என்றும் அன்புடன்
தமிழ்நாடு என்றுமே
சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதே முதல் கொள்கை
2 subscribed
Sep 18 • 18 tweets • 2 min read
*உடன்கட்டை ஏறுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதிவைத்துள்ள ஐரோப்பியர்!*
இது 1798ல் எழுதப்பட்டது.
அவர் பெயர்: Donald Campbell.
பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்பட விருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன்.
இந்த வேதனைதரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம் தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை.
அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும்.
வெள்ளை சேலை கட்டி இருந்தாள். தலையிலும் கழுத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தாள்.
அவளைச் சுற்றி 20 பெண்கள்
Sep 17 • 10 tweets • 2 min read
*மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*
_இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள்.
படுத்துவிட்டார்கள் ._
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் .
*". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*
_அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது
Sep 15 • 92 tweets • 10 min read
இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்
சி.என்.அண்ணாதுரை
இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டும் பேச்சுகளும், முயற்சிகளும் இந்தியா ஒரு சுதந்திர நாடாக உருப்பெற்ற காலத்திலிருந்தே தொடரும் கதை. தமிழும், தமிழ்நாடும் எல்லாக் காலங்களிலும் இதற்கு உடன் எதிர்வினை ஆற்றியும் வந்திருக்கின்றன. சில
எதிர்வினைகள் காலத்துக்கும் நிற்கும் வல்லமை மிக்கவை. அறிஞர் அண்ணா 1963, மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஆற்றிய உரை அத்தகைய எதிர்வினைகளில் ஒன்று. காலப் பொருத்தம் கருதி 'அருஞ்சொல்' அந்த உரையை இன்று வெளியிடுகிறது.
மேன்மை பொருந்திய அவைத் தலைவர் அவர்களே…
Sep 14 • 4 tweets • 1 min read
பெற்றோர்களே ஏச்சரிக்கையாக இருங்கள் .
உங்கள் வீட்டு சிறுவர்கள் உங்களுக்கு தெரியாமல் எதும் சட்டவிரோத ஆயுத பயற்சி எதும் எடுத்து உள்ளார்களா.?
புளூ வேல் கேம்ம விட மோசமான ஒரு மூளைச்சலவைல உங்கள் வீட்டு பிள்ளை இருக்கானா எனக் கண்டறியுங்கள்.
அறிகுறிகள்:
1. சூரிய நமஸ்காரம் சொல்லி
தந்தாங்க என சொல்லுவான் 2. கராத்தே சொல்லி தந்தாங்க என சொல்லுவான் 3. "சாகா" னு வாரா வாரம் பள்ளி மைதானத்துல நடக்குதும்மானு சொல்லுவான். 4. அரையாண்டு விடுமுறையில் 3 நாள் கேம்ப் போறேன் என சொல்லுவான். 5. திடீர்னு "காந்தி" பண்ணுனது தப்புமா என சொல்லுவான். 6. குங்கும பொட்டு வைச்சுக்குவான்
Sep 12 • 11 tweets • 2 min read
♥#மனிதநேயம்..♥
அமெரிக்காவிலுள்ள ஒரு நீதிபீடம்...
பதினைந்து வயதான சிறுவன்
குற்றவாளி .!
ஒரு கடையிலிருந்து ஆகாரம்
திருடியதாக கையும் களவுமாக
பிடிக்கப்பட்டபோது, காவலாளியிடம்
இருந்து தப்பிக்க முயற்சிக்கும்
இடையி்ல் கடையிலிருந்த அல்மாாி
கீழே விழுந்து உடைந்தது.
குற்றம் செய்த
குழந்தையோடு
நீதிபதி வினவினாா்..
நீ உண்மையாகவே திருடினாயா ?
ஆம் ! .Bread chess pocket .
அந்த குழந்தை கீழே பாா்த்து பதில்
சொன்னது.
நீதிபதி : நீ எதற்காக திருடினாய் ?
குழந்தை : எனக்கு அது தேவைப் -
பட்டது ..
நீதிபதி : பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் அல்லாவா. ! ..
