M.SivaRajan Profile picture
May 4 22 tweets 4 min read Twitter logo Read on Twitter
#நரசிம்ம_ஜெயந்தி

கேட்ட வரத்தை பக்தர்களுக்கு உடனே தரும் நரசிம்மரை போற்றக் கூடிய, நரசிம்ம ஜெயந்தி விரதம்.

நரசிம்மர் ஜெயந்தி விரதம் உருவான வரலாறு என்ன என்பதை பற்றியும், நரசிம்மர் ஜெயந்தி விரதத்தை சுலபமாக எல்லோரும் எப்படி கடை பிடிக்கலாம்,
என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.

சிங்க தலையும், மனித உடலும் கொண்ட இந்த அவதாரம், எந்த முன்னேற்பாடும் இல்லாமல்,
தன் பக்தனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒரு நொடிப்பொ ழுதில் பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.

இரணியனிடம் இருந்து பக்த பிரகலாதனை காப்பதற்கு எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்மர் அவதாரம்.
பூமியில் அரக்கனாக பிறந்து,
பிரம்மாவிடம் வரம் பெற்றவன் தான் இரணியன்.

‘பகல் பொழுதிலும் மரணம் நிகழக் கூடாது!

இரவு பொழுதிலும் மரணம் நிகழக் கூடாது!

மனிதனாலும் மரணம் நிகழக் கூடாது!

மிருகத் தாலும் மரணம் நிகழக் கூடாது!

ஆகாயத்திலும் மரணம் ஏற்படக்கூடாது!
பூமியிலும் மரணம் ஏற்படக்கூடாது!

எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாது!’

என்ற வரத்தைப் பெற்ற இந்த அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர் நரசிம்மர்.

வழக்கம் போல சாகாவரம் பெற்ற அரக்கர்களை போலவே இரணியனின் அட்டகாசமும் பூலோகத்தில் தலைவிரித்து ஆடியது.
காலப்போக்கில் இரணியனுக்கு மகனாக பிரகலாதன் பிறந்தான்.

ஆனால், அரக்கன் இரணியனுக்கு பிறந்த பிரகலாதனோ,

நாராயணனின் தீவிர பக்தனாக இருந்தான்.

என்னேரமும் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை உச்சரிப்பதே தன் கடமையாக வைத்திருந்தான்.
இதைப்பார்த்த இரணியனுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டு விட்டது.

‘இந்த லோகத்தில் இறைவன் என்றால் நான் தான்’.

அதாவது இரணியன் தான்.

நாராயணன் என்ற மந்திரத்தை தவிர்த்துவிட்டு, ‘ஓம் இரண்யாய நமஹ’ என்ற மந்திரத்தை கூறும்படி
பிரகலாதனை கொடுமைப் படுத்தினான், இரணியன்.
பிரகலாதன், தன் மகன் என்ற இரக்ககுணம் கூட இரணியனுக்கு இல்லை என்பது குறிப்பி டத்தக்கது.

இரணியன், எவ்வளவு கடுமையாக சொல்லியும் தன் மகன் பிரகலாதன், தன் தந்தை சொல்லைக் கேட்காமல் ‘ஓம் நமோ நாராயண’ மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தான்.

தன் மகன், தன் சொல்லைக் கேட்காத கோபத்தில் இரணியன்,
தன் தங்கையை அழைத்து பிரகலாதனை நெருப்பில் இடும்படி உத்தர விட்டான்.

இரணியனின் தங்கை ஹோலிகா, பிரகலாதனை தீக்கிரையாக்கினாள்.

ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே தீயில் இறங்கிய பிரகலாதனுக்கு எதுவுமே நடக்கவில்லை.
ஆனால் தீயின் மூலம் தனக்கு ஆபத்து நேரவே நேராது என்று வரத்தை வாங்கிய ஹோலிகா தீக்கிரையாகி விட்டாள்.

காரணம் அவளின் கெட்ட எண்ணம் தான்.

இதை கண்ட இரணியனுக்கு கோபம் உச்சிக்கு ஏறிவிட்டது. இரணியன்,

பிரகலாதனை அழை த்து துன்புறுத்தி,

எங்கே உள்ளார் உன்னுடைய நாராயணன்? என்று
கேள்வி கேட்டு துன்புறுத்தினான்.

பிரகலாதனோ, என் நாராயணர் தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார் என்றவாறு கூறினான் அந்த சிறுவன்.

