#சுந்தரமூர்த்தி_நாயனார் சமயக்குரவர் நால்வரில் ஒருவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சுந்தர மூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர்.
இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவர் அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப் படுகிறார். சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்க
முனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். மணப் பருவம் அடைந்த போது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில்
அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை
உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். தம் இனிய பாடல்களின் மூலமாக இறைவன் சிவபெருமானைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி
#சக_மார்க்கம் என்று சொல்லப் படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக் கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான்பெற்ற நெல்லைத் தனது ஊர் கொண்டு சேர்க்க
இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர்
ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார். சுந்தரர் தனது 18ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி
கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.
திருச்சிற்றம்பலம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஐந்து_பவித்திரமான_வஸ்துக்கள்
உச்சிஷ்டம் சிவ நிர்மால்யம் வமனம் ஸவகர்படம் காகவிஷ்டாதே பஞ்சைதே பவித்ராதி மனோஹரா 1. எச்சில் 2. சிவ நிர்மால்யம் 3. வாந்தி 4. சவத்தின் மேல் விரிக்கும் போர்வை 5. காக்கையின் மலத்தினாலே விளைந்த ஒன்று
மஹாபாரதத்தில் வேதவியாசர் இவை ஐந்தையும் பவித்திரமான
வஸ்துக்களாகச் சொல்லியிருக்கிறார். நிஷித்தமான இந்த பொருட்களை வேதவியாசர் எப்படி பவித்திரமான பொருட்கள் என்று சொல்லியிருப்பார்? வேதவியாசர் சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம்.
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே.
வேதங்களில் இருக்கும் சப்தங்களுக்கு குறைந்த பட்சம் 3 அர்த்தங்கள்
உள்ளன. மஹாபாரதத்தில் உள்ள ஸ்லோகத்திற்கு குறைந்தது 10 அர்த்தங்கள் உண்டு. அந்த மஹாபாரதத்தில் அங்கம் வகிக்கின்ற விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமத்திற்கும் குறைந்தபட்சம் நூறு அர்த்தம் உண்டு. ஆனந்த தீர்த்த பகவத் பாதாச்சாரியார் விஸ்வ என்ற நாமத்திற்கு 100 அர்த்தங்களை காண்பித்து
#கதலி_ஸ்ரீலட்சுமிநரசிம்மப்_பெருமாள்
சுயம்புவாகத் தாம் எழுந்தருளியுள்ளதை மக்களுக்கு உணர்த்த, வாழை பழங்களை மறைத்து திருவிளையாடல் புரிந்த திருத்தலம் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி திருத்தல செங்கமல வள்ளி தாயார் சமேத உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் கோயிலாகும். ஆயிரம் வருடங்கள் பழைமையான
இத்தலம், அக்காலத்தில் மலைவாழ் மக்களின் வியாபார ஸ்தலமாக விளங்கியது. இந்த ஊரில் பக்தர்கள் தங்களின் விளை பொருட்களான காய், கனிகள் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். அவர்களில் லட்சுமி என்ற பெண்மணி கொண்டு வரும் வாழைப் பழங்கள் தொடர்ந்து காணாமல் போக, அப்பெண்
அந்த ஊர்த் தலைவரிடம் இதை முறையிட்டார். அதைக்கேட்டு தலைவர் அது குறித்து விசாரிக்கிறார். ஆனால், 3 நாட்களாகியும் உண்மையான காரணத்தை அறிய முடியாமல் தொடர்ந்து பழங்களும் காணாமல் போகவே, பெருமாளிடம் முறையிட்டு வேண்டுகிறார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘காணாமல் போன வாழை
#Siruvachur_MaduraKaliaman_Temple
Siruvachur located 50 kms from Trichy and 8 kms from Perambalur. The temple dates back to 1000 years. Large number of devotees throng this temple on Mondays and Fridays to worship the powerful deity and seek her divine blessings. According to
