M.SivaRajan Profile picture
May 1 20 tweets 5 min read Twitter logo Read on Twitter
#மோகினி_ஏகாதசி :

வைசாக மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு "மோகினி ஏகாதசி" என்று பெயர்.

இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பவரும் படிப்பவரும் ஓராயிரம் கோ ( பசு ) தானம் செய்த புண்ணியத்திற்கு இனையான புண்ணியத்தை பெறுவர். Image
விஷ்ணு பகவான் வைசாக மாத வளர்பிறை ஏகாதசியின் போது தான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

அதனால் தான் இதற்கு "மோகினி ஏகாதசி" என்ற பெயர் வந்தது.

பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியது போல்,
இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பதும் இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பதும் ஐதிகம்.
ஏகாதசி விரதம் பல புண்ணிய பலன்களை அருள வல்லது.

பாவங்கள் போக்கி, நல்லருள் தருவது.

அதிலும் மோகினி ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை அனுஷ்டித்தால் கருத்து வேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள்.
சீதைப் பிராட்டியைப் பிரிந்து வாடிய ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி,

தன் துன்பம் தீர்க்கும் வழியைத் தனக்கு உபதேசம் செய்யுமாறு, வசிஷ்ட முனிவரிடம் கேட்டார்.

பரம்பொருளான ராமரின் திருவுளம் அறிந்துகொண்டார் வசிஷ்டர்.

இந்த உலகிற்கு மோகினி ஏகாதசியின் சிறப்பை உணர்த்தவே,
ராமபிரான் இவ்வாறு கேட்பதை உணர்ந்த வசிஷ்டர், குருவின் ஸ்தானத்தில் இருந்து ராமருக்கு மோகினி ஏகாதசியின் மகிமையை எடுத்துச் சொல்லி ராமபிரானை ஏகாதசி விரதம் அநுஷ்டிக்க உபதேசித்தார்.
கிருஷ்ணாவதாரத்தில், இந்த நிகழ்வினை தர்ம புத்திரருக்கு எடுத்துக்கூறும் பகவான் கிருஷ்ணர், மோகினி ஏகாதசியின் மகிமைகளையும் எடுத்துரைத்தார்.

சரஸ்வதி நதிக் கரையில் இருந்த பத்ராவதி நகரத்தை, சந்திர வம்சத்தைச் சேர்ந்த த்ருதிமான் என்ற மன்னன் ஆண்டு வந்தான்,
அந்த நகரில் தனபாலன் என்றொரு வியாபாரி இருந்தான். அவன் சிறந்த விஷ்ணு பக்தன், மனதாலும் யாருக்கும் தீங்கு நினைக்காதவன்.

அவனுக்கு சுமனஸ், த்யுதிமான், மேதாவி, சுக்ருதன், த்ருஷ்ட புத்தி என்று ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.
இவர்களில் த்ருஷ்டபுத்தி, துஷ்ட குணம் கொண்டவன்.

எப்போதும் போதையில் இருப்பது,

மாற்றான் மனைவியிடம் முறைகேடாக நடப்பது,

தெய்வமே கிடையாது என்று வாதாடுவது,

பக்தர்கள் மற்றும் பெரியவர்களை அவமானப்படுத்துவது போன்றவையே அவனது இயல்புகள்.
மகனது செயல்கள் தன பாலன் மனதை வருந்தச் செய்தது.

எனவே, அவனை வீட்டை விட்டு விரட்டினார் தனபாலன்.

அப்பாடா…. இனி நம்மைக் கேள்வி கேட்க யாரும் இல்லை.

இஷ்டம் போல் இருக்கலாம் என்று மனம் போனபடி வாழ ஆரம்பித்தான் த்ருஷ்ட புத்தி.
ஆனால், செலவுக்குப் பணம் வேண்டுமே! அதனால் திருடத் தொடங்கினான்.

களவாடிய செல்வத்தை தவறான செயல்களில் செலவழித்தான்.

அதனால், அவ்வப்போது காவலர்களிடம் சிக்கிக் கடும் தண்டனையும் அனுபவித்தான்.

ஆனாலும், அவன் திருந்துவதாக இல்லை.
வினை விதைத்தவன் வினையை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.

காலப்போக்கில், அவனது உடலில் பல நோய்கள் உண்டாகி, உயிர் வாழவே மிகவும் சிரமப்பட்டான்.

ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கழித்துக் கொண்டிருந்தவன்,

ஒரு நாள் காட்டில் கௌண்டின்ய முனிவரின் குடிலைக் கண்டான்.
முனிவர் கங்கையில் நீராடிவிட்டு குடிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவருடைய ஈர ஆடையிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் சில திரிஷ்தபுத்தியின் மேல் விழுந்தன.