இதனைக் கேட்டு இன்னும் கோபம் அடைந்த இரணியன் ‘தூணிலும் இருப்பாரா உன் நாராயணன்! என்று

ஆணவமாக சிரித்து அருகிலிருந்த தூணை
தன் கையிலிருந்த கடையால் உடைத்தான் இரணியன்.

இந்த நேரம் பகலும் இரவும் இல்லாத பிரதோஷ காலமான மாலை நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரணியன் அந்த துணை தாக்கிய அந்த நிமிடத்தில் தான் மகாவிஷ்ணு,
மனிதரும் இல்லாத, மிருகமும் இல்லாத நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்தார்.

கோபத்தோடு, ஆக்ரோஷத்தோடு

இரணியனை ஆகாயத்திலும் வைக்காமல்,

பூமியின் வைக்காமல் தூக்கி

தன் மடியில் வைத்து,

எந்த ஒரு ஆயுதத்தையும் பயன்படுத்தாமல்,
தன்னு டைய பத்து கைகளில் உள்ள விரல்களில் கூர்மையான நகங்களால் வயிற்றை கிழித்து,

ரத்தத்தை குடித்து,

குடலை உருவி மாலையாக போட்டுக்கொண்டு

இரணியனை வதம் செய்தார்.

ஆனால் வதம் முடிந்த பின்பும் நரசிம்மரின் கோபம் மட்டும் அடங்கவே இல்லை.
இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் நரசிம்மரை கண்டு பயந்து ஒதுங்கி நிற்க பிரகலாதன் மட்டும் நரசிம்மரின் அருகில் சென்று வணங்கினான்.

மனம் குளிர்ந்த நரசிமரோ! பிரகலாதனை அழைத்து மடியில் அமரச் செய்து,

‘எதற்காக நாராயணர் தூணில் இருப்பார் என்று முதலில் கூறினாய்?
துரும்பில் இருப்பார் என்று சொல்லி இருந்தால் உடனடியாக துரும்பில் இருந்து அவதாரம் எடுத்திருப்பேனே!

தூணை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

தூணியிலிருந்து வெளி வரும் வரை, அவ்வளவு நேரமும், நீ துன்பத்தை அடைந்திருக்க வேண்டாம். என்று கூறினார்.
கூப்பிட்ட குரலுக்கு கூப்பிட்ட மார்க்கத்தில், வந்து உதவி செய்யும் குணம் கொண்டவர் தான் நரசிம்மர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அவர் எடுத்த அவதாரம் தான் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதே தவிர,

அவருடைய மனம் மிகவும் மென்மையானது என்பது இதுவே ஒரு உதாரணம்.
தன்னை முழுமையாக நம்பிய பக்தனுக்கு உடனே வரம் தரும் தெய்வம் தான் நரசிம்மர்.

அவர் தூணியிலிருந்து, தன் பக்தன் பிரகலாதனுக்காக, நரசிம்ம அவதாரம் எடுத்த இந்த நாளை தான், நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றோம்.
நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து,

தீபம் ஏற்றி வைத்து,

நரசிம்மரை மனதார வேண்டிக் கொண்டு,

தூய்மையான பக்தியில் எவரொருவர் தனக்குள்ள கஷ்டங்களை எல்லாம் தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறாரோ,
அவருக்கு நிச்சயமாக நல்ல தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நரசிம்மர், புகைப்படம் அல்லது விக்கிரகத்திற்கு பூஜை செய்ய வேண்டும்.

விஷ்ணுவின் அம்சம் என்பதால் இவருக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம்.
இது தவிர, செவ்வரளி சிகப்பு செம்பருத்தி போன்ற பூக்களையும் நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்யலாம்.

நரசிம்மர் ஜெயந்தி தினத்தன்று மாலை 4.30 மணியிலிருந்து 7.20 குள் உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களால் இயன்ற நிவேதனத்தை நரசிம்மர் சுவாமிக்கு அர்ப்பணம் செய்யலாம்.

05 - 05 - 2023 ஸ்வாதி நட்சத்திரம் வருவதால் அன்று ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி கொண்டாடலாம்.

#ஸ்ரீ_நரசிம்மர்

#ஸ்ரீ_நரசிம்மர்_ஜெயந்தி

#நரசிம்மர்_வரலாறு

#பிரகலாதன்_கதை

#நரசிம்மர்_வழிபாடு

#ஓம்_நமோ_நரசிம்மாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 4
*#பஞ்ச_ஸ்ரீ_லக்ஷ்மி_நரசிம்ம*
*#ஸ்தலங்கள்*

மிக நீண்ட பதிவு :

முருகருக்குத் தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் இருப்பதுபோல,

விநாயகருக்கு மகாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக் கோயில்கள் இருப்பதுபோல

நரசிம்மருக்கும் ஆந்திர மாநிலத்தில் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள் தலங்கள் அமைந்துள்ளன.
புராதனம் மிக்க கிருஷ்ணா நதிக்கரையில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அந்தத் தலங்கள்:

மங்களகிரி, வேதாத்ரி, மட்டப்பல்லி, வாடப்பல்லி மற்றும் கேதவரம்.

