M.SivaRajan Profile picture
Apr 29 17 tweets 4 min read Twitter logo Read on Twitter
#திருக்கோஷ்டியூர்

108 திவ்விய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று.

நாராயண மந்திரம் என்பது எட்டெழுத்து மந்திரம்.

#ஓம்_நமோ_நாராயணாய ;’
என்பது தான் எட்டெழுத்து மந்திரம்.

இந்த மந்திரத்தை திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசமாகப் பெற வேண்டும் என்று ஸ்ரீராமானுஜர் எண்ணம் கொண்டார். Image
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு ஆச்சார்யரைக் காண நடந்தே வந்தார்.

கோயிலுக்கு வந்தார்.

கோயிலுக்கு அருகில் உள்ள திருக்கோஷ்டியூர் நம்பியின் வீட்டு வாசலுக்கு வந்தார்.

‘ஆச்சார்யருக்கு நமஸ்காரம்’ என்று அழைத்தார். ’ என்ன விஷயம்’ என்று கதவு திறந்து நம்பி கேட்டார்.
‘தங்களிடம் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசமாகப் பெறவேண்டும்’ என்றார் ராமானுஜர்.

‘யார் நீங்கள்?’ என்று கேட்டார் அவர்.

’நான் ராமானுஜன்’ என்று பதிலளித்தார்.

உடனே முகத்தைத் திருப்பிக் கொண்ட நம்பி, வாசல் கதவை தடக்கென்று சார்த்திக் கொண்டார்.

விறுவிறுவென வீட்டுக்குள் சென்றார்.
முகம் சுருங்கிப் போனார் ராமானுஜர்.

வந்த வழியே திரும்பினார்.

ஸ்ரீ ரங்கத்தை அடைந்தார். சிலநாட்கள் கழிந்த நிலையில்,

மீண்டும் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு பாத யாத்திரையாகவே வந்தார்.

திருக்கோஷ்டியூருக்கு வந்தார். நம்பி வீட்டு வாசலில் நின்றார்.
நம்பியும் ‘யாரது’ என்று கேட்க...

‘நான் ராமானுஜன்’ என்று இவரும் பதில் சொல்ல...

மீண்டும் முகம் திருப்பிக் கொண்டார்.

கதவைச் சார்த்தினார்.

ஸ்ரீ ரங்கம் திரும்பினார்.

இப்படி, பதினெட்டு முறை ஸ்ரீ ரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கும்
திருக்கோஷ்டியூரில் இருந்து ஸ்ரீ ரங்கத்துக்கும் பதினெட்டு முறை நடந்தார்.

‘நான் ராமானுஜன்’,

‘நான் ராமானுஜன்’
என்று சொல்லி வந்தோமே...

அதற்கு அவர் சொன்ன பதில் புரிந்தும் புரியாமலும் இருந்தது.

நம்பி சொன்ன வார்த்தை...

‘நான் செத்து வா’!
பதினெட்டாவது முறைதான் ’எவ்வளவு பெரிய தவறு இழைத்து விட்டோம்’
என்பதே அவருக்குப் புரிந்தது.

இந்த முறை திருக்கோஷ்டியூருக்கு வந்தார்.

நம்பியின் விட்டு வாசலுக்கு வந்தார்.

‘யாரது?’ என்று கேட்டார் நம்பி.

அதற்கு ராமானுஜர்...

‘அடியேன் வந்திருக்கிறேன்’

என்று சொல்லி வணங்கினார்.
‘உள்ளே வா’ என அழைத்தார்.

#ஓம்_நமோ_நாராயணாய;’ எனும் திருமாலின் எட்டெழுத்து மந்திரத்தை போதித்து அருளினார்.

மந்திரத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு முன்னதாக,

ஸ்ரீ ராமானுஜரிடம் ‘இது மோட்சத்துக்கான மந்திரம்.

முக்திக்கான மந்திரம்.

இந்த மந்திரத்தை எவருக்கும் சொல்லக் கூடாது.
அப்படிச் சொன்னால் உனக்கு வைகுண்டம் கிடைக்காது’ என்று எச்சரித்தார்.

