M.SivaRajan Profile picture
Mar 29 9 tweets 2 min read Twitter logo Read on Twitter
#சிங்கீஸ்வரர்

பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்!

ஒரே கோயிலில் பல அதிசயங்களைக் காண வேண்டும் என்று விருப்பினால் நீங்கள் இந்த ஆலயத்துக்குத் தான் வரவேண்டும்.

நான்கு யுகங்களாகச் சிறந்து விளங்கும் இந்த மப்பேடு சிங்கீஸ்வரர்.
பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த திருமால், இந்தத் தலத்துக்கு வந்தே மீண்டும் சுயரூபம் கொண்டாராம்.

அதனால் இந்த ஊர் மெய்ப்பேடு என்று மாறி (மெய் - உண்மை, பேடு - வடிவம்). பிறகு மப்பேடு’ என்று மருவியதாகச் செல்வார்கள்.
வாய் பேச முடியாத பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து குணமானதால், இது மேய்ப்பேடு’ என்று பெயர் பெற்றதாகவும் சொல்வார்கள்.

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இந்தத் தலத்துக்கு வந்து நீக்கிக் கொள்ளலாம் என்கிறது புராணம்.
ஈசனோடு இங்கு வந்த சக்தி, நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்று திருநாமம் கொண்டாளாம்.

சுவாமி சந்நிதியின் வலது புறத்தில், சதுரமான கருவறையில் நின்ற கோலத்தில் - கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகிறாள், புஷ்பகுஜாம்பாள்.
இந்த அம்பிகையை வணங்கி வேண்டிக்கொண்டால், பேச்சில் வல்லமை தருவாள்.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆலயம் மூல நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலமாக உள்ளது.

கலைகளின் தேவியான கலைமகளுக்கும், ஆற்றலில் சிறந்தவரான அனுமனுக்கும் உரிய நட்சத்திரம் மூலம்.

இந்த நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்க, ஆற்றலும் கலையும் பெருகும் என்கிறார்கள் பெரியோர்கள்.
இங்குள்ள வீரபாலீஸ்வரர் காரியத் தடைகளை விலக்குபவர்.

இவரின் சந்நிதிக்கு முன்பு நின்று வீணை இசைத்து அனுமன், ஈசனின் அருளைப் பெற்றதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது.

பிரதோஷ காலத்தில், நந்தி மண்டபத்தின் முன்பாக உள்ள `நவ வியாகரணக் கல்’ என்ற சிறிய கருங்கல்லின் மீது ஏறி நின்று,
ஒருசேர நந்தியையும் ஈசனையும் வழிபட்டால், நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை சோம வாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.
பூந்தமல்லி - பேரம்பாக்கம் மார்க்கத்தில், பூந்தமல்லியிலிருந்து சுமார்
20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மப்பேடு.

#சிங்கீஸ்வரர்

#சிங்கீஸ்வர_சுவாமி

#ஓம்_சிவாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Mar 13
#புஷ்பங்கள்

சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது;

புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு.

வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம்,

சிவந்தவை ரஜசம்,

கருநிற புஷ்பங்கள் தாமசம்,

மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம்.
மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான்.
வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும்,
சிவனுக்கு அர்ச்சிப்பதால்,
சகல பாவங்களும் விலகும்.

வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்த பின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை.
Read 7 tweets
Mar 13
#கோமுக_தீர்த்தம்

சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் :

மிக மிக சாதாரணமாக கிடைக்கும் விலை மதிப்பில்லாத சில விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படுவதே இல்லை.

அப்படி தெரிந்தாலும் அதன் மதிப்பை நாம் உணருவதில்லை.
இக்கால கட்டத்தில் இதை செய்தால் நல்லது என்று கூறுவதற்கு கூட நேரம் இல்லாமல் போய்விட்டது.

அரிய பல புண்ணிய பொருட்களில் சில சாதாரணமாக கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
அவற்றில் திருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேற கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் கோமுகமும் ஒன்றாகும்.

இந்த கோமுகத்திலிருந்து வரும் புனித தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்தது.
Read 13 tweets
Mar 12
#பக்தி_கதைகள்

ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத்கீதையும் பாராயணம் செய்வது வழக்கம்.

எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார்.

அதன் பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார்.
இது தினமும் நடந்தேறும்
பலரும் இவரின் காது
படவே எடுத்துரைப்பார்கள்.

இவரும் அடுத்த நாள் சரி செய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார்.

ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது.

ஒரு நாள் அத்திருத்தலத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக அறிவிப்பு செய்தார்கள்.
உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள்
மஹாப்பிரபு வரும் போது இந்த பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத்கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள்.
Read 17 tweets
Mar 12
#செவ்வாய்க்கிழமை

* செல்வங்களை அள்ளி தரும் செவ்வாய்க்கிழமை *

செவ்வாய்க்கிழமைகளில் நல்ல காரியங்களை
செய்யலாமா? செய்யக் கூடாதா?

என்கின்ற கேள்விக்கு நம்மில் பலருக்கும் நீண்ட நாட்களாகவே பதில் தெரியாமல்,
சந்தேகத்துடனேயே செவ்வாய் கிழமைகளை தவிர்த்து விடுகிறோம்.
இந்த சந்தேகம் இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நாள், கிழமை பார்த்து செய்கின்ற காரியம் பாதி வெற்றியை தரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

செவ்வாய்க்கிழமை அதுவுமா புது புடவை கட்டலாமா? நாளைக்கு கட்டலாமே..
செவ்வாய்க்கிழமையில் போய் புதுசா வேலை செய்யலாமா?

வேற நல்ல நாளில் தொடங்க கூடாதா?

என்று புது ஆடை உடுத்துவதில் இருந்து, புதிய பொருட்கள் வாங்குவது வரை நாள், கிழமை என்று பார்ப்பவர்களும் உண்டு.

எல்லா விஷயங்களுக்கும் இப்படி நாளும், கிழமையும் பார்க்கலாமா?
Read 13 tweets
Mar 11
#ஸ்ரீ_ஔர்வ_தட்சிணாமூர்த்தி

பெண்களின் கர்ப்ப கால பிரச்னைகளை நீக்கும்

ஆண்களின் காம எண்ணங்களை மாற்றும் தக்கோலம் தட்சிணா மூர்த்தி

கற்பனைக் கெட்டாத கர்ப்ப வேதனைக்கு செவி சாய்த்து அவ்வேதனைகளை ஏற்றுக் கொள்பவரே தக்கோலம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ ஔர்வ தட்சிணா மூர்த்தி ஆவார். Image
தட்சிணா மூர்த்தியின் தலை சற்றே இடது பக்கம் சாய்ந்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் பல துன்பங்களை அடைவார்கள் என்று யார் பயமுறுத்தினாலும் அதைக் கேட்டு சற்றும் கலங்காது
தக்கோலத்தில் அருள்புரியும் ஸ்ரீஔர்வ தட்சிணா மூர்த்தியை அடிப் பிரதட்சணம் செய்து வணங்கி வந்தால் சுகப் பிரசவத்தைப் பெறுவார்கள் என்பது இத்தல  கடாட்சமாகும்.
Read 5 tweets
Mar 3
ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?

100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி,
ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும்
ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள்
தலத்திற்கும் தான்
இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!

சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று
நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது.

அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும்.
Read 52 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(