தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? எதை கேட்க வேண்டும்?

ஆதிசங்கரர் நமக்கு வழி
காட்டுகிறார்.

பொதுவாக, நாம் "பக்தியோடு"
எதை கேட்டாலும், பகவான்
நமக்கு கேட்டதை தருவார்.
கேட்பதில் உயர்ந்த விஷயங்கள்
உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண
விஷயங்கள் உண்டு. Image
பிரார்த்தனை செய்தேன்,
நோய் சரியாகி விட்டது,
பிரார்த்தனை செய்தேன்,
செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன்,
வேலை கிடைத்து விட்டது,
என்று சந்தோஷப்படுவது
எல்லாம், கோடீஸ்வரனிடம்
போய் 10 ரூபாய் வாங்கி
சந்தோஷப்படுவது போல ஆகும்.
முக்கியமாக, "நாம் தெய்வத்திடம்
என்ன கேட்க வேண்டும்?"
என்று வேதம் சொல்கிறது
என்று எளிதான ஸ்லோகங்கள்
மூலம் நமக்கு தர்மத்தை புரிய
வைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள்
பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க
வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை
குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
நோய் தீரனும்,
என் பையனுக்கு, பொண்ணுக்கு
கல்யாணம் நடக்கணும்"
என்று கேட்டு கொண்டிருப்பார்கள்.
ஆதிசங்கரர் இதையெல்லாம்
போய் பகவானிடம் கேட்காதே
என்று சொல்லி, நீ கேட்க
வேண்டியது என்று சில உள்ளது,
உன் முயற்சியால் கூட அடைய
முடியாததை பகவானிடம் கேள்
என்று சொல்லி கொடுக்கிறார்.
நம் புராதன வேதம், நாம்
தெய்வத்திடம் என்ன கேட்க
வேண்டும்? என்று சொல்லி
இருக்கிறது என்ற ஆதிசங்கரர்
விளக்குகிறார்.
*1. #கர்வம்*
தெய்வத்திடம் நாம் முதலில்
கேட்க  வேண்டியது,
பகவானே ! முதலில் நான்
செய்கிறேன் என்ற என் கர்வத்தை
( அஹங்காரம் ) என்னிடம் இருந்து
விலக்கி விடுங்கள்
என்று கேட்க வேண்டும்.
நமக்கு முக்கியமாக தேவையானது
- விநயம் ( அடக்கம் ).
இந்த விநயம் (அடக்கம்) நமக்கு
வராமல் இருப்பதற்கு காரணம்,
நம்மிடம் நான் செய்கிறேன்
என்று இருக்கும் கர்வமே காரணம்.
அனைத்தையும் படைத்த
பகவானிடம், நாம் போய் என்
கஷ்டம், என் துக்கம், என் வேலை
என்று நான், என்னுடைய என்று
சொல்வதே நம் கர்வத்தை
காட்டுவதாகும்.
எல்லாம் தெரிந்தவருக்கு உன்
துக்கம், நோய் தெரியாதா?
சொல்லித்தான் அவருக்கு
தெரியுமா?
*2. #ஆசை*
நாம் செய்யவேண்டிய
இரண்டாவது பிரார்த்தனை,
பகவானே! என்னுடைய மனதில்
இன்று வரை நிறைய ஆசைகள்
வந்து கொண்டே இருக்கிறது.
அந்த ஆசைகளை வராமல்
செய்து விடு
என்பது தான் என்கிறார்
ஆதிசங்கரர்.
நமக்கு மனதில் எத்தனைக்கு
எத்தனை ஆசைகள் உருவாகி
கொண்டே இருக்கிறதோ, அந்த
ஆசையினால் துக்கங்கள்
உண்டாகிறது.
ஒரு ஆசையை நிறைவேற்ற
முயன்றால், அது பலிக்கும் போது,
இன்னொரு ஆசை மனதில்
உண்டாகிறது.
அந்த ஆசையை நிறைவேற்ற
முயன்றால், அது பலிக்கும் போது,
மற்றொரு ஆசை மனதில்
உண்டாகிறது.
முடிவே இல்லாத ஆசைகள்,
திருப்தி இல்லாதவனுக்கு
வந்து கொண்டே இருக்கும்.
திருப்தி இல்லாததால்
துக்கம் உண்டாகும்.
கர்வத்தை நம்மால் அழிக்க
முடியாதது போல,
மனதில் வந்து கொண்டே
இருக்கும் இந்த ஆசையையும்
நம் திறமையால் அழிக்கவே
முடியாது.
பகவான் அனுகிரஹத்தால்
மட்டுமே, நம்மால் அழிக்க
முடியாத கர்வத்தையும், நம்மிடம்
உருவாகும் ஆசையையும்
அழிக்க முடியும்.
*3. #திருப்தி
நாம் செய்யவேண்டிய
மூன்றாவது பிரார்த்தனை,
பகவானே! எனக்கு என்று எது
உள்ளதோ, அதை பார்த்து நான்
திருப்தி அடையும் குணத்தை
கொடு என்பது தான் என்கிறார்
ஆதி சங்கரர்.
பகவத் கீதையில், இந்த
திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்
"யதுர்சலாப_சந்துஷ்ட:
த்வந்-த்வா தீதோ விமத்சர:
சம சித்தாவ சித்தௌ ச
க்ருத் வா
பி ந நிபத் யதே ||"
(4 Ch. 22 Sloka)
என்று சொல்லும் போது,
நானாக போய் யாரிடமும் கை
எந்த மாட்டேன். எனக்கு என்று
எது கிடைக்கிறதோ அதை
கொண்டு நான் சந்தோஷப்படுவேன்
என்கிற திருப்தியில் எவன்
இருக்கிறானோ அவனை
சுகம் துக்கம், வெற்றி தோல்வி
என்ற எந்த அனுபவமும்
மனதளவில் பாதிக்காது
என்கிறார்.
தெய்வ_அனுக்கிரகத்தால்
மட்டுமே, மனதில் த்ருப்தி
ஏற்படும்.
பகவான் அனுக்கிரகத்தால்
மட்டுமே, நம்மால் அழிக்க
முடியாத 'கர்வ'த்தையும், '
ஆசை'யையும் அழித்து, 'திருப்தி'
என்ற குணத்தையும் கொடுக்க
முடியும்.
*4. #இரக்கம்
நாம் செய்யவேண்டிய
நான்காவது பிரார்த்தனை,
பகவானே எனக்கு யாரை
பார்த்தாலும் மனதில்
இரக்க சிந்தனை உருவாகும் படி
செய்யுங்கள் என்பது தான்
என்கிறார் ஆதிசங்கரர்.
நம்மால்_கொண்டு_வர_
முடியாத_குணம்_இரக்கம்.
இரக்க குணம் உள்ளவனுக்கு,
மற்றவர்கள் செய்யும் தவறுகள்
தெரிந்தாலும், அவன் தெரியாமல்
செய்கிறான் என்று அவன் மீதும்
இரக்கம் வரும்.
இரக்க குணம் உள்ளவனுக்கு,
எதை பார்த்தாலும், யாரிடத்திலும்
'கோபமே' வராது.
கர்வத்தையும், ஆசையையும்
நம்-மால் அழிக்கமுடியாதது போல,
மனதில் த்ருப்தி கொண்டு
வரவே முடியாதது போல,
எதனிடத்திலும் இரக்கம் காட்டும்
குணம், நம் முயற்சியால் வரவே
வராது.
தெய்வம், அனுக்கிரகம்
செய்தால் மட்டுமே, இந்த இரக்க
குணம் மனதில் ஏற்படும்.
பகவான் அனுக்கிரகத்தால்
மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத
கர்வத்தையும், ஆசை'யையும்
அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற
குணத்தையும் கொடுக்க முடியும்.
*5. #மோக்ஷம்*
நாம் செய்யவேண்டிய
ஐந்தாவது பிரார்த்தனை,
பகவானே ! பல யுகங்களாக
நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில்
மூழ்கி எழுந்து கொண்டு
இருக்கின்றேன்.
எவ்வளவு தடவை இப்படியே
இருந்து கொண்டிருப்பது?
என்னை இந்த ஸம்ஸார
ஸாகரத்தில் இருந்து தாண்ட
வைத்து விடு. மோக்ஷத்தை கொடு
என்பது தான் என்கிறார்
ஆதிசங்கரர்.

