அன்பெழில் Profile picture
May 6, 2023 11 tweets 5 min read Read on X
#அஷ்ட_புஷ்பங்கள்
இறைவனுக்குச் சூடத் தகுதியான புஷ்பங்கள் பற்றி ஆகமங்களும் புஷ்பவிதி என்ற நூலும் விவரமாகச் சொல்லி இருக்கின்றன. இன்ன இன்ன புஷ்பங்களை சுவாமிக்குச் சார்த்த வேண்டிய காலம் பற்றியும் கூட சொல்லியிருப்பதைக் காணலாம். தோஷமில்லாத, அதாவது பூச்சி அரிக்காத, எச்சம் இடப்படாத
விடியல் காலையில் பறிக்கப்பட்ட புஷ்பங்களால் பூஜை செய்வது விசேஷமாகச் சொல்லப் பட்டுள்ளது. இதைத்தான் "நன் மாமலர்" என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். இறைவன் சிவபெருமான் பூஜைக்கு ஏற்றதாகச் சொல்லப்படும் அஷ்ட புஷ்பங்கள் புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம்,
தாமரை ஆகியவை.

#புன்னை
இம்மரம் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகிறது. மயிலாப்பூரில் புன்னை மரத்தின் நீழலில் கபாலீச்வரர் வீற்றிருப்பதை , "மட்டிட்ட புன்னையங்கானல்" என்று துவங்கியபடி பதிகம் பாடுகிறார் சம்பந்தர். இக்கோயிலில் புன்னை மரம் ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது. பசுமையான இலைகளையும், ImageImage
வெள்ளை நிறம் கொண்ட பூக்களையும் கொண்டது இம்மரம். இதில் கோடைக் காலத்தில் பூக்கள் அதிகமாக இருக்கும்.

#சண்பகம்
வாசனை மிக்க இம்மலர்கள் சித்திரை முதல் புரட்டாசி வரை பூக்கக் கூடியவை. இம்மரத்தின் இலைகளும் பசுமையாக இருக்கும். செண்பகவல்லி என்று அம்பாளுக்கும், செண்பகாரன்யேச்வரர் என்று Image
சுவாமிக்கும் பெயர்கள் வழங்குவதைப் பார்க்கலாம்.

#பாதிரி
நீண்ட மலர்களைக் கொண்ட பாதிரி மரம் உயரமாக வளரும். இம் மலர்கள் வாசனையானவை. இதனைத் தல விருட்சமாகக் கொண்ட தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும்.

#வெள்ளெருக்கு
வெள்ளெருக்கும் பாம்பும் சுவாமியின் ஜடையில் விளங்குவதை, "வெள்ளெருக்கு Image
அரவம் விரவும் சடை" என்று அப்பர் தேவாரம் குறிப்பிடுகிறது. முதலில் சிறிய செடியாக விளங்கி, சிறிய மரமாகவும் வெள்ளெருக்கு வளர்ச்சி பெறுகிறது. வெண்மை நிறம் கொண்ட இம்மலர்கள் ஆண்டின் பல மாதங்களில் பூக்கக் கூடியவை. எருக்கத்தம்புலியூர் என்ற சிவ தலத்தில் இம்மரம் விருட்சமாக விளங்குகிறது. Image
#நந்தியாவர்தம்
நந்தியாவட்டை என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுவது. வருடம் முழுவதும் பூக்கக்கூடியது. வெள்ளை நிறம் கொண்ட இம்மலர்களை மாலையாகவும் அர்ச்சனைக்கும் பயன்படுத்துவர்.

#அரளி
இதுவும் மாலைகளில் பயன்படுத்தப் படுவது. அர்ச்சனைக்கும் பயன் படுத்துவர். அநேகமாக ஆண்டு முழுவதும் ImageImage
பூப்பதால் நந்தவனங்கள் மற்றும் வீடுகளில் இச்செடியை வளர்க்கிறார்கள்.

