👁️ 🌹👁️ Profile picture
Apr 23 7 tweets 3 min read Twitter logo Read on Twitter
#கட்டிடங்களின்_கதை

புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள் இன்று.

புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.

இது 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டப்பட்டது. Image
வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால்,

புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது Image
1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.

கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை Image
அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர்.

கோட்டை புனித ஜார்ஜ் பிறந்த நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால்,

இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. Image
கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது.

இக் கோட்டை, இப்பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. Image
இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது.

தென்னிந்தியாவில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டின அரசர்களையும், பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது. Image
படங்கள் உதவி
@teamasterdiary

மூலம் : TP ஜெயராமன் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 👁️ 🌹👁️

👁️ 🌹👁️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malarvili1998

Apr 1
#ஐஸ்_ஹவுஸ்
மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. யானைகள் முதல் வைரங்கள் வரை இங்கும் அங்குமாகக் கடல்களைக் கடந்தன.
ஆர்மேனியர்கள், யூதர்கள் மற்றும் போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்து குவியல்களாகக் கடற்கரையில் கொட்டி வைத்தனர். அவற்றில் மிக விசித்திரமான இறக்குமதியானது இன்று நாம் அனைவரும் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயன்படுத்துவதாகும்.
அந்த நாட்களில் அது ஒரு பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகுதான் சென்னைக்கு இறக்குமதி செய்தனர். 1800களில் அதை அமெரிக்காவிலிருந்து கடல் வழியாக 10,000 மைல் கொண்டு வர, மிகவும் விரிவான திட்டமிடல் மற்றும் கடினமான பயணம் தேவைப்பட்டது.
அந்த இறக்குமதி – தண்ணீர். ஆனால் திட வடிவத்தில் கட்டியாக
Read 20 tweets
Mar 30
#கிழக்கின்_ஏதன்ஸ்
நம்ம மதுரை தான் 😂

நேற்று போட்ட thread ல

@arakkarperiyar ஒரு கருத்து சொல்லி இருந்தார்

பக்தி இலக்கியங்களில் மதுரையை "திருஆலவாய்" அல்லது "கூடல் மாநகர்" என்பர்

ஏனெனில், மதுரை என்பது சமணர்கள் வைத்த பெயர் என்றார்

அது சம்பந்தமா
Google செய்த போது இது வந்தது
#வேறுபெயர்கள்
கூடல் நகர்
மதுரையம்பதி
நான் மாடக்கூடல்
மீனாட்சி பட்டணம்
உயர் மாதர்கூடல்
ஆலவாய்
கடம்பவனம்
அங்கண் மூதூர்
சுந்தரேசபுரி
தென் மதுராபுரி
முக்கூடல் நகரம்
இவை காரணப் பெயர்
நம்ம ஆளுங்க
மல்லிகை நகர், வைகைநகர்
சிறப்பு பெயர் வைத்தனர்
#மலைநகர்
பக்கத்தில் ஆனைமலை திருப்பரங்குன்றம் இருப்பதால் மலை நகர்

#தூங்காநகரம் சங்ககாலத்திலேயே இருந்திருக்கு 🤗

`மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங்காடி’ -(மதுரைக்காஞ்சி 425)
Read 10 tweets
Mar 29
#இந்தியாவின்_புராதானநகரம்

எப்ப பார்த்தாலும் சென்னையை பற்றி பேசி பேசி போரடிக்குது

ஒரு சேஞ்சுக்கு இந்தியாவின் பழமையான நகரைப் பற்றி பேசலாம்

உடனே காசி தானே என வராதீங்க

அது பிணங்களின் நகரம்
இது தூங்கா நகரம்

உலகின் மிகப் பழமையான ராஜ பரம்பரை ஆண்டது

🔥மதுரை🔥 Image
பொதுவா எல்லா இந்திய நகரங்களின் கட்டுமான அமைப்பு படி

கோயிலை சுற்றித்தான் நகரம் வளர்ந்து இருக்கு

2000-3000 ஆண்டுகள் என அதன் பழைமையை மதிப்பிட்டிருக்கு விக்கிபீடியா

15 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயிலை சத்தியமா ஒரே ஒரு அரசர் தன் ஆயுள் காலத்தில் நிர்மாணித்து இருக்க முடியாது Image
பாண்டியர்கள் ஆரம்பித்து படையெடுத்து வந்த நாயக்கர் ஊடாக

