#படித்ததில்_ரொம்ப_பிடித்தது

”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”

தண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா.

“விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்?”

”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.” Image
காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை ஆதரவாக பற்றினான்.

“அப்பா… எழுந்திரிச்சு உள்ளே வாங்க.” தந்தையின் கையை மென்மையாக பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்த்தினான்.

“ஏம்பா என்னமோ மாதிரி இருக்கீங்க?”

அவர் சொல்லத் தயங்கினார்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா.”

“அவர் சொல்ல மாட்டார்… நானே சொல்றேன்… கரன்ட் பில்லும், ஸ்கூல் பீசும் கட்டிட்டு வாங்கன்னு குடுத்த, பத்தாயிரம் ரூபாயை தொலைச்சுட்டு வந்து நிக்கறார்.

கேட்டா, “எங்கே வெச்சு தொலைச்சேன்னே தெரியலைமா…’ ன்னு சொல்றார்.”
அவர் முகத்தைப் பார்க்க பாவமா இருந்தாலும், 10 ஆயிரம் ரூபாய் போனதில், அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

விமலா மேலும், அவனை சூடேற்றினாள்…

“இந்த அளவுக்கு அஜாக்கிரதையும், பொறுப்பில்லாமையுமா ஒருத்தர் இருப்பாங்க. இவர், பேங்கில வேறெ கேஷியரா இருந்தாரு.
எப்படித்தான் இத்தனை காலம் கேஷியர் வேலை பார்த்தார்னே தெரியலை.”

”விமலா… நீ கொஞ்சம் பேசாம இரு. நான்தான் விசாரிச்சிட்டு இருக்கிறேன்ல்ல.”

”எங்க வெச்சுப்பா தொலைஞ்சிச்சு?” தந்தையிடம் கேட்டான் கதிரேசன்.

”அதுதாம்பா எனக்கும் புரியலை. விமலா கிட்டே பணத்தை வாங்கிட்டு
, ஈ.பி., ஆபீசுக்கு போயிட்டு இருக்கும் போது, நம்ம எதிர்த்த வீட்டு ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர் சேஷாத்ரியை வழியில பார்த்தேன்.

அவரும், ஈ.பி., ஆபீசுக்கு தான் போறேன்னு சொன்னதும், நானும், அவருமா பேசிட்டே நடந்து போனோம். அங்க ஒரே கூட்டமா இருந்தது.
கூட்டம் குறையட்டும்ன்னு, நானும், அவருமா ஒரு மர நிழல்ல உட்கார்ந்தோம். தாகமா இருக்குன்னு, ரெண்டு பேரும், ஆளுக்கு ஒரு இளநியை குடிச்சிட்டு, நானே காசைக் குடுக்கலாம்ன்னு திரும்பிப் பார்த்தா, “பேக்’கை காணோம். கடைசியில, இளநீருக்கு போஸ்ட் மாஸ்டர் தான் காசை கொடுத்தார்.”
”அந்த இளநீர்க்காரன் எடுத்திருப்பானோ!"

“இல்லப்பா… அவன் என் முன்னாலதான் இருந்தான். பின்னால, இருந்த வேற யாரோ தான், எனக்குத் தெரியாம எடுத்திருக்காங்க.”

விமலா குறுக்கிட்டாள்…

”பணப் பைய யாராச்சும் பின்னால வைப்பாங்களா? சுத்த கோமாளித்தனமா இருக்கு.
சொந்தமா சம்பாத்தியம் இருந்தாத்தானே, காசோட அருமை தெரியும். என்னோட புருஷன் சம்பாதித்ததை, வேறெ எவனோ திங்கணும்ன்னு விதி.”

”இந்த ஒரு தடவை தானம்மா இப்படி நடந்திச்சு. ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம், இத்தனை நாளா, நான்தானே கஷ்டப் பட்டுட்டு வர்றேன்.
அப்பெல்லாம், ரொம்ப ஜாக்கிரதையாத்தானே இருந்தேன்.”

”ஒரு தடவை தொலைத்தாலும், மொத்தமா, 10 ஆயிரம் ரூபா… சர்வ ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். அங்க, என்னோட வேலை பார்த்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இங்க, என்னோட சிநேகிதனை பார்த்தேன்னு சொல்லி,
நாள் முழுக்க வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கக் கூடாது,” என்று பொரிந்து தள்ளினாள் விமலா.