உடனே, அவன் மனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது.
அவன், தான் செய்த தவறுகள் அனைத்துக்கும் பிராயச்சித்தம் தேட நினைத்து முனிவர் காலடியில் விழுந்தான்.

திரிஷ்தபுத்தியின் கதையைக் கேட்ட முனிவர், “நான் எனக்கு தெரிந்த மிகக்குறைந்த நேரத்தில் உனது பாவங்களை அழிக்கக்கூடிய ஒரு முறையைக் கூறுகிறேன்.
பாவங்கள் செய்யப் பல வழிகள் இருப்பது போல,

அவற்றிலிருந்து விடுதலை பெறவும் பல வழிகள் இருக்கின்றன.

அவற்றுள் தலைசிறந்தது மோகினி ஏகாதசி விரதம்.

அன்றைய நாளில் விரதமிருந்து மனம், மொழி, மெய் ஆகியவற்றால் பெருமாளை வழிபாடு செய்.
அவ்வாறு பெருமாளை வழிபாடு செய்தால் உனக்கு,

உன் பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்” என்றார்.

திரிஷ்தபுத்தியும் தன் உயிர் பிரியும் நாள் வரை,

ஒவ்வொரு வருடமும் மோகினி ஏகாதசி நாளில் முனிவர் சொன்ன வண்ணமே விரதம் இருந்தான்.
இறுதியில் ஆயுள் முடியும் போது பாவங்கள் அனைத்தும் நீங்கி கருட வாகனமேறி, வைகுண்ட பதம் அடைந்தான்.

மோகினி ஏகாதசியின் பெருமையை உணர்த்தும் இந்தக் கதை ஏகாதசி மகாத்மியத்தில் உள்ளது.
இந்த நாளில் விரதமிருந்து, எட்டெழுத்து மந்திரத்தை ஸ்மரணம் செய்து,

நாளை துவாதசி திதியன்று பாரணை செய்து விரதம் முடிக்க வேண்டும்.

இந்த ஏகாதசியின் பலன், அதைக் கவனிக்கும் அதிர்ஷ்டசாலி ஆன்மாவை மாயையின் வலையிலிருந்து விடுவிக்கிறது.
இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் செய்து வர,

பிறவிப் பிணி நீங்கி இறைவனின் திருவடிகளைச் சேரலாம் என்பது நம்பிக்கை.

இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பவரும் படிப்பவரும் ஓராயிரம் கோ ( பசு ) தானம் செய்த புண்ணியத்திற்கு இனையான புண்ணியத்தை பெறுவர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 1
#நரசிம்மர்_பக்தி_கதை

*அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை !!*

ஆதிசங்கரரின் சீடர்களுள்
முக்கியமானவர் பத்மபாதர்.

கங்கை ஆற்றின் ஓரம் ஒரு முறை ஆதிசங்கரர் நின்று கொண்டிருக்கையில் கரையின் அந்தப் பக்கம் பத்மபாதர் நிற்பதை காண்கிறார். Image
தனது சீடனை “உடனே வா” என்று அழைக்கிறார்.

குருநாதர் அழைக்கிறாரே என்று எதை பற்றியும் கவலைப்படாது அப்படியே ஆற்றின் மீது கால் வைத்து நீர் மேல் நடக்க ஆரம்பித்து விட்டார் பத்மபாதர்.
என்ன ஆச்சரியம் அவரது குருபக்திக்கு கட்டுப்பட்டு, கங்காதேவி அவர் ஒவ்வொரு முறை பாதத்தை எடுத்து வைக்கும்போதும் ஒரு தாமரை மலரை தோன்றச் செய்தாள்.

அதன் மீது நடந்து வந்து விட்டார் பத்மபாதர்.

பிறகு தான் தெரிந்தது தான் தாமரை பூக்கள் மீது நடந்து வந்தது.
Read 18 tweets
May 1
#சந்தான_லட்சுமி_விரதம்

*சந்தான லட்சுமி விரதத்தை கடைபிடிப்பது எப்படி*

வளர்பிறையும் நல்ல திதியும் அமைந்த நல்ல ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வீட்டில் ஓர் அறையில் கிழக்கு முகமாக பீடமமைத்து, நெல்லைப் பரப்ப வேண்டும்.

அதன் மீது ஒரு தட்டை வைக்க வேண்டும். Image
அதில் பச்சரிசி பரப்ப வேண்டும்.

