சிந்தனை Profile picture
May 10 17 tweets 4 min read Twitter logo Read on Twitter
தொடர்ச்சி..
*திராவிடத்தின் நோக்கம் என்ன?*
ஆண்டாண்டு காலமாக.

*மனிதத்துக்கு எதிரான பிரிவினைவாதம்..* இங்கே பல வடிவங்களில் உலா வருகின்றன, *மதத்தால், சாதியால், மொழியால், இனத்தால், நிறத்தால்* என்று... இவை அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் இடம்பெற்றிருப்பது இறைவன் என்பதும், *இதை மையமாக்கி Image
பார்ப்பனியம் அரசியல் செய்ததென்பதும் தான்.*

உலக அரசியலில்
இருந்தும், இடதுசாரி கொள்கைகளில் இருந்தும் சிறிது வேறுபடுத்திக் காட்டுகிறது. *எல்லாவற்றையும் விட சாதித் தீ தான்.. பெருந்தீ, இதற்கு வர்ணாசிரம தர்மம் என்று பெயராம், எந்த தர்ம நியாயமும் இல்லாத ஒன்றிற்கு, பெயரில் மட்டும்
தர்மம்,*

நம்மை ஏய்க்க.. இப்படித் தான் பெயரில் மட்டும் கம்யூனிசம் சோசியலிசம் தாங்கி நின்றன முதலாளித்துவ கட்சிகள் கூட.. புது விதமான தாக்குதலை எதிர்கொள்ள புது விதமான ஆயுதம் தேவை, அது தான் திராவிடம்.

இதன் நோக்கம், இலக்கு, எளிமைப்படுத்தப்பட்டது, எப்படியெனில், ஊற்றுக்கண்ணான
இறைவனையும், பிரிவினைவாதத்திற்கு காரணமான பார்ப்பனியத்தையும் ஒழித்துக் கட்டினாலே விடியல் பிறக்கும் என்று உணர்ந்து அந்த வழியை காட்டிச் சென்றார் பெரியார். *நோக்கம் சமத்துவம், அதற்கு இடையூறாய் நிற்கும் மூடப்பழக்க வழக்கங்களையும், அதனை திணித்த பார்ப்பனியத்தையும் உடைத்தெறிந்து,
விரட்டியடிப்பதேயாகும்.*

*திராவிடத்தின் கொள்கைகள் என்ன???*

நீ நான் என்றில்லாமல் நாமாக ஒன்றிணைவோம்..!

மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் கூடாது, இதற்கு இடையூறாக நிற்கும் அனைத்தும்/அனைவரும் தான் தடைக்கற்கள் நம் எதிரிகள். உரிமைகளை மீட்டெடுத்தல், எனக்குள் ஓடும் செங்குருதி
உனக்குள்ளும் ஓடும் எனில், நீயும் நானும் சமம்,

*அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்குதல், இதுவே சமத்துவம்.*

*இழந்த உரிமைகளை பெறுவதற்கு, இதுவரை இழந்து நின்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படுவதே, இடஒதுக்கீடு.*

ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள், குட்டையும், நெட்டையும், வலியவனும்,
மாற்றுத்திறனாளியுமாக.. இங்கே அனைவருக்கும் ஒரே விதமான சலுகைகளை தந்தை தருவானேயாயின், வலியவன் மட்டுமே முன்னுக்கு வருவான். இதை மாற்றி, யார் யாருக்கு என்னென்ன சலுகைகளை அளித்தால், அனைவரும் ஒரே நிலையை எட்டுவார்களோ, அந்தந்த சலுகைகளை அவரவர்க்கு அந்தந்த அளவில் வழங்குவதே இடஒதுக்கீடு.
ஆலய நுழைவுப் போராட்டம், கடவுள் மறுப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு??? முரணாக தெரிகின்றதே என்று கேட்பர் இதனை வாசிப்பவர்கள். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை தான், எங்கள் *சமூகநீதிக்கு எதிரானது ஆலய நுழைவு மறுப்பு. அந்த உரிமைகளையும் பெற்றுத்தர வேண்டியதும் திராவிடத்தின் கடமையாகின்றது.*
*எல்லோருக்கும் பொதுவான ஒன்றை நான் தவிர்ப்பதற்கும், பிறர் மறுப்பதற்கும் உள்ள வேறுபாடு உணர்ந்தால் புரிந்து கொள்ளலாம்.*