”விமலா… கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு. என்ன இருந்தாலும், அவர் என்னோட அப்பா.”

”ஆமா நீங்க தான் மெச்சிக்கணும். சும்மாதானே வீட்டில இருக்காரு. காலைலயும்,
சாயந்தரமும் குழந்தைகள ஸ்கூல்ல கொண்டு விடச் சொன்னா, “வயசான காலத்தில என்னால முடியலை…’ன்னு வயசை ஒரு சாக்கா வெச்சிட்டு, ஜகா வாங்கிக்கிறது; உருப்படியா பண்ணிட்டு இருந்தது, ரேஷன்ல பொருள் வாங்கறதும், கரன்ட் பில், ஸ்கூல் பீஸ் கட்டறதும் தான்.
இனி, இந்த ஒரு காரணத்தை வெச்சு, இந்த வேலையிலிருந்தும் ஜகா வாங்கிக்கலாம்ல்ல.”

கதிரேசன் குறுக்கிட்டான்.
“விடு விமலா… அவருக்கு முடியலைன்னா, நானோ, நீயோ போயி கட்டிட்டு வந்திடலாம். இதுக்குப் போயி…”

“ஆமா, நானோ, நீங்களோ போயி எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்திடலாம்.
இங்கே, இந்த பெரிய மனுஷன், நல்லா சாப்பிட்டுட்டு, அந்த கோவில், இந்த கோவில்ன்னு சுத்திட்டு வரட்டும். நேரத்திற்கு சமைச்சுப் போடத்தான் நான் இருக்கேன்ல.”

”ஏய் இப்ப என்ன பண்ணனும்ங்கற?” எரிச்சலுடனேயே கேட்டான் கதிரேசன்.

“எம்மேல ஏன் எரிஞ்சு விழறீங்க? கொஞ்ச நாள்,
உங்க தங்கச்சி வீட்டில கொண்டு போயி விடுங்க. அப்பத்தான்; நம்ம வீட்டோட அருமை தெரியும்.”

”என்ன மாப்பிள்ளே… ஏதோ, சூடான விவாதம் போல தெரியுது… சிவபூஜைல கரடி நுழைஞ்சிருச்சோ கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தார், விமலாவின் தந்தை சிவராமன்.
*அப்பா வாங்கப்பா… இந்த, வேகாத வெயில்ல ஏம்பா நடந்து வந்தீங்க? ஒரு ஆட்டோ புடிச்சா, பஸ் ஸ்டாண்டிலிருந்து, நம்ம வீட்டிற்கு மிஞ்சிப் போனா, நாற்பதோ, ஐம்பதோ கேட்பான்.”

”நடக்கிறது உடம்புக்கு நல்லதுதானேம்மா. சரி…சரி… இந்த பையில பழங்களும், சிப்சும் இருக்கு.
குழந்தைகள் வந்தா குடு. மொதல்ல, இதை போயி உள்ளே வெச்சிட்டு வா.”

பையை கிச்சனில் வைத்து விட்டு, தந்தைக்கு லெமன் ஜூசை எடுத்து வந்தாள் விமலா.

”அப்பா இந்தாங்க, “ஜில்’லுன்னு குடிங்க.”
“அதை இப்படி வெச்சிட்டு இந்தப் பக்கம் வாம்மா!”

ஜூஸ் நிரம்பிய கிளாசை, மேஜையின் மேல் வைத்து விட்டு,
தந்தையின் அருகில் வந்தாள் விமலா.
“என்னப்பா?”

இரண்டு உள்ளங்கையையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்த்து சூடாக்கி, “பளார்’ என்று, தன் மகளின் கன்னத்தில் அறைந்தார் சிவராமன்.

சிவராமனின் ஐந்து விரல்களும், விமலாவின் கன்னத்தில், அச்சு பதித்தாற்போல் பதிந்தன.
விம்மி அழுது கொண்டே, ”என்னப்பா…” என்றாள் விமலா.

கதிரேசனும், ராமநாதனும் அதிர்ச்சியுடன் சிவராமனையே பார்த்தனர்.

”மாமா… வந்து…” என்று வார்த்தை கிடைக்காமல் திக்கினான் கதிரேசன்.

” நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு மாப்பிள்ளே..
பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுக்க வேண்டியதுதான். தப்பில்ல..

ஆனா, எந்த காலத்திலேயும், எந்த நேரத்திலேயும், தன்னைப் பெத்தவங்களையும் விட்டுக் குடுக்கக் கூடாது. குடும்பத்தில் முதல் மரியாதை அவங்களுக்குத்தான். அதுவும் அவுங்க மனைவிய இழந்தவங்க..
அதுக்கப்புறம்தான் பொண்டாட்டி, குழந்தைகள்..

நீங்களோ, சம்பந்தியோ அவளை அடிச்சா, புருஷன் வீட்டில எல்லாருமா சேர்ந்து, என்னை கொடுமை பண்ணறாங்கன்னு இவ போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாம். ஆனா, நானே ரெண்டு சாத்து சாத்தினா, எவன் கேட்கப் போறான்?😳
நான் வர்றேன் மாப்பிள்ளே,
வர்றேன் சம்பந்தி.

காத்தால நடக்கும் போது, அப்படியே நம்ம வீட்டுக்கும் அடிக்கடி வாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்,” என்று கூறியபடியே, நடையைக் கட்டினார் சிவராமன்.

”அப்பா…” என அழுதபடியே கூப்பிட்டாள் விமலா.

”என்னம்மா?”
“இந்த ஜூசையாவது குடிச்சிட்டு போங்கப்பா”

இந்த வீட்டை கட்டிக் காத்து உன் கணவனை வாழ வைத்து விட்டு,இப்போது மனைவியை இழந்து நிக்கும் மாமனார, எப்போ நீ நல்ல மனசோட அப்பான்னு நினைக்கிறீயோ..
அப்போ என்னைக் கூப்பிடு, சாப்பாடே சாப்பிட்டுட்டு போறேன்.” சரியா...

கம்பீரமாக நடந்து செல்லும் தன் சம்பந்தியை, வாஞ்சையுடன் பார்த்தார் ராமநாதன்...

படித்ததில் பிடித்தது Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

May 21
2ஆம் பாகம் தொடர்கிறது...

இந்த முறை எப்படியாவது இந்தியாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு கிங்கணர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

பல் பிடித்து பதம் பார்க்க தயாராக நம்மவர்களும் களத்தில் நிற்கிறார்கள். Image
அதன் ஓர் பகுதியாக புழக்கத்தில் உள்ள அதிக மதிப்பு கொண்ட நம் இந்திய ரூபாய் இரண்டாயிரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து யாரும் எதிர்பாராத வண்ணம் மிக பெரிய கால அவகாசத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட பொறி வைத்து பிடிக்க இருக்கிறார்கள்... Image
130 நீண்ட நாட்களாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும்.,...

அதன் பிறகு அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது போக தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் தாள்களையும் செல்லாது என அறிவிக்கவும் இல்லை. Image
Read 10 tweets
May 21
🍀🏵️ #இரண்டாயிரத்திலும்_ஒன்று....

நேற்று கோட்சே பிறந்த நாளில் இந்தியாவின் உச்ச பட்ச காந்தி கரன்சியை திரும்ப பெறுவதாக அறிவித்து அதிரடித்திருக்கிறார்கள்.

என்ன ஒன்று.....

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. Image
நம் இந்திய தேசத்தில்.... விடுதலை சமயத்தில்...‌‌

சரியாக சொல்வதென்றால் 1946 ஆம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய், 5000 ரூபாய் ஆகியவற்றோடு 1000 ரூபாயும் இனி செல்லாது என அறிவித்தது பிரிட்டிஷ் இந்திய அரசு.

அது தான் முதல் தடவை. Image
ஆன போதிலும் இந்த ரூபாய் தாள்களை 1954 ஆம் ஆண்டு அப்போது இருந்த நேரு தலைமையிலான அரசு மீண்டும் செல்லும் என்று அறிவித்தது.

பலரும் பலத்த கண்டனங்கள் தெரிவித்த போதும் மனிதர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை......