பச்சரிசித் தட்டில் கலசம் வைத்து, கலசத்தில் முழுவதும் நீர் ஊற்றி மாவிலையும் தேங்காயும் வைக்க வேண்டும்.

முகமில்லாமல் ஒரு வட்டமாய் இருக்கும் வாழைப்பூ குத்து விளக்கைக் கலசத்திற்கு அருகில் வைக்க வேண்டும்.
சந்தானலட்சுமி, தானியலட்சுமி, சந்தான கிருஷ்ணன் ஆகிய தெய்வ பூஜைக்கு இந்த விளக்கைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பது சாஸ்திர விதி.

ஞாயிற்றுக்கிழமை சூரியன் தோன்றுவதற்கு முன், இவற்றைத் தயாராக வைத்திருந்து,

சூரியன் தோன்றும் வேளையில் விநாயகர் பூஜையைத் தொடங்க வேண்டும்.
Read 8 tweets
Apr 30
#தாரை

நட்சத்திரப்படி உங்களுக்கு உயர்வையும் செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கக்கூடிய தாரைகள்

பொதுவாக ஜாதகத்தை கணிக்கும் பொழுது அனைவரும் இராசி, இலக்னம், நட்சத்திரம் போன்றவற்றை மட்டுமே கணித்து பலன் கூறுகின்றனர். Image
ஆனால் நட்சத்திரங்களை பற்றி குறிப்பிடும் பொழுது “தாரை” எனப்படும் நட்சத்திரங்களுக்கான பலன் குறித்து பெரும்பாலானோர் கூறாமல் விட்டு விடுகின்றனர்.

இங்கு நாம் இந்த தாரை என்றால் என்ன?

இந்த தாரை ஒரு நபருக்கு என்னென்ன செய்யும்?

என்பது குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
“தாரை” என்றால் தருவது என பொருள்.

அதாவது 27 நட்சத்திரங்களில் எந்த ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய சாதக, பாதக பலன்களை கொடுக்கக் கூடியது இந்த தாரை ஆகும்.

அந்த வகையில் ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு
Read 32 tweets
Apr 30
#அதிசய_சிவலிங்கம்

குடிமல்லம்" பழமையான "சிவன்" கோயில்.

எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் .

இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். Image
உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள

"பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது.
Read 12 tweets
Apr 29
அஷ்டமி, நவமி மற்றும்
கரி நாள் பற்றிய பதிவு:*

பொதுவாக அஷ்டமி, நவமி திதிகள் மற்றும் கரி நாட்களில் தொட்டது துலங்காது என்பர்.

மேலும் இந்நாட்களில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது.

தொடர்ந்து கொண்டே போகும் என்பர். Image
*அஷ்டமி :*

அஷ்டமி திதிகளில் சுப காரியங்களான திருமணம், கிரப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஆனால் இந்நாள் தெய்வீக காரியங்களுக்கு தீட்சை பெறுவது,

மந்திரங்கள் ஜெபிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உகந்த நாளாகும்.
குறிப்பாக செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்றவையாகும்.
Read 11 tweets
Apr 29
#திருக்கோஷ்டியூர்

108 திவ்விய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று.

நாராயண மந்திரம் என்பது எட்டெழுத்து மந்திரம்.

#ஓம்_நமோ_நாராயணாய ;’
என்பது தான் எட்டெழுத்து மந்திரம்.

இந்த மந்திரத்தை திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசமாகப் பெற வேண்டும் என்று ஸ்ரீராமானுஜர் எண்ணம் கொண்டார். Image
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு ஆச்சார்யரைக் காண நடந்தே வந்தார்.

கோயிலுக்கு வந்தார்.

கோயிலுக்கு அருகில் உள்ள திருக்கோஷ்டியூர் நம்பியின் வீட்டு வாசலுக்கு வந்தார்.

‘ஆச்சார்யருக்கு நமஸ்காரம்’ என்று அழைத்தார். ’ என்ன விஷயம்’ என்று கதவு திறந்து நம்பி கேட்டார்.
‘தங்களிடம் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசமாகப் பெறவேண்டும்’ என்றார் ராமானுஜர்.

‘யார் நீங்கள்?’ என்று கேட்டார் அவர்.

’நான் ராமானுஜன்’ என்று பதிலளித்தார்.

உடனே முகத்தைத் திருப்பிக் கொண்ட நம்பி, வாசல் கதவை தடக்கென்று சார்த்திக் கொண்டார்.

விறுவிறுவென வீட்டுக்குள் சென்றார்.
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(