*சுயமரியாதை..!*

இது ஏதோ எனக்கு அனைவரும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக எனக்கு நானே ஏற்படுத்திக் கொள்ளும் பிம்பம் அல்ல..

ஜெயலலிதா அவர்கள் இதைத் தான்
செய்தார், சுற்றியிருப்பவர்களை அஞ்சி நடுங்கச் செய்து, காலில் விழ வைத்து, அது தான் சுயமரியாதை என்று இறுமாப்பு கொண்டிருந்தார் கடைசிவரை.. இப்படி இருப்பது வலதுசாரி சிந்தனை, நேரெதிர் கொள்கை இது.
இவர்கள் கட்சி உட்பட பல கட்சிகளுக்கும், திராவிடம் என்ற சொல்லை தாங்கி நிற்கும் தகுதி துளி
கூட இல்லை. அந்த கட்சியில் ஒருவருக்கு கூட சுயமரியாதைக்கு பொருளே தெரியாது, அதனால் தான் கூனிக்குறுகி பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

உண்மையில் சுயமரியாதை என்பது எந்த பயனுக்காகவும் தன் மதிப்பை விட்டுக் கொடுக்காததே ஆகும்.

*கடவுள் மறுப்பிற்கும் சுயமரியாதைக்கும் ஒரு பெரும் ஒற்றுமை
உண்டு,*

வியக்கத்தக்க இயற்கையில் நானும் ஒரு அங்கம்..,
நானும் படைக்கிறேன், காக்கின்றேன், அழிக்கின்றேன், இதில் நான் ஏன் ஒரு கல்லையோ, மனிதனையோ வணங்க வேண்டும்???
அதே போலவே நீயும் செய்கின்றாய் உன்னை நான் ஏன் இழிவாக நடத்த வேண்டும்???
இதற்குள் சுயமரியாதையும், கடவுள் மறுப்பும்,
சமத்துவமும், இடதுசாரி, திராவிட கொள்கைகள் மொத்தமும் அடங்கும்.

*இந்த வேற்றுமையற்ற உணர்வை வெளிப்படுத்த நம்மால் பயன்படுத்தப்படும் சொல் தான் #தோழர்...*

இந்த கொள்கைகளை இரு விதமாக தெரிந்து கொள்ளலாம், ஒன்று வரலாற்றை தெளிவாக படித்து,
மற்றொன்று விடுதலையுணர்வும், சமத்துவமும்,
சுயமரியாதையும் நமக்குள்ளேயே தோன்றி அதற்கு எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிந்தித்தால்.

முதலாவது மிகவும் கடினமானது,
*எந்த வரலாறு மெய்யென்று படிப்பது??? படிக்கும் வரலாறு மெய் தானா என்று பகுத்தறிய இரண்டாவது பாதையில் தான் பயணித்து ஆக வேண்டும்.*

ஆக, முதலில், *விடுதலை
உணர்வும், சுயமரியாதையும், சமத்துவமும் நம் சிந்தனையாகவே மாறிப் போக என்னென்ன செய்ய வேண்டும் என்று பகுத்தறியத் துவங்குவோம். அதுவே சரியான வரலாற்றையும் கூட நமக்கு உணர்த்தி விடும். இந்த வழி தான் நம் ஆசான் #பெரியார் காட்டிய விழியும் கூட.*

கல்லாதது உலகளவு, நாம் படிப்பது சரியானது தானா
என்று அறிந்துணர்ந்து படிக்கும் பகுத்தறிவு வளர்ப்பதுவே வாசிப்பதை விடச் சிறந்ததாகும்.
அந்த அறிவோடு, ஏதேனும் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுத்து வாசித்தால் கூட, அதிலிருந்து நூற்றுக்கணக்கான சிறப்பான சிந்தனைகள் உதயமாகும்.