அதன் பிறகு தான் மந்திரோபதேசம் செய்தார்.

திருக்கோஷ்டியூர் நம்பியை நமஸ்கரித்தார்.

‘மிக்க நன்றி சுவாமி’ என்று கைகூப்பிச் சொன்னார்.

வாசலுக்கு வந்தார்.

அருகில் உள்ள கோயிலுக்கு வந்தார்.
உள்ளே நுழைந்தார். விறுவிறுவென உயரத்துக்குச் சென்றார்.

கோயிலின் உயர்ந்த இடத்தில் இருந்து ஊரையும் ஊர் மக்களையும் பார்த்தார்.

‘அன்பர்களே மோட்ச கதியைத் தரும் எட்டெழுத்து மந்திரத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எல்லோரும் வாருங்கள்; கேளுங்கள்’ என்று அழைத்தார்.
மக்கள் திரண்டார்கள். நம்பியும் வெளியே வந்தார்.

தடதடவென கோயிலுக்கு ஓடினார்.

‘ராமானுஜா... என்ன காரியம் செய்கிறாய்?

முறைப்படி கற்க வேண்டிய மந்திரத்தை இப்படிக் கூவிக்கூவி சொல்லித் தருகிறேன் என்கிறாயே.
இதனால் நீ மோட்சத்துக்குச் செல்லமாட்டாய்.

வைகுண்டம் கிடைக்காது உனக்கு’ என்று கத்தினார்.

‘அடியேனை மன்னித்து விடுங்கள்.

எனக்கு மோட்சம் கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை சுவாமி.

இதோ... இங்கே கூடியிருக்கும் மக்களுக்கு மோட்சம் கிடைக்கும் அல்லவா.
அந்த மன நிறைவே போதும் எனக்கு’ என்றார்.

#ஓம்_நமோ_நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்தார்.

அப்படி பெருங்கருணையும் விசால மனமும் கொண்டு ராமானுஜர்,

எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் தான் திருக்கோஷ்டியூர்.
இங்கே பெருமாளின் திருநாமம் ஸ்ரீசெளம்ய நாராயண பெருமாள்.

அற்புதமான க்ஷேத்திரத்துக்கு வந்தாலே புண்ணியம்.

இங்கு மாசி மகம் ரொம்பவே விசேஷம்.

மாசி மாதம் மகம் நட்சத்திரத்தையொட்டி பனிரெண்டு நாள் திருவிழா, வெகு விமரிசையாக நடைபெறும்.
மாசி மக நன்னாளில், அதற்கு முந்தைய நாளில், மகத்துக்கு மறுநாளில் என மூன்று நாட்களில் ஏதேனும் ஒருநாள், இங்கே தெப்பக்குளத்தில் விளக்கேற்றி விடுவது ஐதீகம்.

அங்கிருந்து விளக்கு எடுத்து வந்து வீட்டுப் பூஜையறையில் வைத்து பிரார்த்தனை செய்து கொண்டால்,
நாம் நினைத்த காரியமெல்லாம் நடந்தேறும்.

கேட்டதெல்லாம் தந்தருளுவார் பெருமாள்.

மாசி மகத்தையொட்டி, திருக்கோஷ்டியூரில் விளக்கு எடுத்து வந்தால், தொட்டதெல்லாம் துலங்கும்.

இல்லத்தில் சுபிட்சமும் ஐஸ்வர்யமும் நிலைத்திருக்கும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Apr 30
#தாரை

நட்சத்திரப்படி உங்களுக்கு உயர்வையும் செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கக்கூடிய தாரைகள்

பொதுவாக ஜாதகத்தை கணிக்கும் பொழுது அனைவரும் இராசி, இலக்னம், நட்சத்திரம் போன்றவற்றை மட்டுமே கணித்து பலன் கூறுகின்றனர். Image
ஆனால் நட்சத்திரங்களை பற்றி குறிப்பிடும் பொழுது “தாரை” எனப்படும் நட்சத்திரங்களுக்கான பலன் குறித்து பெரும்பாலானோர் கூறாமல் விட்டு விடுகின்றனர்.