Sep 7 • 6 tweets • 1 min read
சனாதனத்தின் கொடூரம் :
கேரளாவில் மார்பை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்
அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் ராஜா ஆட்சியில் தோழ் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்: 1) குயவர் ( மண்பாண்டம் தொழில் சாதியினர் ) 2) சாணார் ( நாடார்) மரம் ஏறும் தொழில் சாதியினர் 3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் ( தேவர் ) 4) துலுக்கப்பட்டர் ( மாப்பிள்ளை ) சாதியினர் 5) இடையர் ( கோணர் ) 6) நாவீதர் ( முடி திருத்தம்) சாதியினர் 7) வண்னார் ( சலவை தொழில்) சாதியினர். 8) சக்கிலியர் ( துப்புரவு தொழில்) சாதியினர் 9) பறையர் ( பறையடிக்கும் தொழில்)
Sep 7 • 41 tweets • 5 min read
படி, படிக்க வை !!!
வடையான் நின்று வென்ற தொகுதியான வாரணாசிக்கு, சமீபத்தில் டூர் போன நம்மாள் ஒருவர், அங்கு எங்கெங்கு காணினும் அவர் கண்ட குழந்தைத் தொழிலாளர்கள் அவரை மிகவும் அதிர்ச்சியுறச் செய்தார்கள் என்பதையும் ;
இங்கு டபுள் உணவைச் சாப்பிடுவதால் கக்கூஸ்கள் நிரம்பி வழிவதாக தினமனு
ஏன் எழுதியது என்பதையும் கோர்த்து, ஒரு பதிவெழுத வேண்டுமென எண்ணியிருந்தேன்.
ஆனால் அதில் முந்தியது தம்பி ஃபரூக்மீரான் பதிவு.
அவருடையப் பதிவிற்கான இழையை மறுமொழிப் பெட்டியில் தந்திருக்கிறேன்.
துல்லியமாக அவரெழுதிவிட்ட பின் புதிதாக நான் ஒன்றும் எழுதிவிடப் போவதில்லை !
Sep 6 • 11 tweets • 2 min read
ஸ்டாலின் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறார், பலவீனமானவராக காவி மீடியாக்களால் தொடர்ந்து விமர்சிக்க பட்டுவரும் அவரின் சமீபகால நடவடிக்கைகள் என்னை அவரை நோக்கி கவனிக்க வைக்கிறது...
அதற்கு நான் குறிப்பிடும் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதானது, ஜெயா உயிரிழந்த சமயம் அவரது கட்சி ஒரு
ஸ்திரத் தன்மையை இழந்து இருந்தது, அந்த நேரத்திலே சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது அப்பொழுது இந்தியாவில் பாஜகவில் கரம் வலிமையாக சென்று கொண்டிருந்தது எல்லா இடங்களிலும் குதிரை பேரங்களும் ஆட்சி மாற்றங்களும் பரவலாக நடந்துகொண்டிருந்தது இன்னும் சொல்லப்போனால் பல
Sep 2 • 20 tweets • 3 min read
*இலயோலா த.ராஜசேகா்*
ஊற்றங்கரையில்
தேனீா்க் கடையில்
நண்பா் ஒ௫வா் என்னைக் கேட்டாா்.
"ஆறு பட்டம் பெற்று வேலைக்குச் செல்லாமல்
*திமுக திமுக* ன்னு இவ்வளவு தீவிரமா இ௫க்கியே! கட்சியால் உனக்கு என்ன பயன்?"
என்று கேட்டாா்.
"திமுகவால் உனக்கு 10 பைசாவுக்கு பயன் கிடைக்குமா?" என்று
நினைக்கும் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்.
எங்களுக்குப் பின்னால் வரும் 10 தலைமுறைக்கு பயன் கிடைக்கும்டா *முட்டாள்*
என்று உரக்கச் சொல்வேன்;
இதை
பல மேடைகளில் முழங்குவேன்;
மேடை கிடைக்கவில்லை என்றால் எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் உண்மையை முழங்குவேன்.
Aug 27 • 19 tweets • 2 min read
*💥60 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்தது ? என்ற பிரதமர் திரு.மோடி அவர்களின் குற்றச்சாட்டுக்கு...*
*#திரு.ஜூலியஸ்ரெபைரோஓய்வு பெற்ற காவல்துறைஅதிகாரி அவர்களின் பதில்...*
*Mr. JULIUS REBERIO I.P.S.,Ex Director General of Police - Maharashtra Ex Police Commissioner - Mumbai*
*Ex Director General of Police - Gujarat*
*Ex Director General of Police - Punjab*
*💥ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்...*
*💥மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்திவிட்டு, 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்...*
Aug 8 • 19 tweets • 3 min read
Sukirtha Rani
தற்போது ஒன்றிய அரசின் அமைச்சராக இருக்கும் எல்.முருகன் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கடிதம்.
