M.SivaRajan Profile picture
Apr 24 19 tweets 3 min read Twitter logo Read on Twitter
#பதஞ்சலீஸ்வரர்

முக்தி அளிக்கும் முள்ளூர் பதஞ்சலீஸ்வரர் கோவில் :

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே உள்ள கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம். Image
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும்,

தேவார திருத்தலங்களான திருநாரையூரில் இருந்து தெற்கில் 5 கிலோமீட்டர் தூரத்திலும்,

ஓமாம்புலியூரில் இருந்து கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமம்.
இந்த ஊரின் புராண காலத்து பெயர் கானாட்டுமுள்ளூர் என்பதாகும்.

இங்கு பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம் உள்ளது.

தேவாரத் திருத்தலங்களில் ஒன்றான இது, காவிரி வடகரை தலங்களில் 32–வது திருத்தலமாகும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற ஒரு பதிகம் இந்த ஆலயத்திற்கு பெருமை சேர்க்கின்றது.
பதஞ்சலி முனிவரால் வணங்கப்பெற்ற இவ்வாலய இறைவன் அவருக்கு முக்தியை அளித்ததால்,

அவர் பெயரிலேயே பதஞ்சலிக்கு அருளிய பரமனாக விளங்குகின்றார்.

தண்டகாரண்யத்து முனிவர்கள் மதுகாவனம் என்னும் பெயர்கொண்ட இத்தலத்திற்கு வந்து, நந்திதேவரின் ஆணைப்படி ஈசனை நினைத்து தவம் செய்து வந்தனர்.
இறைவன் அவர்களுக்கு அருள்செய்ய திருவுளங்கொண்டு ஒரு காலடிகூட வைக்க இடமின்றி ஊரெங்கும் லிங்க வடிவங்களை தோன்றச் செய்தார்.

முனிவர்கள் ஒவ்வொரு லிங்கத்தையும் வழிபட்டு வேண்டிய பேறு களைப் பெற்றனர்.
ஊரெங்கும் மண்(மிர்த்) இல்லாமல் லிங்க வடிவமாக இருந்தபடியால் ‘அஷ்டமிர்த்திகா ஷேத்திரம்’ என்ற பெயரும் இத்தலத்திற்கு ஏற்பட்டது.

கொள்ளிடக்கரையோரம் பயணித்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஊர் முழுவதும் மண்ணெல்லாம் லிங்க வடிவமாய் காட்சியளிப்பதைக் கண்டார்.
எனவே ஆற்றின் கரையோரத்திலேயே நின்று இவ்வூர் இறைவனை வணங்கி, பதிகம் பாடினார்.

சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காணும் பொருட்டு, பரந்தாமனின் அருளால் பதஞ்சலி முனிவராக அவரித்தார் ஆதிசேஷன்.

பின்னர் பூலோகத்தில் வியாக்ரபாதர் என்ற முனிவருடன் இணைந்து சிதம்பரம் சென்றார்.
அங்கு அனுதினமும் இறைவனை வேண்டி, ஆனந்த தாண்டவத்தை காண்பித்தருளும்படி வேண்டினார்.

அவரது ஆழ்ந்த பக்தியைக் கண்ட சிவன், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக ஆனந்த நடனத்தை ஆடியருளினார்.

பரவசம் தரும் அந்த நடனத்தை மீண்டும் மீண்டும் காணும் விருப்பத்தை பதஞ்சலி முனிவர் வெளியிட,
‘அவ்வப்போது பல தலங்களில் இருந்து யாம் அருளுவோம். அங்குவந்த பார்’ என்று கூறி மறைந்தார்.

இறைவன் அழைப்பை ஏற்று பதஞ்சலி முனிவர் பல ஆலயங் களுக்கு சென்று தரிசனம் செய்தார்.

இந்த நிலையில் அவரை தொழுநோய் ஆட்கொண்டது.

இந்த நோயால் அவதிப்பட்டு வந்த பதஞ்சலி முனிவரிடம்,
நந்திதேவர் கானாட்டுமுள்ளூர் திருத்தலத்தின் பெருமையைக்கூறி, அங்குச் சென்று இறைவனை தரிசிக்குமாறு தெரிவித்தார்.