பிரிவினைவாதத்திற்கு காரணமான அனைத்தையும் ஒதுக்கி விரட்டியடிக்க,
சுயமரியாதை ஓங்க, எவையெல்லாம் தேவையோ, அவை அத்தனையும் நம் கொள்கைகள் என்று நினைவுபடுத்தி, என்னை ஈன்றெடுத்து உணர்வுகொடுத்த அன்னைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்...🙏
*#திராவிடத்தால்_எழுவோம்*
*#தமிழால்_வெல்வோம்* *#அனைவரும்_சமம்*

#🙏தோழர் ம.சோமசுந்தர பிரபு.@threadreaderapp
@rattibha

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

May 11
இந்தியா முழுவதும் சாராயம் சாம்ராஜ்யம் நடத்தி வரும் மோடியின் ஊழல் சாராயம் அரசு மீது நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனாதிபதி யிடம் மனு கொடுத்தததை கண்டு பாலியல் பலாத்காரம் ஜல்சா சங்கீஸ்கள் கதறல்

இந்தியா முழுவதும் சாராயம் சாம்ராஜ்யம் நடத்தி வரும்
மோடி யின் சாராயம் ஊழல் பற்றி புது தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள அறிக்கை யில்
இந்தியா முழுவதும் உள்ள மோடி யின்
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் :

1) மதுபான ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் எந்த அடிப்படையில் விலை
நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்து எவ்விதமான வெளிப்படைத் தன்மையும் இல்லை.

2) ஆயத் தீர்வை விதிகளின்படி, மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் ஆயத் தீர்வைகள் வசூலிக்கப்பட்டு அரசு கஜானாவுக்குச் செலுத்தப்படும். ஆனால், இப்பொழுது இந்தியா வில் கொள்முதல் செய்யப்படக்
Read 62 tweets
May 11
பிரதமரே நேரில் வந்து வணங்கும் கஞ்சா வியாபாரி ஜட்டி வாசுதேவனை நீ வெளிப்படையாக திட்டியபோதே தெரியும்…

ரூபாய் மதிப்பு சரியவில்லை, டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டது என்று கண்டுபிடித்த பொருளாதார மேதை ஊறுகாய் மாமியை, வரி மாநாட்டில் நீ விழி பிதுங்க வைத்தபோதே தெரியும்…

டீ குடிக்க
இத்தன லட்சமாடா செலவழிச்சே.? உன் அப்பன் வீட்டு பணமாடா..?? என்று கேட்டு RSS ரெவியின் செவுட்டுல அறைந்தபோதே தெரியும்…

தளபதியே ஸ்கெட்ச் போட்டு உன்னை தூக்குவார் என்று.

இது மொள்ளமாரிகளுக்கும், முடிச்சவிக்களுக்கும் இடையே நடக்குற யுத்த பூமி..!!

நீ அமெரிக்காவுக்கே திரும்ப போயிடுங்க
திராவிட பாரம்பரியமே....

PTR பிடிஆரை பொறுத்தவரை சாதி மத கட்சி பேதமில்லாத ஒரு ரசிகர் வட்டம் அவருக்கு உண்டு…

சினிமால ஹீரோக்கள் ஜெயிக்கறது எப்படி தெரியுமா..?

அநியாயத்தை தட்டி கேட்பான்,

நூறு பேரை ஒத்த கையால அடிச்சி வெரட்டுவான்,

ஊரே நடுங்கற வில்லனை அசால்ட்டா டீல் பண்ணுவார்,
Read 5 tweets
May 11
*உஷாரய்யா உஷாரு!*

*வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்*.

*கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி
தானா?*

*CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற*
*தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?*

*நல்ல வேலைக்குப் போகவா?*

*ஆங்கிலம் சரளமாகப் பேசவா?*
*குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?*

*ஏன்?*
*எதற்கு?* *....என்று
சிந்தித்ததுண்டா?*

*Pre kg 25,000 இல் தொடங்குகிறது*

*Lkg 40,000*
*Ukg 50,000*
*1st 60,000*
*2nd 70,000*
*3rd 80,000*
*4th 90,000*
*5th 1,00,000*
*6to8 1,20,000*
*9to10. 1,50,000*
*11to12 2,00,000 இலட்சம்....*
Read 15 tweets
May 11
#தீர்ப்புத்துறை #தீர்ப்புரைஞர் #தீர்ப்புமன்றங்கள் குறித்த மிகவும் வலிமிகுந்த பதிவு....

*இந்திய நீதித்துறை-வலியவர்களுக்காக எப்படியும் வளையுமா ?*
===============================

2016, 2017ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக தவறுகளை மிக வெளிப்படையாக அப்போது நீதிபதியாக
பணியாற்றி வந்த *நீதிபதி.கர்ணன்* கடுமையாக விமர்சித்து வந்தார்.

*பின்னர் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.*
அதன் பிறகும் *நீதிபதி. கர்ணன் நீதித்துறை/சக நீதிபதிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருந்ததால்* மிகப்பெரும் சர்ச்சை உருவானது.

உச்சநீதிமன்றம்
தலையிட வேண்டிய கட்டாயமும் எழுந்தது.
ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றம் நீதிபதி கர்ணன் அவர்களின் பேட்டி மற்றும் பேச்சுக்களை ஒளிபரப்பவோ,வெளியிடவோ கூடாதென உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

அந்த நேரம், நீதிபதி கர்ணன் அவர்களிடம் நேர்காணல் செய்து ஒன்றரை மணி நேர பேட்டியை
Read 16 tweets
May 11
*அதிரடி தீர்ப்பும், அல்லோகலப்பட்ட மணிப்பூரும்!*
*-ஹரிபரந்தாமன்*

உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கே வராத விவகாரத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பால் மணிப்பூர் பற்றி எரிகிறது! மேட்டுக்குடி மக்களை பழங்குடியினராக அறிவிப்பது பாஜகவின் விருப்பம். சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற Image
நீதிபதியால் வழங்கப்பட்டது தீர்ப்பு! இதையடுத்துத் தான் மணிப்பூர் பற்றி எரிகிறது. முழு விவரமாவது;

தற்போது மணிப்பூரின் கலவரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஏராளமான கிறிஸ்துவ தேவாலயங்கள், மருத்துவமனைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பழங்குடியினரின் வீடுகள், வாகனங்கள், கடைகள் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கணக்கான மக்கள் அகதிகளாகி அரசு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மலைப் பிரதேசமான மணிப்பூரைப் பொறுத்தவரை அது பழங்குடி மக்களின் பூர்வீகம். மலைப்பிரதேசமெங்கும் பழங்குடி மக்கள் தான் வசிக்கின்றனர்.
Read 26 tweets
May 11
மனச்சாட்சியா எங்களுக்கா... நோ சான்ஸ் என்கிறது பாஜக

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளைக் கவிழ்ப்பதும், குடைச்சல் கொடுப்பதும் தான் ஒன்றிய பாஜக அரசின் ஒரே வேலையாக இருக்கிறது.

ஆளுநர்களை விட்டு ஆட்டம் காட்டும் வேலையை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை சிவசேனா அமைத்தது. அமைச்சராக இருந்த சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக பல எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதற்குப் பின்னணியில்
இருந்தது பாஜக என்பது ஊரறிந்த விஷயம்.

சிவசேனாவை உடைத்து ஆட்சியையும் கவிழ்த்து மகாராஷ்ட்டிராவில் ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியது பாஜக.

உத்தவ் தாக்கரே பதவி விலகியதால், பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார்.

இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(