#நீலோத்பலம்
நீர்நிலைகளில் வளரக்கூடியது. இதைக் குவளை என்றும் சொல்வர். கண்களுக்கு இதை உதாரணம் காட்டுவார்கள். "குவளைக்கண்ணி " என்று அம்பாளைத் திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவாரூரில் அம்பாளுக்கு, நீலோத்பலாம்பிகை Image
என்று பெயர்.

#தாமரை
தாமரையில் மகாலட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இத்தாமரை மலர் குளங்களிலும், நீர் நிலைகளிலும் வளர்வதைக் காணலாம். ஆயிரம் தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் மகாவிஷ்ணு சிவ பூஜை செய்து சக்கரம் பெற்றதாக அந்த ஊர்ப்புராணம் சொல்கிறது. அதற்காகவே பஞ்சாக்ஷர Image
சஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்தாராம் விஷ்ணு.

ஊமத்தை, மந்தாரை, மகிழம்பூ போன்ற புஷ்பங்களையும் இறைவன் சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார். இருப்பினும், மேலே சொன்ன அஷ்ட புஷ்பங்களே மிகவும் உயர்வாகக் கூறப்படுகின்றன. இந்த "எட்டு நாண்மலர் " கொண்டு இறைவனது பாதார விந்தங்களுக்கு அர்ச்சித்தால்
எல்லாப் பாவங்களும் நீங்கும் என்று அப்பர் தேவாரம் நமக்கு உணர்த்துகிறது.
Taken from Shivarpanam blog.
ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 25
#விருந்தாவனம்_கிருஷ்ண_லீலா_பூமி
வழங்கியவர்: வேணுதாரி கன்னைய தாஸ்
சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம். ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் பதிந்த காரணத்தினால், விருந்தாவனத்தைவிட Image
சிறந்த இடம் மூவுலகிலும் இல்லை. டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் வழியில் உள்ள இத்திருத்தலத்தை சேவித்தவரை சேவித்தாலே பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பதை #ஆதிவராஹ_புராணத்தில் காண்கிறோம். 168 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட விரஜ மண்டலத்தில் 137 காடுகள் உள்ள போதிலும், 12 காடுகள்
மிகவும் முக்கியமானவை: மதுவனம், தாலவனம், குமுதவனம், கதிரவனம், மஹாவனம், பத்ரவனம், பாண்டீரவனம், பில்வவனம், லௌஹவனம், பஹுலாவனம், காம்யவனம், மற்றும் விருந்தாவனம். மொத்த விரஜ மண்டலமும் விருந்தாவனம் என்று அழைக்கப்படும்போதிலும், விருந்தாவனம் என்று குறிப்பிட்ட ஒரு வனமும் உண்டு. உத்தரை
Read 25 tweets
Aug 24
#ஶ்ரீமத்வாசாரியார்
வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், துவைதம் என்ற தத்துவக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமானவர் இவர். பொ.யு 1238 ஆம் Image
ஆண்டு விஜயதசமி அன்று உடுப்பிக்கு அருகிலுள்ள கிராமத்தில் நாராயண பட்டர், வேதவதி தம்பதியினர் பகவான் விஷ்ணுவிடம் அர்ப்பணித்த 12 வருட பிரார்த்தனையின் பலனாக மகனாக அவதரித்தார். தனது சிறு வயதில் தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, புளியங்கொட்டையை தங்க நாணயங்கள் ஆக்கினார். தனது ஐந்தாம் வயதில்
தனது வீட்டுக்கு அருகில் பாம்பு உருவில் இருந்த மணிமான் என்ற அசுரனை கால் கட்டை விரலினால் அழித்தார். தனது பன்னிரண்டாம் வயதில் அச்சுத பிரகாசர் என்பவரின் குருகுலப் பள்ளியில் இணைந்தார். பூர்ணபிரக்ஞர் என்ற நாமத்துடன் சந்நியாசம் ஸ்வீகரித்தார். சில காலம் பல ஆச்சாரியர்களின் வேதாந்த Image
Read 9 tweets
Aug 24
#முக்தீஸ்வரர்_கோயில்