தேவகோட்டை செட்டியார் வரை இதன் கட்டுமானத்திற்கு பங்களித்து இருக்கின்றனர்

பக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை பெரியார் என பெயரிட்டு அதை அம்மக்களும் ஏற்று

இன்னி வரை திருமங்கலம் ஆரப்பாளையம் அல்லது மாட்டு தாவணியில் பஸ் ஏறி Image
Read 8 tweets
Mar 28
2008 ல் கலைஞர் தொடங்கிய முன்னோடி திட்டம்

அப்பவே பல மாநிலங்கள், தமிழ்நாட்டுக்கு வந்து இதன் நடைமுறை செயல்பாடு பற்றி அறிந்து சென்றன

இதனுடைய முக்கியத்துவம் ஒன்றிய அரசுக்கு உரைக்க 15 வருடம் ஆகியிருக்கிறது

கலைஞர் தன் காலத்தையும் தாண்டி சிந்தித்தவர் என பெருமை கொள்ள இன்னொரு வாய்ப்பு
இந்த உறுப்பு தான திட்டம் என்பது முதன்முதலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. 2008இல் அவர் இதனைச் செய்தார். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட இந்த அறுவைச் சிகிச்சையை ஒருவர் செய்துகொள்ளலாம் என அவர்தான் அறிவித்தார்.
அன்றைக்கு அவரிடம் இருந்த தொலைநோக்குப் பார்வைதான் இன்றைக்கு லட்சக் கணக்கான பேருக்கு புதிய உயிரையே கொடுத்துள்ளது. இந்திய அளவில் பலரும் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் என இதை சுருக்கிப் பார்க்க முடியாது. அவர்தான் அதற்கு முழுக் காரணம். அதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
Read 8 tweets
Mar 27
#செங்களம் = செம்மை +களம்

கீழேயே புரிகிற மாதிரி ரெட் Battle field என சப்டைட்டிலும் இருந்தது

ஃபர்ஸ்ட் எபிசோடு பார்க்கும்போது

அந்த நிலவியலை காணும் போது கோவில்பட்டி பக்கம் நிகழ்ந்த எதோ சிவப்பு போராட்டம் பற்றியது என நினைச்சா.. Image
அடுத்தடுத்த எபிசோடில் தான் புரிந்தது இது வழக்கமான கதை தான் என

இருப்பினும்,
Rana Naidu போன்ற இந்தியன் வேர்சன் porn தொடருக்கு இடையில்

தனித்து நிற்கும் தமிழ் தொடர் என்பதால் நாம கண்டிப்பா இத பற்றி பேசணும் Image
திமுக பெருசுகளே மறந்து விட்ட எஸ் எஸ் ராஜேந்திரன் போட்டோவை அடிக்கடி காட்டுவது சிறப்பு..

தொடரின் பிளஸ் பாயிண்ட் கலையரசனின் மிரட்டலான நடிப்பு

ஒரு லெவலுக்கு மேல் மன்னார்குடி கும்பலை நினைவு படுத்துகிறது Image
Read 9 tweets
Mar 14
சென்னைல உள்ள புகழ்பெற்ற சர்ச்சில் உள்ள ஓவியம். புனிதர் ஒருவர் கொல்லப்படுவது சித்தரிக்கிறது. கிறிஸ்தவர்கள் இதனை Martyrdom என்பர்.
கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் தான் அவர். நான் சொல்ல போறது அவரது வரலாறு இல்லை
இவரிடமிருந்து ஆரம்பித்தால் தான் அதன் வீச்சு புரியும்
கிபி 52 இல் புனித தாமஸ், அன்றைய சேர நாட்டின் மலாபார் கடற்கரையில் வந்து இறங்கிய போது, அவருக்குத் தெரியவில்லை தன் வழி தோன்றல்கள், மானிட உயர்வுக்கு பாடுபட்டதுக்கு பின்னாளில் ஒரிசா என்று வழங்கப்போகும் கலிங்கத்தில் குடும்பமே உயிருடன் எரித்துக் கொல்லப்படுவார்கள் என்று
1800 வரை ஐரோப்பிய நாட்டினர் வருவதும் போவதுமாக இருக்க, ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு தாங்கள் செய்ய வேண்டிய தலையாய பணி இதுதான் என புரிந்தது. தென் கேரளம் தமிழ்நாடு அடங்கிய திருநெல்வேலிக்கு பல மிஷனரிகள் வந்திருந்தனர் அவர்களில் ஒருவர் லண்டனை சேர்ந்த ஜான் டக்கர்
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(