#அமாவாசை என்றால் என்ன? ⚫

மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும்.
சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்
இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல,
பலவித தோஷசங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள்அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.
அதனால் தான் அமாவாசையன்று காகம், ஈ, எறும்பு, நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சம்பிரதாயத்தை வகுத்துள்ளனர். நம்வீட்டில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் முதலில் அறிவது(தெரிவது) இவர்களுக்குதான்
நம்வீட்டிற்க்கு உறவினர் வர போகிறார்கள் என்றால் நம் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காகம் கத்தும்.

மற்றோரு உறவினர் ஒரு கெட்ட செய்தியை சொல்லவருகிறார் என்றால் வேறு இடத்தில் இருந்து காகம் கரையும் இதை நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும்
நல்ல விசயத்தை ஒரு இடத்திலும், கெட்ட செய்தியை வேறு இடத்திலும் இருந்து காகவடிவில் நமக்கு தெரிவிப்பது நமது முன்னோர்களே!

நமது வீட்டில் ஒரு ஜீவன் பிரிய போகிறது என்றால் நம் வீட்டில் உள்ள மாடு, நாய்களுக்கு தான் முதலில் தெரியும்.
இந்த உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிமை உள்ளவையே.அதுவே உங்கள் தாத்தா, பாட்டி, முன்னோர்கள் என்றால் அவர்களை நீங்கள் முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் செய்வார்கள்.
உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்.
நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து கொள்ள இயலாது. மேலும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிட இயலாது.
இதனால் தான் அவர்களுக்கு ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன்நிறுத்தி உரியமந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே பித்ரு ஹோமம் எனப்படுகிறது.
சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குவது போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக தோன்றும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.
அம்மாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக் கரைகளிலும், கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வழியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது.
இதனாலேயே அமாவாசையில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது.
பொதுவாக வலது ஆள் காட்டி (குருவிரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது.
சாதாரணதாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷன சக்தியின் தெய்வீகக் தன்மையாகும். தை அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிதமானதாகப் பெருகுகின்றது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப்படுகிறது. பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே, இதன் நிழலில் தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.
ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக்கணக்கான நம் கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
#சிரார்த்தம், #தர்ப்பணம் ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம் என்று தெரியுமா?

தெரிந்துகொள்வோம்.
சிரார்த்தம்(திவசம்) என்றால்.
காலம் சென்ற நம் முன்னோர்களின் நினைவு நாளன்று அவர்களுக்கு பிரியமான உணவு,
உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் திதி அல்லது சிரார்த்தம் எனப்படும்
#தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு வலது ஆள் காட்டி (குருவிரல்) விரலுக்கும்,
கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து செய்வது தர்ப்பணம் எனப்படுகிறது
தர்ப்பணம் செய்ய அந்த வேத மந்திரங்கள் தெரிந்த வேதியர் தான் வேண்டும் என்பதில்லை செய்பவர்களுக்கு அந்த மந்திரங்கள் மற்றும் வழிமுறைகள் தெரிந்திருந்தால் போதும்.
சிரார்த்தம் செய்விக்க உபாத்தியார் ஒருவரும் அன்னமிட தகுந்த நபர்களும் தேவை. சிரார்த்தத்தில் குறிப்பிடத் காய்கறிகள் மட்டுமே சேர்க்கவேண்டும்.
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், அமாவாசை தினமே மிகச் சிறந்தது.

