M.SivaRajan Profile picture
May 5 18 tweets 4 min read Twitter logo Read on Twitter
#தசாவதார_அழகுப்_போட்டி

#நரசிம்ம_ஜெயந்தி_சிறப்பு

*பெருமாள்களில் அழகன் யார்???*

*நரஸிம்மமா,*

*ராகவ சிம்ஹமமா*,

*யாதவ சிம்ஹமமா*

*ஆழ்வாரின் தீர்ப்பு........*

*ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான்,

திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம்.* Image
1). *மத்ஸ்ய,*

2). *கூர்ம,*

3). *வராஹ,*

4). *நரசிம்ம,*

5). *வாமன,*

6). *பரசுராம,*

7). *ஸ்ரீராம,*

8). *பலராம,*

9). *கிருஷ்ண,*

10). *கல்கி*.......

ஆகிய அவதாரங்களை வரவழைத்தார்.
முதல் சுற்றில் ............

*மத்ஸ்ய, கூர்ம, வராஹ*
மூன்று அவதாரங்களும் முறையே .............

*மீன், ஆமை, பன்றி* ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால்,

அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார்.
*நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை.*

நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.

இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார்.
“மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி,
மூவடி நிலம் கேட்டு விட்டுப் பெரிய காலால்,

மூவுலகையும் அளந்தவர் நீங்கள்.

அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.

எனவே உங்களை நிராகரிக்கிறேன்!”, என்றார் திருமழிசைப் பிரான்.
பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார்.

பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து,

“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார்.
தம்பிக்காக பலராமன்
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,

“நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!”

என்று சொல்லி அவரையும் நிராகரித்து விட்டார்.
இறுதியாக, .............

*நரசிம்மன்,*

*ராமன்,*

*கண்ணன்,*

மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.

மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான், *“#நரசிம்மர் தான் அழகு!”* என்று தீர்ப்பளித்தார்.
“ராமர் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், மனிதனாகவே
வாழ்ந்ததால் ஒரு வண்ணானின் பேச்சுக்காக தன் தேவியையே துறந்தார்.

அதனால் ஆழ்வாரால் நிராகரிக்கப்பட்டார்.
கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால், அந்த கோபிகைகளையும் விரக வேதனையில் தவிக்க விட்டுச் சென்று விட்டார்.

ஆனால், ஆபத்தில்
யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள் தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள்.
பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள், நரசிம்மர்.

எனவே அவர்தான் அழகு!” என்று கூறினார்.

இருவரும்
ராகவ யாதவ சிம்ஹம் என்ற பெயர்களையே சூட்டிக் கொண்டாலும்,
செயலாலே நரஸிம்ஹனே வென்றான்.
பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும்,

அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம்.

ஏனெனில், நமக்குத் துன்பங்கள் நேரும் போது அவன் திருவடிகளைத் தான் நினைத்துக் கொள்கிறோம்.
துயரறு சுடரடியான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கின்றன!!

எனவே அவைதான்
மிகவும் அழகு.

அவ்வாறே, ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர் தான் அவதாரங்களுக்குள் அழகானவர்.
*இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய, நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.*

*அழகியான் தானே*
*அரி உருவன் தானே*
*பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே*
*மீனாய் உயிரளிக்கும் வித்து.*
என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார்.

அதனால்தான், அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை.

*ஆனால், நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார்.*
அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு *‘ஸ்ரீமான்’* என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது.

*ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.*

மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்?
*ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டு களிக்க வேண்டுமெனில், திருமார்பில் இருந்தபடி காண முடியாது.*

*மடியில் அமர்ந்தால் தானே காண முடியும்?*

அதனால் தான்...

*ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 7
#ஸ்ரீ_மருந்தீஸ்வரர்

*நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர் கோவில் - பேராவூரணி*

நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் இறைவன் அழைக்கப்படுகிறார்.

‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது. Image
‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார் பீடம், நந்தி மண்டபம் உள்ளன.

அடுத்துள்ள வசந்த மண்டபத்தின் வலதுபுறம் இறைவி பெரிய நாயகியின் சன்னிதி உள்ளது.
அன்னைக்கு நான்கு கரங்கள்.

மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைச் சுமந்தபடியும் கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் அன்னை அருள்பாலிக்கிறாள்.

ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது.

வசந்த மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும், அதையடுத்து அர்த்தமண்டபமும் உள்ளன.
Read 10 tweets
May 7
#வடுவூர்_ராமர்

கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர், நீடாமங்கலம்.

திருவாரூர் & தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ளது வடுவூர். Image
மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ?

பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார்.

வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.
இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு,

ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம்.
Read 21 tweets
May 6
#கடன்_நிவர்த்தி

கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெற பைரவருக்கு செய்ய வேண்டிய மிளகு வழிபாடு :

பைரவருக்கு மிளகு மூட்டை கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

இந்த பரிகாரத்தை செய்தால் தீராத கடன்கள் தீருவதாக நம்பிக்கை உண்டு. Image
இதை தேய்பிறை அஷ்டமி திதியில் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது ஆனால் நம் வீட்டிலேயே எளிமையாக செய்யக் கூடிய பரிகாரம் தான் இது!

பைரவர் படத்திற்கு முன்பு சனிக்கிழமைகளில் ஒரு பித்தளை தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி அதன் மீது அகல் விளக்கு ஒன்றை புதிதாக வாங்கி வையுங்கள்.
அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றுங்கள்.

பின் சிகப்பு நிறத்தில் திரி போட்டு, சிகப்பு நிற மலர்களை பைரவருக்கு சாற்றி வைக்க வேண்டும்.

சிகப்பு பைரவருக்கு உகந்த நிறம் என்பதால் செவ்வரளி பூக்களை பெரும்பாலும் பைரவருக்கு அணிவிப்பார்கள்.
Read 6 tweets
May 6
#அழகரும்_மீனாட்சியும்

நேற்று சொக்கநாதரை கைபிடித்த சந்தோசத்தில் மகிழ்வாய் இருக்க வேண்டிய மீனாட்சி கொஞ்சம் கவலையான முகத்தோடு இருப்பதை கண்ட சொக்கன்..

என்னாச்சு மீனா.. ஏன்? கவலையா இருக்கே..

(சொக்கனின் மனதிற்குள் நம்மை நம்பி வந்தவளாயிற்றே.
என்ற கவலை) Image
நம்ம கல்யாணம் நல்லபடியா முடிச்சாலும் எங்க அண்ணண் வரலையே...

எங்க மதுரையில என் சொந்தகாரங்க பூராம் காலத்துக்கும் என்னை திட்டுவாங்களே..

கவலைய விடு மீனாட்சி உங்க அண்ணணை வர சொல்லிருக்கேன் இப்ப வந்திடுவாரு..

நீ பார்த்திடலாம்...
(இருவரும் பேசிகொண்டிருக்கும் போதே உள்ளே வருகிறார் மாயவன்)

தங்கை மீனாள் அண்ணண் வருவதை பார்த்தவுடன் சொக்கரின் கையை விட மனமில்லாமல் அண்ணணை கட்டியணைத்து அழுகிறாள்...
Read 7 tweets
May 5
#சித்ர_குப்தர்_கோவில்

சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தன் எனப் படும் சித்ரபுத்திரன் போற்றப்படுகிறார்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் இவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது. Image
இங்கு சித்ரா பௌர்ணமியன்று இவருக்கும் இவர் மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக - ஆராதனைகளுடன் திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
சித்ரகுப்தருக்கு தனிக் கோயில்!

தேனி மாவட்டம், தேனி - போடிநாயக்கனூர் சாலையில் தேனியிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் ‘தீர்த்தத் தொட்டி’ எனும் இடத்திலும் சித்ரகுப்தனுக்கு ஒரு கோயில் உள்ளது.
Read 10 tweets
May 5
#சித்ர_குப்தர்

சித்திரை மாதமும் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சித்திர குப்தனுக்கு என்று ஒரு தனிக்கோயிலே இருக்கிறது.

சித்ரா பௌர்ணமி அன்று, சித்திர குப்தனுக்கு சித்திரலேகாவுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. Image
இதைத் தொடர்ந்து சித்திர குப்தர் மற்றும் சித்திரலேகா இருவரும் வீதி உலா வருகின்றனர்.

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.

இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள்.
அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.

இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன.

ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார்.
Read 32 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(