என்னவோ இந்தக் கடிதம் பிடித்திருப்பதால் மீண்டும் பகிர்கிறேன். :-)
அன்புத் தம்பி எல்.முருகனுக்கு...
ஆம் நீ என் தம்பிதான்
எனக்குப் பிந்திப்
பிறந்தவன்
நாம் பிறந்த இடம் வேறாக இருக்கலாம்
நம் அப்பாக்கள் ஒன்றுதான்
நம் அம்மாக்கள் ஒன்றுதான்
என் அப்பா படித்தது மூன்றாம் வகுப்பு
உன் அப்பாவும் கூடக் குறைய படித்திருக்கலாம்
நம்முடைய தலைமுறைதான்
கல்வியைப் பற்றிக் கொண்ட
முதல் தலைமுறை.
நம் வீடுகள் தெருக்கள்
இப்போதும் ஊருக்கு
Aug 6 • 41 tweets • 6 min read
வரலாறு காணாத வங்கி மோசடிகள்!
வங்கியில் போடும் பணம் பாதுகாப்பானது என நம்பும் கோடானு கோடி மக்களையும், வாழ்நாள் சேமிப்பை வங்கியில் போட்டுள்ள முதியோர்களையும் ஏமாற்றும் துணிச்சல் எப்படி வருகிறது இந்த ஆட்சியாளர்களுக்கு? மக்கள் பணத்தை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்த, வாராக் கடன்கள்
இத்தனை லட்சம் கோடிகளா..?
வரலாறு காணாத அளவிற்கு மோடி ஆட்சியில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் தொகை NON PERFORMING ASSETS (NPA) மதிப்பு 66.5 லட்சம் கோடி யாகவும் இதில் தள்ளுபடி அல்லது வஜா செய்யப்பட்ட தொகை ரூ. 14.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது திடுக்கிடும் செய்தியாக உள்ளது. இவை
Aug 5 • 33 tweets • 4 min read
அவர் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு சுக்கு நூறாகச் சிதறிக்கிடந்த தந்தையைப் பார்த்தார், அவர் ஒரு சராசரி மனிதனாக இருந்திருந்தால் இந்த மண்ணின் மீது அவருக்கு கடும் வெறுப்பு இயல்பாகவே வந்திருக்கக்கூடும்.
என்ன காரணம் என்று இன்று வரை முழுமையாக அறியப்படாத வகையில்
நம்முடைய அன்புக்குரிய தந்தை கண்காணாத நிலத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தால் நாம் பொதுவாகவே அந்த நிலத்தின் மீதும் அங்கிருப்பவர்கள் மீதும் கடும் வெறுப்புறுவது இயல்பாக நிகழும்.
ஆனால், அவர் ஒருபோதும் அப்படி நடந்து கொள்ளவில்லை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக அவர் வளர்ந்து
Jul 31 • 20 tweets • 3 min read
ஆர் எஸ் எஸ் என்னும் ஆக்டோபஸ்
உங்களில் யாருக்காவது Tamilnadu Young Thinkers Forum என்ற அமைப்புப் பற்றி தெரியுமா?
தெரியவில்லை என்றால், தயவுசெய்து கூகுளில் தேடுங்கள். பல அதிர்ச்சிகரமான வலைப்பின்னல்களை அறிந்து கொள்ளலாம்.
இது ஆர்.எஸ்.எஸ்-ன் மறைமுக அமைப்பு. இப்போது யாரெல்லாம்
வலதுசாரி அரசியல் கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பரப்புகிறார்களோ.. மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர் வரை… இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் புள்ளி இதுதான். தமிழக வலது அரசியல் போக்குகளின் aggregator இந்த அமைப்பு. Young Thinkers Forum--> Swarajya -->
Jul 23 • 52 tweets • 6 min read
*மாவட்ட ஆட்சியர் , வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர் , கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்* அவர்களுடைய முக்கிய பணிகளை காண்போம்.
1. மாவட்ட ஆட்சித் தலைவர் :-
******************************
இந்தியாவில் மாநில அரசுகளின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி
முழுவதும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆட்சியர் (District collector) செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசால் ஒவ்வொரு
Jul 22 • 8 tweets • 1 min read
மணிப்பூர் கலவரத்தில் புதைந்துள்ள உண்மைக் காரணங்கள்...
மணிப்பூர் மாநிலத்தில் 85% மலைகளும் காடுகளும்.15% சமவெளிப்பகுதிகளும் கொண்டது.