tradition Chelliamman was the local deity of Siruvachur. An evil magician through his intense devotion to the deity won her favour. Pleased with his devotion, Chelliamman granted him any boon he wished. The cruel sorcerer wished that the deity should be his servant and do his
bidding at all times. Bound by the power of her own boon Chelliamman had no other option but to obey all his evil commands. At this time Kannagi the embodiment of virtue and chastity happened to visit Siruvachur. Kannagi was the devoted wife of Kovalan, a merchant. The happy
#நற்சிந்தனை
குருக்ஷேத்ர யுத்தம் முடிந்த பிறகு தருமர் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு ஆட்சியில் அமர்ந்தார். அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர், சூரியன் வடதிசை நோக்கி பயணிக்கும் உத்ராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்து தம் உயிரை விடுவதற்காகக் காத்திருந்தார். ஒரு நாள் தருமர் தனது
தம்பிகளுடனும் திரௌபதியோடும் பீஷ்மரைக் காண குருக்ஷேத்ரத்துக்குப் புறப்பட்டார். அனைவரும் பீஷ்மரைக் கண்டு வணங்கி அமர்ந்தனர். பீஷ்மர் தனது உரையாடலில் வர்ணம், ஆசிரமம், மக்களின் கடமை, அரசரின் கடமை போன்ற பல விஷயங்களைப் பற்றிக் கூறினார். இந்த உரையாடலின் இடையில் திடீரென்று திரௌபதியின்
சிரிப்பு ஒலி கேட்டது. சிரிப்பு சத்தத்தைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, பீஷ்மர் தன்னுடைய தர்மோபதேசத்தை நிறுத்தி, திரௌபதியை நோக்கி, "மகளே, ஏனம்மா சிரித்தாய்?" என்று கேட்டார். திரௌபதிக்கோ நாணமாகப் போய்விட்டது. "என்னை மன்னித்து விடுங்கள் பிதாமகரே ஏதோ அறியாமல் சிரித்து
#ஸ்ரீநரசிம்மர்
மஹாவிஷ்ணு அநீதியை அழிக்க தர்மத்தை நிலைநாட்ட பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் மிகவும் சக்திவாய்ந்தது நரசிம்மர் அவதாரம். அசைக்க முடியாத நம்பிக்கையுடன், உண்மையான பக்தியோடு அழைத்ததால், தூணிலிருந்தும் வெளிப்பட்டு பக்தனை காப்பாற்றுவான் என்று உலகிற்கு உணர்த்திய அவதாரம்
நரசிம்ம அவதாரம். நரசிம்ம அவதாரம் என்றாலே மனித உடலும் சிங்க முகமும் கொண்ட உக்கிரமான தோற்றம் தான் அனைவரின் நினைவிற்கு வரும். ஆனால் உண்மையில் நரசிம்மர் கருணையின் வடிவம் அவர். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள் புரிபவர். நரசிம்மர் 74 க்கும் அதிகமான ரூபங்களில் அருளக்
கூடியவர். இதில் மிக முக்கியமானது 9 ரூபங்கள் ஆகும். உக்கிர நரசிம்மர், க்ரோதா நரசிம்மர், வீர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், கோப நரசிம்மர், யோக நரசிம்மர், அகோரநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்பன நரசிம்மரின் 9 முக்கிய வடிவங்களாகும். இவற்றில் யோக நரசிம்மர் யோக
#அரவான்
மகாபாரதப் போரில் நிறைய வீரர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். ஆனால், மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்காக தன் உயிரையே விட்டவரும் (களப்பலி) மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவரும் இவர் மட்டுமே. அர்ஜுனனுக்கும், நாக இளவரசியான உலுப்பிக்கும் அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களும்
பொருந்திய மகனாகப் பிறக்கிறார் அரவான். குருக்ஷேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக காளி தெய்வத்திற்கு தன்னையே பலியிட சம்மதிக்கிறார் அரவான். ஆனால், தான் சாவதற்கு முன்னால் இரண்டு ஆசைகள் இருப்பதாகக் கூறுகிறார். முதலாவதாக, தான் திருமணம் செய்துக் கொண்டு திருமண வாழ்க்கையில்
ஈடுபட வேண்டும், இரண்டாவது மகாபாரதப் போரை தான் முழுமையாகக் காண வேண்டும். நாளைக்கு இறக்கப் போகிறவரை திருமணம் செய்து கொள்ள யாருமே சம்மதிக்கவில்லை. இதனால் கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை திருமணம் செய்துக் கொள்கிறார். அரவான் இறந்த பிறகு விதவைக் கோலம் பூண்டு அனைத்து