இங்கு-ஸம்ஸார ஸாகரம் என்று
சொல்வது, ஜனனம்-மரணம்
என்ற சுழற்சியை.
இந்த சுழற்சியையே, ஆதிசங்கரர்,
பஜ கோவிந்தம் பாடும் போது
புனரபி ஜனனம், புனரபி_மரணம்,
புனரபி_ஜனனீ_ஜடரே_சயனம் I
இஹ ஸம்ஸாரே பகு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !
என்று பாடுகிறார்.
இதற்கு அர்த்தம்,
பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும்
தொடர்ந்து உண்டாகி கொண்டே
இருக்கிறது. இந்த பிறப்பிலும்
மீண்டும் தாயின் கருவறையில்
பிறந்தாயிற்று.
கடக்க முடியாத இந்த சக்கரத்தில்
இருந்து, விடுவித்து, கடாக்ஷித்து
அருளமாட்டாயா கோவிந்தா?
என்கிறார்.
நாம் பிறந்தாச்சு. கொஞ்சம்
வருஷம் வாழ்ந்து தான் ஆக
வேண்டும். பின்பு இறந்து தான்
ஆக வேண்டும்.
செய்த பாவ புண்ணிய பலன்படி,
திரும்ப ஏதாவது ஒரு தாயார்
வயிற்றில் பிறக்க தான் வேண்டும்.
ஆனால் இப்படியே எவ்வளவு
நாள் ஸம்ஸார சாகரத்தில்
சூழல்வது?
கர்வத்தையும், ஆசையையும்
நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் த்ருப்தியும், இரக்கத்தையும்
நம்மால் கொண்டு வரவே
முடியாதது போல,
ஸம்ஸார சக்கரத்தில் இருந்து,
நம் முயற்சியால் முற்றுப்புள்ளி
வைக்கவே முடியாது.
தெய்வஅனுக்கிரகம் செய்தால்
மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும்.
உன் முயற்சியால், பெற முடியாத
இந்த 5 விஷயங்களையும்,
பகவானிடம் கேள்
என்று ஆதிசங்கரர் நமக்கு
சொல்லித்தருகிறார்.