இங்கு நாம் இந்த தாரை என்றால் என்ன?

இந்த தாரை ஒரு நபருக்கு என்னென்ன செய்யும்?

என்பது குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
“தாரை” என்றால் தருவது என பொருள்.

அதாவது 27 நட்சத்திரங்களில் எந்த ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய சாதக, பாதக பலன்களை கொடுக்கக் கூடியது இந்த தாரை ஆகும்.

அந்த வகையில் ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு
Read 32 tweets
Apr 30
#அதிசய_சிவலிங்கம்

குடிமல்லம்" பழமையான "சிவன்" கோயில்.

எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் .

இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். Image
உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள

"பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது.
Read 12 tweets
Apr 29
அஷ்டமி, நவமி மற்றும்
கரி நாள் பற்றிய பதிவு:*

பொதுவாக அஷ்டமி, நவமி திதிகள் மற்றும் கரி நாட்களில் தொட்டது துலங்காது என்பர்.

மேலும் இந்நாட்களில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது.

தொடர்ந்து கொண்டே போகும் என்பர். Image
*அஷ்டமி :*

அஷ்டமி திதிகளில் சுப காரியங்களான திருமணம், கிரப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஆனால் இந்நாள் தெய்வீக காரியங்களுக்கு தீட்சை பெறுவது,

மந்திரங்கள் ஜெபிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உகந்த நாளாகும்.
குறிப்பாக செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்றவையாகும்.
Read 11 tweets
Apr 27
#பிரகஸ்பதி_பரிகார_ஸ்தலம்

பஞ்ச லிங்கம் அருளும் தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் :*

தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்குடி திட்டை என்ற திருத்தலம்.

இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். Image
இறைவியின் நாமம் ‘மங்களாம்பிகை’ என்பதாகும்.

பிரளய காலத்தில் அழியாமல் இருந்து, மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க தலமாக விளங்கி வருகிறது.

இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார்.

பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.
Read 8 tweets
Apr 25
#ஆதி_சங்கரர்

மிக நீண்ட பதிவு :

கேரள மாநிலத்தின் பூர்ணா நதிக்கரையில் “காலடி” என்ற ஊரில் இறைவழிபாட்டிலும் தான தருமங்கள் செய்வதிலும் புகழ் பெற்று விளங்கிய சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு, பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது.

இதனால் இத்தம்பதியர்கள் மன வருத்தமடைந்தனர். Image
அவர்கள் திருச்சூருக்குச் சென்று “வடுகநாதன்” என்ற பெயரில் அங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானிடம் தங்களுக்குக் குழந்தை வரம் தர வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்தனர்.

இவ்விரதத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார்.
அவர்களிடம் “உங்களுக்குத் தீய குணங்களுள்ள பல குழந்தைகள் வேண்டுமா அல்லது நற்குணமும் இறை பக்தியும் கொண்டு, பலருக்கும் குருவாய் விளங்கக் கூடிய ஒரு குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார்.

இதை கேட்ட தம்பதியர்கள் இருவரும் சேர்ந்தவாறு, “எங்களுக்கு நற்குணமுடைய ஒரு குழந்தை போதும்” என்றனர்.
Read 74 tweets
Apr 24
#பதஞ்சலீஸ்வரர்

முக்தி அளிக்கும் முள்ளூர் பதஞ்சலீஸ்வரர் கோவில் :

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே உள்ள கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம். Image
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும்,

தேவார திருத்தலங்களான திருநாரையூரில் இருந்து தெற்கில் 5 கிலோமீட்டர் தூரத்திலும்,

ஓமாம்புலியூரில் இருந்து கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமம்.
இந்த ஊரின் புராண காலத்து பெயர் கானாட்டுமுள்ளூர் என்பதாகும்.

இங்கு பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம் உள்ளது.

தேவாரத் திருத்தலங்களில் ஒன்றான இது, காவிரி வடகரை தலங்களில் 32–வது திருத்தலமாகும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற ஒரு பதிகம் இந்த ஆலயத்திற்கு பெருமை சேர்க்கின்றது.
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(