முதலில் மங்களகிரியை தரிசிப்போம்.

நரசிம்மர் கொலுவிருக்கும் இந்த மலையை பத்ரகிரி, பீமாத்ரி என்றெல்லாமும் அழைக்கிறார்கள்.
மலையடிவாரத்திலும் மலை உச்சியிலும் பல லட்சுமி நரசிம்மர் கோயில்கள் உள்ளன.

மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலில் பெருமாள் பானக நரசிம்மராக எழுந்தருளியுள்ளார்.

விஜயவாடாவிலிருந்து18 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த மங்களகிரி.
Read 54 tweets
May 4
#நரசிம்மர்_வழிபாடு

நரசிம்மரை வழிபட்டால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் தினமும் மனதார வழிபாட்டால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். Image
நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள்.

இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.

ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
Read 10 tweets
May 3
*#அக்னி_நட்சத்திரம்*

*(04 - 05 - 2023 - சித்திரை 21 முதல் 29 - 05 - 2023 வைகாசி 15 வரை)*

*அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடியவை / செய்யக் கூடாதவை*

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும்
04 - 05 - 2023 முதல் தொடங்க உள்ளது. Image
வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது.

அக்னி நட்சத்திரம் பிறந்து விட்டால் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது.
முன்னொரு காலத்தில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், அப்போது குளிர்சாதனம், மின்விசிறி போன்ற வசதிகள் இல்லாததாலும், அந்த நேரத்தில் சுபகாரியங்களை நடத்தினால்,
Read 9 tweets
May 3
#ஸ்ரீ_ருத்ரம்

ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது.

இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது.

இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது.
இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும்.

மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும்.
பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.
Read 25 tweets
May 3
#ஸ்ரீ_பிரம்மபுரீஸ்வரர்

பிறவித் துயர் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் - விழுப்புரம்

விழுப்புரத்திற்கு அருகே உள்ள பிரம்மதேசம் என்ற திருத்தலத்தில் ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். Image
பிரம்மதேவன் வழிபட்டதால் இத்தலம் ‘பிரம்மதேசம்’ என்றும், இத்தல இறைவன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர மன்னர்கள் என பலரும் போற்றி வணங்கிய திருத்தலம் இந்த பிரம்மதேசம்.
வேதம் கற்றுத் தெளிந்தவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்பட்ட ஊர் இது என்று கூறப்படுகிறது.

இங்கு பாதாளீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என்ற இரண்டு சிவாலயங்கள் இருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
Read 12 tweets
May 2
#நடராஜர்_அபிஷேகம்

#அதிருத்ர_ஜபம்

#மஹா_ருத்ர_ஹோமம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அதிருத்ர ஜப பாராயணம்,

மஹாருத்ர ஹோமம்,

ஸ்ரீ நடராஜர் மஹாபிஷேகம்

அதிருத்ர ஜப பாராயணம் :
01.05.2023 முதல் 10.05.2023 வரை, காலை 07.30 மணி முதல். Image
121 தீக்ஷிதர்கள் 11 முறை ஸ்ரீ ருத்ர மந்திர ஜப பாராயணம்.

மேற்கண்ட பத்து தினங்களில் 14,641 முறை ஸ்ரீ ருத்ர மந்திரங்கள் பாராயணம் செய்யப்படும்.

இடம் : கிழக்கு கோபுர வாயில் வழியாக வந்து இருபத்தியொரு படி வாசல் கடந்தால் வரும் பிரகாரத்தின் வலது கடைக்கோடியில் இருக்கும் கொலு மண்டபம்.
மஹா ருத்ர ஹோமம் :

11.05.2023, காலை 09.00 மணி முதல் – விசேஷ பூஜைகள், தொடர்ந்து மதியம் மஹா ருத்ர ஹோமம், கோ (பசு மாடு) பூஜை, அஸ்வ (குதிரை) பூஜை, கஜ (யானை) பூஜை, கன்யா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் நடைபெறும்.

இடம் : கிழக்கு கோபுரத்திற்கு அடுத்திருக்கும் நடனபந்தல் மண்டபம்.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(