மலைப்பகுதிகளின் அடியாழத்தில்மதிப்பற்ற கனிம வளங்கள் புதைந்துள்ளது.இந்த மலைப் பகுதிகளில்தான் குக்கி இன பழங்குடி மக்கள் ஆயிரக்கணக்காண ஆண்டுகளாக வாழ்ந்து
வருகின்றனர்.
இந்திய அரசின் Geological Survey Of India (SGI) கண்டு பிடித்த தரவுகளின்படி மணிப்பூர் மலைகளுக்கடியில் விலைமதிப்பு மிக்க நிக்கல் ,தாமிரம்,பிளாட்டினம் போன்ற கனிமப் படிவங்கள் ஏராளமாக உள்ளன.
இந்த கனிம வளங்களைக் கொள்ளையடிக்க கார்ப்பரேட்டுக்கள் குறிப்பாக அதானி உட்பட
Jul 20 • 8 tweets • 1 min read
எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொன்றும் சத்தியமான வார்த்தைகள்.
<<<<<<<<<<இதுதான் வாழ்க்கை>>>>>>>>>
தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது
பேர்..!!
இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த மனிதர்களுக்கு போதிக்கிறது.
எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க
Jul 17 • 44 tweets • 7 min read
கண்முன் சரியும் உலகின் மாபெரும் ஜனநாயகம்!
- சாக் பெக்கம்
பாஜக அரசின் பாசிசப் போக்குகள் அமெரிக்காவில் நன்கு கவனம் பெற்றுள்ள நிலையில் மோடியை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளதாம் அமெரிக்க அரசு! மோடி அமெரிக்கா சென்று போது மோடியின் ஆட்சி பற்றி அக்குவேறு, ஆணிவேறாக அலசி எழுதியது
பிரபல அமெரிக்க ஊடகம். அதன் தமிழ் மொழி பெயர்ப்பு இங்கே;
ஜுன் 22, 2023 அன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இரவு விருந்து அளித்தார். பிரான்ஸ் மற்றும் தென்கொரிய அதிபர்களுக்கு அடுத்து, இப்பெருமையைப் பெறும் மூன்றாவது தலைவர் மோடி.
பருவநிலை மாற்றம், இந்திய
Jul 16 • 18 tweets • 3 min read
Important news
எத்தனைமுறை படித்தாலும் நெஞ்சம் பதருகிறது இவர்கள் பட்ட வேதனையை ஆனால் இவர்கள்தான் இன்று அந்த பார்ப்பன சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் தூண்களே....
எப்போதுதான் திருந்தும் இந்த சண்டாள சா(வா)ணரக்கூட்டம்....?
இன்று நாடார் குலமென்று நெஞ்சு நிமிர்த்தி திரிகின்ற சாணார்கள்
19'ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் 18 வகை கீழ் சாதி பட்டியலில் தான் இருந்தார்கள்.
சக்கிலியனைத் தொட்டாதான் தீட்டு, ஆனால் சாணானைப் பார்த்தாலே தீட்டு என்று ஓரங்கட்டப்பட்ட சமூகம்.
ஆனால் இப்போது...
கன்னியாகுமாரி மாவட்ட பாஜகவின் தூண்களாக இருப்பவர்கள்
Jul 15 • 5 tweets • 1 min read
*பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்...* 🦜
1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 🦜 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை🦜 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.🦜 4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும்
தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.🦜 5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜 6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை 🦜 7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற
Jul 14 • 8 tweets • 2 min read
தலைவர் கலைஞர் அவர்களின் பெயரில் உள்ள மகளிர் உரிமைதொகை திட்டம் இது தி.மு.க அரசின் ஏமாற்று வேலையாம்
இப்படி சங்கி மங்கிகள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கூப்பாடு போடுகின்றனர்
ஆனால் உண்மை நிலை தான் என்ன❓
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மட்டும் ஜூன் 24 கணக்குப்படி
2,24,13,585
குடும்ப அட்டைகள் உள்ளன.
இதில் அரசின் குடிமை பொருள்
எதுவும் தேவையில்லை என்று கூறும்
குடும்ப அட்டைகள் 41,106.
அரசு வழங்கும் இலவச அரிசி தேவையில்லை என்று கூறும்
குடும்ப அட்டைகள் 10,01,605.
இந்த அட்டைதாரர்களுக்கு உரிமைதொகை வழங்க வேண்டிய அவசியம் இருக்கா என்றால் இல்லை.