .... அர்ச்சனை டிக்கெட் ...
பூ கடைகாரன் .... பழ கடைகாரன் ....
பூசாரி என எல்லோருக்கும் தர்றே ல்ல
,
,
ஆமாம் ......
இப்போது எனது குரலில் பயம் கலந்த பணிவு வந்தது ....
,
,
இல்லாதவனுக்கு தந்தால் புண்ணியம் சேரும் ......
இருப்பவனுக்கு தந்தால் பாபம் சேரும் ....
ஏனெனில் இல்லாதவன் கையேந்தி பெறுவான் .....
இருப்பவன் அலட்சியமாக பெறுவான் ....
என அந்த முதியவர் சொல்ல .....
,
,
Read 4 tweets
Mar 22
#வாஸ்து_கோயில் - #திருப்புகலூர்

கும்பகோணம்-நன்னிலம் - காரைக்கால் பாதையில் நன்னிலத்திலிருந்து கிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன் அக்னீஸ்வரர். அம்மன் மனோன்மணி.
தீர்த்தம் அக்னி தீர்த்தம்.

அக்னி தேவன், பரத்வாஜர் வழிபட்ட தலம். Image
அறுபத்துமூவரில் முருகநாயனார் அவதரித்தது இறைவனுக்கு பூத்தொண்டு புரிந்த சிறப்புடைய தலம்.

சுந்தர்க்கு இறைவன் செங்கற்களை பொன்னாக்கி அளித்த அற்புத வரலாறு.

இத்தகைய அற்புதம் நிகழ்ந்தால் புது வீடு கட்ட விரும்புவோர் குடும்பத்துடன்
இத்திருத்தலம் சென்று இறைவன் இறைவியை பூஜித்து கோவில் சார்பாக பூஜிக்க பட்ட மூன்று செங்கல்கள் அனுக்ரஹிக்கப்பட்டு பிரசாதமாக கொடுப்பார்கள்.
Read 4 tweets
Mar 22
#அம்மா_எனும்_தெய்வம்

*ப்ளீஸ்* என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..

ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை..
மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும்,

அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!

கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது
10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..

இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!!

வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது..
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(