ஏன் இப்படி செய்தார்..... Image
Read 23 tweets
May 18
ந.முத்துராமலிங்கம் பதிவு
🙏❤️🙏

ஜெயலிதா முதல்வராக இருந்தபொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வெறும் உத்தரவு மட்டும்தான், அப்பொழுது காவிரி நீர்கூட வரவில்லை.
ஆனால், அ.தி.மு.க.வினர் தஞ்சையில் மிகப்பெரிய விழா நடத்தினார்கள். Image
நன்றாக நினைவிருக்கிறது, திருச்சியிலிருந்து தஞ்சை வரை லட்சக்கணக்கான பேனர்கள், "பொன்னியின் செல்விக்குப் பாராட்டு விழா" என்று, இரண்டு நாட்கள் தஞ்சையே குலுங்கியது -

இதுதான் தமிழகத்தில் எடுபடும் அரசியல்- Image
ஆனால், அதற்குப் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து 50 வருட காவிரிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து இன்று வரை தடைபடாமல் தண்ணீர் வந்து கொண்டிருக்கக் காரணம் மத்திய பா.ஜ.க அரசு, பிரதமர் மோடி -

ஆனால், தமிழக பா.ஜ.க. இதை டெல்டா பகுதி மக்களிடம் கொண்டு சேர்த்ததா ?- Image
Read 12 tweets
May 10
பக்குவம் .

தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு,

பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பெரியவரும் ரோடை கிராஸ் செய்து கொண்டிருந்தார்.

அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். Image
சில சமயம் பலாப்பழமும்.

வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார்.

மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது.

ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண்.கோபத்தோடு முகம் சிவக்க,

அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார்.
Read 12 tweets
May 9
#விசிறி_தாத்தா

எனக்கு 5 வயசு இருந்தப்போ, இந்தக் கோயில்ல இதே இடத்திலதான் ஒரு பெரியவரைப் பார்த்தேன்.

எல்லோருக்கும் விசிறிக்கிட்டே இருந்தாரு. வியர்க்க விறுவிறுக்க வர்றவங்களுக்குப் பெரியவர் விசிறினதும் 'சில்'லுன்னு ஆயிரும்.

இதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது. Image
ஆண்டவனைப் பார்த்து உள்ளம் குளிர்ந்த பக்தர்கள், உடலும் குளிரச் செய்ற இந்த கைங்கர்யத்துல என் மனது லயிச்சிச்சு.

14-வது வயதில விசிற ஆரம்பிச்சேன்” என்றார்.

நடைதிறந்ததும் கோயில்களுக்குக் காலையிலும் மாலையிலும் சென்று, Image
நடைசாத்தும் வரை எல்லோருக்கும் மயில்விசிறியால் விசிறிவிடுவதுதான் இவரின் பணி.

திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் திருப்பரங்குன்றம், புதன்கிழமை பழநி, வியாழனன்று திருச்செந்தூர், வெள்ளியென்றால் மீனாட்சிக்கோயில், சனிக்கிழமை கூடலழகர் கோயில், Image
Read 16 tweets
Apr 22
#Thanks Muralidharan Rajagopalan 🌺இதாவது புரியுமா??? 😉😉🌺

வலைதளத்தில் கிடைத்த அருமையான பதிவு..!
பதிவு செய்தவர் பெயர் தெரியவில்லை இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்...

1. இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மோடியை "வட இந்தியர்" என எதிர்ப்பான்! Image
இந்தியரே அல்லாத, இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ மைனோ என்ற சோனியாவை "அன்னை" என்று அழைப்பான். "ஏன்?" என்று கேட்டால் முழிப்பான்!

2. "டீ வியாபாரம் செய்தவர் பிரதமரா?" என மோடியை எதிர்ப்பான்!

"சோனியா கூட இத்தாலியில் ஒரு பாரில் வேலை செய்தவர்தானே?" என்று கேட்டால் முழிப்பான்! Image
3. "நரேந்திர மோடி ஒரு ஆரியர்" என எதிர்ப்பான்.

"கிறித்தவ - முஸ்லிம் கலப்பில் பிறந்த ரவுல்வின்சி என்ற ராகுல் மட்டும் தமிழனா?" என்று கேட்டால் முழிப்பான்!

4. "மோடி விதவிதமான விலையுயர்ந்த ஆடைகளை அணிகிறார்" என்று எதிர்ப்பான்!

" Image
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(