அதன் படி இந்தத் தலத்தற்கு வந்த பதஞ்சலி முனிவர் எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கி,

ஆனந்த நடன காட்சியை கண்டு அகமகிழ்ந்தார்.
அதன் பின்னர் இவ்வூரிலேயே தங்கி நோய் நீங்கப் பெற்று முக்தியும் அடைந்தார்.

பதஞ்சலி முனிவரால் நெடுங்காலம் வழிபடப்பட்ட லிங்கம்,

அவருடைய பெயரிலேயே பதஞ்சலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டது.

காணும் இடமெல்லாம் முட்களைப்போல சிவலிங்கங்கள் தெரிந்ததால், ‘காணாட்டுமுள்ளூர்’ என்றும் பெயர் பெற்றது.
புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதரும் இத்தல இறைவனை வணங்கி வழிபட்டுள்ளார்.

எனவே இத்தலம் ‘காணாட்டாம்புலியூர்’ என்று மருவியுள்ளது.

திருப்பாதிரிப்புலியூர்(கடலூர்),

பெரும்பற்றபுலியூர்(சிதம்பரம்),

ஓமாம்புலியூர்,

எருக்கத்தாம்புலியூர் (ராசேந்திரபட்டிணம்) என்னும் புலியூர் வரிசையில்,
இது ஐந்தாவது புலியூராக விளங்குகின்றது.

முற்கால சோழர்களில் ஒருவனான விக்கிரமசோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

இறைவன் பதஞ்சலீஸ்வரர், இறைவி கோள்வளைக்கை அம்பிகை (ஒன்பது கோள்களையும் வளையல்களாக கைகளில் அணியப் பெற்றவள்),
அன்னை அம்புஜாட்சி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள்.

உற்சவர் - சோமாஸ்கந்தர் – கானார்குழலி.

தல தீர்த்தம் சூரிய புஷ்கரணி ஆகும்.

தலவிருட்சமாக வெள்ளெருக்கு உள்ளது.

இரண்டு ஏக்கர் முப்பத்தேழு சென்ட் பரப்பளவு கொண்ட சூரிய புஷ்கரணி தீர்த்தம், சூரியன் நீராடிய பெருமைக்குரியது.
சூரியன் உதயமாகும் தருணத்தில், மந்தேசுரன் என்ற அரக்கன் சூரியனுக்கு அனுதினமும் தொல்லை அளித்து வந்தான்.

இதனால் அரக்கனிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள, உதயமாகும் நேரத்தில் சிவனும் விஷ்ணுவும் தன் மண்டலத்தில் இருக்கச் செய்யுமாறு பிரம்மனிடம் சூரியன் வரம் கோரினான்.
பிரம்மனோ, ‘அப்படியொரு வரத்தை தன்னால் தர இயலாது.

நீ மிருத்திகாவனம் சென்று பதஞ்சலீஸ்வரரை வணங்கி,

நான்கு வேதத்தின் சொரூபமாக அவ்வாலயத்தின் எதிரில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்து ஈசனையும், விஷ்ணுவையும் நினைத்து தவம் செய்.
அப்படிச் செய்தால் நினைத்தது நிறைவேறும்’ என்று கூறி அனுப்பிவைத்தார்.

அதன் படி இங்குவந்த சூரியன் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனையும் விஷ்ணுவையும் வணங்கி தவம் செய்தான்.

அவனது தவவலிமையைக் கண்ட சிவனும் விஷ்ணுவும், தம்பதிசமேதராய் காட்சியளித்து சூரியன் வேண்டிய வரத்தை அருளினர்.
இதை நினைவுப்படுத்தும் விதமாக கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாமி தீர்த்தக் கரையில் எழுந்தருள்வது இன்றளவும் நடைமுறையாக இருந்து வருகின்றது.

சூரியபுஷ்கரணியை தவிர கிழக்கில் காமதீர்த்தம்,

தெற்கில் விஷ்ணு தீர்த்தம்,

மேற்கில் பார்வதி தீர்த்தம்,
இதற்கு மேற்கில் இந்திர தீர்த்தம்,

வடக்கில் விநாயகர் தன் துதிக்கையால் அமைத்த கணாதீப தீர்த்தம் என ஆறு தீர்த்தங்கள் இத்தலத்தில் அமைந்துள்ளன.