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சிதலப்பதி என்னும் ஊரில் முக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பாடப் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 58வது தலம் ஆகும். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக, Image
முக்தி தருபவராக அருள் புரிவதால் இவர் முக்தீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி காட்சி தருகிறார். அதாவது சிவனது கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக Image
சன்னதி அருகில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். இத்தகைய தரிசனத்தை காண்பது அபூர்வமான ஒன்றாகும். இக்கோயிலில் ஆதி விநாயகர் பிற ஆலயங்களில் வீற்றிருக்கும் யானை Image
Read 9 tweets
Aug 23
#ஏழுமலை_ஐந்து_ஶ்ரீனிவாசர்கள்
1. வேங்கட மலை
‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக ஸ்ரீனிவாசன், மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக Image
வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ Image
எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப்
Read 14 tweets
Aug 22
ஶ்ரீமுக்கூர் ஸ்வாமியின் உபன்யாஸத் துளிகள்.
மஹாகவி காளிதாஸன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். நடுக்காட்டில் ப்ரம்மாண்டமான வ்யாஸரின் விக்ரஹம். அந்த விக்ரஹத்தில் வியாஸருக்கு ப்ரம்மாண்டமான தொப்பை இருந்தது. அந்த தொப்பையின் நடுவே பெரிய தொப்புள். தொப்புளைப் பார்த்த காளிதாஸனுக்குImage
அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. வ்யாஸரையே பரிஹாஸம் பண்ணினான்! "இவர் என்ன பெரிய கவியா? இவர் ஒரு "ச"கார ப்ரியர்! "ச"காரம் போடாமல், இவருக்கு ஸ்லோகம் எழுதத் தெரியுமா? பீஷ்மஸ் ச கர்ணஸ் ச" என்று எவ்வளவு "ச" போடுகிறார்!" என்று தொப்புளில் ஆட்காட்டி விரலை விட்டு ஆட்டுகிறான். இவன் மகா Image
கவியானதாலே, வ்யாஸரையே குறைவாகச் சொன்னான். வைத்த ஆட்காட்டி விரலை எடுக்கப் பார்த்தபோது, விரல் வெளியே வரவே இல்லை. விரல் தொப்புளில் அகப்பட்டுக் கொண்டுவிட்டது. உள்ளேயிருந்து ஒரு "த்வனி" (குரல்) வந்தது.
"என்ன காளிதாஸா! என்னையே பரிஹாஸம் பண்ணுகிறாயே! "ச"காரம் இல்லாம் நீ ஒரு ஸ்லோகம்
Read 12 tweets
Aug 22
#நற்சிந்தனை #ஶ்ரீவைஷ்ணவம்
சரணாதி செய்து, வைகுந்தம் சென்று திருமாலுக்கும், அவனுடைய அடியாருக்கும் தொண்டுகள் செய்வதே பிறவிப் பெரும் பயன் (அ) பேரின்பம். இதனை “தத் து சமன்வயாத்” என்னும் 4 ஆம் ப்ரம்ம சூத்திர வாக்கியத்திற்கு விளக்கமாகக் கொள்ளலாம். இதை ஶ்ரீ நம்மாழ்வாரும் “அயர்வரும் Image
அமரர்கள் அதிபதி” என்றும் “அவன் துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே” என்றும் விளக்குகின்றார். இதையே #கம்பர்
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ.

இங்கு கம்பர் பூனையை சொல்லுவதேன்?
அதற்கு காரணம் உண்டு. தன் முதல் பாடலில் “அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று தொடங்குகிறார். அந்த ஶரணாகதி என்றால் என்ன என்று குறியீடாக, இங்கு பூனையை வைத்தார். பூனையானது தன் பிஞ்சுப் பருவத்தில் ஓரிடத்தில் ஒளிந்து வளரும். தாய்ப் பூனை மியாவ் என்று அழைத்தால் தாயிடம் செல்லும்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(