நீ இந்த 5 விஷயங்களையும்
பகவானிடம் தினமும் பிரார்த்தித்து
கொண்டே இரு.
பகவான் நம்மிடம் கருணை
கொண்டு, அணுகிரஹித்து
விட்டால், இதை விட லாபம்
ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா?
இதை விட்டு,
மிகவும் அற்பமான
எதை எதையோ கேட்டு
உன் வாழ்க்கையை
வீணாக்கிக் கொள்ளாதே !🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Apr 22
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது "அருள்மிகு உத்தமர் திருக்கோவில்."

"ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இதுவாகும்".

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசமாகும்.

1 Image
சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி தேவி, அவரை தனது கணவர் என நினைத்து பணிவிடை செய்தார். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார்.

2
இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை.

3
Read 10 tweets
Apr 21
கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். Image
" கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? " என்று அந்த மகானிடம் அவர் கேட்டார்.
அதற்கு அந்த மகான் " கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற அழியாத பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள். நீயும் கடவுள் தான் "என்றார்.
அதற்குப் பக்தர் " அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை ?" என்று கேட்டார்.

அதற்கு அந்த மகான் " உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார். ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை " என்று பதிலளித்தார்.
Read 15 tweets
Apr 21
ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது.
இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."
Read 14 tweets
Apr 21
அருள்மிகு
ஶ்ரீ (தேவி, பூதேவி)
செங்கமலவல்லி தாயார் சமேத
ஶ்ரீ ராஜகோபாலசுவாமி  திருக்கோயில்,
(சதுர்வேதி மங்கலம்)
மணிமங்கலம்,
தாம்பரம் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

1 Image
சுமார் 1000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த வைணவத்திருத்தலத்தில் பத்ம விமானத்தின் கீழுள்ள கருவறையில்,
நான்கு திருக்கரங்களுடன்,
ஶ்ரீ தேவி, பூதேவியுடன்
ஶ்ரீ ராஜகோபாலர் அருட்காட்சியளிக்கிறார்.

2
பொதுவாக, வலது கரத்தில் சக்கரமும்,
இடது கரத்தில் சங்கும்
வைத்திருக்கும் பெருமாள்,
இத்தலத்தில் வலது கரத்தில் சங்கும்,

3
Read 9 tweets
Apr 20
வராக‌ அவதாரத்தை கவனியுங்கள் பன்றி
மூக்கில் பூமி உருண்டையாக தெரியும், இந்துக்கள் இம்மாதிரி தத்துவத்துடன் பூமி உருண்டை என சொல்லி சிலைவடிக்கும் பொழுது உலகில் பூமி தட்டை என்றே பெரும்பான்மை சமூகம் நம்பிகொண்டிருந்தது Image
கலிலியோவுக்கும் கோப்பர் நிகஸுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்த உண்மை இந்துக்களுக்கு தெரிந்தது

பூமி உருண்டை என்பது வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியருக்கு தெரிந்தது, அதுவும் போப்பாண்டவர் அப்படி சொன்னவர்களை முழங்காலில் நிறுத்தி தண்டித்த கதை எல்லாம் உண்டு
உலகம் இன்று சொன்னதை பல ஆயிரம் ஏன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் இந்துக்கள்

பன்றி வந்தது உலகை சுமந்தது என்பது நம்பிக்கைக்கு உட்பட்டது, ஆனால் அன்றே பூமி உருண்டை என்பது இந்துக்களுக்கு தெரிந்தது என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்லவா?
Read 6 tweets
Apr 20
#சோறு

காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது.
ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது.
அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார்,  வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட்.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(