#பதஞ்சலீஸ்வரர்

#பதஞ்சலீஸ்வர_சுவாமி

#ஓம்_நமசிவாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Apr 25
#ஆதி_சங்கரர்

மிக நீண்ட பதிவு :

கேரள மாநிலத்தின் பூர்ணா நதிக்கரையில் “காலடி” என்ற ஊரில் இறைவழிபாட்டிலும் தான தருமங்கள் செய்வதிலும் புகழ் பெற்று விளங்கிய சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு, பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது.

இதனால் இத்தம்பதியர்கள் மன வருத்தமடைந்தனர். Image
அவர்கள் திருச்சூருக்குச் சென்று “வடுகநாதன்” என்ற பெயரில் அங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானிடம் தங்களுக்குக் குழந்தை வரம் தர வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்தனர்.

இவ்விரதத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார்.
அவர்களிடம் “உங்களுக்குத் தீய குணங்களுள்ள பல குழந்தைகள் வேண்டுமா அல்லது நற்குணமும் இறை பக்தியும் கொண்டு, பலருக்கும் குருவாய் விளங்கக் கூடிய ஒரு குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார்.

இதை கேட்ட தம்பதியர்கள் இருவரும் சேர்ந்தவாறு, “எங்களுக்கு நற்குணமுடைய ஒரு குழந்தை போதும்” என்றனர்.
Read 74 tweets
Apr 23
அகிலாண்டேஸ்வரி தாயாரின்ஸ்ரீ சக்கர தாடகங்களின் 
சிறப்பு :

திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள தேவாரத் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களில் அப்புத் (நீர்) தலமாகும்.

இறைவன் திருநாமம் ஜம்புகேஸ்வரர் .

இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. Image
ஆதி சங்கரர் திருவானைக்கா தலத்துக்கு வந்தபோது அங்கு அன்னை உக்கிர ரூபத்தோடு காட்சியளித்தாள்,

அன்னையின் உக்கிரம் தணிக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை தாடகங்கமாகச் செய்து அணிவித்தார்.

இதனால் அன்னை மனம் குளிர்த்து சாந்த சொரூபியாக, வரப்பிரசாதியாக அருள்பாலித்தார்.
அன்னையின் தாடகங்கள் ஸ்ரீ சக்கர ரூபமாக அமைந்ததால் அதை தரிசனம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது.

குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டும் பெண்கள், அம்பிகையின் தாடகங்களையே உற்று நோக்கி வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
Read 5 tweets
Apr 23
#குருப்_பெயர்ச்சி_பரிகாரம்

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்து உள்ளார்.

பரிகாரம் :

இந்த குருப்பெயர்ச்சி ஐ முன்னிட்டு 6 ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். Image
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் :

1. மேஷம்,

2. ரிஷபம்,

3. கடகம்,

4. கன்னி,

5. மகரம்,

6. மீனம்.

ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
பரிகாரம் :

பிரகஸ்பதி பரிகார ஸ்தலங்கள்

1. திருச்செந்தூர்,

2. தென்குடி திட்டை,

3. திருவலிதாயம்.

ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.
Read 5 tweets
Apr 22
#ஆணவம்.

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது.

“இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக் கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை.

வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?”

எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டு பிடிக்க வேண்டும் என்று விரும்பினான். Image
பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்த போது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராம நாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறான்.
அவரிடம் சென்று, “ஏய்… வானரமே…

உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே…

ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?” என்றான் எகத்தாளமாக.

தியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்து கொள்கிறார்.
Read 23 tweets
Apr 21
#நாராயண_நாமம்

*"4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா..."*

காஞ்சி பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார்.

‘‘சுவாமி... தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். Image
ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன்.

4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா...

அதை சொன்னால் நன்றாக இருக்குமே...’’ என்றார்.
கலகலவென சிரித்த சுவாமிகள்,

''பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள்.

'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார்.
Read 8 tweets
Apr 20
#ஸ்ரீ_தட்சிணாமூர்த்தி

*தலையில் கிரீடம் அணிந்து 
காட்சி தரும் அபூர்வ 
தட்சிணாமூர்த்தி*

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி.

இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர்.

இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி. Image
சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார்.

தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்த அவர் மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வழிபட்டார்.
அவருக்கு காட்சி தந்த சிவன் இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார்.

அதன் படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார்.

அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(