மாதம் தோறும் அமாவாசையன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்.
மறைந்த பெற்றோருக்கு சாப்பாடு போட்டு மகிழ்வித்து அவர்களது ஆசியைப் பெறும் விதமாகச் செய்யப்படும் சிரார்த்தம் தர்ப்பணம் போன்ற பித்ரு கர்மாக்களை ஒரே குடும்பத்து வாரிசுகள் ஒன்றாக செய்ய வேண்டுமா அல்லது தனித் தனியாக செய்ய வேண்டுமா என்ற குழப்பம் பலரிடம் உள்ளது.
இறந்தவருக்கு சிரார்த்தம் தர்ப்பணம் போன்றவற்றை செய்பவர்களுக்கு
நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச விருத்தி, முதலான பலன்கள் கிடைக்கும்.
பித்ருக்களுக்கான கர்மாக்களை யார் முறையாகச் செய்யவில்லையோ அவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்ற சில துன்பங்கள் நேரிடலாம்.
ஆகவே சகோதர்களுக்குள் யாரோ ஒருவர் செய்து விட்டாரே நாம் ஏன் சிரார்த்தம், தர்ப்பணம் மறுபடியும் செய்ய வேண்டும் என்று தவறாக எண்ணி ஒருவர் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றைச் செய்யாமல் இருந்து விட்டால், நஷ்டம் அவருக்குத்தானே தவிர, பித்ருக்களுக்கு இல்லை.
அதாவது சிரார்த்தம் தர்ப்பணம் முதலான பித்ரு கர்மாக்களைச் செய்யாதவனுக்கு பித்ரு தோஷம் ஏற்படலாம். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால் பித்ரு தோஷத்தை ஒருவன் தன் வாழ்நாளில் அனுபவிக்காமல் போனாலும் அந்த பித்ரு தோஷத்தை அவனது வம்சத்தினர் அனுபவிக்க நேரலாம்.
ஆகவே அவரவர்களின் அப்பா, தாத்தா செய்து வந்த வழிமுறையை ஒட்டி பித்ருக்களுக்கான சிரார்த்தம் தர்ப்பணம் முதலானவற்றை அந்தந்த காலங்களில் தவறாது செய்து விட வேண்டும்.
நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னை நம்பி வாழும் தனது குடும்பத்தினரின் நன்மையைக் கருதி கட்டாயம் பித்ரு கர்மாக்களை செய்வது நல்லது.
அவர்களுக்கு நாம் எந்த ஒரு சொத்தும் பணமும் சேர்த்து வைக்காவிட்டாலும், பித்ரு கர்மாக்கள் செய்யாததால் ஏற்படும் பித்ரு தோஷத்தை சொத்தாக வைத்து விட்டுச் செல்லக்கூடாது.
ஆகவே அண்ணன், தம்பிகள் பலர் இருந்தால் அனைவரும் தனித்தனியே அவரவர்களுக்குரிய கடமைகளை அதாவது சிரார்த்தம் தர்ப்பணம் போன்ற பித்ரு கர்மாக்களை தனித்தனியே கட்டாயம் செய்ய வேண்டும்.
அல்லது அண்ணனோ, தம்பியோ பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது அவர்களுடன் சேர்ந்து நின்றாவது பித்ரு கர்மாக்களைச் செய்யவேண்டும்.

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாமல் நீங்கள் எத்தனை பூஜை செய்தாலும் நீங்கள் செய்யும் தொழில் குடும்பம் முன்னேற்றமே ஆகாது.
ஒருவரது வாழ்வில் குலதெய்வ வழிபாடும், முன்னோர்கள் வழிபாடும் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும்.

முன்னோர்களை நினைத்து முழுமையாய் வாழ்வோம். 

#நமது_முன்னோர்களே_நமது_வாழ்வியல் 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Apr 20
#சோறு

காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது.
ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது.
அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார்,  வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட்.
Read 16 tweets
Apr 20
*அற்புத ரகசியங்கள் நிறைந்த அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி*

தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.

1 Image
இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.

ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை.

2
அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.

3
Read 24 tweets
Apr 19
வாழ்க்கையில் சோதனை என்பது எல்லோருக்கும் உண்டு....

அதில் ஏழை ,பணக்காரன்,
ஆத்திகன் , நாத்திகன் ,
இறையடியார்கள் ,,,
ஏன் இறைவனே பிறப்பெடுத்து வந்தாலும் நிச்சயம் அவனுக்கும் பல சோதனைகள் உண்டு 

ராம-ராஜ்ஜியம் மக்கள் எல்லோரும் ராமன் பொற்கால ஆட்சியில் பேரானந்தமாக வாழ்ந்தனர் Image
அந்த நேரம் பார்த்து சோதனையாக துர்வாச-மாமுனிவர் தன் சீடர்களுடன் ராமனை காண அயோத்தி வந்தார் .

இதையறிந்த அயோத்தி மக்கள் மற்றும் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயத்தோடு அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர்
காரணம் துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர் மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ சக்தியில் ஒரு பகுதியை இழந்துவிடுவர் பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும்
Read 27 tweets
Apr 19
ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..

சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..
அற்புதம் என்றார் மேலாளர்.. 

இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..

முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி..
காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..

காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..

ஆஹா.. 

இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்..

ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..
Read 8 tweets
Apr 19
நந்தி மூலவராக அருள்பாலிக்கும் கோவில்...

பொதுவாக மூலவராக இருக்கும் ஈசனின் கருவறைக்கு வெளியே தான் நந்தி வீற்றிருந்து அருள்பாலிப்பார்.

ஆனால் பெங்களூருவில் உள்ள  பசவன்குடி என்ற இடத்தில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

1 Image
இந்த நந்தி கோவில் பசவன்குடியில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் குன்றுக்கு ஊதுகுழல் குன்று என்ற பெயர் வழங்கப்படுகிறது.

2
இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊது குழல் இருக்கிறது. படைப்பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால்தான் அந்த குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

3
Read 11 tweets
Apr 18
எதிர்காலத்தை முன்னமே எழுதி வைத்த வீர பிரம்மேந்திரர் சுவாமிகள்.

நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர் காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர்.
அவர் எழுதி வைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.

உலகம் போற்றும் பாரத
சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு.
ஆந்திரத்தை சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர்.
Read 30 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(